Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

40 பஸ்களை தொண்டமான் விழுங்கிவிட்டார்

Featured Replies

40 பஸ்களை தொண்டமான் விழுங்கிவிட்டார்
 
 

article_1453646091-1A.jpgபெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலன்புரியை மேம்படுத்துவதற்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 'டாடா சிட்டி ரைடர்' வகையைச் சேர்ந்த 40 பஸ்களை முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான், மிகவும் இரகசியமான முறையில் விற்று, அப்பணத்தைத் தன்னுடைய சொந்தத் தேவைக்காகப் பயன்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம், 2008ஆம் ஆண்டு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவே, இந்திய அரசாங்கத்தினால் 40 பஸ்கள் வழங்கப்பட்டன. இவை, இந்திய ரூபாயில் 80 மில்லியன் ரூபாய் பெறுமதியானவையாகும்.

இந்த பஸ்கள் யாவும், அன்னை கோதை என்டர்பிரைசஸ் என்ற தனியார் நிறுவனத்தின் பெயரிலேயே பதியப்பட்டுள்ளன.
இந்த நிறுவனம், சௌமியமூர்த்தி தொண்டமானின் பாரியாரின் பெயரிலேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  இந்த நிறுவனத்தின் பணிப்பாளர்களாக ஆறுமுகன் தொண்டமான் எம்.பி.யின் மகளான கோதை நாச்சியார் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் எம்.பியுமான முத்து சிவலிங்கத்தின் மகளான வாணி சிவலிங்கம் ஆகியோர் கடமையாற்றுகின்றனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலன்புரி விடயங்களை மேம்படுத்தும் வகையில் இந்த பஸ்கள் கையளிக்கப்பட்டிருந்த போதிலும் அவை, அம்மக்களின் நலன்புரியை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்படவில்லை. அவையாவும், குடும்ப உறவினர்கள் பயணம் செய்வதற்கும், சுற்றுலா செய்வதற்கும், அரசியல் நடவடிக்கைகளுக்கும் மற்றும் கட்சி உறுப்பினர்களின் மரண வீடுகளுக்கு செல்வதற்காகவுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 40 பஸ்கள் தொடர்பில், இலங்கைக்கான இந்திய தூதுவராலயத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸிடமோ அல்லது அந்த நிறுவனத்திடமோ இல்லை என்று வெளியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- See more at: http://www.tamilmirror.lk/164570/-%E0%AE%AA%E0%AE%B8-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A4-%E0%AE%A3-%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%B4-%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%B0-#sthash.98w6WicM.dpuf

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலனை மேம்படுத்த, இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 'டாடா சிட்டி ரைடர்' வகையைச் சேர்ந்த 40 பஸ்களை முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான், மிகவும் இரகசியமான முறையில் விற்று, அப்பணத்தைத் தன்னுடைய சொந்தத் தேவைக்காகப் பயன்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம், 2008ஆம் ஆண்டு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக,  இந்திய ரூபாயில் 80 மில்லியன் ரூபாய் பெறுமதியான, 40 பஸ்கள் வழங்கப்பட்டன.

இந்த பஸ்கள் யாவும், அன்னை கோதை என்டர்பிரைசஸ் என்ற தனியார் நிறுவனத்தின் பெயரிலேயே பதியப்பட்டுள்ளன.


இந்த நிறுவனம், சௌமியமூர்த்தி தொண்டமானின் பாரியாரின் பெயரிலேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  இந்த நிறுவனத்தின் பணிப்பாளர்களாக ஆறுமுகன் தொண்டமானின் மகளான கோதை நாச்சியார் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கத்தின் மகளான வாணி சிவலிங்கம் ஆகியோர் கடமையாற்றுகின்றனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலன்புரி விடயங்களை மேம்படுத்தும் வகையில் இந்த பஸ்கள் கையளிக்கப்பட்டிருந்த போதிலும் அவை, அம்மக்களின் நலன்புரியை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்படவில்லை. அவையாவும், குடும்ப உறவினர்கள் பயணம் செய்வதற்கும், சுற்றுலா செய்வதற்கும், அரசியல் நடவடிக்கைகளுக்கும் மற்றும் கட்சி உறுப்பினர்களின் மரண வீடுகளுக்கு செல்வதற்காகவுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 40 பஸ்கள் தொடர்பில், இலங்கைக்கான இந்திய தூதுவராலயத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸிடமோ அல்லது அந்த நிறுவனத்திடமோ இந்த பஸ்கள் இல்லை என வெளியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஸ்களை  ஏப்பம் விடவில்லை -  இ.தொ.கா விளக்கம்:


பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலன்புரியை மேம்படுத்துவதற்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 'டாடா சிட்டி ரைடர்' வகையைச் சேர்ந்த 40 பஸ்கள், மிகவும் இரகசியமான முறையில் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப-தலைவர்களில் ஒருவரான போ.சிவராஜா, விளக்கமளித்துள்ளார்.
மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, 5 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் நிதியுதவியின் கீழ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸினால் 40 பஸ்கள் கொள்வனவு செய்யப்பட்டன.

அந்த பஸ்களில் 20 பஸ்கள்  பழுதடைந்துள்ளன. சேவையில் ஈடுபடுத்த முடியாதுள்ளது. 'நுவரெலியா, பதுளை ஆகிய மாவட்டங்களில் உள்ள பின்தங்கிய பிரதேசங்களிலே இந்த பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. குறித்த பகுதிகளில் பாதைகள் சீரின்மையால் பஸ்கள் விரைவில் பழுதடைந்து விட்டன.

இந்நிலையில், குறித்த பஸ்களின் சாரதிகள் சிலர் குத்தகை அடிப்படையில் பஸ்களை பெற்று, அவற்றை பழுதுபார்த்து தற்போது சேவையில் ஈடுபடுத்தியுள்ளனர். மேலும் சில பஸ்கள் பழுதடைந்துவிட்டன.

இதனால், நடத்துனர், சாரதிகளுக்கு சம்பளம் வழங்குவதில், காப்புறுதி செலுத்துவதில் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டோம். அவை நிறைவுபெற்றவுடன், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவற்றையும் பழுதுபார்ப்பதற்கான உதவியை பெற்று மீண்டும் அவற்றை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
http://www.whathits.com/globaltamilnews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.