Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மே மாதத்துக்குள் விசாரணை பொறிமுறை முன்வைக்கப்படும் என்கிறார் பிரதமர்:

Featured Replies

மே மாதமளவில் போர்க்குற்றப் பொறிமுறை
 
 

article_1453907774-ranil.jpgநல்லிணக்கத்துக்கும் பொறுப்புக் கூறலுக்குமான பொறிமுறையொன்று தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மே மாதமளவில், ஐக்கிய நாடுகள் சபை, ஜெனீவாவில் சந்திக்கும் போது, இலங்கையின் முன்மொழிவுகள் தயாராக இருக்குமெனத் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

போர் முடிவடைந்து இவ்வளவு நாட்களாகியும், பொறுப்புக் கூறலுக்கான பொறிமுறை உருவாக்கப்படவில்லை என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பொறுப்புக் கூறல் பொறிமுறையில், சர்வதேசப் பங்களிப்பு இருக்காது எனவும் அதை அனுமதிக்கப் போவதில்லை எனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்த போதிலும், அக்கருத்துக்கு மாறான கருத்தையே, பிரதமர் வெளியிட்டார்.

'அதை (சர்வதேசப் பங்கெடுப்பு) நாங்கள் இல்லையென்று சொல்லவில்லை' என்றார். ஆனால், ஜனாதிபதி அதற்கு மாறான கருத்தைத் தெரிவித்திருக்கிறாரே எனச் சுட்டிக்காட்டிய போது, ஜனாதிபதி அதைச் செய்யவில்லை எனக் குறிப்பிட்ட பிரதமர், 'எங்களுடைய முதலாவது முன்னுரிமை, மக்களே. நாங்கள் என்ன செய்தாலும், அது மக்களுக்கு நன்மையாக அமைய வேண்டும். நாங்கள் ஆரம்பித்துள்ள நீண்டகால செயற்பாடு அதுவாகும்' எனத் தெரிவித்த அவர், 'ஜெனீவா தீர்மானத்தில் நாங்கள் வழங்கிய அர்ப்பணிப்பின்படி நாங்கள் செயற்படுவோம்' என்றார்.

இலங்கை தொடர்பான விடயத்தில், நம்பிக்கையீனமே அதிகமாகக் காணப்படுகிறது எனச் சுட்டிக்காட்டியபோது, இவ்விடயம் தொடர்பாகப் போராடியவர்களில், தான் முதன்மையானவன் எனச் சுட்டிக்காட்டிய பிரதமர், மே மாதத்தில் முன்மொழிவு சமர்ப்பிக்கப்படும் போது, அனைத்துச் சந்தேகங்களும் இல்லாது செல்லும் எனக் குறிப்பிட்டார்.

ஐ.நா விசாரணைக் குழுவின் அடிப்படையிலும், சனல் 4 நிறுவனத்தால் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையிலும், 40,000 பேரளவில் இறந்துள்ளார்கள் எனத் தெரிவிக்கப்பட்ட போது, 'போரில், மிகப்பெரிய எண்ணிக்கையானோர் கொல்லப்பட்டனர். ஆனால் அது 40,000 என்பதில் எமக்குக் கேள்வி இருக்கிறது. உண்மையான எண்ணிக்கையைக் கண்டறிவதில் நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்' எனத் தெரிவித்தார்.

சனல் 4 நிறுவனம் முன்னர் தயாரித்த போர்க் குற்றம் தொடர்பான காணொளிகள், புகைப்படங்களை, முன்னைய அரசாங்கம் போலி என நிராகரித்த போதிலும், தற்போதைய அரசாங்கத்துக்கு, கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பிலேயே மாற்றுக் கருத்துக் காணப்படுவதாக, பிரதமர் தெரிவித்தார். இதன்போது பிரதமர், 'அங்கு இறப்புக் காணப்பட்டது என்பதை நாம் அறிவோம். அவ்வாறான போரில், இறப்புக் காணப்பட்டிருக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.

காணாமல் போனோர் அனைவரும் இறந்திருக்க வேண்டுமென பிரதமர் தெரிவித்திருந்த நிலையில், இலங்கையில் எந்தவிதமான இரகசியத் தடுப்பு முகாம்களும் இல்லை என உறுதியாகத் தெரிவிக்கிறாரா எனக் கேட்கப்பட்டபோது, 'இல்லை, எந்தவிதத் தடுப்பு முகாம்களும் இல்லை. வடக்கிலும் இல்லை, தெற்கிலும் இல்லை. நான் உறுதியாகத் தெரிவிக்கிறேன். தடுப்பிலுள்ள 292 பேர் மாத்திரமே, அரசாங்கத்துக்குத் தெரிந்தவர்கள். ஏனையோர் எவருமில்லை' எனத் தெரிவித்தார்.

இறுதிக்கட்டப் போரில், சரணடைந்ததாக ஆவணப்படுத்தப்பட்டவர்கள், ஒரு வருடத்தின் பின்னர் தடுப்பில் காணப்பட்டதாகத் தகவல்கள் இருந்த போதிலும், அவர்களைத் தற்போது காணவில்லையே எனக் கேட்கப்பட்டபோது, 'அவர்கள் அனைவரும், அனேகமாக இறந்துவிட்டார்கள்' எனத் தெரிவித்தார். தடுப்பில் ஏன் இறந்தார்கள் எனக் கேட்கப்பட்டபோது, அதற்குத் தான், காணாமல் போனோர் அலுவலகமும் உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவும் இருக்கின்றன எனவும், என்ன நடந்தது என்பதைக் கண்டறிய வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/164842/%E0%AE%AE-%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B1-%E0%AE%B1%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B1-%E0%AE%AE-%E0%AE%B1-#sthash.JytrCVNj.dpuf

மே மாதத்துக்குள் விசாரணை பொறிமுறை முன்வைக்கப்படும் என்கிறார் பிரதமர்:

 

பொறுப்­புக்­கூறல் விவ­காரம் தொடர்பில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வை யில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணையில் நாங்கள் முன்­வைத்த அர்ப்­ப­ணிப்­புக்கு அமை­வாக செயற்­ப­டுவோம். அந்த நிலைப்­பாட்டில் நாங்கள் உறு­தி­யாக இருக்­கின் றோம். எதிர்­வரும் மே மாதம் விசா­ரணை பொறி­முறை குறித்த எமது திட்­டங்­களை நாங்கள் வெளிப்­ப­டுத்­துவோம் என்று பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.

காணாமல் போனோரில் அதி­க­மானோர் உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம். ஆனால் எவ்­வாறு உயி­ரி­ழந்­தார்கள் என்­ப­தனை கண்­டு­பி­டிக்­க­வேண்டும். மக்­க­ளுக்கு இது தொடர்பில் பதில் கூற­வேண்டும். இதனை நாங்கள் செய்­வ­தற்கு அர்ப்­ப­ணிப்­புடன் இருக்­கின் றோம் என்றும் பிர­தமர் குறிப்­பிட்­டுள்ளார்.

அதி­கா­ரங்­களை துஷ்­பி­ர­யோகம் செய்­தி­ருந்தால் எமது நாட்டில் யாராக இருந்­தாலும், அவர்கள் சட்­டத்தின் முன் கொண்­டு­வ­ரப்­ப­டு­வார்கள். இவை பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­குழு ஊடா­கவே விசா­ரிக்­கப்­ப­டலாம். அல்­லது ஆணைக்­கு­ழு­வினால் விசா­ரிக்­கப்­ப­டலாம். இலங்­கையின் சட்­டத்­தை­யா­ராக மீறி­யி­ருந்தால் அவர்கள் தண்­டிக்­கப்­ப­டு­வார்கள் என்றும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க கூறி­யுள்ளார்.

செனல் 4 நிறு­வ­னத்­துக்கு வழங்­கி­யுள்ள விசேட செவ்­வி­யி­லேயே அவர் இந்த விட­யங்­களை குறிப்­பிட்­டுள்ளார்.

செவ்­வியின் முழு விபரம் வரு­மாறு

கேள்வி :- பொறுப்­புக்­கூறல் செயற்­பா­டுகள் எவ்­வாறு உள்­ளன?

பதில்:- பொறுப்­புக்­கூறல் தொடர்­பான வேலைத்­திட்­டங்­களை நாங்கள் ஒன்­றி­ணைந்து முன்­னெ­டுத்து வரு­கின்றோம். நல்­லி­ணக்க செயற்­பா­டு­க­ளையும் அந்­த­வ­கை­யி­லேயே முன்­னெ­டுக்­கின்றோம். ஜூன்­மாதம் நடை­பெ­ற­வுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் கூட்­டத்­தொ­ட­ருக்கு முன்­பாக எமது பொறுப்­புக்­கூறல் தொடர்­பான யோச­னை­களை நாங்கள் முன்­வைப்போம்.

கேள்வி :- எனினும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இந்த விசா­ரணை பொறி­மு­றையில் வெளி­நாட்டு தலை­யீட்­டுக்கு ஒரு­போதும் இட­ம­ளிக்­க­மாட்டோம் என்று கூறி­யுள்­ளாரே?

பதில்:- நாங்கள் இந்த விட­யத்தை முழு­மை­யாக நிரா­க­ரித்­து­வி­ட­வில்லை. ஜனா­தி­ப­தியும் இந்த விட­யத்தை முழு­மை­யாக நிரா­க­ரித்­து­வி­ட­வில்லை. இது நீண்­ட­கால செயற்­பா­டாகும். ஜெனி­வாவில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ரணை விட­யத்தில் நாங்கள் வழங்­கிய அர்ப்­ப­ணிப்­புக்கு அமை­வாக செயற்­ப­டுவோம். அந்த நிலைப்­பாட்டில் நாங்கள் உறு­தி­யாக இருக்­கின்றோம்.

கேள்வி:- நம்­பிக்கை என்­பது இங்கு முக்­கி­ய­மான விட­ய­மல்­லவா?

பதில்:- நாங்கள் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­கின்றோம். இது குறித்து யாரும் அச்­சப்­ப­ட­வேண்­டி­ய­தில்லை. எல்­லோ­ரையும் விடவும் இந்த விட­யத்தில் கழுத்தை நீட்­டி­யவன் நான்தான்.

சனல் 4 : – நாங்கள் அதனை அங்­கீ­க­ரிக்­கின்றோம்.

பிர­தமர் ரணில்:- எதிர்­வரும் மே மாதம் இங்கு முன்­வைக்­கப்­ப­டு­கின்ற அனைத்து சந்­தே­கங்­களும் நிவர்த்தி செய்­யப்­படும்.

கேள்வி:- ஐக்­கி­ய­நா­டு­களின் மதிப்­பீட்டின் படி 40 ஆயிரம் இறுதி யுத்­தத்தில் கொல்­லப்­பட்­டி­ருக்­கலாம் என்று கூறப்­பட்­டுள்­ளதே?

பதில்:- உண்­மையில் அந்த நேரத்தில் அதி­க­மானோர் கொல்­லப்­பட்­டி­ருந்­தனர். 40 ஆயிரம் என்ற விட­யத்தில் எம்­மிடம் கேள்­விக்­கு­றி­யொன்று உள்­ளது. ஆனால் உண்­மை­யான எண்­ணிக்­கையை கண்­டு­பி­டிப்­ப­தற்கு நாங்கள் முயற்சி செய்­கின்றோம்.

கேள்வி:- நாம் இந்த விட­யத்தை வெளிப்­ப­டுத்­திய போது அதனை பொய்­யென்று கூறி­னார்­களே? .

பதில்:- எனக்கு உங்­களின் முயற்சி தெரியும். அது முன்னாள் அர­சாங்கம். யுத்­தத்தின் போது இழப்­புக்கள் ஏற்­பட்­டி­ருந்­தமை எமக்குத் தெரியும். நிச்­ச­ய­மாக நடந்­தி­ருக்கும். ஆனால் எமக்கு எண்­ணிக்கை தெரி­யாது. ஆனால் என்ன எண்­ணிக்கை என்­பதை கண்­டு­பி­டித்து நாங்கள் சர்­வ­தே­சத்­துடன் இணை­கிறோம்.

கேள்வி:- காணாமல் போன­வர்கள் உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம் என நீங்கள் கூறி­னீர்கள். தடுப்பு முகாம்கள் தொடர்பில் ?

பதில்:- தடுப்பு முகாம்கள் எங்கும் இல்லை. வடக்­கிலும் இல்லை, தெற்­கிலும் இல்லை.

கேள்வி:- நீங்கள் உறு­தி­யாக கூறு­கி­றீர்­களா?

பதில்:- உறு­தி­யா­கவே கூறு­கிறேன். 292 பேர் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தமை எமக்கு தெரியும். அது­மட்டும் தான்.

கேள்வி:- சர­ண­டைந்­த­வர்­களை இப்­போது காண­மு­டி­ய­வில்லை. காணாமல் போனோ­வர்கள் இறந்­தி­ருக்­கலாம் என நீங்கள் கூறு­கி­றீர்கள். என்ன நடக்­கி­றது?

பதில்:- அதி­க­மானோர் உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம். உயி­ரி­ழந்­தி­ருப்­ப­தற்­கான சாத்­தி­யமே காணப்­ப­டு­கின்­றது.

கேள்வி:- தடுப்­பி­லி­ருந்­த­போது உயி­ரி­ழந்­தி­ருக்­கி­றார்­களா? ஏன் இப்­படி ?

பதில்:- அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை கண்டு பிடிக்­க­வேண்டும். மக்­க­ளுக்கு பதில் தேவைப்­ப­டு­கி­றது.

கேள்வி:- இதில் நீங்கள் அர்ப்­ப­ணிப்­புடன் உள்­ளீர்­களா?

பதில்:- அர்ப்­ப­ணிப்­புடன் உள்ளேன்.

கேள்வி:- நிறைய குற்­றச்­சாட்­டுக்கள் ராஜ­பக்ஷ மீது சுமத்­தப்­ப­டு­கின்­றன. அவர்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக நிரூபிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில்:- அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திருந்தால் எமது நாட்டில் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் கொண்டுவரப்படுவார்கள். ஆனால் அதிகளவு துஷ்பிரயோகங்கள் குற்றச்சாட்டுக்களாக இல்லை. இவை பாராளுமன்றத் தெரிவுக்குழு ஊடாகவே விசாரிக்கப்படலாம். அல்லது ஆணைக்குழுவினால் விசாரிக்கப்படலாம். இலங்கையின் சட்டத்தையாராக மீறியிருந்தால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

http://sankathi.com/dailynews/2016/01/28/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.