Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பீப் பாடல் சர்ச்சை: கோவை போலீசாரிடம் சிம்பு ஆஜர்- 'இறைவன் பார்த்துக் கொள்வான்' என பேட்டி!

Featured Replies

பீப் பாடல் சர்ச்சை: கோவை போலீசாரிடம் சிம்பு ஆஜர்- 'இறைவன் பார்த்துக் கொள்வான்' என பேட்டி!

 

பீப் பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்பு கோவை காவல் நிலையத்தில் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, என் மீது எந்த தவறும் இல்லை, இதற்கு மேல் இறைவன் பார்த்துக்கொள்வான் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நடிகர் சிம்பு பாடி இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்ததாகக்  கூறப்படும்  ‘பீப்’ பாடல் இணையதளத்தில் வெளியானது. இது பெண்களைக் கொச்சைப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்ட கலாச்சார சீர்கேடு பாடல் என்று கூறி பல்வேறு  கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். 

simbu%20long%202%281%29.jpg

பல்வேறு பெண்கள் அமைப்புகள்,மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பினர் தொடர்ச்சியான  போராட்டத்தில் குதித்தனர். ஊடகங்கள் மற்றும் சமூக வலைத் தளங்களில், பீப் பாடலுக்கும் நடிகர் சிம்பு மற்றும் அனிருத்துக்கும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர்.

நடிகர் சிம்பு மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று போராடிய,  மாதர் சங்கத்தினர் கோவை போலீசில் புகார் செய்தனர். புகாரின் அடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் 12 ம் தேதி கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிம்பு, அனிருத் மீது பெண்களை இழிவுபடுத்துதல் உள்பட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆனால் அனிருத் வெளிநாட்டிலும் சிம்பு இந்தியாவிலும்,இந்தப் புகாருக்குப் பயந்து பல வாரங்கள் தலைமறைவாக இருந்தனர். சிம்புவின் தாயாரும்,தந்தை டி.ராஜேந்தரும் ஊடகங்களில் கண்ணீர் பேட்டி அளித்தனர்.தங்கள் மகன் சிம்பு தவறு செய்யவில்லை என்றும்,சதி செய்யப்பட்டே சிம்பு பீப் பாடல் விவகாரத்தில் சிக்க வைக்கப்பட்டார் என்றும் விளக்கம் அளித்தனர். 

மேலும், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் வழக்குப் பதிவு செய்தனர். இதுபோல வேறு சில போலீஸ் நிலையங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்தப்  பாடல் விவகாரத்தில் இசையமைப்பாளர் அனிருத் கடந்த மாதத்தில் கோவை போலீசில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

நடிகர் சிம்பு கோவை போலீஸ் நிலையத்தில் ஆஜராக காலஅவகாசம் கேட்டு நீதிமன்றத்தில்  மனுதாக்கல் செய்து இருந்தார். இதற்கிடையே பீப்  பாடல் விவகாரத்தில் சிம்பு வருகிற 24ம்  தேதிக்குள் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து 24ம் தேதிக்குள் நடிகர் சிம்பு ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில், நேற்று(ஞாயிறு) மாலை கோவைக்கு வந்த சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் இரவு 7 மணியளவில் தனது வழக்குரைஞருடன் ரேஸ் கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். பின்னர் அங்கு காவல் ஆய்வாளரைச் சந்தித்து தனது மகன் மீதான வழக்கு குறித்து விளக்கம் கேட்டார்.

இந்நிலையில், இன்று (திங்கள்) காலை சுமார் 10 மணியளவில் கோவை காட்டூர் காவல் நிலையத்தில் நடிகர் சிம்பு ஆஜராகி விளக்கம் அளித்தார்.   இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிம்பு, "காவல்துறை அதிகாரிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறியுள்ளேன். என் மீது எந்த தவறும் இல்லை. காவல்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவேன். இதற்கு மேல் இறைவன் பார்த்துக் கொள்வான்" என்று தெரிவித்தார்.

http://www.vikatan.com/news/tamilnadu/59443-simbu-appear-in-kovai-police-station.art

  • தொடங்கியவர்

'சிம்புவிடம் இன்னும் 150 பீப் பாடல்கள் இருக்கின்றன'...கொதிக்கிறார் இந்தப் புகார்தாரர்!

 

imbu%20150.jpgகோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் நேற்றிரவு(ஞாயிறு) தன்னுடைய தந்தை டி.ராஜேந்தருடன் ஆஜராகியிருக்கிறார் சிம்பு.

"பீப்" பாடலுக்குப் பின் டிசம்பர் மாதம் முதல் தலை மறைவு வாழ்வில் இருந்த நடிகர்  சிம்பு இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார். சிம்புமீது கோவை ரேஸ்கோர்ஸ் காவல்நிலையம் மற்றும் சென்னையில் அடுத்தடுத்த புகார்கள் மாதர் சங்கத்தின் சார்பில் கொடுக்கப்பட்டிருந்தன.  தமிழ்நாடு பால் முகவர்கள்  தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர்- நிறுவனர் ஆவின் எஸ்.ஏ.பொன்னுச்சாமியும் ஒரு புகாரைக் கொடுத்திருந்தார்.

இதுதவிர,  பெண்கள் அமைப்பினர் இடைவிடாத போராட்டங்களையும் நடத்தினர். போலீசாரும் சிம்புவைத் தேடிவருவதாக தெரிவித்தனர். ஆனால், இந்த மூன்று மாத காலமும், "சிம்பு எங்கேயும் ஓடிப் போய் விடவில்லை... அவர் தலைமறைவாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை" என்று சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் ஒரு பக்கம் பேட்டியும் கொடுத்துக் கொண்டிருந்தார்.காஞ்சிபுரம் வழக்ககறுத்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு வேண்டுதலும் செய்தார்.

 இந்த சூழ்நிலையில்தான் சிம்பு போலீசில் நேற்றிரவு ஆஜராகியிருக்கிறார்.  நாளை மறுநாள் (24-ந்தேதி) சிம்பு குறித்த வழக்கு விசாரணை கோர்ட்டில் வருகிற நிலையில் இந்த ஆஜர் படலம் நடந்திருக்கிறது. சிம்புவை கோர்ட்டுக்கு வரவழைத்திருக்கும் ஆவின் பொன்னுச்சாமியிடம் பேசியதிலிருந்து....

" டாஸ்மாக்கை மூடச்சொல்லி பாடகர் கோவன் ஒரு பாடலைப் பாடியதற்கே அவரை தூக்கிவந்து இருக்கிற செக்‌ஷன்களையெல்லாம் போட்டு போலீசாரும், இந்த அரசும் படுத்திய பாட்டை நாடறியும். மூன்றரை கோடி பெண்கள் உள்ள தமிழ்நாட்டில் இப்படி ஒரு பாடலை பாடியவரை போலீசார், மூன்று மாதமாக நெருங்கவே முடியாமல் கண்ணாமூச்சு விளையாடியதை என்னவென்று சொல்வது ?

’இன்னும் இதுபோல் 150 பாடல்களை நான் கையில் வைத்திருக்கிறேன்’ என்று சிம்பு சொல்லியிருக்கிறார்... வேறு எந்த மாநிலத்திலாவது இப்படி ஒரு பாடலை வெளியிட்டு விட்டு அதோடு நிறுத்தாமல் கைவசம் அதேபோல் பாடல்கள் இருக்கிறது என்று சொல்ல முடியுமா? இந்த துணிச்சலை சிம்புவுக்கு கொடுத்தது யார்?

ஏதோ சொத்துக் குவிப்பு வழக்கு போல  ஆஜராகாமல் இத்தனை இழுத்தடிப்பு செய்தும் கூட இன்னும் aavin%20ponnusamy.jpgஆணவம் குறையாமல், மன்னிப்பு கேட்கும் பண்பு இல்லாமல், நான் தவறு செய்திருந்தால் அதை இறைவன் பார்த்துக் கொள்வான் என்று சொல்லித் திரிகிற சிம்புவை ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமும் கண்டிக்க வேண்டும். இல்லையென்றால் இது போன்று ஆயிரம் அவலங்கள் நாட்டில் உருவாகி எந்த தண்டனையும் பெறாமல் மறைந்துவிடும்.

சிம்புவின் "பீப்" பாடலை  ஏதோ ஹிட் சாங் போல என்று நினைத்து இது குறித்த எதுவும் அறியாத நிலையில் நான், என் மனைவி, என் மகள் மூவருமே கேட்டு விட்டோம். அப்போது எங்கள் உள்ளம் வேதனையால் துடித்தது போன்று யாரும் இனி துடிக்கக் கூடாது என்ற நிலையில்தான்  வழக்குத் தொடர்ந்தேன்.

சிம்புவின் கேவலமான பாடல் விவகாரத்தின் மீதான புகாரில் என் மனைவி, மகள் இருவரையுமே  ஐ- விட்னஸாக போட்டிருக்கிறேன். மற்றவர்கள் நடத்திய போராட்டம், ஆர்ப்பாட்டம் எப்படிப் போகுமோ தெரியாது, நான் கொடுத்துள்ள புகாருக்கும், போட்டுள்ள வழக்கிற்கும் சிம்பு பதில் சொல்லியே ஆக வேண்டும் " என்கிறார் ஆவின் பொன்னுச்சாமி.

ஒரு ‘பீப்’புக்கே தமிழ்நாடு தாங்கலை... இதுல இன்னும் 150-ஆ...!?

http://www.vikatan.com/news/coverstory/59452-simbu-peep-songs.art

2 hours ago, நவீனன் said:

ஒரு ‘பீப்’புக்கே தமிழ்நாடு தாங்கலை...

2eezq75.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.