Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆயுதம் ஏந்தி போராடும் மனநிலையில் எவரும் இல்லை! உறவுகளின் பாசத்துக்காகவே காத்திருக்கிறார்கள்!

Featured Replies

ஆயுதம் ஏந்தி போராடும் மனநிலையில் எவரும் இல்லை! உறவுகளின் பாசத்துக்காகவே காத்திருக்கிறார்கள்!
 
 
ஆயுதம் ஏந்தி போராடும் மனநிலையில் எவரும் இல்லை! உறவுகளின் பாசத்துக்காகவே காத்திருக்கிறார்கள்!
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது உறவுகளான தமிழ் அரசியல் கைதிகள் எவரும் ஆயுதம் ஏந்திப் போராடும் மனநிலையில் இல்லை. அவர்கள் தமது உறவுகளின் பாசத்துக்காகவே காத்திருக்கின்றார்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். இரும்புக் கதவுகளுக்குப் பின்னாலிருக்கும் வலிகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. 
 
நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து அரசியல் கைதிகளையும் அரசியல் ரீதியான தீர்மானமொன்றை எடுத்து அரசு உடன் விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு கண்ணீருடன் கோரிக்கை விடுத்தார் ஏழு வருடங்களாக தமிழ் அரசியல் கைதியாகத் தடுத்து வைக்கப்பட்டு நேற்று முன்தினம் கொழும்பு விசேட நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் முருகையா கோமகன்.
 
கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் சிறையில் தனது அனுபவங்கள், ஏனைய கைதிகளுக்கான விடுதலை தொடர்பில் கருத்துக்களை வெளிப்படுத்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
 
அவர் மேலும் கூறுகையில்,
என்னை சக அரசியல் கைதிகள் வழியனுப்பி வைத்துள்ளனர். எனினும், எனது விடுதலை மகிழ்ச்சியளிப்பதாகவில்லை. சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது உறவுகளான தமிழ் அரசியல் கைதிகளில் தற்போது எவரும் ஆயுதம் ஏந்திப் போராடும் மனநிலையில் இல்லை. தமது உறவுகளுடன் எஞ்சிய காலத்தைப் போக்கிக்கொள்வதற்கே விரும்புகின்றார்கள்.
 
பாசத்திற்காக அவர்கள் ஏங்குகின்றார்கள். அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவேண்டும். நானும் ஒரு காலத்தில் எனது உறவுகளுடன் இணைவேனோ என்று எண்ணினேன். ஏக்கத்தோடு காத்திருந்தேன். அதேபோன்றே இன்று ஏனையவர்களும் காத்திருக்கின்றார்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அவர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றவேண்டும். அவர்களின் விடுதலையை உறுதி செய்யவேண்டும். அர்ப்பணியையும் சுமந்தவனாகவே நான் தற்போது உங்கள் முன்னிலையில் இருக்கின்றேன். இரும்புக் கதவுகளுக்கு பின்னால் இருக்கும் கொடுமையான வலிகளை யாரும் அறியமாட்டார்கள். 
 
அந்த வலிகளை நேரடியாக அனுபவித்தவன் நான். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கோரிக்கைகள் நியாயமானது. அதனைப் புரிந்து கொள்ளவேண்டும். மிக நீண்டகாலமாக வார்த்தைகளினால் வடிக்க முடியாத வலிகளுடன் விடுதலைக்கான ஏக்கத்துடன் காத்திருக்கின்றார்கள். 
 
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக குறிப்பாக தமிழ்த் தலைமைகள் உரிய தீர்மானங்களை மேற்கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலைசெய்ய முற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்டிருந்த முன்னாள் போராளி ஜெனீபனை அவர் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்திருந்தார். ஜெனீபனின் விடுதலையானது எமது விடுதலைக்கான வழியை உருவாக்கும் சமிக்ஞையாகவே கருதியிருந்தோம். 
 
இருப்பினும் தற்போது அவ்வாறான சூழலொன்று காணப்படுவதாக தெரியவில்லை. இவ்வாறான நிலையிலேயே விசாரணைகளின்றி மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 14 அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் தொடர்ச்சியாக எட்டாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அவர்கள் இவ்வாறு தொடர்ந்தும் போராடிக்கொண்டிருப்பதை அனுமதிக்க முடியாது. அவர்களின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவர்களைப் புனர்வாழ்வளித்தோ அல்லது பிணை அடிப்படையிலோ அல்லது அரசியல் ரீதியாக மேற்கொள்ளப்படும் தீர்மானத்தின் அடிப்படையின் பிரகாரம் ஏதாவதொரு பொறிமுறையில் விடுதலையளிப்பதற்கு அரசு முன்வரவேண்டும். 
 
தற்போது நல்லாட்சி அரசு உருவாகியுள்ளது எனக் கூறப்படுகின்றது. ஆகவே, நல்லெண்ண சமிக்ஞையாக அரசியல் ரீதியான தீர்மானங்களை மேற்கொண்டு அவர்களின் விடுதலையை உறுதி செய்ய வேண்டுமென இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றேன். அத்துடன் அரசியல் தலைமைகள், சிவில் சமுக அமைப்புக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் சிறைகளின் வாடும் எமது உறவுகளின் விடுதலைக்குத் தொடர்ந்தும் அழுத்தமளிக்க வேண்டும் எனக் கோருகின்றேன் என்றார். 
 
  • தொடங்கியவர்
'அரசியல் கைதிகளிடம் கட்டாய ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டது'
 
02-03-2016 04:12 PM
Comments - 0       Views - 22

article_1456915439-DSC_0044.JPG

-சொர்ணகுமார் சொரூபன்

'சிறைகளிலுள்ள அரசியல் கைதிகள் எவரும் ஒப்புதல் வாக்குமூலத்தை சுயமாக அளிக்கவில்லை. கட்டாயத்தின் பேரில் வாங்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் பலர் தண்டனை பெற்று சிறைகளில் உள்ளனர்' என அரசியல் கைதியாகவிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் மாநகர சபை உறுப்பினர் முருகையா கோமகன் தெரிவித்தார்.

சிறைகளிலுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி அரசியல் கைதிகளின் உறவினர்கள், யாழ்ப்பாணம் பஸ் நிலையத்துக்கு முன்பாக இன்று புதன்கிழமை (02) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்;ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துக் கூறுகையிலேயே கோமகன் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், 'ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியதாலேயே என்னையும் 6 வருடங்கள் சிறையில் வைத்திருந்தனர். எனினும், என்னிடம் பெற்றப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் கட்டாயத்தின் பேரில் பெறப்பட்டது என அறிந்த வவுனியா நீதிமன்றம், என்னை விடுதலை செய்தது. ஆனால், கொழும்பு நீதிமன்றத்தில் இருந்த எனது வழக்கு, நீண்டகாலமாக முடிவடையாமல் இருந்தது. அங்கு எனது ஒப்புதல் வாக்குமூலத்தை உண்மை என நம்பினர். இறுதியாகவே ஒப்புதல் வாக்குமூலம் உண்மை இல்லையென உணர்ந்து விடுதலை செய்தனர்' என்றார்.

'இவ்வாறே சிறைகளிலுள்ள அரசியல் கைதிகளுக்கும் நடந்தது. முன்னர் தண்டனை பெற்ற அரசியல்கைதிகளின் நீதிமன்ற தீர்ப்பை மீள்பரிசீலனை செய்யுமாறு, ஐ.நா பரிந்துரை செய்திருந்தது. ஆனால், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

நான் சிறையிலிருந்து, அங்குள்ள அரசியல் கைதிகளின் கனத்த மனச்சுமைகளைத் தாங்கியவாறு வந்துள்ளேன். தமிழர்கள் தலைநிமிர பாடுபட்டவர்கள். இன்று தங்கள் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருக்கின்றார்கள். ஈழத்தமிழர்கள் தங்களின் விடுதலைக்காக பாடுபடுவார்கள் என அவர்கள் இன்னமும் நம்புகின்றனர்.

தங்கள் உறவுகளை நேசிக்க முடியாமல், தங்கள் பிள்ளைகளை ஆரத்தழுவ முடியாமல் சிறைகளில் வாடுகின்றனர். அவர்களின் குடும்பங்களும் துயரத்தில் வாடுகின்றனர். அவர்களின் விடுதலைக்காக அனைவரும் அணிதிரள வேண்டும்.

அரசியல் கைதிகளுக்கு நியாயமான தீர்வு வேண்டும். அவர்களை விடுதலை செய்ய ஏதாவது ஒரு பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அவர் மேலும் கூறினார்.

- See more at: http://www.tamilmirror.lk/167344/-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%B2%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%B1%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%A4-#sthash.eBb5Fu9n.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.