Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டை அபிவிருத்தி செய்யும் போது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் நேராது

Featured Replies

நாட்டை அபிவிருத்தி செய்யும் போது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் நேராது
 
 
நாட்டை அபிவிருத்தி செய்யும் போது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் நேராது
தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தல்களும் நேராத வகையில் நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுனெ துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜீன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
 
இன்று  திருகோணமலை மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில் நடைப்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அமைச்சர் இக்கருத்தினை வெளியிட்டார்.
 
முதலீட்டாளர்கள் சிங்கப்பூரிலிருந்தா, சீனாவிலிருந்தா, ஜப்பானிலிருந்தா?அல்லது இந்தியாவிலிருந்தா? வருகைதருகின்றார்கள் என்பது முக்கியமல்ல மாறாக இங்கே வருகைத்தருகின்ற முதலீட்டாளர்கள் இந்நாட்டு சட்டதிட்டங்களிற்கமைய முதலீடுகளை மேற்கொள்கின்றார்களா என்பது தொடர்பாக ஆராய்ந்து பார்க்க வேண்டுமென அமைச்சர் அர்ஜீன ரணதுங்க சுட்டிக்காட்டினார். 
 
திருகோணமலையில் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான காணிகள் தொடர்பில் காணப்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் பொருட்டே இன்று திருகோணமலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் உள்ளடங்கலாக மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களும் கலந்துகொண்டார்கள்.
 
இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான காணிகளில் பல வருடங்களாக வாழும் மக்களிற்கு அக்காணிகளுக்கான உரிமை பத்திரத்தை வழங்குவது தொடர்பாக இக்கூட்டத்தில் விசேட அவதானம் செலுத்தப்பட்டது. மக்களுக்கும் மற்றும் பிரதேச அபிவிருத்திக்கும் எவ்வித பாதிப்புகளும் நேராத வகையில் இச்செயற்பாட்டை முன்னெடுக்குமாறு எதிர்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் கேட்டுக்கொண்டார். 
 
எந்தவொரு செயற்பாடும் அரசாங்க கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டும்.தனிப்பட்ட நபர்களின் தேவைகளை பூர்திசெய்யும் பொருட்டு அரசாங்கம் எவ்வித அபிவிருத்திச் செயற்பாடுகளையும் முன்னெடுக்காது. நாட்டின் அபிவிருத்திக்கு வெளிநாட்டு முதலீடுகள் அவசியமாகும். எம்மால் வெளிநாட்டு முதலீடுகளை நிறுத்த முடியாது.  வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டே 1980ஆம் ஆண்டு சிங்கப்பூர் தன்னுடைய அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பித்தது. அன்று இலங்கை வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பில் அவதானத்தை செலுத்த தவறிவிட்டமையால் எங்கள் வளர்ச்சி தேக்கமடைந்தது. ஆனால் சிங்கப்பூர் வளர்ச்சியடைந்தது. இதன் மூலமாக நாங்கள் பாடமொன்றை கற்றுக்கொண்டோம். தேசிய பாதுகாப்பிற்கும் மற்றும் தேசிய பொருளாதாரத்திற்கும் எவ்வித அச்சுறுத்தல்களும் நேரிடாத வகையில் வெளிநாட்டு முதலீடுகளை இந்நாட்டில் மேற்கொள்வதற்கான சந்தர்பங்களை வழங்க வேண்டும். நாங்கள் பழைய கதைகளை பேசி பயனில்லை என எதிர்க்கட்சித்  தலைவர் குறிப்பிட்டார். 
 
எதிர்க்கட்சித் தலைவர் உள்ளடங்களாக எம் அனைவரதும் ஒரே எதிர்பார்ப்பு இலங்கையர்கள் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இந்நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதாகுமென அர்ஜீன ரணதுங்க தெரிவித்தார்.
 
இன்றைய தேசிய அரசாங்கம் அபிவிருத்திச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றது. அவ் அபிவிருத்திச் செயற்பாடுகள் சரியானவையா அல்லது தவறானவையா என பொதுமக்கள் தீர்மானிப்பார்கள். பொறுப்புள்ள அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இந்நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் எவ்வித அபிவிருத்திச் செயற்பாடுகளையும் முன்னெடுக்க மாட்டார்களென நான் உறுதியாக தெரிவித்துக்கொள்கின்றேன். எதிர்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் உள்ளடங்கலாக நாம் அனைவரும் அந்நிலைப்பாட்டிலேயே உள்ளோம். 
 
இந்நாட்டின் சட்டதிட்டங்களிற்கு உட்பட்டே முதலீட்டாளர்கள் எங்கள் நாட்டிற்கு வருகைத்தருகின்றார்கள். கடந்த காலத்தில் சட்டத்திற்குட்பட்டு செயற்பட தவறியுள்ளனர் என்பதை நீங்கள் மறக்க வேண்டாம். கடந்த காலத்தில் இந்நாட்டில் சட்டமொன்று இருக்கவில்லை. அது தான் உண்மை. வருகைத்தரும் முதலீட்டாளர்களுக்கு ஒவ்வொரு இடங்களை வழங்கினார்கள். இன்று நாங்கள் இறுகிப்போயுள்ளோம். அம்பாந்தோட்டைக்கு விஜயம் மேற்கொண்டால் உண்மை நிலை புலப்படும். ஒரு தரப்பினரின் யோசனைகளுக்கும் சந்தர்பங்கள் வழங்கியுள்ளார்கள். நாங்கள் இன்று இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இந்நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக முதலீட்டாளர்கள் எங்கள் நாட்டிற்கு வருகைதர முடியும். 
 
முதலீட்டாளர்கள் ஒரு போதும் கடற்படை  , இராணுவ மற்றும் விமானபடைமுகாம்களிற்கு விஜயம் செய்யமாட்டார்கள். அவ்வாறு செல்ல நான் ஒரு போதும் இடமளிக்க மாட்டேன். இந்நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து வருகைதருகின்ற முதலீட்டாளர்களையே நான் என் துறைமுகத்திற்குள் அனுமதிப்பேன். கடந்த காலத்தில் இவ்வாறான சட்டதிட்டங்கள் பின்பற்றப்படவில்லை. எனவே, இதன் காரணமாக இன்று சிலர் தூக்குத்  தண்டணையை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது என அவர்  மேலும் தெரிவித்தார்.
 
துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் செயலாளர் எல்.பி.ஜயம்பதி உள்ளடங்கலாக இலங்கை துறைமுக அதிகாரச் சபையின் அதிகாரிகள் பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்.
 
                    1457003052_arjuna.jpg
 
                        http://onlineuthayan.com/news/9976

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.