Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்ப்பாணத்தில் 700 ஏக்கர் காணிகளை இன்று ஒப்படைக்கிறார் ஜனாதிபதி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்திலிருந்த 700 ஏக்கர் காணி இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்படவுள்ளது. இன்று யாழ்ப்பாணம் செல்லவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெல்லிப்பளை மற்றும் கோப்பாய் பிரதேச சபைப் பிரிவுகளில் மேற்படி 700 ஏக்கர் காணிகளை மக்களுக்குக் கையளிக்கவுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்திலிருந்த 700 ஏக்கர் காணி இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்படவுள்ளது. இன்று யாழ்ப்பாணம் செல்லவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெல்லிப்பளை மற்றும் கோப்பாய் பிரதேச சபைப் பிரிவுகளில் மேற்படி 700 ஏக்கர் காணிகளை மக்களுக்குக் கையளிக்கவுள்ளார்.

   

12 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 620 குடும்பங்களுக்கு இன்றைய தினம் ஜனாதிபதியினால் காணிகள் மீள கையளிக்கப்படவுள்ளது. அத்துடன் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள பிரபல பாடசாலைகளான நடேஸ்வரா கல்லூரி மற்றும் நடேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயத்தையும் விடுவித்து கல்வி நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கவுள்ளார். யாழ். மாவட்டத்தில் அரசாங்கம் 65,000 வீடுகளை நிர்மாணிப்பதற்குத் திட்டமிட்டு அதன் மாதிரி வீடொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் அதனை ஜனாதிபதி இன்று பார்வையிடுவார்.

அப்பிரதேசத்தின் கால சூழ்நிலைக்கேற்றவாறு அவ்வீடுகள் அமைய வேண்டுமென்பது மக்களின் வேண்டுகோள் என்பதால் மாதிரி வீடொன்று நிர்மாணிக்கப்பட்டு அவ்வீட்டை ஜனாதிபதி இன்று பார்வையிடவுள்ளார்.

கோப்பாய் பிரதேச சபையில் இன்று இறுதியாக 200 ஏக்கர் காணிகள் மக்களுக்குக் கையளிக்கப்படுவதோடு அங்கு உயர் பாதுகாப்பு வலயம் முடிவுக்கு வருகிறது. வடக்குக்கு இன்று விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அரசாங்கத்தினால் அங்கு நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளையும் பார்வையிடவுள்ளதுடன் வடமாகாண முதலமைச்சர், மாகாண ஆளுநர் மற்றும் உயர்மட்ட அரச அதிகாரிகளுடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

http://www.seithy.com/breifNews.php?newsID=153252&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்ல விடயம்...! மக்கள் மீள் குடியமர்வது பிரதானமானது...!!

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்ல விடயம்தான், அதேநேரம் விடுவிக்கப்பட்ட காணிகளில் உரியவர்கள் குடியேறி நிலைகொள்ளும் வரையில், அங்கு உள்ளவற்றைத் திருடவரும் திருடர்களைக் கண்காணிப்பதற்கான ஒழுங்குகளைச் செய்து கொடுப்பதும் மிக மிக அவசியமானது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.