Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஹைட் மைதானத்தில் சு.க உறுப்பினர்கள்; சோமவன்சவும் வந்தார்

Featured Replies

ஹைட் மைதானத்தில் சு.க உறுப்பினர்கள்; சோமவன்சவும் வந்தார்
 

article_1458214010-hid300.jpgகூட்டு எதிரணியினரால் நடத்தப்படும் மக்கள் பொதுக் கூட்டமொன்று கொழும்பு ஹைட் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள், இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டால், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் தலைமை, அறிவித்திருந்த நிலையிலும், அக்கட்சியின் உறுப்பினர்கள் பலர், அதில் கலந்துகொண்டுள்ளனர்.

சு.க.வின் உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ, குமார வெல்கம, மஹிந்தானந்த அலுத்கமகே, பவித்ரா வன்னியாரச்சி, டி.பீ.ரத்நாயக்க, ஜீ.எல்.பீரிஸ், பந்துல குணவர்தன, டலஸ் அழகப்பெரும, காமினி லொக்குகே, ரோஹித அபேகுணவர்தன உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரவீரவும், கூட்டு எதிரணியின் மக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

- See more at: http://www.tamilmirror.lk/168409/%E0%AE%B9-%E0%AE%9F-%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%A9%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%9A-%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B1-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%A9%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%B5-%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%B0-#sthash.rXhH9krf.dpuf

ஹைட் மைதானத்தில் மஹிந்தவும் சோமவன்சவும் கூட்டு எதிரணி உறுப்பினர்களும் சங்கமித்தனர்

 

ஹைட் மைதானத்தில்   மஹிந்தவும் சோமவன்சவும்  கூட்டு எதிரணி உறுப்பினர்களும் சங்கமித்தனர்:-

 

 

கூட்டு எதிரணியினரால் நடத்தப்படும் மக்கள் பொதுக் கூட்டமொன்று கொழும்பு ஹைட் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கலந்து கொண்டுள்ளார். கூட்டம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் ஒன்றரை மணித்தியாலங்களின் பின்னர், அவர் அக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
சோமவன்சவும் கூட்டத்தில் இணைந்தார்.


கூட்டு எதிரணியினரால் நடத்தப்படும் மக்கள் பொதுக் கூட்டத்தில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். சிறீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள், இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டால், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் தலைமை, அறிவித்திருந்த நிலையிலும், அக்கட்சியின் உறுப்பினர்கள் பலர், அதில் கலந்துகொண்டுள்ளனர்.


சு.க.வின் உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ, குமார வெல்கம, மஹிந்தானந்த அலுத்கமகே, பவித்ரா வன்னியாரச்சி, டி.பீ.ரத்நாயக்க, ஜீ.எல்.பீரிஸ், பந்துல குணவர்தன, டலஸ் அழகப்பெரும, காமினி லொக்குகே, ரோஹித அபேகுணவர்தன உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

வேறு எங்கும் இல்லாத பாராளுமன்றம் இலங்கையில் உள்ளது! சோமவங்ச அமரசிங்க:-


வேறு எந்த நாட்டிலும் இல்லாத பாராளுமன்றம் இலங்கையில் உள்ளதாகவும், தோல்வியடைந்த வேட்பாளர்கள் 14 பேர் அங்குள்ளதாகவும் மக்கள் சேவைக் கட்சியின் தலைவர் சோமவங்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.

இதிலிருந்து மைத்திரி - ரணிலின் ஜனநாயகத்தை புரிந்து கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டை பிரிப்பதற்கும் விற்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதாகவும,; எதிரணியினர் இன்று மேற்கொண்டுவரும் 'மக்கள் போராட்டம்' என்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போது சோமவங்ச அமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.



 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/130143/language/ta-IN/article.aspx

 

j0l0t5.png

mvq5v9.jpg

10s9cux.jpg

4sfe4h.jpg

  • தொடங்கியவர்

அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்: மஹிந்த உட்பட 48 எம்.பி.க்கள் பங்கேற்பு

thumb_large_IMG_0147.JPG

(ஆர்.யசி,க.கம­ல­நாதன்)IMG_0147.JPG

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­விக்கும் முக­மாக இன்­றைய தினம் பொது எதி­ர­ணி­யி­னரால் ஹைட் பார்க் மைதா­னத்தில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த கூட்டத்தில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மையில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் 48 எம்.பி.க்கள்   கள­மி­றங்­  கி­யி­ருந்­தனர்.

 

அத்துடன் சுதந்திரக்கட்சியின் 30 இற்கும் மேற்பட்ட எம்.பி.க்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அத்துடன் இந்த போராட்­டத்­தில் பல்­லா­யிரக் கணக்­கான கட்சி ஆத­ர­வாளர்கள் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

 

 ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பங்­காளி கட்­சியின் தலை­வர்­களும் கலந்து கொண்­டி­ருந்­த­மையை அவ­தா­னிக்க முடிந்­தது. இன்று நடை­பெற்ற போராட்­டத்தின் கார­ண­மாக  கொழும்பில் பல பகு­தி­க­ளிலும் பாரிய வாகன நெரிசல் ஏற்­பட்­டி­ருந்­த­மையை அவ­தா­னிக்க முடிந்­தது.

 

இதன்­போது வடக்கு கிழக்கு மாகா­ணங்­களை இணைக்காதே , எட்காவை உட­ன­டி­யாக நிறுத்து போன்ற கோஷங்­களை எழுப்­பிய வண்­ணமும் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் புகழ்­பா­டிய வண்­ணமும்  ஆத­ர­வா­ளர்­கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

பல்வேறு காரணங்களை முன்வைத்து மஹிந்த அணியினர் இன்று இந்த கூட்டத்தை நடத்தியிருந்தனர்.

 

கூட்டத்தில் முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­பக்ஷ , முன்னாள் சபா­நா­ய­கரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சமல் ராஜ­பக்ஷ, மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் முன்னாள் தலைவர் சோமா­வன்ஸ அம­ர­சிங்க, முன்னாள் பிர­தம நீதி­ய­ரசர் சரத் என் சில்வா , முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷ ஆகியோர் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

IMG_0205.JPG

மேலும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான விமல் வீர­வன்ஸ, தினேஷ் குண­வர்­தன, பந்­துல குண­வர்­தன , வாசு­தேவ நாண­யக்­கார , சந்­தி­ர­சிறி கஜ­தீர, உதய கம்­மன்­பில,  முன்னாள்  அமைச்­சர்­க­ளான திஸ்ஸ விதா­ரன, ஆகி­யோரும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான நாமல் ராஜ­பக்ஷ, கெஹ­லிய ரம்­புக்­வெல, சி.பி ரத்­நா­யக்க, லோஹான் ரத்­வத்தை ,குமார வெல்­கம, காமினி லொக்­குகே, சுசந்த புஞ்சி நிலமே, திலும் அமு­னு­கம, கீதா குமா­ர­சிங்க ,எஸ்.சந்­தி­ர­சேன, மஹிந்­தா­னந்த அலுத்­க­மகே, ரோஹித்த அபே­கு­ண­வர்­தன ,டலஸ் அழ­கப்­பெ­ரும ,மஹிந்த யாப்பா அபே­வர்­தன மற்றும் ஜோன்ஸ்டன் பெர்­ணான்டோ உள்­ளிட்ட பலர் கலந்து கொண்­ட­மையை அவ­தா­னிக்க முடிந்­தது.

 

இந்த போராட்­டத்­தில் பல்­வேறு பிர­தே­சங்­க­ளி­லி­ருந்தும் பெருந்­தொ­கை­யான மக்கள் கலந்து கொண்­டி­ருந்­தனர். 

 

இதன்­போது போராட்­டத்­திற்கு பொலிஸ் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­த­மையை அவ­தா­னிக்க முடிந்தது. 

இந்த போராட்டத்தின் காரணமாக கொழும்பின் நகர மண்டபம், மருதானை, கொம்பனிதெரு ,பொரளை, நாராஹேன்பிட்டிய ,கொள்ளுப்பிட்டி மற்றும் கோட்டை பகுதிகளில் பாரிய வாகன நெரிசல் காணப்பட்டது. இதன்காரணமாக மக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டமையை அவதானிக்க முடிந்தது.

http://www.virakesari.lk/article/4303

 

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தாவுக்கு மக்கள் ஆதரவு உண்டு போல கிடக்கு

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்களின் வாக்குகள் மட்டுமே தீர்மானிப்பதாக இருந்தால் மகிந்த ராசபக்சாவே இன்றும் சிறீலங்காவின் சனாதிபதி. :shocked:

Edited by Paanch

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.