Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடைசி தலைமுறை நாம்பன்கள்

Featured Replies

4

கொழும்புமிரருக்காக ஜெரா)

நாய், பூனை, கோழி இவைகள் தான் வழமையான செல்லப்பிராணிகள். ஆனால் பாரம்பரியமான விவசாயிகளின் வீடுகளில் நாம்பன்கள்தான் செல்லப்பிராணிகள். நாம்பன்கள் என்றால், பார்க்க பயமூட்டும் ஏரி புடைத்த, தொடை அகன்ற, வளைந்து – முறுக்கேறிய ஈட்டிமுனைக் கொம்புகளை மாடுகளைத் தான் குறிப்பிடுகின்றனர். மாவெள்ள, (வெள்ளை) கறுப்பு, சிவல (சிவப்பு), பூச்சி (கறுப்பும் வெள்ளையும் கலந்தது) நிறங்களில் நாம்பன்கள் வளர்க்கப்படுகின்றன. 

நாம்பன்கள் வயல்களில் உழவு செய்யவும், மாட்டு வண்டில்பளில் பாரமிழுக்கவும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவ்வாறான மனித முன்னேற்றத்துக்கான நடவடிக்கைளில் நாம்பன்களைப் பயன்படுத்தும் முறை இன்று, நேற்று அறிமுகமாகி, அருகி வரும் ஒன்றல்ல. ஆசிய பண்பாட்டில், இற்றைக்கு கிமு. 3300 தொடக்கம் கிமு 1700 வரை நிலவிய சிந்துவெளி நாகரீகத்திலேயே நாம்பன்களின் பயன்பாடு இருந்துள்ளது. அதற்கான ஆதாரங்கள் சிந்து வெளி நிலவிய மெஹஞ்சதாரோ, ஹரப்பா படுக்கைகளில் சுடுமண் சிற்பங்களாகத் தாராளமாகக் கிடைக்கின்றன. மனித பரிணாமமானது வேட்டையிலிருந்து, மந்தை வளர்ப்புக்கு மாறியதற்கான ஆதாரமாக நாம்பன்களின் பயன்பாட்டையும் கொள்ளமுடியும். ஆனால் ஆசியாவின் முத்து எனப்படும் இலங்கையில் நாம்பன்களோடு இணைந்த மனிதப் பண்பாடு இறுதிக் கட்டத்தில் இருக்கின்றது.
வட இலங்கையில் வளமிக்க – பாரம்பரியமிக்க விவசாய கிராமமான முத்தையன்கட்டில், நாம்பன்களின் நிலை எப்பிடி இருக்கிறது?

அறுபது வயதை அண்மிக்கும் விவசாயியான கந்தையா, இப்போது 50 மாடுகள் வரை வளர்க்கின்றார். அதற்கென தனியான பட்டி (மாடு அடைக்கும் கொட்டகை) வைத்திருக்கிறார். ஆனால் ஒரு சோடி நாம்பன்களை மட்டும் தன் வீட்டோடு இணைந்த வகையில், பாதுகாப்புடன் கூடிய பட்டியொன்றில் அழகாக வைத்திருக்கிறார். அவற்றுக்கு வேளாவேளைக்கு கிளிசெறியா, புல், வைக்கிறார். தண்ணீர் தொட்டியில் வைத்திருக்கிறார். ஏன் இந்த மாடுகளுக்கு மட்டும் சிறப்பு ஏற்பாடு?

5

“என்னட்ட சண்டைக்கு முதல் அஞ்சு (5) சோடி நாம்பன் மாடுகள் நிண்டுது. சண்ட முடிஞ்சு வந்த உடன அதுகளும் என்னட்ட திரும்பிவந்திட்டுதுகள். ஆனா என்னால அதுகள முதலப் போல பராமரிக்க முடியேல்ல. முதல் எண்டால் வயல் உழுறதில இருந்து, பலகை அடிக்கிறது. சூடடிக்கிறது, பாரமிழுக்கிறது, எல்லாத்துக்குமே நாம்பன் மாடுகள். அதனால, ஒரு நாளைக்கு ஒரு சோடி மாடுகள் உழவுக்கு போனா ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் வருமானம் கிடைக்கும். ஆனா இப்ப அப்பிடியில்ல. எல்லாத்துக்கும் மெசின். எல்லாமே வேகம். எருதுகள் செய்த எல்லா வேலையையும் மிசினுகள் செய்யுது. பிறகென்னெண்டு நாம்பன்கள வளக்கிறது. அதுதான் எல்லாத்தையும் வித்திட்டு, இந்த ஒரு சோடி மட்டும் ஞாபகத்துக்காகவும், செல்லமா வளத்திட்டன் எண்டதுக்காகவும் வீட்டோட வச்சிருக்கிறன் “ என்றவரின் கைகள் சிவலையின் ஏரியை தடவிக்கொடுக்கிறது. சிவலையும் கழுத்தை குழுக்கித் தன் பெரிய தாடையை அசைத்தபடி, தன் எஜமான் கொடுக்கும் ஒத்தடத்தை அனுபவிக்கிறது.
நாம்பன்களின் உழவுக்கும், இயந்திரங்களின் உழவுக்கும் என்ன வித்தியாசமிருக்கும். நேரம் மிச்சமாகும். அறுவடை அதிகமாகும் என்றெல்லாம், இயந்திரங்களின்பால் உள்ள நன்மைகளை அடுக்கிக்கொண்டிருந்தேன்

3

சாதாரணமாக சிரித்த கந்தையா ஐயா, “மிசினிகளால அரையடிக்கு மேல தாட்டு உழ ஏலாது அப்பன். ஆனால் நாம்பன்களின்ர உழவு அப்பிடியில்ல. ஒரு அடிக்கு மேல தாட்டு உழும். மறுத்தான் அடிக்கேக்க ( இரண்டாம் தரம் உழுவது) மண் பூ மாதிரி ஆகிடும். நிலத்துக்கு கீழ இருக்கிற இயற்க பசள மேல வந்து முழு நிலத்தோடயும் கலந்திடும். அதில நடுற பயிருகள், நல்ல மூச்சா செழிச்சு வளரும். விளைச்சல் கொழிக்கும். அதோட வேலை செய்யேக்கயே மாடுகள் போடுற சாணி நிலத்துக்கு பசளையாகிடும். ஆனா மெசினுகளிட்ட இருந்து மிஞ்சுறது கரி புகை மட்டும்தான். இப்ப எல்லாம் வயலுகளுக்கு வைக்கல கூட மிச்சமில்லாமல், மிசினுகள் வேலைசெய்யிது”
ஒ…ஒரு சோடி நாம்பனின் உழவில் இவ்வளவு விவசாய அறிவியல் உண்டு என்பதை, அனுபவசாலியொருவர் சொல்லும்போதுதான் ஆழமாகப் புரிகிறது. சரி, இந்த நாம்பன்கள் எப்பிடி தெரிவாகின்றன?


“தாய்ப்பசுவோட கன்றுகள் பட்டியில ஓடித்திரியேக்கயே, நல்ல நாம்பன்கள கண்டுபிடிக்கலாம். உசார, மூச்சிறைக்காம ஓடித்திரியிற கன்றுகள் நாம்பன்களாக தெரிவுசெய்யிறதுக்கு நல்லது. அப்பிடி அவதானிச்சி, தாய்ப்பசுவிட்ட இருந்து பால் குடி மறக்கிற வயசு வர கன்றுகள, பழக்குவும். பழக்கிறதெண்டால், தெரிவுசெய்த மாடுகளின்ர தோளில நுவத்தடிய வச்சி, ( நாம்பன் மாடுகளின் கழுத்தில் வைக்கப்படும் சீர்செய்யப்பட்ட பொருத்துத் தடி) ரயர் இல்லாட்டி, மரக்குத்தி எதையாது கயித்தில கட்டி றோட்டில நேர இழுக்கப் பழக்குவம். களைக்காமல் இழுக்கிற வரைக்கும் இந்தப் பயிற்சிய குடுப்பம்”
“அதுக்குப் பிறகு, நல்லா பழக்கப்பட்ட நாம்பனுகள் வயலில, தோட்டத்தில் உழவடிக்கேக்க, அதுகளுக்கு பின்னால, நுவத்தடிய பழக்கிற நாம்பனுகளின்ர கழுத்தில வச்சி வளையவிடுவம். இந்த நேரத்தில, நாம்பனுகளுக்கு உழவடிக்கேக்க நாங்கள் குடுக்கிற கட்டளையளுக்கு, இதுகளும் பழக்கப்படும்”.
‘ஜா…ஜா…ஹேய் எண்டால் நேர போ’
‘பா..பா.. எண்டால் வளைஞ்சு வா’
‘ஓவ்..ஓவ்.. எண்டால் நில்லு ..’ எண்டு அர்த்தம். ரெண்டு மூண்டு உழவோட, எல்லாம் நல்லா பழகீடும்”.
அவர் கதைத்துக்கொண்டிருக்கும்போதே, சந்தேகக் கேள்வியொன்று குறுக்கறுத்தது. “ ஏன் நாம்பனுகளுக்கு நலம் போடுறது? குறி சுடுறது?”
“ஓ, அதுவா. பசு மாட்ட, நாம்பன் மாடுகள் நாடக்கூடாது. அப்பிடி நாடினால், வேலை செய்யாது. களைச்சுப் போய் மூச்சிறைக்கும். அதனாலதான் நலம் போடுறது. நாம்பனுகளுக்கு குறிவைக்கிறதுக்கு, சமூக காரணங்கள் இருக்கு அப்பன். அது வேண்டாம் இப்ப”
“பரவாயில்ல சொல்லுங்கோ, மாடுகளிலயே இருக்காம். சொன்னால் என்ன?”
“சொல்லலாமோ தெரியேல்ல. எங்கட ஆக்களிட்ட சாதி நடைமுறையள் இருந்ததுதானே. அதுகள பிரிச்சிக்காட்டுறதுக்குதான் நாம்பன்களுக்கு குறி சுடுறது. மாட்டின்ர முன் இல்லாட்டி பின் தொடையில அந்த நாம்பனின்ர உரிமையாளரின்ர குலக் குறியும், முதுகில அவரின்ர பேரும் குறியா சுடுவம்.

பள்ளருக்கு நுவத்தடி
பறையருக்கு மேளமடிக்கிற தடி
கரையாருக்கு மீன்
நளவருக்கு தளநார்
வெள்ளாளருக்கு சூலம், வேல், குத்துவிளக்கு
அம்பட்டருக்கு கத்தரிக்கோல், எண்டுதான் குறிசுடுறது. இது தனித்தனிய அவயளின்ர தொழில அடையாளப்படுத்தினாலும், விவசாயம் எல்லா இனங்களுக்கும் (சாதிகளுக்கும்) பொதுத்தொழிலாத்தான் இருந்திருக்கு”.

1

2

நாம்பன்களின் முதுகில் சுடப்பட்ட குறிகளுக்குப் பின்னால் இவ்வளவு பெரிய சமூக கற்பிதம் ஒன்று கடத்தப்படுவதை ஆச்சரியமாகவே நம்பமுடிந்தது. தமிழ் சமூகத்தில் சாதி கடத்தப்படும் இடமாக நாம்பன்களின் முதுகுகள் கூட பயன்பட்டிருக்கின்றது. ஆனால் அந்நிலமை இனியும் தொடர்வதற்கு வாய்ப்பில்லை. காரணம், நாம்பன்கள் விரைவாக அழிந்து வருகின்றனவே.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின், “மாட்டிறைச்சிக்கு இனி தடை” அறிவிப்பு நாம்பன்களின் அழிவைத் தான் கட்டியம் கூறுவதாகக் கந்தையா நடைமுறையனுபவத்தில் கூறுகின்றார்.
“என்ர பட்டியில வருசத்துக்கு 30 கன்றுகள் பிறக்கும். அதில 20 ஆண் கன்றுகளாத்தான் இருக்கும். இப்ப நாம்பன்களால பிரயோசனமில்ல எண்டு முதலே சொன்னன். இப்ப மாட்டிறைச்சிக்கும் தடை வந்திட்டு. பசு மாடு இறைச்சிக்கு அடிக்கிறதில்ல. எருத்து மாடுதான் இறைச்சிக்கு அடிக்க எடுக்கிறது. அதுக்கும் இனி தடையெண்டா, பட்டியில ஒரு வருசத்துக்கு பிறக்கிற 20 ஆண் கன்றுகள வச்சி என்ன செய்யிறது. எருத்து மாடுகள் கூடினால், மாடு வளக்கிறதும் சரியான கஸ்ரம். பட்டிக்கு 2 எருத்து மாடே போதும். ஏற்கனவே மாடு வளர்க்கிற வீதம் குறைஞ்சிருக்கு. இப்ப இந்தத் தடையால, இன்னும் குறைஞ்சிடும். இங்க மாடு வளர்ப்பு குறைஞ்சா, பால், பால்மா, இறைச்சி விலை கூடும். அது வெளிநாட்டுக் கொம்பனியளுக்குத்தானே லாபம்” என்கிறார். அவரின் நாம்பன்கள் வேகமாகக் காதையும், வாலையும் ஆட்டுகின்றன.

மனிதப் பரிணாமத்தின் சாட்சியாக, எச்சமாக மிஞ்சியிருப்பவற்றுள் நாம்பன்களுக்கும் முக்கிய இடமுண்டு. நாம்பன்களின் உழைப்புத்தான் மனிதர்களுக்கு ஓய்வு நேரத்தைக் கொடுத்து. ஓய்வு நேரம் சிந்திக்கும் திறனை வளர்ப்பதற்கான வாய்ப்பை வழங்கியது. சிந்திப்பே புதிய புதிய கண்டுபிடிப்புக்களுக்கு வித்திட்டது. ஆனால் ஏறிவிட்ட ஏணியை உதைத்துத் தள்ளிய கதையாக முடிகிறது, நாம்பன்களின் வாழ்க்கை..!

http://www.colombomirror.com/tamil/?p=7056

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கின்றனர்ர் மிக முக்கியமான கட்டுரை. வடமாகாண விவசாய அமைப்பும் புலம்பெயர்ந்த தமிழர்களும் இணைந்து எங்களிடம் எஞ்சியிருக்கிற அரிய இன விலங்குகளையும் பறவைகளையும் தானியம் விதைகளையும் எதிர்கால சந்ட்அதிக்காக காப்பாற்றும் பணியை முன்னெடுக்க வேணும்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.