Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ.எஸ் சந்தேகநபர்களின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன

Featured Replies

ஐ.எஸ் சந்தேகநபர்களின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன
 

article_1458705439-87.gif

பெல்ஜியத் தலைநகர் ப்ரஸல்ஸில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தாக்குதல்களை நடத்துவதற்கு வருகைதந்ததாகக் கூறப்படும் ஐ.ஸ்.ஐ.எஸ் அமைப்பைச்சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் மூவரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

விமான நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி கமெராவில் பதிவான புகைப்படங்களை அடிப்படையாக வைத்தே, இந்த மூவரின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த மூவரில் இருவர், தற்கொலைக்குண்டுத்தாக்குதலை நடத்தியதாகவும் மற்றையவர் ஏனைய குண்டுத்தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச்சென்றுவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெல்ஜியத் தலைநகர் ப்ரஸல்ஸில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தாக்குதல்களினால், அந்நாடும் அந்நகரமும் முழு ஐரோப்பிய ஒன்றியமுமே அதிர்ந்தது. தலைநகரின் விமான நிலையமும் ரயில் நிலையமுமே இலக்குவைக்கப்பட்டு, தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இவ்விரு தாக்குதல்களிலும் 34 பேர் பலியானதுடன் குறைந்தது 170 பேருக்கு மேல் காயங்களுக்கு உள்ளாகினர். விமான மற்றும் பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட சகல பொதுச்சேவைகளும் ஸ்தம்பிதமடைந்தன.

இத்தாக்குதல் சம்பவங்களை அடுத்து, நாடு முழுவதும் நான்கடுக்கு பயங்கரவாத எச்சரிக்கையை பெல்ஜிய அரசாங்கம் விடுத்தது.

இலங்கை நேரப்படி நேற்று மதியம் 12.30 மணியளவில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ஸவென்டெம் விமான நிலையத்தில், விமானங்கள் புறப்படுவதற்கான மண்டபத்துக்கு முன்பாக வைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், குறைந்தது 14 பேர் பலியானதுடன் 85 பேர் காயங்களுக்கு உள்ளாகினர்.

பொலிஸாரின் தகவலின்படி, தற்கொலைக் குண்டுதாரியொருவர் தன்னைத் தானே வெடிக்க வைத்துக் கொண்டுள்ளார். அதன் பின்னர், உரத்த வெடிச்சத்தம் கேட்டதாக அந்நாட்டு தகவல் தெரிவித்தது.

விமான நிலையத்திலிருந்து விமானத்தை நோக்கிச் செல்லும் பகுதியிலேயே இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன என்றும், புறப்படுவதற்கான மண்டபத்துக்கு முன்பாக அமெரிக்க எயார்லைன்ஸ் மற்றும் ப்ரஸல்ஸில்
எயார்லைன்ஸ் ஆகிய இரண்டு விமானங்கள் தரித்து நின்றுள்ளன என்று முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும், பின்னர் அறிக்கையொன்றை வெளியிட்ட அமெரிக்கன் எயார்லைன்ஸ், தங்களுடைய புறப்பாட்டு நிலையத்துக்கு அண்மையில் தாக்குதலேதும் இடம்பெற்றிருக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.

விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டத் தாக்குதலை தொடர்ந்து, 79 நிமிடங்களின் பின்னர், மால்பீக் மெட்ரோ ரயில் நிலையத்தில் குண்டொன்று வெடித்தது. உரத்த வெடிச்சத்தத்தின் பின்னர் பாரிய புகை கிளம்பியது, தூசுகளால் அவ்விடமே நிறைந்திருந்தது.

இத்தாக்குதலில், குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டதோடு, ஆகக் குறைந்தது 55 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த ரயில் நிலையம், ஐரோப்பிய ஒன்றிய நிறுவனக் கட்டங்களுக்கு மிக அண்மையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தத் தாக்குதல்களுக்கு, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு உரிமை கோரியுள்ளதோடு, அவ்வாயுதக்குழுவின் ஆதரவாளர்கள், இந்தத் தாக்குதல்களை இணையத்தளங்களில் வரவேற்றுள்ளனர்.

விமான நிலையத்தில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பாக அங்கிருந்த ஒருவர் தெரிவிக்கையில், அங்கு வெடிப்புச் சத்தங்கள் இரண்டு கேட்டதாகத் தெரிவித்தார்.

தாக்குதலைத் தொடர்ந்து கண்ணாடிகள் உடைந்து சிதறிக் காணப்பட்டதோடு, தங்களுடைய பயணப் பொதிகளையும் எடுக்காமல், பயணிகள் சிதறி ஓடினர். 'மக்கள் என்ன செய்கின்றனர் என்று எனக்கு விளங்கவில்லை. நான் அதனை ஓர் உடற்பயிற்சியென நினைத்தேன்' என்றார்.

மற்றொருவர் கருத்துத் தெரிவிக்கையில், 'நான் ஓடினேன், ஓடினேன். பணியாளரும் பொதிகளை காவிக்கொண்டு, என் பின்னாலேயே ஓடிவந்தார்' என்றார்.

நிதிச் சேவைகள் தொழிலாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,

'உணவகங்களில் இன்னும் சிலர், மெதுவாக உணவு உண்டு கொண்டிருந்ததை உணர்ந்தேன். எனினும், எங்களுக்கு வெளியே ஒரு வழியை கண்டுப்பிடிப்பதற்கு, ஊழியர்கள் முயற்சித்ததையும் கண்டேன்' என்றார்.

மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், பயணிகள் அதிகமாகக் காணப்படும் நேரத்திலேயே மேற்கொள்ளப்பட்டிருந்தது. காயமடைந்தவர்களுக்கு, பாதசாரிகள் நடக்கும் பகுதியில் வைத்தே உடனடியாகச் சிகிச்சையளிக்கப்பட்டது.

கடந்தாண்டு நவம்பர் மாதத்தில், பிரான்ஸ் தலைநகர் பரிஸில் மேற்கொள்ளப்பட்ட தொடர் தாக்குதல்களின் முக்கிய சந்தேகநபரான சாலா அப்டெஸ்லாம், பெல்ஜியத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டு நான்கு நாட்களின் பின்னர் இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதிலும் குறிப்பாக, அவரது கைதைத் தொடர்ந்து, பல்வேறு ஆயுதங்களும் வெடிபொருட்களும் ப்ரஸல்ஸில் கைப்பற்றப்பட்டிருந்த நிலையில், அவரது கைதுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களா இவை என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இந்தத் தாக்குதல்களைக் கண்டித்த பெல்ஜியப் பிரதமர் சார்ள்ஸ் மைக்கல், இதுவொரு கறுப்பு நாள் எனத் அறிவித்தார்.

'நாங்கள் அஞ்சியது நடந்துவிட்டது. மோசமான தாக்குதல்களால் நாம் தாக்கப்பட்டோம். குருட்டு வன்முறை மற்றும் கோழைத்தனமானது. எமது நாட்டு வரலாற்றில் சோகமான தருணம்' என்றார். அத்தோடு, இந்தத் தருணத்தில், அமைதி காக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், அரசாங்கத்தின் அவசரக்குழுக் கூட்டமான நாகப்பாம்பு அவசரக்குழுக் கூட்டம், பிரித்தானிய பிரதமர் டெவிட் கமரோன் தலைமையில் நேற்றுக் கூடியது.

இந்த தாக்குதல்களை உலக நாடுகளின் தலைவர்கள் கண்டித்துள்ளதோடு, இலங்கை அரசாங்கமும் கண்டித்துள்ளது. அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கண்டித்துள்ளார்.

இவ்விரு சம்பவங்களிலும் இலங்கையர் எவரும் பாதிக்கப்படவில்லை என்று, இச்செய்தி அச்சுக்கு போகும் வரை வெளியான தகவலிலிருந்து தெரியவந்துள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/168638/%E0%AE%90-%E0%AE%8E%E0%AE%B8-%E0%AE%9A%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B5-%E0%AE%B3-%E0%AE%AF-%E0%AE%9F%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%B3-%E0%AE%B3%E0%AE%A9#sthash.OzgZRr5j.dpuf
  • தொடங்கியவர்

பெல்ஜியம் விமான நிலைய தாக்குதல் நடந்தது இப்படித்தான்…

பெல்ஜியம் விமான நிலைய தாக்குதல் நடந்தது இப்படித்தான்…

March 23, 2016  01:39 pm

Bookmark and Share
 
பெல்ஜியம் தலைநகர் புரூசெல்சில் விலை மதிப்பில்லாத 35 உயிர்களை பறித்த ஸவன்டெம் விமான நிலைய தாக்குதல் நடந்தது எப்படி? என்று ஸவன்டெம் நகர மேயர் பேட்டியளித்துள்ளார்.

விமான நிலையத்துக்கு ஒரு டாக்சியில் வந்த மூன்று தீவிரவாதிகள் தனித்தனியாக பிரிந்து தங்கள் கையில் இருந்த சூட்கேஸ்களை வெவ்வேறு ‘டிராலி’களில் வைத்து புறப்பாட்டு பகுதியின் வரவேற்பு கூடத்துக்கு தள்ளிச் சென்றனர். கையுறை அணிந்திருந்த அவர்கள் தோள்களில் மாட்டியிருந்த கைப்பைகளில் வெடிகுண்டுகள் இருந்துள்ளது.

முதலில் மூன்று பேர்களில் இருவர் மட்டும் பைகளில் இருந்த குண்டுகளை வெடிக்க வைத்துள்ளனர். இன்னொருவன் பயந்து போய் குண்டை இயக்கி, வெடிக்க வைக்காமல் அங்கிருந்து ஓடியிருக்கக்கூடும்.

தனது பேட்டியின்போது இவ்வாறு தெரிவித்த ஸவன்டெம் நகர மேயர் பிரான்சிஸ் வெர்மெய்ரென், தப்பிச்சென்ற மூன்றாவது நபரை போலீசார் வலைவீசி தேடிவருவதாக கூறி, அவனது புகைப்படங்களை நிருபர்களிடம் காண்பித்தார்.

முகத்தில் கண்ணாடி அணிந்தபடி, வெள்ளைநிற மேல்கோட், கருப்பு தொப்பியுடன் காணப்படும் குறுந்தாடி நபர், ஒரு டிராலியில் தனது சூட்கேசை வைத்து தள்ளிச்செல்லும் காட்சிகள் அந்த போட்டோக்களில் இடம்பெற்றுள்ளன.
 
  • தொடங்கியவர்

காலித், பிரஹீம் பக்கிரோய் சகோதரர்களே பிரசல்ஸில் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடாத்தினர்

காலித், பிரஹீம் பக்கிரோய் சகோதரர்களே பிரசல்ஸில் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடாத்தினர்:-

 

காலித், பிரஹீம் பக்கிரோய் என்ற இரு சகோதரர்களே பிரசல்ஸில் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டதாக பெல்ஜிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இவர்கள் இருவர் பற்றியும் பொலிஸார் நன்கு அறிந்துள்ளனர் பொலிஜாரினால்  வெளியிடப்பட்டுள்ள மூன்றாவது படத்தில் உள்ள நபரையே அடையாளம் காண்பதற்கு முயற்சிகளை மேற் கொண்டுள்ளதாக பிரேசில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இவர்களில் பிரஹீம்பக்கிரோய் போலியான பெயரை பயன்படுத்தி பிரசல்ஸின் புறகர் பகுதியில் தொடர்மாடி ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். இவர் பயங்கரவாத நடவடிக்கைகளிற்காக தேடப்பட்டு வந்தவர். மற்றையவர் குற்றச் செயல்களிற்காக தேடப்பட்டவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/130337/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.