Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

4 ஆயிரம் புலிப் போராளிகள் இன்னும் சரணடையவில்லை (பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு)

Featured Replies

9606.jpg

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தில் பங்கேற்ற சுமார் 4 ஆயிரம் போராளிகள் இறுதி யுத்தத்தின் போதும் அதற்குப் பின்னரும் சரணடையாமல் வடக்கு மாகாணத்திலும், வெளிநாடுகளிலும் வாழ்ந்து வருவதாக தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலர் கருணாசேன ஹட்டியாராச்சி, இவர்கள் தொடர்பிலான அடுத்த கட்ட நடவ டிக்கைகளை பொலிஸாரே முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு பேட்டியளிக் கையிலேயே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இவ்வாறு சரணடையாமல் இருக்கும் போராளிகளில் பெரும்பாலானோர் இந்தியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இதர நாடுகளில் தஞ்சம்புகுந்துள்ளதாகவும், ஏனையோர் வட மாகாணத்தில் வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.

சரணடையாதிருக்கும் முன்னாள் போராளிகளால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சு றுத்தல் ஏற்படும் என்ற பீதியை சில தென் பகுதி ஊடகங்கள் கிளப்பி வருகின்றன.
எவ்வாறாயினும் இராணுவத்தினரிடம் சரணடையாதுள்ள முன்னாள் போராளிகளின் செயற்பாடுகள் ஒருபோதும் நாட்டின் பாதுகாப் பிற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது என்று பாது காப்பு செயலாளர் இதன்போது தெரிவித்தார்.

மேலும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடு தலை பெற்று வடமாகாணத்தில் இருக்கும் முன்னாள் போராளிகள் மற்றும் சரணடை யாத நிலையில் அங்கு வசித்துவரும் முன் னாள் போராளிகள் குறித்து பொலிஸார் நட வடிக்கை எடுத்து வருகின்றனர்.

இவர்கள் சம்பந்தப்பட்ட விடயங்களில் அதிக அக்கறையுடன் பொலிஸார் உள்ளதோடு, விடுதலையின் பின் அவர்கள் குற்றச்செயல்க ளில் தொடர்புபட்டுள்ளார்களா என்ற கோண ங்களிலும் பொலிஸார் அதிக கண்காணி ப்பில் உள்ளனர்.

அதேபோன்று வெளிநாடுகளில் தஞ்சம் பெற்று வாழ்ந்துவரும் சரணடையாத முன் னாள் போராளிகள் அங்கு தொழில்களில் ஈடு பட்டுவருகின்றனர். அவர்கள் மூலமாக இல ங்கையின் பாதுகாப்புக்கு எவ்விதத்திலும் அச் சுறுத்தல் ஏற்படாது என்பதை உறுதியுடன் கூறுகின்றேன்.

அவர்களை மீள நாட்டுக்கு வரவழைத்து பதிவு செய்வது சாத்தியமாகாது. எவ்வாறாயி னும் உள்நாட்டில் இருக்கும் சரணடையாத முன்னாள் போராளிகள் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை பொலிஸார் முன் னெடுப்பார்கள் என ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். (செ-12) 

http://www.valampurii.lk/valampurii/content.php?id=9606&ctype=news

  • கருத்துக்கள உறவுகள்

மொத்த உலகமும் சிங்களவர்களின் கொடுங்கோன்மை ஆட்சியின் கீழ் என்று நினைக்கிறதே இவங்க வெட்டி வேலையாப் போச்சு. :rolleyes:tw_angry:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழிளையோர் மீதான கைது கெடுபிடிக்கான திட்டங்கள் தயார். கைதுகளுக்கான கரணியங்களும் தயார். பிறகென்ன நல்லாட்சி(?)யிலும் வசந்தம் களைகட்டுகிறது.

மிகுதி நான்காயிரம் பேரும் சரணடையாமல் இங்கே இங்கே தான் யாழ் இணையத்தில் நின்று கும்மி அடித்துக்கொண்டு இருக்கின்றார்கள். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, கலைஞன் said:

மிகுதி நான்காயிரம் பேரும் சரணடையாமல் இங்கே இங்கே தான் யாழ் இணையத்தில் நின்று கும்மி அடித்துக்கொண்டு இருக்கின்றார்கள். :grin:

சிங்களவனுக்கு ஒரு தலையாட்டி யாழில் கிடைச்சிட்டார். tw_blush:

54 minutes ago, nedukkalapoovan said:

சிங்களவனுக்கு ஒரு தலையாட்டி யாழில் கிடைச்சிட்டார். tw_blush:

பாதுகாப்பு அமைச்சின் செயலர் கருணாசேன ஹட்டியாராச்சி மேலே பொறுப்பில்லாமல் பேசுவதை பார்த்தால் எனது சேவையை அவர் பயன்படுத்தமாட்டார் போல் உள்ளதே.  வெளிநாடுகளில் தஞ்சம் பெற்று வாழ்ந்துவரும் சரணடையாத முன்னாள் போராளிகள் அங்கு தொழில்களில் ஈடு பட்டுவருகின்றீனமாம். அவர்கள் மூலமாக இலங்கையின் பாதுகாப்புக்கு எவ்விதத்திலும் அச்சுறுத்தல் ஏற்படாதாம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கலைஞன் said:

பாதுகாப்பு அமைச்சின் செயலர் கருணாசேன ஹட்டியாராச்சி மேலே பொறுப்பில்லாமல் பேசுவதை பார்த்தால் எனது சேவையை அவர் பயன்படுத்தமாட்டார் போல் உள்ளதே.  வெளிநாடுகளில் தஞ்சம் பெற்று வாழ்ந்துவரும் சரணடையாத முன்னாள் போராளிகள் அங்கு தொழில்களில் ஈடு பட்டுவருகின்றீனமாம். அவர்கள் மூலமாக இலங்கையின் பாதுகாப்புக்கு எவ்விதத்திலும் அச்சுறுத்தல் ஏற்படாதாம். 

அப்படிச் சொன்னால் தானே.. கட்டுநாயக்கா வரை வர வைச்சு தலையாட்ட வைக்கலாம். பிழைப்பு நடத்தலாம். சிங்களவனா கொக்கா. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள்தான் மக்கள் மக்கள்தான் புலிகள் என்ற அடிப்படையில் தமிழர்கள் நான்காயிரம் பேரல்ல மீதம் உள்ள அனைத்து தமிழர்களையும் சரணடைய சொன்னாலும் சொல்வார்கள் பொறுத்திருந்துதான் பார்க்க்கவேண்டும்.tw_blush:  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.