Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை விடுவிக்க இந்திய மத்திய அரசு மறுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை விடுவிக்க இந்திய மத்திய அரசு மறுப்பு

[ Wednesday,20 April 2016, 05:00:48 ]   
Rajiv_killers.jpg

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் ஏழு பேரையும் விடுவிப்பது தொடர்பில் தமிழக அரசு முன்வைத்த பரிந்துரையை மத்திய அரசாங்கம் நிராகரித்துள்ளது.

 

கடந்த இரண்டு ஆண்டுகளில் ராஜீவ்காந்தி கொலையுடன் தொடர்புடைய ஏழு பேரையும் விடுவிப்பது தொடர்பில் தமிழக அரசு முன்வைத்த பரிந்துரையை இரண்டாவது முறையாக மத்திய அரசு நிராகரித்துள்ளது.

 

இதற்குமுன்னர் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தால் 2014 ஆம் ஆண்டு பெப்பரவரி மாதம் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை விடுவிப்பதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

உச்ச நீதிமன்றத்தில் இந்த விடயம் பாரப்படுத்தப்பட்ட பின்னர் கைதிகளை விடுவிப்பதற்கான அதிகாரம் தமக்கு இல்லை என மத்திய உள்விவகார அமைச்சு அறிவித்துள்ளது.

 

மாநில அரசின் பரிந்துரை தொடர்பில் சட்ட அமைச்சிடம் கருத்துக் கேட்டதாக இந்திய உள்விவகார அமைச்சின் மூத்த அதிகாரியொருவர் த ஹிந்து பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

 

இதன்பிரகாரம் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் ஏழு பேரையும் விடுவிக்க முடியாது என மத்திய அரசாங்கம் தமிழக அரசுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://ibctamil.com/news/index/22375

rajiv_2410852f_2821148f.jpg

ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவை மத்திய அரசு இரண்டாவது முறையாக நிராகரித்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

முதல் கடிதம் கடந்த 2014-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது அனுப்பப்பட்டது. அந்தக் கடிதம் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது இரண்டாவது முறையாகவும் தமிழக அரசின் முடிவு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு உள் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, "தமிழக அரசு அனுப்பியிருந்த கடிதம் குறித்து சட்ட அமைச்சகத்திடம் கருத்து கேட்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரையும் விடுவிக்கும் தமிழக அரசின் முடிவை நிராகரிப்பதாக தமிழக அரசுக்கு தெரிவித்திருக்கிறோம்" என்றார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய முடிவு செய்திருப்பதாகவும், இது தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறும் மத்திய அரசுக்கு தமிழக அரசு கடந்த மார்ச் 2-ம் தேதி கடிதம் எழுதியது.

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் இக்கடிதம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

தமிழக அரசு அனுப்பிய கடிதத்தின் முழு விவரம்:

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன் மத்திய அரசின் உள்துறை செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து 18-02-2014 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து இந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் மற்றும் நளினி ஆகிய 4 பேரையும் சேர்த்து மொத்தம் 7 பேரை விடுதலை செய்வது என தமிழக அரசு முடிவெடுத்தது.

இந்த வழக்கின் புலன் விசாரணையை சி.பி.ஐ. மேற்கொண்ட காரணத்தால், மாநில அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தும் முன் மத்திய அரசுடன் கலந்தாலோசிப்பது அவசியம். இதன் காரணமாக மத்திய அரசின் கருத்தை கேட்டு 19-02-2014 அன்று தமிழக அரசு கடிதம் அனுப்பியது. மத்திய அரசின் கருத்தை 3 தினங்களுக்குள் தெரிவிக்குமாறு கேட்டிருந்தோம்.

எனினும் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பான தனது கருத்தை தெரிவிப்பதற்கு பதிலாக, தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்போதைய மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் 25-04-2014 அன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வு, இந்த விவகாரத்தில் விடை காண வேண்டிய சட்டரீதியான 7 கேள்விகளை முன்வைத்தது. அதன் பிறகு 02-12-2015 அன்று இந்த கேள்விகளுக்கு விடையளித்த 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, அதன் அடிப்படையில் 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவு பற்றி விசாரிக்குமாறு உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து 3 நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் புதிய அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. எனினும், இதுவரை வழக்கு விசாரணைக்கே வராமல் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே, தாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளதால் தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்தனர். மேலும், தன்னை விடுவிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

இதனையடுத்து, அவர்களது கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, அவர்கள் அனைவரும் 24 ஆண்டுகளாக சிறையில் உள்ள காரணத்தால், அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்துள்ளது. இந்த 7 பேரில் முருகன், சாந்தன், ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.

இந்த சூழலில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 435-வது பிரிவின்படி அவசியம் என்பதால், தமிழக அரசின் இந்த முடிவு குறித்து மத்திய அரசின் கருத்தை தெரிவிக்குமாறு கோரி இந்த கடிதத்தை அனுப்புகிறோம். .

இதற்கிடையே, மத்திய அரசின் கருத்தை கேட்டுள்ளதால், 02-12-2015 அன்று உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்புச் சட்ட அமர்வு பிறப்பித்த உத்தரவை மறு பரிசீலனை செய்யக் கோரி சீராய்வு மனு தாக்கல் செய்யும் தமிழக அரசின் உரிமை பாதிக்கப்படாது என்பதையும் தெளிவுபடுத்துகிறோம்.

இவ்வாறு ஞானதேசிகன் தனது கடிதத்தில் கூறியிருந்தார்.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் சதாசிவம் ஐயா அவர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் போது, நெருங்கி வந்த விடுதலையை, 'தேர்தல் காலத்தில், அவர்கள் விடுதலை செய்வது, சில கட்சிக்கு அரசியல் ரீதியாக சாதகமாக அமைந்து விடும் என்பது ஐயாவுக்கு புரியாதா' என அய்யா கருணாநிதி அறிக்கைவிட, அரசியல் சாசன அமர்வுக்கு, அனுப்பி விட்டு அவர் ஓய்வு பெற்றுக் கொண்டார்.

வேறு வழியில் விடுதலை செய்ய வழி இருக்கும் போது, மத்திய அரசினை கேட்கும் ஜெயலிலிதா...

பூனைக்கு விளையாட்டு... சுண்டெலிக்கு சீவன் போகுது என்ற கதையாக, இந்த திராவிட கட்சிகளுக்கு பதவி வெறி. தமிழன் தான் பலியாடு.

கொடுமை.. tw_anguished:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இந்து பத்திரிகை, 7 பேர் விடுதலையை நிராகரித்ததாக வெளியிட்ட செய்தி தவறு என்று மத்திய அரசு மறுப்பு.

இன்னும் மத்திய சட்ட அமைச்சகம், இது தொடர்பில் ஆராய்ந்து கொண்டிருப்பதாகவும், முடிவு எதுவும் எட்டப்படவில்லை என தெரிவித்துள்ளது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் காந்தி கொலை தண்டனைக் கைதிகள் – மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லையாம்

India-emblemராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ரவிச்சந்திரன் ஆகிய  7 பேரின் விடுதலை தொடர்பாக, இந்திய மத்திய அரசு இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஆங்கில நாளிதழில் நேற்று வெளியான செய்தி ஒன்றை மேற்கோள்காட்டி பல்வேறு ஊடகங்கள் “ராஜீவ் காந்தி கொலை தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது என்று செய்திகளை வெளியிட்டன.

இது குறித்து புதுடெல்லியில் மத்திய உள்துறை அமைச்சின்  உயரதிகாரி கூறுகையில், ராஜீவ் காந்தி கொலை கைதிகள் விடுதலை விவகாரத்தில் தமிழ்நாடு அரசும், சம்பந்தப்பட்ட கைதிகளும் தொடுத்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த விடயத்தில் மத்திய அரசு எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து மத்திய சட்டத்துறையின் கருத்தை உள்துறை கேட்டுள்ளது. சட்டத் துறை தெரிவிக்கும் கருத்து தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்திய பின்னரே அதன் முடிவை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கும்.

தற்போதைய நிலவரப்படி மத்திய சட்டத் துறை, அதன் கருத்தை உள்துறைக்கு அனுப்பி வைக்கவில்லை. தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, தேர்தலுக்குப் பிறகு இந்த விடயத்தில் முடிவு எடுக்க மத்திய உள்துறை தீர்மானித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை கைதிகளை விடுவிக்கும் தமி்நாடு அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அதன் மீதான விசாரணை விரைவில் வரும் என எதிர்பார்க்கிறோம்.  அப்போது தமிழ்நாடு தேர்தலுக்கு பிறகு இந்த விவகாரத்தை விசாரிக்க கேட்டுக் கொள்ளப்படும்.

இந்த விடயத்தில் உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புக்கு மத்திய அரசு கட்டுப்படும்” என்று உள்துறை அமைச்சின் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

 

http://www.puthinappalakai.net/2016/04/21/news/15471

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.