Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகளிடம் 3ஹெலிகொப்டர் இருப்பதாக கெகலிய அச்சம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளிடம் 3ஹெலிகொப்டர் இருப்பதாக கெகலிய அச்சம்.

விடுதலைப்புலிகளிடம் ஒற்றை இயந்திரம் கொண்ட மூன்று ஹெலிகொப்ரர்கள் இருப்பதால் பாதுகாப்பு தொடர்பான செய்திகளை வெளியிடும் போது கவனமாக இருக்க வேண்டும் என ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கெகலிய ரம்புக்கல இன்று கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஊடகமத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே ரம்புக்கல இதனைத்தெரிவித்தார்

சண்டே லீடர் ஆசிரியர் கைது செய்யப்படவில்லை. பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான செய்திகளை வெளியிடும் போது அவதானமாக இருக்க வேண்டும் என அவர் சொன்னார்.

பாராளுமன்றம் அலரிமாளிகை ஜனாதிபதி அலுவலகம் என்பன ஐம்பது வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்தது. இக்கட்டிடங்கள் மீது விடுதலைப்புலிகள் தங்களிடமிருக்கும் ஹெலிகொப்டர்களை பயன்படுத்தி தாக்குதல்களை நடத்த கூடும். அதற்காக 50கிலோ எடையுள்ள வெடிபொருட்களை எடுத்துவந்து தாக்குதல்களை நடத்தலாம்.

நீங்கள் பங்கர்கள் அமைக்கப்படுவதாகவும் அதன் அளவுகளையும் வெளியிட்டால் புலிகள் 50கிலோவுக்கு பதிலாக 500கிலோ வெடிபொருட்களை நிரப்பி வந்து தாக்குதல்களை நடத்துவார்கள்

கொழும்பு நகரில் இராணுவ சோதனைகளை நடத்தும் போது அதை வானொலிகளில் உடனடியாக அறிவிப்பது பாதுகாப்புக்கு பங்கமாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

www.tamilwebradio.com

Edited by shanthy

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி சொன்னால் தானே இன்னும் கூடுதலாக வெளிநாட்டிலிருந்து தமிழரை அழிக்கிறதுக்கு ஆயுதங்களை வாங்க வசதியாயிருக்கும்.

3 விமானங்கள் உள்ளன என்று சொன்னால் கௌரவப் பிரச்சனை. அதுதான் 3 ஹெலிகொப்ரர்கள் என்று கூறியுள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளிடம் ஒற்றை இயந்திரம் கொண்ட மூன்று ஹெலிகொப்டர்கள்.

தமிழீழ விடுதலைப்புலிகளிடம் ஒற்றை இயந்திரம் கொண்ட மூன்று ஹெலிகொப்டர்கள் இருப்பதனால் பாதுகாப்பு சம்மந்தமான செய்திகளை வெளியிடுகின்ற பொழுது தேசிய பாதுகாப்பு தொடார்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்று பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்க பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

-pathivu-

புலிகள்வசம் ஹெலிகொப்டர்கள் இருப்பதனால் செய்திகளை வெளியிடும்போது கவனம் தேவை அரசாங்கம் அறிவிப்பு.

விடுதலைப்புலிகளின் வசம் ஒற்றை இயந்திரம் கொண்ட மூன்று ஹெலிகொப்டர்கள் இருப்பதனால் பாதுகாப்பு தொடர்பான செய்திகளை வெளியிடுகின்ற பொழுது தேசிய பாதுகாப்பை கருத்தில்கொண்டு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்க பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து பதிலளிக்கையில் மேலும் கூறியதாவது:சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கைது செய்யப்படவில்லை. ஆனால் அரசாங்கம் எதற்கும் தயாராகவே இருக்கின்றது. செய்திகளை வெளியிடுகின்ற பொழுது ஊடகவியலாளர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். ஊடகவியலாளர்கள் இரண்டு பக்கங்களும் பதமாக இருக்கின்ற கத்திகளை போன்றவர்கள், நாட்டில் பயங்கரவாத செயற்பாடுகள் அதிகரித்துள்ள இந்தச் சூழ்நிலையில் செய்திகளை வெளியிடுவதில் அவதானம் தேவை.

உங்களுடைய செய்திகள் மூலம் புலிகள் பெற்றுக்கொள்கின்ற தகவல்களை விட அவர்களுக்கு கூடுதலான தகவல்கள் தெரியும். ஆனால் நீங்கள் வழங்குகின்ற செய்திகளின் மூலம் புலிகள் மேலும் தகவல்களை பெற்றுவிடக் கூடாது என்பதில் அரசாங்கம் அவதானமாக இருக்கின்றது.

பாராளுமன்றம், அலரிமாளிகை ஐம்பது வருடங்களுக்கு பழைமைவாய்ந்த கட்டிடங்கள் என்பதினால் புலிகள் தம்வசமுள்ள ஹெலிகொப்டர்களை பயன்படுத்தி குண்டுத்தாக்குதல்களை மேற்கொள்ளலாம். அதற்காக புலிகள் 50 கிலோ நிறையுடைய வெடிப்பொருட்களை எடுத்து வரலாம். ஆனால் நீங்கள் பங்கர் அமைப்பதாக செய்திகளை வெளியிட்டு பங்கரின் அளவுகளை வெளியிட்டால் புலிகள் 50 கிலோ வெடிப்பொருளுக்கு பதிலாக 500 கிலோ வெடிப்பொருட்களை கொண்டுவருவார்கள். உண்மையில் பங்கர் அமைப்பது தொடர்பாக வெளிவந்த செய்தி அரசியலுக்கு நல்லதாக இருந்தாலும் தேசிய பாதுகாப்பிற்கு அது பங்கத்தை ஏற்படுத்தும். அதனால் பாதுகாப்பு செய்தி விடயத்தில் கூடுதலான கவனம் தேவை.

இது எமது இதய பிரச்சினை. தலைவர் இல்லாத நாடொன்று உருவாக்கப்படவேண்டுமா? என்ற கேள்வியை நாமே எழுப்பிக்கொண்டு செய்தியில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். கடந்த 25 வருடங்களில் பல தலைவர்களை இழந்துவிட்டோம். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பிரதித் தலைவர் கருஜெயசூரிய, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி ஆகியோருக்கு கூடுதலான அச்சுறுத்தல்கள் இருக்கின்றன.

இராணுவத்தினர் வீதிச் சோதனைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற பொழுது சில இலத்திரனியல் ஊடகங்கள் படையினர் குறித்த வீதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதினால் அவ்வீதியில் வாகனம் நெரிசல் காணப்படுவதாகவும் பொதுமக்கள் மாற்று வீதியை பயன்படுத்துமாறும் செய்திகளை ஒலிபரப்புகின்றன. இது தேசிய பாதுகாப்பிற்கு பங்கத்தை ஏற்படுத்தும் செயலாகும்.

www.virakesari.lk

Edited by YARLVINO

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.