Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலிக்கும் இதயத்தின் கவிதை 

Featured Replies

நீ ...
தந்த ...
வலிகளை தாங்கும் ....
சக்தி எனக்கில்லை ....
நீ தந்த வலிகள் ....
என்னவென்று என் ....
கவிதைகள் சொல்லும் ....!!!

ஒன்று ....
மட்டும் செய்துவிடாதே ....
நான் தனியே இருந்து ....
அழுவதுபோல் நீயும் ...
அழுதுவிடாதே - என்னை ....
ஆறுதல் படுத்த கவிதை ...
எப்போதும் இருக்கும் ....
உன்னை ஆறுதல் படுத்த ....
என்னை தவிர யாருமில்லை ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்

  • Replies 67
  • Views 89.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஒரு நாளுக்கு ....
ஒரு குறுஞ்செய்தியாகினும் ....
அனுப்பி வைத்துவிடு ....
உனக்கு அது  குறுஞ்செய்தி....
எனக்கு பெரும் செய்தி ....!!!

நீ 
நேரே வரவேண்டுமென்று ....
மனம் ஆசைப்படவில்லை ....
உன் நினைவில் வாழ்வே ....
ஆசைப்படுகிறேன் ....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

நேரம் இருக்கும் போது ....
நினைத்து பார்பதற்கு .....
நான் உன் கைகடிகாரம் ...
இல்லை ........!!!

உன்னை நினைக்கும் ....
நேரமே என் நேரம் ....
என் மணிக்கூட்டில் ....
மணிமுள்ளும் - நீ 
நிமிட முள்ளும் -நீ 

^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

காதல் 
எனக்கு மட்டும் ...
கா "தள்" ஆகிவிட்டது ....!!!

காதல் 
எனக்கு மட்டும் 
கா " டல் " ஆகிவிட்டது ....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

உன் மீது வைத்த ...
காதலுக்கு எனக்கு சொன்ன ....
வார்த்தை -நீ வேண்டாம் ...
போய் விடு ......!!!

உன்னை விட்டு ...
நான் விலகுகிறேன் ...
என்னை போல் உன்னை ....
நேசிப்பவர் யாரும் ....
இருக்க மாட்டார்கள் ...
என்பதை நிச்சயம் ....
உணர்வாய் .....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

என்னை ......
வெறுப்பதுதான் ....
உனக்கு இன்பம் என்றால் ....
உன் வெறுப்பை கூட ....
ஏற்றுக்கொள்வேன் .....!!!

எங்கே 
நீ வாழ்ந்தாலும் ....
எத்தனை காலம் ஆனாலும் ....
என் நினைவுகள் ......
உன்னை ...
ஒட்டியபடியே வாழ்வாய் ....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

எனக்கு ஒரே ஒரு ....
உதவி செய்வாயா ...?
எனக்காக ஒருமுறை ....
தனியே இருந்து ....
என் நினைவுகளை ...
நினைத்துப்பார் ...!!!

உன் கண்ணில் ....
நீர் அருவியொன்று ....
நிச்சயம் ஓடும் ....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
 

  • தொடங்கியவர்

எனக்கும் .....
காதலுக்கும் ...
காயத்துக்கும் ....
நேர் மறை தொடர்பு ....
இருக்கிறது .....
காதல் அதிகரிக்கும் ...
போதெல்லாம் ...
காயங்களும் 
அதிகரிக்கின்றன.....!!! 

காதல் அதிகரிக்கும் ...
போதெலாம் ....
கண்ணீரும் அதிகரிக்கிறது ....
காதல் என்றால் ....
காயமும் கண்ணீரும் ....
இருக்கத்தான் செய்யும் ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

  • தொடங்கியவர்

காதல் ....
தோற்கின்ற போதேல்லாம் .....
சொல்லப்படும் நியாயங்கள் ...
சரியாத்தான் இருக்கும் ....!!!

காதல் ....
நியாயப்படுத்தி நியாயம் ...
தேடும் விடயமல்ல ....
நியமான விடயம் .....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

  • 1 month later...
  • தொடங்கியவர்

என் 
ஞாபங்களையும் ...
நினைவுகளையும் ....
தூக்கி எறிந்துவிட்டு ...
நீ செல்ல முடியாது ....!!!

அது 
உன் உடலோடும் ...
உயிரோடும் கலந்திருக்கும் ....
இரத்தமும் சதையும் ....
முடிந்தால் தூக்கி எறிந்துவிடு ....!!!

+
இதயம் வலிக்கும் கவிதை
கவிப்புயல் இனியவன் 
 

காதலை 
சொல்லவேண்டிய ....
நேரத்தில் சொல்லி விடு ....
இல்லையேல் காலம் ....
முழுவதும் காதலால் ....
காயப்படுவாய் .....!!!

என்றோ ஒருநாள் ...
சொல்லாமல் விட்ட காதல் ....
இதயத்துக்குள் முள்ளாய் ....
குத்திக்கொண்டே இருக்கும் .....!!!

காதலை சொல்லி வேதனை ....
பட்டவர்களை விட  காதலை ....
சொல்லாமல் வேதனை ....
பட்டவர்களே அதிகம் .....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

கைக்கு எட்டியது ....
வாய்க்கு எட்டவில்லை ...
என்பதுபோல் தான் ....
என் காதலும் .....
திருமண அழைப்பில் ....!!!

கை கோர்க்க முடிந்த ....
எனக்கு உன்னோடு ...
மாலை கோர்க்க ....
முடியவில்லை .............!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

நேரம் 
இருக்கின்ற போது ....
என்னுடன் பேசுகிறேன் ...
என்கிறாய் ......
நேரம் காலம் எல்லாம் ....
உன்னையே நினைக்கும் ....
என்னிடம் சொல்கிறாயே .....!!!

ஒரு
முறை என்னைப்போல் .....
துடித்துப்பார்  -காதலின் 
துடிப்பும் வலியும் அப்போது ....
உனக்கு புரியும் ......!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

முயற்சிக்கிறேன் ....
உன்னை கண்டவுடன் ....
ஒரு பொய் சிரிப்பு சிரிக்க ....
உதட்டுக்கு முன்னரே ....
முந்தி கொண்டு ..
கண்ணீர் விட்டுவிடுகிறது .....
கண்கள் .......!!!

உன்னை நினைக்க  .....
கவலையாக இருக்கிறது......
என் நினைவுகளை எப்படி ....
மறக்கப்போகிறாய் ....?

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
 

  • தொடங்கியவர்

கனவில் வந்து ...
கலைந்து விட்டாள்....
நினைவை தந்து ....
நீங்கிவிட்டாள்....

உன்னை கனவில் ....
மட்டும் காதலித்திருந்தால் ....
கலங்கியிருக்க மாட்டேன்....
நினைவில் மட்டும் ....
காதலித்திருந்தாலும் .....
வருந்த மாடடேன் ....
உயிராக இருக்கிறேன் ....
முடிந்தால் எடுத்துவிடு....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

கூலிக்கும் காதல் வரும்.....!!!
--------
கூலி வேலை செய்தேன்........
உன் வீட்டில் ............................
யார் கண்டது நீ .....................
கண்ணில் படுவாய் -என்று ? 

கூலிக்கும் உன்மீது ஆசை ....
உனக்கும் தான் .................... 
கூடி ஒருநாள்கூட போசமுடியாத .......
தினக்கூலினான் ...............
வீட்டுவேலை முடிந்ததும் ..............
முடிந்தது என் காதல் ...............!!!

கண்ணே முடியவில்லை ..............
உன் நினைவுகளை மறக்க ...............
முடியவில்லை யாருக்கும் சொல்ல . .............
கூலிக்கு தேவையா.............? 
இந்தக்காதல் என்பார்கள்........!!!

கூலிக்கும் இதயம் இருக்கு ............
என்று ஏன் புரிவதில்லை ............
இந்த உலகத்துக்கு ..................
கூலிக்கும் காதல் வரும் -என்று .............
இன்னுமொரு கூலிக்கு புரிந்தால் .............
போதும் - ஆனால் கூலியே .....
காதல் செய்யாதே .........!!!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன் 

  • தொடங்கியவர்

அன்று .....
கண் சிமிட்டாமல் 
உன்னைப் பார்க்க 
ஆசைப் பட்டேன்... 
பார்த்தேன் ......!!!

இன்று .....
இப்போதெல்லாம் ....
கண் சிமிட்டும் நேரமாவது ...
உன்னைப் பார்க்க ....
ஆசைப் படுகிறேன்...
கண்ணீர் மறைக்கிறது ..
உன் உருவத்தை .....!!!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
 

தோல்விக்கு விடுதலை ...
வெல்லும் வரை ....!!!

கண்ணீருக்கு விடுதலை ...
சிரிக்கும் வரை ....!!!

பூக்களில் அழகிருக்கும் ....
உதிரும் வரை .....!!!

நிலவு அழகிருக்கும் ... 
மறையும் வரை ....!!!

மரணம் வரை தான் ...
காதலிருக்கும்....
மரணத்தின் பின்னும்... 
நட்பிருக்கும் ....!!!

  • தொடங்கியவர்

நீ அருகில் ...
இருக்கும் போது ...
காதல் என்றால்... 
புரிவதில்லை...! 

பேசுவேன் .....
தொடர்பில்லாமல் .....
தொடர்ந்து பேசுவேன் .....
உன்னை பிரிந்திருக்கும் .....
ஒவ்வொரு நொடியும் ....
காதலை தவிர வேறு ஏதும் 
தெரிவதில்லை...!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

உனை பார்க்கும் போது
வார்த்தைகள் வரவில்லை !!!
உனை நினைக்கும் போது
கவிதையாக வருகிறது !!!

உனை வெறுத்ததாக சொன்னாலும் ..
மனம் என்னை வெறுக்கிறதே தவிர ....
உன்னை வெறுக்கிதில்லை ..
உனை மறக்க முயன்றும் என்னால்
உன் உருவம் மறைகிறது ..
நினைவை மறக்க முடியவில்லை !!!

விழிக்குள் பதிந்து இருக்கும் உன்.....
உருவத்தை கண்ணீரால் கூட ...
அழிக்க முடியவில்லை ...
கண்ட கனவுகள் மறக்க நினைக்கிறேன்
கனவுகள் போல் ஆகிவிட்ட காதலை 
நினைக்க விரும்புகிறேன் ...!!!

ரோஜாவாக பிறக்க வேண்டிய நான் ..
முள்ளாய் பிறந்துவிட்டேன் ...!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்

  • 1 month later...
  • தொடங்கியவர்

ஆசையாய் 
வாங்கி கொடுத்த....
கொலுசை கழற்றி தந்துவிட்டாய்......
ஆசையாய் எழுதிய கவிதையை ......
கிழித்தெறிந்துவிட்டாய்......
இவை உனக்கு சடப்பொருள்..... 
இவையெல்லாம் எனக்கு உயிர் .........!!!

கண்ணுக்குள் இருக்கும் - நீ 
எப்போதும் மறையகூடாது ....
என்பதற்காக கண்ணே 
மூடியதில்லை....
மூச்சு பயிற்சிசெய்ததில்லை ....
இதயத்தில் இருக்கும் நீ .....
மூச்சில்லாமல் தத்தளிப்பாய்....
என்பதற்காக......................!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

உன்னை ....
பிரிந்து வாழ முயற்சிக்கிறேன் .......
மறந்து வாழவும் முயற்சிக்கிறேன் .....
அதனால் நான் அடிக்கடி இறந்து ....
பிறக்கிறேன்..........!!!

உன்னை......
பிரிந்து வாழ்வதை காட்டிலும்.....
இறந்துவிடுவது நன்று என்று ...
அடிக்கடி ஜோசிப்பேன்.....
உன்னை அது காயப்படுத்தும்....
உன் வாழ்நாள் முழுவதும்....
உன்னை கொன்று விடும் என்பதால் .....
நான் கொஞ்சம் கொஞ்சமாய்....
இறக்கிறேன்.....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

இதயம் இருட்டாக .....
இருந்தாலும் காதல் .....
வெளிச்சமாக்கி .....
விடுகிறது ........!!!

இருட்டறையில்.......
தவிக்கும் குழந்தை ....
வீறிட்டு அழுவதுபோல்......
நானும் அழுகிறேன் .....
இதய விளக்கை .....
நூற்றத்துக்காக ......!!!

துடித்து கொண்டு ....
இருந்த என் இதயத்தை ....
துடி துடிக்க வைத்துவிட்டாய் .....!!!

&
 ^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
 

  • தொடங்கியவர்

கடற்கரையில் ......
பேசியதுபோல் ஆகிவிடாது ....
நம் காதல் ......
தொட்டு தொட்டு .....
சென்று விடுகிறாய் .......!!!

எப்படியும் வாழலாம் .....
என்றால் உன்னை .....
காதலிக்க தேவையில்லை ......
உன்னை காதலித்ததால் .....
இப்படியும் வாழுகிறேன் ....
என்பதிலும் கவலையில்லை ....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

நான் உனக்காக ....
எரியும் காதல் -தீபம் ...
இருட்டுப்போல் .....
உன் உறவுகளும் ...
காற்றைப்போல் 
உன் திருமண பேச்சும் ..
என் தீபத்தை ......
அணைக்க நிற்கின்றன ...
வலிக்குதடி உன் காதல் ....
நினைவுகள் ......................!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

மனதோடு மட்டுமல்ல.,., 
மரணத்தோடும் வைத்திருப்பேன் 
அவள் என்னை பிரிந்தாலும், 
என் உயிர் பிரியும் வரை .......
என்னவளின் நினைவை ......!!!

எனக்குள் இருக்கும்... 
அவளை  தேடி பார்த்தால்...
எதுவும் கிடைக்காது.....
காரணம் என் உயிர்க்குள்...... 
கலந்திருக்கிறாள் ....................!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

என்னவளே ......
உயிரற்ற ஓவியமாக்கி ......
உணர்வற்ற உடலாக்கி ......
செயலாற்ற மனிதனாகி ....
உன்னால் அலைகிறேன்....!!!

மற்றவர்கள் என்னை .....
காதல் பைத்தியம் ....
என்கிறார்கள் ....
சொல்லிவிட்டு போகட்டும் ......
நீ அப்படி நினைத்து விடாதே .....!!!

முடிந்தால் எனக்கு ...
ஒரே ஒரு உதவி செய் .....
எனக்காக ஒரு துளி .....
கண்ணீர் விடு ......
அதை விட எனக்கு ......
உன்னிடம் இருந்து வர .....
ஒன்றுமில்லை ..........!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

உன்னை மறப்பதற்கு .......
என்னை மறக்கவேண்டும் .....
என்னை மறப்பதற்கு .....
உன்னை மறக்க வேண்டும் ......
என்ன சொல்கிறேன் என்று .....
புரியவில்லையா ......?
எனக்கும் புரியவில்லை .....
உன்னை எப்படி மறப்பது ....?

முடிந்தால் ஒரு உதவி செய் .....
என்னை நீ மறக்க என்ன .....
செய்தாய் ...? சொல் உன்னை .....
மறக்க நான் முயற்சிக்கிறேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.