Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக சினிமாவில் பா.விஜயின் “ள”கரமும் தமிழீழப்பாடலில் அறிவுமதியின் “ழ”கரமும்

Featured Replies

தமிழக சினிமாவில் பா.விஜயின் “ள”கரமும் தமிழீழப்பாடலில் அறிவுமதியின் “ழ”கரமும்

ஏதோ ஒரு விதத்தில் தமிழ் சினிமாப்பாடல்களின் போக்கில் ஒரு வித்தியாசத்தைக் காட்ட வேண்டும். அதற்கேற்ப கவிவரிகளை செதுக்க வேண்டும் என்பது தமிழக கவிச்சிற்பிகளின் பேராவல்.இதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா? இதில் எத்தனை பேர் வெற்றி பெற்றார்கள். “வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கலியாணம்” போன்ற கவி வரிகள் சினிமாப்பாடல்களின் போக்கில் தனித்துவந்தான். பாடல்களில் புதுமைஇ தனித்துவம் இ இரசிகர்களுக்கு திடீரதிர்ச்சி ஏற்படுத்தக்கூடிய புதுச்சொற்களை புனைதல் என்பன பாடல்களை இமயத்திற்கு உயர்த்தியது என்பது கூட மறுக்கப்பட முடியாததே. பாட்டு இ படம் இசினிமா நடிகர் இந்த சொற்களை கேட்டவுடன் உலகில் எந்த மூலையில் இருக்கும் தமிழர்களின் மனதும் கணப்பொழுதில் தமிழகத்தில் சங்கமித்து விடுகிறது. இந்தச் சூழலில்தான் தமிழக சினிமாப்பாடல் வரலாற்றில் ஒரு பாடல் பூத்திருக்கிறது. ஏதோ ஒரு வகையில் இது தனித்துவம் என்பதை நிராகரிக்க முடியாதுதானே. தமிழில் இடையின எழுத்தாக தன்னை காட்டிக்கொள்ளும் “ள” கரந்தான் இதற்கு காரணம் “ள” செய்த சாதனையை பார்த்தீர்களா? ஆனால் இந்த பாடற்தாவரம் உற்பத்தியாகும் முன்பே இதே பாடற் தாவரக்குடும்பத்தைச் சேர்ந்த இன்னொரு பாடற்தாவரம் உற்பத்தியாகும் முன்பே இதே பாடற் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இன்னொரு பாடற்தாவரம் அதே தமிழகத்தில் உற்பத்தியாகியது. இது பலருக்குத் தெரியாது. இந்தப்பாடலிலும் தமிழின் இடையின எழுத்தாகிய “ழ”கரம் ஆட்சி செய்கின்றது. ஏந்தப்பாடலில் தனித்துவம் என்பதை தீர்மானிக்க வேண்டியது நீங்களே. “ழ” கரம் என்பது தமிழ் மொழிக்கே உரித்தான ஒரு தனிச்சிறப்பான எழுத்து என்பது தமிழறிஞர்கள் கருத்து. இரண்டு பாடல்களையும் ஒவ்வொரு கவிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். ஓன்று தமிழக சினிபாப் பாடல் மற்றையது தமிழீழ விடுதலைப்பாடல். இரு கவிஞர்களும் தமிழக சினிமாவிலும் தமிழிலும் அறியப்பட்டவர்கள்தான்.

இனியவளே இளையவளே

ள…ள…ள…ள………….

அறிந்தவளே தெரிந்தவளே

தள்ளித்தள்ளி இருந்தவளே

எள்ளி எள்ளி சிரித்தவளே

துள்ளித் துள்ளி நடந்தவளே

கள்ளி கள்ளி அவளிவளே

அட ளகரத்தில் இன்னும் எத்தனை அழகுச்சொற்கள் உண்டு என்றும் சிலர் அங்கலாய்ப்பீர்கள். இதுதான் அந்தப்பாடலின் பல்லவி. இப்படி பல்லவியை தொடங்கயவர் யார்? கவிஞர் பா. விஜய் அவர்கள்தான். சாதனைப்பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் எப்படியோ ளகரத்தை உச்சரித்து சாதனை படைத்து விட்டார். தற்கால சினிமாப்பாடல்களில் சினிமாவில் இலக்கணம் இறந்துவிடவில்லை என்று இந்தப்பாடல் ஆறுதல் வேறு சொல்கிறது. நிச்சயமாக பலரும் இந்தப்பாடலை கேட்டு இருப்பார்கள். பா.விஜய் அவர்களுக்கு பாராட்டுக்கள்

(சரணத்தைப்பார்க்க முன்பு ) இப்போது மறுபக்கம் திருப்புங்கள். இதைக் கேட்டிருக்கின்றீர்களா? இல்லையேல் வாசியுங்கள்.

அழகே அழகே தமிழ் அழகே

பழகிட ழகரம் எளிதழகே

அழகே அழகே அழகே

அழகு அழகு அழகு அழகு

இப்படி அந்தத் தமிழீழப் பாடல் பல்லவியுடன் தன் பயணத்தை தொடர்கிறது. இதில் முக்கிய விடயம் பா.விஜய் அவர்களின் ளகரம் பாடல் வெளிவருவதற்கு சில வருடங்களுக்கு முன்பே இந்தப்பாடல் வெளிவந்து விட்டது. தமிழகத்தில் மட்டுமல்ல தமிழ் இரத்தம் ஓடும் தமிழர்கள் மனங்களில் வேரூன்றி நிற்கும் தனித்துவமான கவிஞர்தான் அறிவுமதி. அந்த மதிக்குள் (நிலவுக்குள்) இருந்து வெளிவந்த அறிவின் வெளிப்பாடுதான் இது. “கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை” என்று சொல்லி புகழடைந்த நித்தியஸ்ரீ அவர்களின் குரலிலும் “ தஞ்சாவூரு மண்ணெடுத்து தாமிரபரணி தண்ணியவிட்டு” பொம்மை செய்த கிருஸ்ணராஜ் அவர்களும் இணைந்துதான் இந்தப் பாடலை பாடியிருக்கிறார்கள். ஆயுத எழுத்தும் (ஃ) ழகரமும் தமிழ் மொழிக்கு மட்டும் சிறப்பான எழுத்துக்கள் அல்லவா? பா.விஜய் பாடலின் சரணத்தைக் கேட்க முன்பு அறிவுமதி அவர்களின் பாடலின் முதற் சரணத்தைக் கேட்போமா?

மொழி அழகு வழி அழகு

அழகு அழகு அழகு

தமிழ் மொழி அழகு புலி விழி அழகு

அழகு அழகு அழகு

அழகே அழகே அழகே

ஆகா எத்தனை அழகு. தமிழ் மொழிக்குத்தான் எத்தனை அழகு. தமிழ் இனத்திற்குத்தான் எத்தனை அழகு. அந்த தமிழ் மொழியை காத்தல்தானே தமிழருக்கு அழகு. இல்லையேல் எமக்கு பெரும் இழிவு. இல்லையேல் எம்மொழிக்கும் அழிவு. இப்படியெல்லாம் கணப்பொழுதில் சிந்தனை வரவேண்டுமே.

இனி இதைக் கேளுங்கள். (பாருங்கள்) இது பா.விஜய் அவர்களின் “இனியவளே இளையவளே” பாடலின் சரணம் (ஏற்கனவே பல்லவியை பார்த்து விட்டோம்) மேலும் ளகர அலைகள் அடிப்பதை அவதானியுங்கள்.

உள்ளம் உள்ளம் உள்ளம் -அது

துள்ளும் துள்ளும் துள்ளும்

வெள்ளம் வெள்ளம் வெள்ளம் -உயிர்

அள்ளும் அள்ளும் அள்ளும்

வெள்ளை வெள்ளை நிலவு –அதில்

கொள்ளை கொள்ளை கனவு

பிள்ளை பிள்ளை மனது எனக்குள்ளே

கள்ளம் கள்ளம் ஏது – சிறு

பள்ளம் பள்ளம் ஏது

குள்ளம் குள்ளம் ஏது எனக்குள்ளே

மேளம் கொட்டும் நன்னாள்

தாளம் கேட்கும் பொன்னாள்

அந்த நாளும் எந்நாள் நமக்குள்ளே.

ஏத்தனை ளகரம் ஆட்சி செய்கிறது என்பது தெரிகிறதுதானே. இந்த ளகர சொற்கள் புதுமையான சொற்களா? ஏற்கனவே அடிக்கடி தினமும் எப்டியோ உச்சரிக்கும் அல்லது கேட்கும் சொற்கள்தான். ஆனால் பாடல் வடிவில் தனித்துவமான ளகரமாக வந்ததால் பாடற் சந்தையில் இதற்கு கிராக்கி ஏற்பட்டது ஏன்னவோ உண்மைதான். பா.விஜய் இப்படி முடிக்கின்றார்.

ளகரம் இது போதுமா?

இன்னும் கொஞ்சம் வேணுமா?

சரி இன்னும் கொஞ்சம் ளகரம் தேவையெனில் புதுமை ளகர சொற்களை அள்ளிக்கொடுக்கும் கவிவள்ளளா பா.விஜய். (வள்ளல்) பா.விஜய் தனது கவியிலே பல சந்தர்ப்பங்களில் எப்படியோ தனித்துவத்தை வெளிப்படுத்தியவர் இந்தப்பாடல் “பொய்” என்ற பெயரில் வெளிவந்த ஒரு தமிழக திரைப்படத்தில் இடம்பெற்றது. படத்தின் பெயர்தான் பொய். பாடல் பொய்யல்ல. உண்மைத்தமிழ.; வித்தகக் கவிஞரின் வரிகளுக்கு வித்தியாசாகர் இசை வழங்கியுள்ளார்.

இனி இந்த வரிகளை சுவைப்போம். அறிவுமதி என்றால் அவரது உணர்வுக்கவிகளில் (அதாவது வியாபாரம் சாராத)தமிழ் வாசம் வீசுவது தவிர்க்க முடியாதது என்பது வெளிப்படைக்கருத்து. தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் தமிழகம் இ தமிழீழம் இ பிற சர்வதேச நாடுகளில் வெளிவந்த விடுதலைப் போராட்ட பாடல்களுள் இந்தப்பாடல் ஒரு புரட்சிசெய்தது என்றால் மிகையாகாது.

யாழழகு குழழழகு

அழகு அழகு அழகு

வரும் யாழ் அழகு

சுடும் குழல் அழகு

அழகு அழகு அழகு

என்று இரண்டாவது சரணம் ஒலிக்க மூன்றாவது சரணம் இப்படி ஒலிக்கின்றது.

சூழல் அழகு ஈழம் அழகு

அழகு அழகு அழகு

போர்ச்சூழல் அழகு

தமிழீழம் அழகு

அழகு அழகு அழகு

அழகே அழகே அழகே

அறிவுமதி என்ற மரத்தில் இருந்து உதிர்ந்த கவிதைப்பூக்கள் எத்தனை அழகு அந்த அழகுப்பாடல். “ஒளிமுகம் தோறும் புலி முகம்” என்ற இசைத் தொகுப்பில் உலாவரும் பாடல். கவி இசையமைக்க நித்தியஸ்ரீ கிருஸ்ணராஜ் இணைந்து பாடலைப் பாடினாhகள்;. யாழழகு என்றும் வரும் யாழ் அழகு. ஏன்றும் அறிவுமதி அசத்தும் இரண்டு யாழும் எதுவென்று புரிந்ததா? “துணிந்தவனுக்கு தூக்குமேடை பஞ்சுமெத்தை” என்பார்கள். இங்கு பார்த்தீர்களா? இந்தப்பாடலை வைத்து இப்படி ஒரு பொன்மொழி உருவாக்கலாமா? “துணிந்த கவிஞனுக்கு சுடும் குழலும் அழகாம்” சரி புல்லாங்குழல் பற்றி அவர் பேசவில்லையா?

எது அழகு? ஈழம் அழகு. ஈழத்தின் சூழல் அழகு. இ எம்மொழி அழகு. இ தமிழின் வழியும் தமிழனின் வழியும் அழகு. அறிவுமதி அவர்களுக்கும் அழகை கூட்டி இருக்கின்றது. இந்தப் பாடல். நிச்சயம் இதைக் கேளுங்கள். உச்சரிப்பு பிரமாதம். உணர்வும் பெருவானம். ஏங்கள் இனிய வாழ்வு தொடுவானம். தமிழ் காக்க கொடுப்போம் உயிர்த்தானம். இனி போகாது மொழி மானம். அதற்கு சாட்சி இந்தக்கானம்.

- புரட்சி -

  • 6 months later...

உள்ளம் உள்ளம் பாடலை வாசிக்க முன்பு தமிழ் இலக்கியத்தில் நவாலியூர் சோமசுந்தர புலவர் எழுதிய கீழ்வரும் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றது. பாடல் மழை என நினைக்கின்றேன். சரியாக தெரியவில்லை..

பூங்குறிஞ்சி முகட்டினில் ஏறி

பொழிந்த தெள்ளமுதாகிய வெள்ளம்!

பாங்கிலாத பரத்தையை நாடி

படருவோரிற் படர்ந்தது பள்ளம்!

இன்னொரு எனக்கு பிடித்த வரிகள். இது கவிஞர், பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் தனது விநாயகர் அகவல் (பெயர் சரியாகத் தெரியவில்லை) என்ற நூலில் பாடியது.

கவலைகளிற் கழிகின்ற

கணம் ஒவ்வொன்றும்

காலன்கைப் பட்டழியும்

சாவுக் காலம்!

தவமுனைவில் சிவநினைவில்

கழிமகிழ்வில் கழிகின்ற

சில நொடியே வாழ்வுக் காலம்!

Edited by கலைஞன்

ம் தமிழில் வார்த்தைக்கா பஞ்சம்

வஞ்சமில்லாலமல் கொஞ்சி வருகின்றதே

கஞ்சத்தனமின்றி அஞ்சாமல் கெஞ்சாமல்

கொஞ்சம் கொஞ்சமாய்

அள்ளியருந்துங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கிறிசால்! உங்கள் ஒப்பீடு அற்புதம். :D:D

கண்ணதாசனும் 'ன,ண" கரத்தை வைத்து பால்வண்ணம் பருவம் கண்டு என்றும் வேறுபல பாடல்களும் பாடியுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.