Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜூனியர் விகடனின் தேர்தல் கணிப்பு: திமுக கூட்டணி முன்னனி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

234 தொகுதிகள் மெகா ரிசல்ட்!ஓவியங்கள்: ராஜா

 

p2.jpg

க்னி நட்சத்திர வெயிலில் தமிழகம் தகிக்கிறதா அல்லது அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வியில் தமிழகம் தவிக்கிறதா என்றால், தமிழ்நாட்டு மக்கள் இரண்டாவது கேள்வியை டிக் செய்வார்கள். ஏனென்றால், பருவகாலத் தட்பவெப்பம் மாதந்தோறும் மாறும். ஆனால், இரண்டாவது கேள்விக்கான விடையில் தமிழ்நாட்டு மக்களின் தலைவிதி இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு இருக்கப் போகிறது.

வின்னர் யார்... சி.எம். யார்... அடுத்து ஆளப்போவது யார்? என்று யார் எந்த மாதிரியாகக் கேட்டாலும் ஜெயலலிதாவா, கருணாநிதியா, விஜயகாந்த்தா, அன்புமணியா (பி.ஜே.பி., நாம் தமிழர் கட்சி போன்ற பிற கூட்டணிகள் தங்களது முதலமைச்சர் வேட்பாளர் பெயரை அறிவிக்கவில்லை.) என்ற பளிச் கேள்வியே அனைவர் மனதிலும் பட்டென்று வரும். ஆம்! அடுத்து யார்?

19-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போதுதான் லட்சக்கணக்கான மக்களின் மனப்போக்கு என்ன என்பது தெரியும். அதற்கு முன் தமிழகத்தின் அரசியல் போக்கு என்ன என்பதை எக்ஸ்ரே பார்வையுடன் எடுத்து வழங்க ஜூனியர் விகடன் திட்டமிட்டது. நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் மக்களின் மனம் அறிந்து அதனை முன்கூட்டியே வழங்குவதில் ஜூ.வி. பின்வாங்கியது இல்லை. இந்தத் தேர்தலிலும் அதே தீவிர முயற்சியில் ஜூ.வி. இறங்கியது.

234 தொகுதிகளிலும் யார் வெற்றி பெறுவார் என்ற மிகமிக நுணுக்கமான கேள்வியில் இருந்து தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற விரிவான கேள்வி வரை அனைத்தையும் வாசகர்களிடம் இருந்து பெறுவதற்கு முயற்சித்தோம். இந்தக் கருத்துக்கணிப்பில் விகடன் நிறுவனத்தைச் சேர்ந்த நிருபர்கள், புகைப்படக் கலைஞர்கள், மாணவப் பத்திரிகையாளர்கள் என 110 பேர் தமிழகம் முழுக்க களத்தில் இறங்கினார்கள்.

p2a.jpg

இவர்கள் எதிர்கொண்ட மிக முக்கியமான பிரச்னை, சுட்டு எரிக்கும் வெயில். அரைமணி நேரத்திலேயே எந்த மனிதனையும் சோர்வடைய வைக்கும் அக்னி நட்சத்திர வெயிலில், தொடர்ச்சியாக ஒரு வாரம் முழுக்க எமது பணியாளர்கள் அலைந்து திரிந்து இந்த சர்வேயை எடுத்தார்கள். அவர்களது ஆர்வம், அக்கறை, ஈடுபாடு, அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு எமது நிறுவனம் முதலில் தலைவணங்குகிறது. இதைத் தொழிலாக அல்லாது சேவையாக நினைக்கும் மனிதர்களை ஊழியர்களாகப் பெற்றிருப்பதை நினைத்து நிறுவனம் பெருமைப்படுகிறது. அவர்கள் வெயில் பாராது அலைந்தார்கள் என்றால், நிறுவனத்தில் இருப்பவர்கள் இரவு பகல் பாராது அதனை செக் செய்வது, வடிவமைப்பது, தயாரிப்பது என்ற பணிகளில் மூழ்கி இருந்தார்கள். இவர்களது கடமை உணர்வில்தான் இந்த மாபெரும் பணியைச் செய்ய எங்களால் முடிந்தது. சாத்தியம் ஆயிற்று.
சராசரியாக ஒரு தொகுதிக்கு 125 பேரைச் சந்தித்தது ஜூ.வி. டீம். ஆண், பெண் விகிதாசாரம், கிராமம், நகரம், தொகுதியின் புவியியல் அமைப்பு, வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகத்தினர் என சரி விகிதத்தில் இருக்கும்படி சர்வே எடுக்கப்பட்டது. உயர்தர வர்க்கத்தினர் முதல் கூலித் தொழிலாளர்கள் வரை... முதல் தலைமுறை வாக்காளர் தொடங்கி வயதான வாக்காளர்கள் வரை எல்லா அம்சங்களும் சர்வேயில் உள்ளடக்கப்பட்டன. சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அந்தத் தொகுதியில் அதிகம் இருந்தால் அந்தப் பிரிவினரது எண்ணங்களை அறிய அவர்களுக்கு உரிய பங்களிப்பும் சர்வேயில் தரப்பட்டது. மே 1-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி வரையில் சர்வே எடுக்கப்பட்டது. வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து தேர்தல் வெப்பம் தகித்துக் கொண்டிருந்தபோது அதாவது, தேர்தலுக்கு மிக நெருக்கத்தில் இந்த சர்வே மேற்கொள்ளப் பட்டதுதான் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தது. அனைத்து அரசியல் தலைவர்களும் களத்தில் நின்றுகொண்டு இருந்தார்கள். அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் ஒருவரை ஒருவர் வீழ்த்தும் முயற்சிகளில் இறங்கி இருந்தார்கள். அ.தி.மு.க நீங்கலாக அனைத்துக் கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருந்தன. நாங்கள் சர்வே எடுக்கத் தொடங்கிய சில நாட்களில் அ.தி.மு.க-வும் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்டது. எனவே, அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை வந்த பிறகு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு என்ற முக்கியத்துவமும் இதற்கு இருக்கிறது.

மிகத் துல்லியமாக இந்தக் கணிப்பு இருக்க வேண்டும் என்ற அக்கறையின் அடிப்படையில் அனைவரிடமும் செல்போன் எண் வாங்கப்பட்டது. அறிமுகம் இல்லாதவர்களிடம் செல்போன் எண் தரமாட்டார்கள். அப்படித் தர மறுத்தவர்களிடம் தேவையை விளக்கிச் சொல்லி எண்ணை வாங்கினோம். பொதுவாக செல்போன் எண்ணை பெண்களிடம் வாங்குவதற்கு அதிகச் சிரமப்பட வேண்டி இருந்தது. சர்வேயில் பங்கேற்றவர்களின் உறுதித் தன்மையை நிலைநிறுத்த செய்யப்பட்ட ஏற்பாடு இது. சர்வே பாரங்கள் நமது அலுவலகத்துக்கு வந்து சேர்ந்ததும் அந்த செல்போன் நம்பர்கள் ரேண்டம் முறையில் செக் செய்யப்பட்டன. அவர்களின் பதில்கள் சரியாக இருந்ததா என இறுதி செய்யப்பட்டது. இப்படி நிறைய அக்கறை எடுத்து கருத்துக் கணிப்பை மேற்கொண்டோம். 

p2b.jpg

இதற்கென தற்காலிக கால் சென்டர் அமைத்து 20 ஊழியர்கள் ஏழு நாட்கள் புதிதாகப் பணி அமர்த்தப்பட்டு இருந்தார்கள். அவர்கள் சர்வேயில் பங்கெடுத்தவர்களிடம் போன் செய்து விசாரணை நடத்தினார்கள். ‘ஆம்... நான் இந்த சர்வேயில் பங்கெடுத்தேன்’ என்று சொல்லியவர்களின் பாரங்கள் மட்டுமே சர்வேயில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த அடிப்படையில்தான் 29,749 நபர்கள் பங்கேற்று கருத்துச் சொன்ன மெகா கருத்துக்கணிப்பின் முடிவுகள் இங்கு வெளியிடப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் உள்ள மொத்தத் தொகுதிகள் 234. இதில் தொகுதி வாரியாக எடுக்கப்பட்ட கணக்கின் படி, ஆளும் கட்சியான  அ.தி.மு.க.  73  இடங்களிலும் முன்பு ஆண்ட கட்சியான தி.மு.க. 64 இடங்களிலும் வெற்றியைக் கைப்பற்றும் சூழ்நிலை உள்ளதாகத் தெரியவருகிறது. 83 தொகுதிகளில் போட்டி கடுமையாக இருந்து இழுபறி நீடிக்கிறது. காங்கிரஸ் 10 தொகுதிகளில் முன்னேறி வருகிறது. பா.ம.க., புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை தலா 1 தொகுதிகளில் முன்னேறி உள்ளன. சில தொகுதிகளில் தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் சரிக்கு சமமான வாக்குகள் உள்ளன. சில தொகுதிகளில் ஒன்றிரண்டு சதவிகித வாக்குகளை கூடுதலாக ஒன்றைப் பெற்று முந்தி உள்ளன. அல்லது பிந்தி உள்ளன. வாக்கு வித்தியாசம் இரண்டு சதவிகிதத்துக்கு உள்ளே இருந்தால் அதனை இழுபறியாகத்தான் கணக்கில் வைக்க முடியும். அது ஏறலாம். இறங்கலாம். ஒவ்வொரு தொகுதியிலும் தரப்பட்ட சர்வே முடிவுகள் சதவிகிதக் கணக்கில் தரப்பட்டிருக்கிறது.

தி.மு.க. அல்லது அ.தி.மு.க-வின் வாக்குகளை மக்கள் நலக் கூட்டணி அல்லது பா.ம.க.வேட்பாளர்கள் கணிசமாகப்  பிரித்தால் எதிரியை வெல்ல இந்த திராவிடக் கட்சிக்கு வாய்ப்பு ஏற்படும். தனிப்பட்ட முறையில் தொகுதிகளை கைப்பற்ற இந்த இதரக் கட்சிகளால் முடியாமல் போனாலும், அடுத்த கட்சியை தோற்கடிப்பதற்கு இவை கணிசமான வாக்குகளை பிரிக்கும் கட்சிகளாக இருக்கின்றன.

p2c.jpg

கடந்த 45 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திராவிடக் கட்சிகள் இரண்டையும் வீழ்த்துவதற்கு தனித்தனியாக கூட்டணிகள் அமைத்து பல கட்சிகளும் களம் கண்டு வருகிறார்கள். ஆனாலும் இந்த திராவிடக் கட்சிகள் இரண்டின் செல்வாக்கும் அப்படியே தொடருவதைத்தான் இந்தக் கருத்துக்கணிப்பும் காட்டுகிறது. கடுமையான மோதல் அ.தி.மு.க., தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுக்குள் மட்டுமே உள்ளது. 

அப்படியானால் இரண்டில் வெற்றி யாருக்கு? புதிய வாக்காளர்கள் இம்முறை  21 லட்சம் லட்சம் பேர் இருக்கிறார்கள். இதில் கிராமப்புற புதிய வாக்காளர்கள், கட்சி, சாதி ஆகியவற்றுக்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள். ஆனால் நகர்ப்புற புதிய வாக்காளர்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்பது தெரியவில்லை. அதேபோல் ஒரு கோடிக்கும் மேற்பட்ட இளம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களது வாக்குகள் தீர்மானிக்கும் சக்தி படைத்ததாக இருக்கும். தமிழகத்தில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம். ஆண் வாக்காளர்கள் 2.88 கோடி என்றால், பெண் வாக்காளர்கள் 2.93 கோடி பேர். கிராமப்புற பெண் வாக்காளர்கள் அதிகமாக அ.தி.மு.க-வுக்கு வாக்களிப்பவர்களாக இருந்துள்ளார்கள். அவர்கள் மொத்தமாக வந்து வாக்களித்தால் நிலைமையில் மாற்றங்கள் ஏற்படும்.

வாக்குப்பதிவு சதவிகிதமும் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும். அதிகமான வாக்குகள் பதிவு ஆனால் அது அரசாங்கத்தின் மீதான கோபம் என்று பொதுவாகச் சொல்லப்படும். ஆனால், ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குப்பதிவு சதவிகிதம் கூடிக்கொண்டுதான் போகிறது. ஆளும் கட்சியும் மாறிக்கொண்டுதான் வருகிறது. இப்படி பல்வேறு காரணங்கள் அழுத்தமாகத் தெரிகின்றன. மக்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள் என்பது 19-ம் தேதி தான் தெரியும்!

அட்டைப்பட ஓவியம்: ஹாசிப்கான்

 

http://www.vikatan.com/juniorvikatan/2016-may-18/investigation/119120-tamil-nadu-assembly-election-mega-survey-result.art

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய கருப்பனின்.... வீடியோ வெளிவந்த பிறகு, tv_smiley_07.gif
தி.மு.க. ஆட்சியை பிடிக்க இருந்த சந்தர்ப்பம், பழம் நழுவி பாலில் விழுந்த மாதிரி போயிட்டுது.
அடுத்தும்... அ. தி. மு.க, தான் ஆட்சியை பிடிக்கும். ஜீ.வி. நடத்திய கருத்து கணிப்பு... புஸ்வாணமாகி போய்விடும். Smiley

  • கருத்துக்கள உறவுகள்

இழுபறி 83 ஆசனங்கள் இருக்கும் போது எப்படி திமுக வெல்லும்?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nunavilan said:

இழுபறி 83 ஆசனங்கள் இருக்கும் போது எப்படி திமுக வெல்லும்?

விகடன் குழுமம், மற்றும் நக்கீரன் ஆகியவை.... தி. மு. க. வின்  செல்லப் பிள்ளைகள். freunde.gifSmiley

  • கருத்துக்கள உறவுகள்

கடலூர் தொகுதியில் சீமான் ஜெயிப்பாரா? என்ன சொல்கிறது விகடன் கணிப்பு?

கடலூர்: நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் போட்டியிலும் கடலூர் தொகுதியில் 5 முனைப் போட்டி நிலவுவதாகவும், இதில் அதிமுக முந்துவதாகவும் விகடன் கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது. சீமானின் போட்டி காரணமாக கடலூர் தொகு நட்சத்திர தொகுதியாக மாறியது. தேர்தலுக்கு பல மாதங்கள் முன்பிருந்தே இந்தத் தொகுதியில் சுற்றிச் சுழன்று வேலை பார்த்தனர் நாம் தமிழர் கட்சியினர். குறிப்பாக பெருவெள்ளம் வந்து மக்கள் அவதிப்பட்டபோது முதல் உதவிக் கரம் நீட்டியவர்கள் அதிமுகவோ, திமுகவோ அல்ல.. நாம் தமிழர் கட்சியினர்தான். மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்ற முயன்றனர். சீமானே நேரடியாக களமிறங்கி வெள்ள நிவாரண வேலைப் பார்த்தார். 

தேர்தல் அரசியலில் முதல் முறை களமிறங்கும் சீமான் போட்டியிட இந்தத் தொகுதிதான் சிறந்தது என அவரது கட்சியினர் முடிவெடுத்த பின்னணியும் இதுதான். இப்போது கடலூர் தொகுதியின் தற்போதைய ஆளும் கட்சி எம்எல்ஏ, அமைச்சர் எம்சி சம்பத், மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சீமான், திமுகவின் புகழேந்தி, த.மா.கா வேட்பாளர் சந்திரசேகர், பா.ம.க தாமரைக்கண்ணன் போட்டியிடுகின்றனர். ஐந்துமுனைப் போட்டி நிலவும் இந்தத் தொகுதியில், விகடன் கணிப்புப்படி அதிமுக 33 சதவீத வாக்குகளும், திமுக 30 சதவீத வாக்குகளும், பாமக 13 சதவீத வாக்குகளும், தமாகா 11 சதவீத வாக்குகளும், நாம் தமிழர் 9 சதவீத வாக்குகளும் பெறுகின்றன. எம்.சி.சம்பத் பெரிதும் நம்பியுள்ள மீனவர், வன்னியர் வாக்குகளை சீமானும், தாமைரைக்கண்ணனும் கணிசமாகப் பிரிப்பதாக விகடன் குறிப்பிட்டுள்ளது. ஆனாலும் அதிமுக முந்துவதாக கணிப்பின் முடிவு கூறுகிறது. "இந்தக் கணிப்புகளைப் பற்றி நாங்கள் கவலைப்படவே இல்லை. மக்கள் மீது மிகப் பெரிய நம்பிக்கை இருக்கிறது. தமிழக சட்டப் பேரவையில் சீமானின் குரல் ஒலிக்க வேண்டும் என்பது கடலூர் மக்களின் விருப்பம். அது 19-ம் தேதி தெரிந்துவிடும். அதற்குள் எதற்கு இந்த அவசர கணிப்புகள்," என்கிறது நாம் தமிழர் கட்சி!

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/will-seeman-win-at-cuddalore-253519.html?utm_source=tamil&utm_medium=home-right-widget&utm_campaign=people-talk

4 hours ago, தமிழ் சிறி said:

விகடன் குழுமம், மற்றும் நக்கீரன் ஆகியவை.... தி. மு. க. வின்  செல்லப் பிள்ளைகள். freunde.gifSmiley

தந்தி டிவி, புதிய தலைமுறை கருத்துக்கணிப்புகள் எல்லாம் ஒரு செட்டப்: ஸ்டாலின் தாக்கு  :grin:

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/stalin-slams-pt-thanthi-tv-opinion-poll-as-fake-253529.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.