Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"கச்சத்தீவு தேவாலய கட்டுமானம் இந்திய அழுத்தத்தால் நிறுத்தப்படவில்லை"

Featured Replies

"கச்சத்தீவு தேவாலய கட்டுமானம் இந்திய அழுத்தத்தால் நிறுத்தப்படவில்லை"

 
கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது தவறு என்பதே தமிழக அரசின் நிலைப்பாடாக இருந்து வருகிறது
 கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது தவறு என்பதே தமிழக அரசின் நிலைப்பாடாக இருந்து வருகிறது

இலங்கை- இந்தியாவுக்கிடையே உள்ள கச்சத்தீவில் இலங்கைக் கடற்படையினரால் இடித்து மீளக் கட்டப்பட்டுவரும், புனித அந்தோணியார் தேவாலய கட்டுமானப் பணிகள் இந்திய அரசின் அழுத்தத்தினால் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை இலங்கை கடற்படை மறுத்துள்ளது.

கால நிலை உட்பட சில காரணங்களுக்காக கட்டுமானப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அது விரைவில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் கடற்படை பேச்சாளர் கேப்டன் அக்ரம் அலவி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

யாழ் ஆயர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, கச்சத்தீவிலுள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தை இடித்து மீளக்கட்டும் பணிகள் கடந்த வாரம் கடற்படையினரால் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அதற்கான அஸ்திவாரம் போடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

எனினும் அங்கு தற்போது பெய்துவரும் கடும் மழை கட்டுமானப்பணிகளை தொடர்வதற்கு இடையூறாக இருப்பதாக தெரிவித்த கேப்டன் அக்ரம் அலவி, நிர்மாணப் பணியை தொடர்வதற்கு அஸ்திவாரம் காயும் வரை காத்திருக்க வேண்டியிருப்பதாக கூறினார்.

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் நடக்கும் கச்சத்தீவு புனித அந்தோணியார் விழாவுக்கு இந்திய பக்தர்கள் கணிசமான அளவில் கலந்துகொள்கிறார்கள் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் நடக்கும் கச்சத்தீவு புனித அந்தோணியார் விழாவுக்கு இந்திய பக்தர்கள் கணிசமான அளவில் கலந்துகொள்கிறார்கள்

இந்த இரண்டு காரணங்களினாலேயே தேவாலய கட்டுமானப்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாகவும் அந்நடவடிக்கை விரைவில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் கூறினார்.

தேவாலய கட்டுமானப்பணி எப்போது முடியும் என்று பிபிசி தமிழோசை எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கடற்படை பேச்சாளர், கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னர் தேவாலயம் முழுமையாக கட்டி முடிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்கனவே சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் கச்சத்தீவிலுள்ள தேவாலயத்தை கட்டும் நடவடிக்கையில், தமிழக அரசு தரப்பையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதன் பின்னர் தேவாலய கட்டுமானப்பணிகள் இந்தியாவின் அழுத்தம் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ஊடகங்களில் செய்திகள் வெளியாகிருந்தன.

இந்த பின்னணியில் இலங்கைக் கடற்படைப்பேச்சாளர் பிபிசி தமிழோசைக்கு இந்த விளக்கமளித்துள்ளார்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/05/160515_katchatheevu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.