Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரநாயக்க, புளத்கொஹுபிட்டியில் 28 பேரின் சடலங்கள் மீட்பு 150 இற்கும் மேற்பட்டோரைக் காணவில்லை - அனர்த்தங்களில் 4 இலட்சம் பேர் பாதிப்பு

Featured Replies

அரநாயக்க, புளத்கொஹுபிட்டியில் 28 பேரின் சடலங்கள் மீட்பு 150 இற்கும் மேற்பட்டோரைக் காணவில்லை - அனர்த்தங்களில் 4 இலட்சம் பேர் பாதிப்பு
 

(ரொபட் அன்­டனி எம்.எம். மின்ஹாஜ்)

 

கேகாலை மாவட்­டத்தின் அர­நா­யக்க மற் றும் புளத்­கொ­ஹு­பிட்­டிய ஆகிய பிர­தே­சங்­க ளில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற மண்­ச­ரிவில் புதை­யுண்­ட­வர்­களில் 28 பேரின் சட­லங்கள் இது­வரை மீட்­கப்­பட்­டுள்­ளன. 

1674046.jpg

மேலும் காணாமல் போன 150 க்கும் மேற்­பட்டோரை தேடும் பணிகள் பல்­வேறு சிர­மங்­க­ளுக்கு மத்­தியில் இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன. 

 

அர­நா­யக்க பகு­தியில் 17 பேரின் சட­லங்­களும் புளத்­கொ­ஹு­பிட்­டிய கிரா­மத்தில் 14 பேரின் சட­ லங்­களும் மீட்­கப்­பட்­டுள்­ளன. 

 

ஆனால் மண்­ச­ரிவு ஏற்­பட்ட இரண்டு பகு­தி­க­ளிலும்  மீட்பு பணி­களை முன்­னெ­டுக்க முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.

 

அர­நா­யக்க மற்றும் புளத்­கொ­ஹு­பிட்­டிய பிர­தே­சங்­களில் தொடர்ந்தும் மழை பெய்து வரு­வதால் மீட்புப் பணிகள் கடும் சவா­லுக்கு உட்­பட்­டுள்­ளன.

 

அர­நா­யக்க பகு­தியில் உள்ள சாம­புர மலை­யி­லி­ருந்து தொடர்ந்து மண் திட்­டுகள் சரிந்து விழுந்­து­கொண்­டி­ருப்­பதால் மீட்புப் பணி­களில் ஈடு­பட்­டுள்ள இரா­ணு­வத்­தினர் கடும் சிர­மங்­களை எதிர்­கொண்­டுள்­ளனர்.

 

அத்­துடன்  மினி மண்­ச­ரிவு என்று  சொல்­லக்­கூ­டிய அளவில் சாம­புர மலை­யி­லி­ருந்து தொடர்ந்து மண் திட்­டுகள் சரிந்து வீழ்ந்­து­கொண்­டி­ருக்­கின்­றன.

 

அர­நா­யக்க பகு­தியில் சிரி­புர எலங்­க­பிட்­டிய மற்றும் பல்­லே­பாகே ஆகிய மூன்று கிரா­மங்­க­ளிலும் நேற்­றைய தினம் இரா­ணு­வத்­தினர் பல்­வேறு குழுக்­க­ளாக பிரிந்து  மீட்புப் பணி­களை ஆரம்­பித்­தனர்.

 

இந்­நி­லையில் நேற்­றுக்­காலை வேளையில்  மழை பெய்ய ஆரம்­பித்­த­தை­ய­டுத்து  சாம­புர மலை­யி­லி­ருந்து மண்­திட்­டுகள் சரிந்து வர ஆரம்­பித்­த­மை­யினால் இரா­ணுவ வீரர்கள் மீட்புப் பணி­களை  நிறுத்­தி­யி­ருந்­தனர்.

 

பின்னர் மீண்டும் சில மணி­நே­ரத்தில் மழை ஓய்ந்­ததும் இரா­ணுவ வீரர்கள் மீட்பு பணி­களை ஆரம்­பித்­தனர்.

 

ஆனால், தொடர்ச்­சி­யாக  அங்கு மீட்பு பணி­களை முன்­னெ­டுக்­க­வில்லை. இந்­நி­லையில் காணாமல் போயுள்ள 150 க்கும் மேற்­பட்­டோ­ருக்கு என்ன நடந்­தது என்­பது தொடர்பில் மக்கள் அச்­சத்­து­ட­னேயே உள்­ளனர்.

 

அர­நா­யக்க பகு­தியில் ஏற்­பட்ட மண்­ச­ரிவில் 66 வீடுகள் முற்­றாக மண்ணில் புதை­யுண்­டுள்­ளன.

 

அர­நா­யக்க மாவ­னெல்ல அர­நா­யக்க பகு­தியில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை காலை மாலை ஏற்­பட்ட பாரிய மண்­ச­ரிவில்  மூன்று கிரா­மங்­களின் 220 க்கும் மேற்­பட்ட வீடுகள் சேத­ம­டைந்­த­துடன் மண்­ச­ரிவில் சிக்­கிய 1100 க்கும் மேற்­பட்டோர்  பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

 

சிரி­புர எலங்­க­பிட்­டிய மற்றும் பல்­லே­பாகே  ஆகிய கிரா­மங்­களே இவ்­வாறு மண்­ச­ரி­வினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. சாம­புர என்ற மலை­யி­லி­ருந்து இவ்­வாறு மூன்று கிரா­மங்­களின் மீது  மண்­ச­ரிவு ஏற்­பட்­டது.

 

மண்ணில் புதை­யுண்­ட­வர்­களில் இது­வரை  17 பேரின் சட­லங்கள் மீட்­கப்­பட்­டுள்­ளன.

 

இந்­நி­லையில் பாது­காப்­பாக மீட்­கப்­பட்ட 1100 க்கும் மேற்­பட்டோர் ஆறு தற்­கா­லிக முகாம்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

 

இந்­நி­லையில் அர­நா­யக்க பகு­தியில் தொடர்ச்­சி­யாக மழை பெய்­து­கொண்­டி­ருந்­த­மை­யினால் மீட்பு பணியில் ஈடு­பட்டோர் பாரிய சிர­மங்­களை எதிர்­கொண்­டனர்.  

 

கேகாலை இரா­ணுவ முகா­மி­லுள்ள 260 க்கும் மேற்­பட்ட படை­யினர் மேஜர் ஜெனரல் காவிந்த குண­வர்த்­தன தலை­மையில் மீட்பு பணி­களில் ஈடு­பட்­டு­வ­ரு­கின்­றனர்.

 

இதே­வேளை அர­நா­யக்க மண்­ச­ரி­வினால் காணாமல் போன­வர்­களை மீட்கும் பணிகள் தொடர்ந்து இடம்­பெற்­று­வ­ரு­வ­தாக இடர் முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது.

 

நேற்­றைய தினமும் இப்­ப­கு­தியில் கடும் மழை பெய்­வதால் மீட்பு பணி­யா­ளர்­க­ளுக்கு அங்கு செல்­வ­தி­லேயே சிர­மங்­களை எதிர்­நோக்­கி­யி­ருந்­தனர்.

 

எனினும் பல்­வேறு சிர­மங்­க­ளுக்கு மத்­தியில் இரா­ணு­வத்­தினர் அப்­ப­கு­தியில் மீட்புப் பணி­களை மேற்­கொண்­டுள்­ளனர். மேலும் சட­லங்கள் மீட்­கப்­ப­டலாம் என  அஞ்­சப்­ப­டு­கின்­றது.

 

அத்­துடன் நேற்­றைய தினமும் அர­நா­யக்க பிர­தே­சமே  சோக­ம­ய­மாகி காணப்­பட்­டது. அருகில் உள்ள பிர­தே­சங்­களின் மக்­களும் மண்­ச­ரிவு ஏற்­பட்ட பகு­தி­க­ளுக்கு வருகை தந்­த­மை­யினால் மீட்பு பணி­க­ளுக்கு இடை­யூறு நேற்­றைய தினம் ஏற்­பட்­டி­ருந்­தது.  

 

தொடர்ந்தும் சாம­புர மலை­யி­ருந்து நீர் மற்றும் கற்­களும்  மண் திட்­டு­களும் வந்­து­கொண்­டி­ருப்­பதால் மீட்பு பணிகள் கடும் சவா­லுக்கு உட்­பட்­டுள்­ளன. மீட்பு பணி­களில் ஈடு­பட்­டுள்ள இரா­ணு­வத்­தினர் கடும்  சிர­ம­ரங்­களை எதிர்­கொண்ட வண்­ணமே   தமது நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

 

இதே­வேளை  விமானப் படை­யினர் நேற்­றைய தினம் குறித்த பிர­தே­சத்தை ஹெலி­கப்டர் மூலம் கண்­கா­ணித்­தி­ருந்­தனர்.  அத­ன­டிப்­ப­டையில் மீட்பு பணிகள் இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன.

 

அனர்த்­தங்­களில் பாதிக்­கப்­பட்­டோரின்எண்­ணிக்கை 4 இலட்­சத்தை கடந்­தது வௌ்ளப்­பெ­ருக்கு மற்றும் மண்­ச­ரி­வு­க­ளினால் நேற்று வரை  98,076 குடும்­பங்­களை சேர்ந்த 4 இலட்­சத்து 14 ஆயி­ரத்து 627 பேர் மோச­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அத்­துடன் உயி­ரி­ழப்­புகள் எண்­ணிக்கை 56 பேர் வரை அதி­க­ரித்­துள்­ளன. மேலும்  134 க்கும் மேற்­பட்­டோரை காண­வில்லை. 3 இலட்­சத்து 6 ஆயி­ரத்து 773 க்கும் அதி­க­மானோர் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர்.

 

இதன்­பி­ர­காரம் இடம்­பெ­யந்­துள்ள 61 ஆயி­ரத்து 382 குடும்­பங்கள் சுமார் 594 முகாம்­களில் பாது­காப்­பாக தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

 

அத்­துடன் மண்­ச­ரிவு இ வௌ்ளபெ­ருக்கு மற்றும் காற்­றினால் 3200 வீடுகள் முழு­மை­யாக சேத­ம­டைந்­துள்­ள­தாக அனர்த்­தக முகா­மைத்­துவ மத்­திய நிலையம் அறி­வித்­துள்­ளது.

 

இதே­வேளை நேற்­றைய தினத்தின் போதும் களினி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்திருந்தது.

 

குறிப்பாக மலையக பிரதேசங்களில் பொழிகின்ற மழை நீர் அனைத்தும் களனி கங்கைக்கே ஒன்று சேருவதன் விளைவாக களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்தது.

 

இதனால் களனி, நவகம்புர, வெல்லம்பிட்டி, அவிசாவளை, ஹங்வெல்ல மற்றும் பேலியகொட ஆகிய பகுதிகளுக்கே பாதிப்புகள் ஏற்பட்டன.

 

இதற்கு அப்பால் நேற்றைய தினம் கொழும்பு நகரில் இடைக்கிடையே மழை பெய்த போதிலும் பாரியளவில் தாக்கம் ஏற்படவில்லை.

 

இருந்த போதிலும் வெல்லம்பிட்டி, களனி, அவிசாவளை உள்ளிட்ட பகுதிகளில் நீர் வடிந்தோடவில்லை. இதன்காரணமாக மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=16740#sthash.WGIo4Ly0.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

அனர்த்தங்களைப் பற்றி அறியும்போது மனம் கவலைகொண்டு வருந்துவது இயல்பானது. ஆனால் இப்போது முள்ளிவாய்க்கால் நினைவுகள் மனதைக் கல்லாக்கிவிட்டது. மண்சரிவு என்றதும் அந்த அவலத்தை எண்ணி மனம் பதைபதைப்பதை விட்டு, தங்கள் உயிர்காக்க பங்கருக்குள் பதுங்கியிருந்த முதியோர் முதல் பாலகர்கள்வரையான அப்பாவித் தமிழர்களை புல்டோசர் கொண்டு மண்போட்டு மூடி அதன்மேல் றோட்டுப்போட்ட சிங்கள இராணுவமே நினைவுக்கு வருகிறது.
 

  • கருத்துக்கள உறவுகள்

அரசன் அன்று கொல்வான்.. தெய்வம் நின்று கொல்லும்.. என்று சொல்வார்கள். அது உண்மையோ.. பொயோ.. ஆனால்..

செய்த அநியாயங்களுக்கு இந்த மானுட உலகம் பக்கச் சார்புகள் சுய ஆதாயங்கள் பார்த்து..  தீர்ப்பெழுத மறக்கலாம்.. ஆனால்.. இயற்கை எழுதும். காரணம் அநியாயம் செய்தவனும் மனிதன் அந்த அநியாயத்துக்குப் பலியானதும் மனிதன். 

எதுஎப்படியோ.. இந்த மனிதர்களின் அழிவில் கண்ணீர் சிந்த முடியவில்லை. ஆனால்.. இரக்கப்படவும் வருந்தவும் முடிகிறது. காரணம்.. நாமும் மனிதர்களே..! 

இந்த மக்கள் அவர்களின் துன்பங்களில் இருந்து மீளப் பிரார்த்திப்போமாக. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.