Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இடப்பெயர்வு தான் எங்கள் வாழ்வோ...? மழையால் சிதைந்த இலங்கை

Featured Replies

இடப்பெயர்வு தான் எங்கள் வாழ்வோ...? மழையால் சிதைந்த இலங்கை

sri-lanka-1.jpg

ங்கு நாம் அனைவரும் தேர்தல் முடிவுகளுக்காக காத்திருந்தபோது, அங்கே மக்கள் வீட்டு கூரைகளின் மீது ஏறி,  படகுகளுக்காக காத்திருந்தனர். இங்கு நாம் அனைவரும் தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, அங்கே மக்கள் காணாமல்போன தம் பிள்ளைகளை தேடிக் கொண்டிருந்தனர். மீண்டும் ஒரு முறை அந்த தீவுத் தேசம் சிதைந்து போய் இருக்கிறது. இம்முறை மனிதர்களுக்கிடையேயான தாக்குதலால் அல்ல. இயற்கை ஒரு பெரும் யுத்தத்தை அம்மண்ணின் மீது நிகழ்த்தி இருக்கிறது. கடந்த ஒரு வாரமாக பெய்த பெரும் மழைக்கு, ஏறத்தாழ 155 பேரை காணவில்லை என்று அரசு தரும் புள்ளி விவரங்களே சொல்கின்றன. இன்னும் ஆங்காங்கே மழை கொட்டி தீர்த்து கொண்டுதான் இருக்கின்றது.

5 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்:

கடும் மழைக்கு,  இதுவரை 60 பேர் இறந்துள்ளனர். ஐந்து லட்சம் பேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர். ஆனால்,  இப்போது பாதுகாப்பான இடமென்றே ஒன்று அங்கில்லை  என்பதுதான் பெருந்துயர். மே 15 மற்றும் 16 ஆகிய இரண்டு தினங்களில் மட்டும், 100 மிமீ பெய்த மழையால், தீவு தேசத்தின் தென் பகுதி மோசமாக பாதிப்படைந்துள்ளது.

sri-lanka1.jpg

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, “ஏறத்தாழ 5 லட்சம் மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறி உள்ளனர். நாங்கள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறோம்” என்று சொல்லியுள்ளார்.

இவை எல்லாவற்றையும்விட  பெரும் துயர், மீட்பு பணியில் காணப்படும் தொய்வுதான். “எந்த விதமான நவீன தொழிற்நுட்பங்களும் இல்லாமல், நாங்கள் வெறும் கைகளால் குழி தோண்டி, மண் சரிவில் மாட்டிய மக்களை மீட்டு வருகிறோம்...” என்கின்றனர் செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்தவர்கள்.

flood.jpg

நூற்றுக்கணக்கானோர்  மண் சரிவில் சிக்கி உள்ளனர்.  “மண் சரிவில் சிக்கியவர்கள், இன்னும்  உயிரோடு இருப்பார்கள் என்கிற நம்பிக்கை போய்விட்டது” என்கிறார் மீட்பு பணிகளுக்கு பொறுப்பாளரான மேஜர் சுனந்தா ரணசிங்கே.

“எங்களால் இயன்ற அளவிற்கு மக்களை நிலச்சரிவிலிருந்து மீட்க முயற்சித்து வருகிறோம். சில பகுதிகளில் 30 அடி வரை குழி தோண்டி மக்களை மீட்டுள்ளோம்” என்கிறார் அவர்.

landslide.jpeg

வட பகுதியில் மட்டுமல்ல, போரால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளான தென்பகுதியும் மிக மோசமான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. முல்லைத்தீவில் மட்டும், ஒரே நாளில் 373 மிமீ மழை பதிவாகி உள்ளது. இது,  அந்த பகுதியில் ஒரு ஆண்டில் பெய்யும் மழை அளவில் நான்கில் ஒருபகுதி என்கின்றனர் பேரிடர் மேலாண்மை மையத்தை (Disaster Management Centre) சேர்ந்தவர்கள்.

இலங்கையில் மொத்தமுள்ள  25 மாவட்டங்களில், 9 மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன என்கிறார் பேரிடர் மேலாண்மை மையத்தை சேர்ந்த பிரதீப்.

நிலச்சரிவு புதிதல்ல:

நிலச்சரிவு இலங்கையில் தொடர்கதையாகி வருகிறது. போருக்கு பின், அங்கு வெகு வேகமாக காடுகள் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. இதன் காரணமாகதான் அங்கு நிலச்சரிவு ஏற்படுகிறது. 2014 ம் ஆண்டு பெய்த கனமழையில்,  நிலச்சரிவில் சிக்கி பத்துக்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் இறந்துள்ளனர்.

உலகத்தின் உதவியை எதிர்நோக்கி நிற்கிறது:

இந்தியா, இரண்டு கப்பல் மற்றும் ஒரு போர் விமானம் முழுவதும் உதவி பொருட்களை  அனுப்பி உள்ளது. ஆனால், இது போதுமானதாக இல்லை. இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா, “உலக நாடுகள் சில உதவிகளை வழங்கி உள்ளன. ஆனால், இது நிச்சயம் போதாது. இந்த பெருந்துயரிலிருந்து மீள, மக்கள் மனம் உவந்து தாரளமாக நிதி அளிக்க வேண்டும்...” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

நீளட்டும் உதவிக்கரங்கள்!

http://www.vikatan.com/news/world/64429-heavy-rain-and-landslides-cause-havoc-in-sri-lanka.art

 

  • கருத்துக்கள உறவுகள்

50 ஆண்டுக்கு மேலாக எமது இனம் நாதியற்று திரிகிறோம்....அண்மையாக் 7 ஆண்டுகளாக அடிமையஐ இடம்பெயர்ந்து திரிகிறோம்..இவ்வேளை பட்டாசு விடித்து பால் சோறு தின்றவர்களுக்கு ....அந்த அப்பாவிகளின் கண்ணீருக்கு ஆண்டவன் கொடுத்த தண்டனை....இதை எழுதுவதில் நான் சிறிதும் வேதனை அடையவில்லை......ஏனெனில் இதைவிட கூடிய தண்டனை கிடைக்கவில்லையே எனெ இறைவனை நோகின்றேன்...

4 hours ago, alvayan said:

50 ஆண்டுக்கு மேலாக எமது இனம் நாதியற்று திரிகிறோம்....அண்மையாக் 7 ஆண்டுகளாக அடிமையஐ இடம்பெயர்ந்து திரிகிறோம்..இவ்வேளை பட்டாசு விடித்து பால் சோறு தின்றவர்களுக்கு ....அந்த அப்பாவிகளின் கண்ணீருக்கு ஆண்டவன் கொடுத்த தண்டனை....இதை எழுதுவதில் நான் சிறிதும் வேதனை அடையவில்லை......ஏனெனில் இதைவிட கூடிய தண்டனை கிடைக்கவில்லையே எனெ இறைவனை நோகின்றேன்...

யான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்.

இதுதான் தங்களது தார்மீக நெறிப்பாடா?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெரியார் said:

யான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்.

இதுதான் தங்களது தார்மீக நெறிப்பாடா?

இல்லை அப்பவாவது தமிழர்பட்ட கஸ்ரங்களை ரசித்தவர்கள் உணர்ந்து கொள்ளமாட்டார்களா? என்கின்ற ஏக்கம் என நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

இல்லை அப்பவாவது தமிழர்பட்ட கஸ்ரங்களை ரசித்தவர்கள் உணர்ந்து கொள்ளமாட்டார்களா? என்கின்ற ஏக்கம் என நினைக்கிறேன். 

இதுதான் உண்மை....மனிதாபிமானம் என்பது மனிதன் மேல்தான் ஏற்படும்....  மேலல்ல.....தினமும் கிடைக்கும் வலிகள் மறக்க முடியாதவை......நன்றி stan

நேரடிச் சாட்சியான வைத்தியர் வரதராசாவின் பேச்சை கேட்டபின் இந்த இடப்பெயர்வும் அகதிவாழ்க்கையும் கடவுளின் சின்ன தாலாட்டு மாதிரி...

Edited by alvayan
எழுத்துப்பிழை

6 hours ago, satan said:

இல்லை அப்பவாவது தமிழர்பட்ட கஸ்ரங்களை ரசித்தவர்கள் உணர்ந்து கொள்ளமாட்டார்களா? என்கின்ற ஏக்கம் என நினைக்கிறேன். 

யத்த காலங்களில் ஒரு சமூகம் படும் கஷ்டங்களை, இன்னொரு  சமூகம் வேடிக்கை பார்ப்பது சகஜமாகப் போய்விட்டது.

தமிழ், சிங்கள மீடியாக்களில் ஒரு  சமூகம் படும் கஷ்டங்களை இன்னொரு சமூகம் ரசிப்பதைப் போன்றுதான் காட்டுகிறார்கள்.

இவைகளை மிஞ்சிய மனிதாபிமானம் நம்மிடம் இருக்க வேண்டும் என்பதை நாம்தான் எம் உள்ளங்களில் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.