Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'கொழும்பின் நடவடிக்கைகள் நல்லிணக்கம் அல்ல'

Featured Replies


'கொழும்பின் நடவடிக்கைகள் நல்லிணக்கம் அல்ல'
 

article_1462532446-index1.jpg-சொர்ணகுமார் சொரூபன்

'நல்லிணக்கத்துக்கான நடவடிக்கை எடுக்கப்படுவது உண்மை. ஆனால் அது, கொழும்பில் இருந்தே எடுக்கப்படுகிறது. அது தொடர்பில்  என்னுடன் கலந்துரையாடப்படுவதில்லை. நல்லிணக்கம் பற்றி பேசும் போது, பாதிக்கபட்டவர்களின் மனநிலை அறிந்து அவர்களின் தேவை என்ன என அறிந்து அதன் பின்னர் கொண்டுவருவதே நல்லிணக்கம். அதை விட்டுவிட்டு கொழும்பில் இருந்து நடவடிக்கை எடுப்பது நல்லிணக்கம் இல்லை' என, நோர்வே நாட்டின் வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளர் டோர் ஹாட்றெனிடம் தான் தெரிவித்ததாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு இன்று புதன்கிழமை (01) விஜயம் மேற்கொண்ட நோர்வே நாட்டின் வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளர், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை, கைதடியில் உள்ள முதலமைச்சரின் செயலகத்தில் சந்தித்தார். இச்சந்திப்பின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறியதாவது,

'இலங்கையில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்கம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு முழுமையான உதவிகளை தாம் செய்யவுள்ளதாக என்னிடம் தெரிவித்த இராஜாங்கச் செயலாளர், அது தொடர்பில் என்னுடைய கருத்தையும் கேட்டறிந்தார்.
நிலங்களை இழந்த மயிலிட்டி மக்கள், மீள்குடியேறுவதற்கு காத்திருக்கும் இச்சமயத்தில், அதனை விடுவிக்க முடியாது என இராணுவம் கூறுவது அநியாயம். போர் முடிந்து 7 வருடங்கள் ஆகின்ற நிலையில், மயிலிட்டி பகுதியை விடாமல் இருப்பது பிழை எனவும் நான் அவரிடம் கூறினேன். காரணங்களை நொண்டி சாட்டாகக் கூறி, நிலங்களை விடாமல் இருப்பது பிழை என்பதையும் சுட்டிக்காட்டினேன். இவை அனைத்தையும் தான் அறிவதாகவும், தான் இதற்கு முன்பு தூதுவராக இருந்த போது இவ்வாறான பல விடயங்களை அவதானித்ததாகவும் நோர்வேஇராஜாங்க செயலாளர் கூறினார்.

தாம் முடிந்த வரை இருவருக்கும் இடையில் நல்லிணக்கத்தினை கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாகவும் இது தொடர்பில் பலருடன் பேசி எவ்வாறு நல்லிணக்கத்துக்கான செயற்திட்டதை வகுக்க உடந்தையாக இருப்பதாகவும் இராஜாங்க செயலாளர் கூறினார்.

சமஸ்டி தீர்வு தொடர்பாக, சிங்கள மக்கள் மத்தியில் பிழையான ஒரு விளக்கம் உள்ளது. அவர்கள் சமஸ்டி என்பதை பிரிவினை என பார்க்கிறார்கள். அதை அவர்களுக்கு விளக்க வேண்டிய அவசியம் சிங்கள அரசியல் தலைமைகளுக்கு உண்டு. எம்மில் சிங்களம் தெரிந்த நான்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் இது சார்ந்த விளக்கத்தினை எடுத்துரைப்போம். அதன் அவசியம் எமக்கும் உள்ளது. ஏனென்றால், ஒரு தீர்வை அடையாளப்படுத்தி மக்கள் தீர்ப்புக்காக விடும்போது அதற்கு எதிராக மக்கள் வாக்களிக்க கூடும்' எனவும் இராஜாங்க செயலாளரிடம் கூறியதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/173597/-க-ழ-ம-ப-ன-நடவட-க-க-கள-நல-ல-ணக-கம-அல-ல-#sthash.BGbgzuW3.dpuf

11076_content_norway_vickneswaran_thinak


நல்லிணக்கம் என்பது பேச்சளவில் மட்டுமே தென்னிலங்கையில்  இருக்கின்றது. அதேநேரம் நல்லிணக்கம் தொடர்பில் எம்முடன் கலந்தாலோசிக்காமல் கொழும்பிலிருந்தே முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனால் உண்மையான நல்லிணக்கத்தை ஒரு போதும் ஏற்படுத்த முடியாது.


இங்கு பாதிக்கப்பட்டவர்களையும் பாதிப்பிற்கு அவர்களை உள்ளாக்கியவர்களையும் ஒருங்கிணைத்து பாதிக்கப்பட்டவர்களின் மனோ நிலையை அல்லது எதிர்பார்ப்புக்களை அறிந்து கொண்டு செயற்பட்டாலே உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.  இவ்வாறு நோர்வே இராஜாங்க செயலாளரிடம் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.


யாழ்ப்பாணத்திற்கு நேற்று புதன்கிழமை காலை விஜயம் மேற்கொண்ட நோர்வே இராஜாங்க செயலாளர் டொரே ஹெட்ரம் கைதடியிலுள்ள முதலமைச்சர் செயலகத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்பின் சந்திப்புத் தொடர்பாக முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்;


நோர்வே நாட்டினுடைய இராஜாங்க அமைச்சர் இன்று எங்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். அவர் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கான தூதுவராக முன்னர் இருந்தவர். அவரை எங்களுக்குத் தெரியும். அவர் இங்கு நல்லிணக்கத்திற்கான பல நடவடிக்கைகள் எடுக்கப்படுவதையும் அதற்கு நோர்வே அரசாங்கம் பல விதமான உதவிகளை வழங்கி வருவதையும் குறிப்பிட்டு என்னுடைய  கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டார்.


மேற்படி நல்லிணக்கம் சம்பந்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது உண்மையென்றும் இங்கு அவ்வாறு நல்லிணக்க முயற்சிகள் எடுக்கப்படும் போது கொழும்பிலிருந்தே அத்தகைய நல்லிணக்கம் எடுக்கப்படுவதாகவும் எம்முடன் கலந்தாலோசித்து நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதனையும் நான் அவர்களுக்கு எடுத்துக் கூறினேன்.


நல்லிணக்கத்திற்கான விடயமென்பது பாதிக்கப்பட்டவர்களையும் பாதிப்பிற்கு அவர்களை உள்ளாக்கியவர்களையும் ஒருங்கிணைத்துப் பேசும் போது பாதிக்கப்பட்டவர்களுடைய மனோ நிலையை அல்லது அவர்களுடைய எதிர்பார்ப்புக்களை, வேண்டுதல்களை எல்லாம் அறிந்து தான் நல்லிணக்கத்தைக் கொண்டுவரலாம். 


அவ்வாறு அல்லாமல் கொழும்பிலிருந்து கொண்டு நல்லிணக்கத்திற்கு நாங்கள் அதைச் செய்கின்றோம், இதைச் செய்கின்றோம் என்றால் அவ்வாறான நடவடிக்கைகள் நல்லிணக்கத்தைக் கொண்டுவரமாட்டாது என்பதே என்னுடைய கருத்து என்பதையும் நான் அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்.


இது சம்பந்தமாக பல விடயங்களையும் நான் எடுத்துக் குறிப்பிட்டேன். இதற்கு உதாரணமாக ஊடகங்களில் வெளியாகிய செய்திகளின் அடிப்படையில் மயிலிட்டியை விடுவிக்க இராணுவம் எதிர்ப்பு என்ற விடயத்தை பிரதானமாக குறிப்பிட்டிருந்தேன். அதாவது பல வருடங்களாக தமது இடங்களை விட்டு வெளியேறி வாழ்வாதாரங்களை இழந்த மயிலிட்டி மக்கள் தமது சொந்த இடங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற போது மயிலிட்டியை விடுவிக்க முடியாது என்று கூறுவது அநியாயமான செயல் என்று கூறினேன்.


முன்னரெல்லாம் தெற்கிலே மிரிச வடக்கிலே மயிலிட்டி. இவை இரண்டும் இயற்கையான துறைமுகங்களைக் கொண்டவை. அதாவது மிகப் பெரிய மீன்பிடித் துறைமுகங்களைக் கொண்டவையாக இந்த இரண்டும் காணப்பட்டன. அதில் வடக்கில் இருக்கும் மயிலிட்டி நாட்டில் இருக்கும் மீன் தேவைகளில் முன்றில் ஒரு பகுதியை அவர்கள் கொடுத்து வந்திருந்தனர்.

அப்படிப்பட்ட ஒரு துறைமுகத்தை மூடி விடுவது அல்லது மூடி வைத்திருப்பது எப்படி எவ்வளவு பிழையான செயலென்பதையும் எடுத்துக் காட்டி அதற்காக பத்திரிகை வாயிலாக குறிப்பிட்ட காரணத்தையும் எடுத்துக் கூறியிருந்தேன்.


அதிலே குறிப்பிடப்பட்டிருப்பதானது முன்னரெல்லாம் போர் விமானங்கள் போகும் பொழுது மயிலிட்டியில் இருந்து தான் அவற்றைக் கீழே விழுத்துவதற்கு சுடப்பட்டதாக. ஆனால் நான் இவர்களுக்கு கூறினேன் இன்றைக்கு யுத்தம் முடிவடைந்து ஏழு வருடங்களாகிவிட்ட நிலையிலும் அதனையொரு காரணம் காட்டி மயிலிட்டியை தொடர்ந்தும் விடாமலிருப்பது தவறான செயலென்றும் சுட்டிக்காட்டியிருந்தேன்.


இவ்வாறு தான் மற்றைய பல விடயங்களிலும் ஏதோவொரு காரணங்களை 
சாட்டாக  சொல்லி எங்களுடைய காணிகளை விடுவிக்காதிருப்பது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கூறினேன். அவர் இதுபற்றி தங்களுக்கு எல்லாம் தெரியுமென்று குறிப்பிட்டார். ஏன் என்றால் தான் தூதுவராக இருந்த காலத்தில் இங்குள்ள பலதையும் அறிந்தும் படித்தும் வைத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.


இதேவேளை எங்கள் சம்பந்தமான சகல அறிவுகளும் அவரிடம் இருக்கின்றது. அதாவது கடந்த காலங்களில்  விடுதலைப் புலிகளுடனும் அரசாங்கத்துடனும் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்தவர்கள் நோர்வேயினர் என்ற விதத்திலே அவர்கள் எங்கள் சம்பந்தமாக மிகக்கரிசனையுடைய மனோநிலையைக் கொண்டிருக்கின்றார்கள்.

முடிந்தளவுக்கு  தங்களால்  முடிந்தளவில் இருதரப்பிற்குமிடையே சுமுகமான நல்லிணக்கத்தைக் கொண்டு வரக்கூடிய சுற்றாடலை ஏற்படுத்த கடமைப்பட்டவர்கள் என்றும் அதற்குரிய வழியை ஏற்படுத்துவார்கள் என்றும் எங்களுக்கு உறுதிமொழியை வழங்கியிருக்கின்றார்கள். 


இதேபோன்று தொடர்ந்து எல்லோருடனும் பேசி வருவதாகவும் தெரிவித்தனர். இங்கும் பலரையும் சந்திக்க உள்ளதாகவும் கொழும்பிலும் பலரைச் சந்தித்துக் கலந்துரையாடியதாகவும் குறிப்பிட்டிருந்தார். எல்லோருடைய கருத்துக்களையும் அறிந்து எவ்வாறு நல்லிணக்கத்திற்கான செயற்திட்டத்தை வகுக்க வேண்டும், எவ்வாறு முன்செல்ல வேண்டும் என்பது சம்பந்தமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தாங்கள் ஆதரவாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.


இன்னுமொரு விடயத்தையும் நான் அவர்களுக்கு எடுத்துக் கூறினேன். அதாவது
 சிங்கள மக்கள் மனதிலே சமஷ்டி என்பது பிரிவினைக்கு ஒப்பாகும் அல்லது பிரிவினை தான் என்றதொரு கருத்து இருக்கின்றதையும் எடுத்துக் காட்டி இதுவொரு பிழையான கருத்தென்றும் நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கக் கூடிய கட்டமைப்பு அதாவது அரசியல் கட்டமைப்பு சமஷ்டி தான் என்றும் அதனை சிங்கள மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டிய அவசியம் சிங்களத் தலைவர்களுக்கு இருக்கிறதென்றும் குறிப்பிட்டேன். அதே நேரம் எங்கள் கூட்டமைப்பில் என்னையும் சுமந்திரனையும்  சம்பந்தனையும் தவிர மற்றவர்களுக்கு சிங்களத்திலே பேசக் கூடியதாக  இருக்கிறதோ என்று எனக்குத் தெரியாது. 


எங்களால் முடிந்தளவிற்கு நாங்கள் சிங்கள மக்களுக்கு இதனை எடுத்துக் கூறுவோம் என்றும் ஆகவே இதனை சிங்கள மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டியதன் அவசியம் இருக்கிறதென்றும் அப்படி இல்லை என்றால் ஒரு தீர்வை நாங்கள் அடையாளப்படுத்திக் கொண்டு செல்கின்ற போது அது மக்கள் தீர்ப்பிற்கு விடப்படும் போது மக்கள் எப்படியாவது இது அதாவது சமஷ்டி பிரிவினைக்கு ஒப்பானது என்ற அடிப்படையிலே சமஷ்டிக்கு எதிராக வாக்களிக்கக் கூடும் என்ற கருத்து பரவலாக இருப்பதால் அதற்கு ஏற்றவாறான நடவடிக்கைகளை நாங்கள் இப்போதிருந்தே எடுத்து மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று நான் கூறினேன்.

அதனை அவரும் ஏற்றுக் கொண்டார். இது சம்பந்தமாக சிங்களத் தலைவர்களோடு பேசுவதாகவும் இராஜாங்கச் செயலாளர் குறிப்பிட்டுச் சென்றார் என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

http://www.thinakkural.lk/article.php?local/gbqqmw8tbv8635b9937273f228346phsydb46912b56d09c8faa7da23sqpmh#sthash.nkxbVUep.dpuf

தானறிந்த உண்மைகளை மறைக்காது வெளிப்படையாக கதைத்து வரும்  வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் பாராட்டுக்கு உரியவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.