Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

16 வயதுக்குள் 300இற்கும் அதிகமான நிகழ்ச்சிகளில் நாதஸ்வரம் வாசித்த அரிஹரசுதன்

Featured Replies

16 வயதுக்குள் 300இற்கும் அதிகமான நிகழ்ச்சிகளில் நாதஸ்வரம் வாசித்த அரிஹரசுதன்
 

(சிலாபம் திண்­ண­னூரான்)

 

“உங்­க­ளிடம் இருக்கும் சக்­தியை முயற்­சியின் ஊடாக செயல்­ப­டுத்­தினால் அது முற்றுப்பெறும். அந்த சக்­திக்கு அடிப்­ப­டை­யாக இருப்­பது முயற்­சியின் மூலக்­கூறு. அதையே துணிவு என்­கிறோம்.

 

157DSCF2939.jpg

 

துணிவு இருந்­தாலே போதும். அதுவே இந்த உல­கத்தை சிறி­தாகக் காட்டும். தாழ்வு மற்றும் அச்­சத்­துக்கு தளர்வு கொடுங்கள். அப்­போது துணிவு பிறந்­து­விடும்” என்­கிறார் நாதஸ்­வர கலைஞர் என். அரி­ஹ­ர­சுதன்.

 

ஒரு திரு­மண நிகழ்வின் சுதன் நாதஸ்­வர இசைக்­க­ரு­வியை தன் வாயில் வைத்து, தன் இரு கைகளின் விரல்­க­ளையும் நாதஸ்­வ­ரத்தின் துளை­களில் அங்கும் இங்கும் பாய வைத்து, நாதஸ்­வர ஓசையை வெளியே கக்கிக் கொண்­டி­ருந்தார். அந்த நேரத்­தி­லேயே எமக்கு சுதனின் அறி­முகம் கிடைத்­தது.

 

முதலில் உங்­க­ளுக்கு எத்­தனை வயது எனக் கேட்­டதும் மெல்­லிய புன்­ன­கை­யோடு “பதி­னாறு” என சிக்­க­னமாய் பதிலை கொடுத்தார். உண்­மை­யி­லேயே அவரின் வயதை அவரின் முகம் அடை­யா­ளப்­ப­டுத்­தி­யது.

 

“நான் தனியார் பாட­சா­லை­யொன்றில் ஆங்­கில மொழி மூல­மான கல்­வியை கற்று வரு­கின்றேன். எனக்கு விபரம் தெரிந்த சின்­னஞ்­சிறு வயதில் எனது கைகளால் தாளம் போடு­வேனாம்.

 

எனது ஐந்து வயதில் நாதஸ்­வ­ரத்தை கையி­லெ­டுத்­துள்ளேன். என் உருவ உய­ரத்தை விட நாதஸ்­வ­ரத்தின் வருவம் அன்று பெரி­தாக இருந்­துள்­ளது.

 

157DSCF2944.jpgஅன்று எனது வாயில் வைத்து நாதஸ்­வ­ரத்தை வாசிக்க பெரும் சிர­மப்­பட்­டுள்ளேன்.

 

எனது அம்­மா தான் காலையும் மாலையும் ஒரு கையில் நாதஸ்­வ­ரத்தை தூக்கிக் கொண்டு மறுகையில் என் கையைப் ­பி­டித்துக் கொண்டு என் குரு­நாதர் வீட்­டுக்கு அழைத்துச் சென்­றுள்ளார்.

 

எனது குரு­நாதர் நாதஸ்வர வித்­துவான் ஆர்.மகேந்­திரன். இப்­போது என் 16 வயதில் 300 இற்கும் மேற்­பட்ட நிகழ்­வு­களில் நாதஸ்­வரம் வாசிக்க எனது குரு­நா­தரின் பயிற்­சியே முன்­நின்­கின்­றது.

 

அவ­ருக்கு என்றும் தலை­ வ­ணங்­கு­கிறேன்” என தன்னைப் பற்றி தெரி­வித்தார் சுதன்.

 

“எனது ஆறு வயதில் கொழும்பில் முருகன் ஆலய திரு­வி­ழா­வொன்றில் முதன் முத­லாக பகி­ரங்­க­மாக பொது­மக்கள் முன்­னி­லையில் நாதஸ்­வரம் வாசித்தேன். நான் அன்­றைய தினம் பொது­மக்­க­ளுக்கு ஒரு பொம்­மை­யாக காட்­சி­ய­ளித்தேன். பலரும் என்னை புது­மை­யாக வேடிக்­கை­யாகப் பார்­வை­யிட்­டனர். 

 

இந்த வயதில் இப்­ப­டி­யொரு திற­மை­சா­லியா? வியப்­ப­டைந்த அந்த மக்கள் மனங்­களில் குடி­கொண்டேன்.

 

எனது அப்பா தவில் வித்­துவான். அவர் தன்­னுடன் நாதஸ்­வரம் வாசிக்க ஒருவர் இல்­லாது சிர­மப்­பட்டார். அவர் பெரும் முரு­க­ பக்தர். அப்பா எப்­போதும் தனக்கு ஒரு நாதஸ்­வர கலை­ஞரை வழங்கி உத­வு­மாறு முரு­க­னிடம் வேண்டிக் கொள்வார்.

 

அதன் எதி­ரொ­லி­யாக நான் நாதஸ்­வர கலை­ஞ­ராக உரு­வானேன். எனது அம்­மாவே பெரும் எதிர்­பார்ப்­புடன் எனது நாதஸ்­வர பயிற்­சிக்கு பெரும் அத்­தி­வா­ர­மாக விளங்­கி­யதை என்­றுமே என்னால் மறக்க இய­லாது” என்­ற­வரை தடுத்து கேள்வி அம்­பு­களை ஏவினோம். 

 

இது காலம்­வரை எத்­தனை நிகழ்­வு­களில் கலந்து கொண்­டுள்­ளீர்கள்?


பல்­வேறு வகை­க­ளி­லான நிகழ்ச்­சி­களில் இணைந்து எனது திற­மையை அடை­யா­ளப்­ப­டுத்தியுள்ளேன் எனது ஆறு­வ­யதில் ஆரம்­ப­மான இக் ­கலைப் பய­ணத்தில் சுமார் 300 இற்கும் மேற்­பட்ட நிகழ்ச்­சி­களில் நாதஸ்­வரம் வாசித்­துள்ளேன்.

 

2011 இல் அல­ரி­மா­ளிகை நிகழ்­வொன்­றிலும் இணைந்து எனது திற­மையை அடை­யாளம் காட்­டி­யுள்ளேன். அப்­போது எனக்கு வயது பதி­னொன்று.

 

அல­ரி­மா­ளிகை அதி­கா­ரிகள் அன்று அங்­கு­ வ­ருகை தந்­தி­ருந்த அர­சியல் வாதிகள் உள்­ளிட்ட அனை­வ­ரையும் பூபாளம் வாசித்து அவர்­களின் காது நரம்­பு­களைச் சுகப்­ப­டுத்தி அவர்­களின் இத­யத்­தையும் மென்­மை­யாக்கி அவர்­களை என்­ வசம் இழுத்­தெ­டுத்தேன்.

 

அதே ஆண்டு மலே­ஷி­யாவில் மூன்று மேடைக் கச்­சே­ரி­களில் நாதஸ்­வ­ரத்தை வாசித்து அனை­வ­ரையும் சொக்க வைத்தேன் என அவர் பதி­ல­ளித்தார்.

 

மீண்டும் அவரே பேச்சை தொடர்ந்தார். “தேர் ஏறி சுவாமி வீதிக்கு புறப்­ப­டு­கையில் மல்­லாரி ராகத்­தி­லேயே நாதஸ்­வ­ரத்தை வா­சிக்க வேண்டும்.

 

ஆனால், சிலர் ஆகம விதிகள் தெரி­யாது சினிமா பாடல்­களை பாடச் சொல்லி நச்­ச­ரிப்­பார்கள். எமது தொழில் தெய்­வீ­கத்­துடன் இணைந்­தது. அதற்­கென மதிப்பும், மரி­யா­தையும் உண்டு. பாரம்­ப­ரிய கட்­டுப்­பாட்டு விதி­களும் உண்டு. 

 

அடி வயிற்­றி­லி­ருந்து காற்றை இழுத்­தெ­டுத்து நாதஸ்­வர இசை­க் க­ரு­வியின் துவா­ரங்­களில் இரு கை விரல்­களை அங்கும் இங்கும் ஓட­வைத்து நாதஸ்­வர ஓசையை வெளியே இரா­கத்­தோடு கொண்டு வர­வேண்டும்.

 

சுரங்­களால் அசை­வுகள் உண்­டா­கி­றது. நாதஸ்­வர கரு­விக்குள் பல இரா­கங்கள் மறைந்­துள்­ளன.

 

அதை வெளியே கொண்­டு­வ­ரு­வது எமது கட­மை­யாகும். ஏழு சுரங்­களும் உள்­ளன. இவ்­வா­றான சுரங்­களை வெளியே படைப்­பது மிக எளி­தான விட­ய­மல்ல.

 

மற்­று­மொரு வித இசைக்­க­ரு­வி­யான மகுடி ஊதுகு­ழ­லா­னது நாகப்­பாம்பை வைத்து உழைக்கும் பாம்­பாட்­டிக்கு எவ்­வ­ளவு முக்­கி­யமோ அதே போன்று இறை­ப­ணியில் நாதஸ்­வ­ரமும், மேளமும் மிக­ முக்­கி­ய­மா­னது.

 

நாக­வ­ராளி பாடினால் நாகப் ­பாம்பும் படம் எடுத்து ஆடும்” என பல இர­க­சி­யங்­களை தெரி­விக்க நாமும் வியப்பில் அடி­பட்ட பாம்பாய் சுருண்டு போய்­விட்டோம். 

 

தேர் ஊர்­வலம் இடம்பெறு­கையில் ஏதும் விப­ரீ­தங்கள் ஏற்­ப­டுமா? என கொக்­கியைப் போட்டோம்.

“ஆமாம். தேர் ஊர்­வலம் இடம் பெறு­கையில் சுவா­மி­க­ளுக்கு முன்னாள் கச்­சேரி இடம்­பெறும். ஊர்­வலம் பல மைல்­க­ளுக்கு அப்­பாலும் இடம்­பெறும். இவ்­வா­றான நேரத்தில் கூட்­டத்­தினர் அங்கும் இங்கும் என் மீது மோது­வார்கள்.

 

இவ்­வாறு ஊர்­வ­லங்­களில் மக்கள் நாதஸ்­வ­ரத்தில் மோது­கையில் நாதஸ்­வ­ரத்தின் சீவாளி உதட்டில் குத்தி உதடு வெடிக்கும். அல்­லது காயம் ஏற்­படும். இது பல­ருக்குத் தெரி­யாது.

 

இடித்­த­வர்கள் “சொரி” என சொல்லி விட்டு கூட்­டத்­தோடு கூட்­ட­மாக நகர்ந்து விடு­வார்கள். நான் படும் வேதனை எனக்குத் தான் தெரியும்” எனக் கூறினார் அரி­ஹ­ர­சுதன்.

 

சீவாளி எனப்­ப­டு­வது என்ன? 

“நாதஸ்­வ­ரத்தில் பழுப்­பான வெள்ளை நிறத்தில் பல சீவா­ளிகள் தொங்கும். இது புல்லால் தயா­ரிக்­கப்­ப­டு­கி­றது. சீவா­ளியே நாதஸ்­வ­ரத்தின் ஒலிக்கு உயிர் கொடுக்­கின்­றது. நாதஸ்­வர ஓசையின் உயிர்­நா­டியே சீவா­ளி­யாகும்.

 

உங்­களின் எதிர்­கால நோக்கம் எவ்­வாறு? 

இன்று தமிழன் கண்­டு­பி­டித்த பல இசைக்­க­ரு­விகள் கணி­னி­யோடு முடங்கி அதன் பெருமை அழிக்­கப்­பட்டு விட்­டது.

 

அன்று தமிழன் கண்­டு­பி­டித்த இசைக்­க­ரு­விகள் அனைத்தும் வாழ்க்­கை­யோடு இணைந்­தி­ருந்­தன. எதையும் கால­வே­கத்தில் தொலைக்­கலாம். தமி­ழனின் கலை, கலா­சா­ரத்தை தொலைக்க இய­லாது. 

 

அதைப் பாது­காக்க வேண்­டிய கட்­டாயம் இன்­றைய  இளம் சமூ­கத்­திற்கு உள்­ளது. இன்று கணனி மூல­மாக தவிலும் நாதஸ்­வர இசை­யையும் கொண்டு வர இய­லாத உள்­ளது.

 

நான் இன்னும் இத்­ து­றையில் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். கற்றல் மூலமே சாத­னை­களை முன்னெக்கலாம். ஆங்­கில மொழி கற்றல் கூட எனக்கு பெரும் உத­வி­யாக உள்­ளது.

 

நாதஸ்­வரம், தவில் கலையை மேலைத்தேய நாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

 

இது தெய்வீகக் கலை இன்று தமிழகத்தில் பல ஆங்கிலேயர்கள் இக் கலையைக் கற்று வருகின்றனர்.

 

இந்து மதத்தினர் இக் கலையைக் கற்றுக் கொள்ளவேண்டும். இதற்கு ஆலயங்கள் முன்வர வேண்டும் என ஒரு போடு போட்டார் சுதன்.  

 

இவரின் முயற்சிகள் வெற்றி பெற வேண்டும் உங்களைப் போன்ற இளைஞர்கள் இன்றைய சமூகத்துக்கு உதாரணமாக வாழ்வதற்கும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து அவரிடமிருந்து விடை பெற்றோம்.

 

சுதன் தனது வாயில் நாதஸ்வர இசைக் கருவியை வைத்து எழுப்பிய நாதஸ்வர ஓசை அந்த மேடையில் மீண்டும் ஒலித்து எம்மை வியப் பில் ஆழ்த்தியது. 

- See more at: http://www.metronews.lk/feature.php?feature=157&display=0#sthash.iqn1YUmV.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்...! பகிர்வுக்கு நன்றி நவீனன்....!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.