Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையை ஆராய பிரதமருக்கு இதுவரையில் கூட்டத்தினை கூட்டமுடியாமல்போன காரணம் என்ன?:கேட்கிறார் வியாழேந்திரன்

Featured Replies

தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையை ஆராய பிரதமருக்கு இதுவரையில் கூட்டத்தினை கூட்டமுடியாமல்போன காரணம் என்ன?:கேட்கிறார் வியாழேந்திரன்
 
 
தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையை ஆராய பிரதமருக்கு இதுவரையில் கூட்டத்தினை கூட்டமுடியாமல்போன காரணம் என்ன?:கேட்கிறார் வியாழேந்திரன்
 
 கிழக்கு முதலமைச்சர் தொடர்பான பிரச்சினையை ஆராய உடனடியாக கூட்டத்தினை கூட்டிய பிரதமருக்கு தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையை ஆராய இதுவரையில் கூட்டத்தினை கூட்டமுடியாமல்போன காரணம் என்ன என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கேள்வி எழுப்பினார்.
மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட மைலம்பாவெளி,காமாட்சி கிராமத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள 25 வீட்டுதிட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
 
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இந்த நல்லாட்சியை உருவாக்குவதில் காத்திரமான பங்களிப்பினை சிறுபான்மை சமூகம் வழங்கியுள்ளது.அந்த ஆட்சியில் எமது சிறுபான்மை மக்களின் தேவையினை பெற்றுக்கொடுப்பதில் நாங்கள் முன்னின்று செயற்பட்டுவருகின்றோம்.
சம்பூரில் பாடசாலை நிகழ்வில் கிழக்கு முதலமைச்சர் நடந்துகொண்டவிதத்தை ஏற்றுக்கொள்ளமுடியாவிட்டாலும் வடகிழக்கில் சிவில் நிர்வாக நடைமுறையில் இராணுவத்தினர் தலையிடுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது.
இந்த நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் இராணுவ முகாமுக்குள் சென்றதை எதிர்த்தார்கள்.கடற்படை அதிகாரியை திட்டியதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக பாதுகாப்பு செயலாளரால் உடனடி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நல்லாட்சியின் கீழ் உள்ள பாதுகாப்பு செயலாளர் மக்கள் பிரதிநிதியின் மீது கட்டுப்பாடுகளை கொண்டுவந்து பின்னர் அவற்றினை நீக்கினார்கள்
வடகிழக்கின் ஆட்சியில் ஆளுனர்களின் தலையீடு அதிகளவிலேயே இடம்பெற்றுவருகின்றன.அதற்கு அப்பால் படை அதிகாரிகளின் தலையீடுகளும் ஏற்பட்டுவருகின்றது.மட்டக்களப்பு கிரான் பகுதியில் கிராம சேவையாளர் ஒருவர் தன்னை அடையாளப்படுத்தியதன் பின்னரும் அவர் இராணுவ முகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்.இந்த நல்லாட்சியை கொண்டுவந்த சிறுபான்மை மக்களின் சிவில் நிர்வாகத்தின் மீது கட்டவிழ்த்துவிடும் நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும்.
 
கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் கடற்படை அதிகாரிக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டினை கடந்த ஆட்சிக்காலத்தில் இனவாதம்பேசிய பேரினவாதிகள் அவற்றினை பூதாகரமாக்கிவருகின்றனர்.இவை நிறுத்தப்படவேண்டும்.
நாங்கள் இந்த நாட்டில் இனநல்லிணக்கத்தை விரும்புகின்றோம்.மத நல்லிணக்கத்தை விரும்புகின்றோம்.இந்த நாட்டில் பெரும்பான்மை மக்களுடன் இணைந்துவாழவிரும்புகின்றோம்.ஆனால் இந்த நாட்டில் உள்ள பேரினவாதிகள் இந்த நாட்டில் மீண்டும் இனவாதத்தை தூண்ட முனைகின்றனர்.
இன்று வடகிழக்கில் உள்ள நிர்வாகத்தில் மட்டுமே ஆளுனர்களின் தலையீடுகள் அதிகமாகவுள்ளது.இலங்கையில் உள்ள வேறு மாகாணங்களில் இவ்வாறான தலையீடுகள் இல்லாத நிலையே உள்ளது.
 
கடந்த மகிந்த ஆட்சிக்காலத்தில் விமல்வீரவன்ச தலைமையில் ஐ.நா.முன்றிலில் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸார் தாக்கப்பட்டனர்.விமல்வீரவன்ச அங்கிருந்த பொலிஸ்மா அதிபரின் தொப்பியை கழட்டி வீசினார்.அந்தவேளையில் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் பெரிதாக காட்டப்படவில்லை. தென்னிலங்கையில் பௌத்த மத பிக்குகள் பொலிஸாரை தாக்கியுள்ளனர்.இராணு அதிகாரிகளுக்கு தகாத வார்த்தைகளினால் பேசியுள்ளனர்.அவை இந்த நாட்டில் பூதாகரமாக காட்டப்படவில்லை.
 
ஆனால் இந்த நாட்டில் உள்ள சிறுபான்மையினத்தை சேர்ந்த முதலமைச்சர் ஒருவர் தகாத வார்த்தையினால் பாதுகாப்பு அதிகாரியை பேசினார் என்ற காரணத்திற்காக அதனை பேரினவாதிகள் பூதாகரமாக்குவது இனவாத செயற்பாடாகவே நோக்கப்படவேண்டும்.இந்த நல்லாட்சியானது நல்லாட்சியாகவே தொடர்ந்து செயற்படவேண்டும்.இந்த நாட்டில் அனைவரும் இணைந்துவாழவேண்டும் என்பதையே விரும்புகின்றோம்.
கிழக்கு முதலமைச்சரின் சம்பவம் நடந்து ஒரு சில தினங்களுக்குள்ளேயே பிரதமர் விசேட கூட்டத்தினை கூட்டினார்.தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இந்த நல்லாட்சி அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக நாங்கள் கோரிக்கை விடுத்துவந்தபோதிலும் இதுவரையில் அது தொடர்பில் கூடி ஆராயவில்லை. ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல்போயுள்ளனர்.அது தொடர்பில் ஆராய அவசர கூட்டம் நடாத்தப்படவில்லை.
 

இந்த விடயத்தில் பல உறுதிமொழிகளை முன்வைத்த உங்கள் தலைவர் சம்பந்தரிடம் கேட்க வேண்டிய கேள்வி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.