Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடவுச்சீட்டு தொலைந்ததால் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட இன்னல்.

Featured Replies

கனடா- விடுமுறைக்கு அரிசோனா சென்ற கீதை தர்மசீலன் குடும்பத்தினர் தங்கியிருந்த ஹொட்டேலில் கடவு சீட்டுக்கள் களவாடப்பட்டு விட்டது. இது குறித்து எயர் கனடாவிடம் தெரிவித்த போது திரும்பி செல்வதற்கான ரிக்கெட்டுக்கள் போதுமென அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

திரும்பும் போது அவர்களிற்கு காத்திருந்த சோதனை குறித்து எந்த ஒரு எதிர்பார்ப்பும் இருக்கவில்லை.

நால்வர் அடங்கிய குடும்பம் பீனிக்ஸ் விமான நிலைய பாதுகாப்பு பகுதியை கடந்து விட்டனர்.ஆனால் ஏர் கனடா முகவர் இவர்களிடம் போர்டிங் பாசை கையளிக்க சிறிது முன்னர் மற்றொரு முகவர் இவர்களை அணுகி கடவு சீட்டுக்கள் இன்றி கனடிய சட்டத்தின் பிரகாரம் திரும்ப ரொறொன்ரோ செல்வது குற்றமாகும் என தெரிவித்துள்ளார்.

யு.எஸ் சுங்க மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் இவர்களை அனுமதித்து விட்ட பின்னரும் இவர்கள் அனுமதிக்கவில்லை என கீதை ரொறொன்ரோ பத்திரிகையாளரிடம் தெரிவித்தார்.

தொலைந்த கடவுச்சீட்டு சம்பந்தப்பட்ட விடயங்களில் எயர் கனடாவின் மாறுபட்ட கலப்பு செய்திகளினால் எதிர்பாராத விதமாக தடுக்கப்பட்ட சம்பவம் தர்மசீலன் குடும்பத்தினருக்கு மட்டும் முதல் தடவையாக ஏற்படவில்லை.

கடந்த வருடம் பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த பெண் ஒருவருக்கும் நடந்துள்ளது. பிலடெல்பியா சென்ற இவரின் கடவுச்சீட்டு தொலைந்து விட்டது. அதிகாரிகள் இவர் திரும்ப கனடா செல்ல முடியும் என திரும்ப திரும்ப உறுதியளித்த போதும் எயர் கனடா பிலடெல்பியாவிலிருந்து விமானம் ஏற இவரை அனுமதிக்கவில்லை.

தர்மசீலன் கனடிய தூதரகத்துடன் தொடர்பு கொண்டு கடவுச்சீட்டுக்கள் தொலைந்தமை குறித்து தெரிவிக்க அவர்கள் விமான நிறுவனத்துடன் கதைக்குமாறு தெரிவித்துள்ளனர்.ஏர் கனடா பிரதிநிதி இவர்கள் சுற்று-பயண ரிக்கெட்டுக்களை வாங்கியிருப்பதால் இவர்கள் குறித்த தகவல்கள் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தின் கணனிகளில் இருக்கும் என கூறியுள்ளார்.

மற்றொரு வழியால் இவர்களது அடையாளத்தை பியர்சன் சரிபார்க்க முடிந்தால் பயணம் செய்யமுடியும் என கனடிய தூதரகம் தெரிவித்துள்ளது.

இவர்கள் திரும்ப வேண்டிய திகதி ஏப்ரல் 24.குடும்பம் விமான நிலையத்திற்கு 5-மணித்தியாலங்களிற்கு முன்னர் வந்தனர்.யு.எஸ் சுங்க அதிகாரிகள் மற்றும் TSA அதிகாரிகள் இவர்களிடம் வழக்த்திற்கு மேலாக கேள்விகள் கேட்ட பின்னர் போர்டிங் லவுன்சிற்கு செல்ல அனுமதித்தனர்.

ஆனால் மற்றுமொரு விமானநிலைய பணியாளரால் அனுமதி மறுக்கப்பட தர்மசீலன் ஒட்டாவாவிலுள்ள அவசர பாஸ்போட் அவசர தொலை தொடர்பு சேவையுடன் தொடர்பு கொண்டார். அவர்களும் கடவுசீட்டின்றி கனடாவிற்கு செல்வது குற்றம் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் செல்ல வேண்டிய விமானம் சென்றுவிட்டது.

லாஸ் ஏஞ்சல்சிலுள்ள கனடிய தூதரகம் செல்லுமாறு ஏர் கனடா தெரிவித்தது.

அதிஷ்ட வசமாக ஒரு West-Jet ஏஜன்ட் சாரதி அனுமதி பத்திர அடையாளத்துடன் இவர்களிற்கு விமானத்தில் அனுமதியளித்தனர்.
தர்மசீலன் குடும்பத்தினர் எல்லையை கடந்து கனடா வந்தடைந்தனர்.ஆனால் விமானங்கள் மாறியதால் இவர்களது பொதிகள் தாமதிக்கப்பட்டன.

ஏயர் கனடா நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டது.

எதிர் வரும் ஆகஸ்ட் மாதம் விடுமுறையில் யு.எஸ். செல்ல இருப்பதாக தெரிவித்த தர்மசீலன் நிச்சயமாக எயர் கனடா மூலமாக இல்லை என தெரிவித்தார்.

- See more at: http://www.canadamirror.com/canada/63794.html#sthash.y7TsmKIM.dpuf

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, kayshan said:

கனடா- விடுமுறைக்கு அரிசோனா சென்ற கீதை தர்மசீலன் குடும்பத்தினர் தங்கியிருந்த ஹொட்டேலில் கடவு சீட்டுக்கள் களவாடப்பட்டு விட்டது. இது குறித்து எயர் கனடாவிடம் தெரிவித்த போது திரும்பி செல்வதற்கான ரிக்கெட்டுக்கள் போதுமென அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

திரும்பும் போது அவர்களிற்கு காத்திருந்த சோதனை குறித்து எந்த ஒரு எதிர்பார்ப்பும் இருக்கவில்லை.

நால்வர் அடங்கிய குடும்பம் பீனிக்ஸ் விமான நிலைய பாதுகாப்பு பகுதியை கடந்து விட்டனர்.ஆனால் ஏர் கனடா முகவர் இவர்களிடம் போர்டிங் பாசை கையளிக்க சிறிது முன்னர் மற்றொரு முகவர் இவர்களை அணுகி கடவு சீட்டுக்கள் இன்றி கனடிய சட்டத்தின் பிரகாரம் திரும்ப ரொறொன்ரோ செல்வது குற்றமாகும் என தெரிவித்துள்ளார்.

யு.எஸ் சுங்க மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் இவர்களை அனுமதித்து விட்ட பின்னரும் இவர்கள் அனுமதிக்கவில்லை என கீதை ரொறொன்ரோ பத்திரிகையாளரிடம் தெரிவித்தார்.

தொலைந்த கடவுச்சீட்டு சம்பந்தப்பட்ட விடயங்களில் எயர் கனடாவின் மாறுபட்ட கலப்பு செய்திகளினால் எதிர்பாராத விதமாக தடுக்கப்பட்ட சம்பவம் தர்மசீலன் குடும்பத்தினருக்கு மட்டும் முதல் தடவையாக ஏற்படவில்லை.

கடந்த வருடம் பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த பெண் ஒருவருக்கும் நடந்துள்ளது. பிலடெல்பியா சென்ற இவரின் கடவுச்சீட்டு தொலைந்து விட்டது. அதிகாரிகள் இவர் திரும்ப கனடா செல்ல முடியும் என திரும்ப திரும்ப உறுதியளித்த போதும் எயர் கனடா பிலடெல்பியாவிலிருந்து விமானம் ஏற இவரை அனுமதிக்கவில்லை.

தர்மசீலன் கனடிய தூதரகத்துடன் தொடர்பு கொண்டு கடவுச்சீட்டுக்கள் தொலைந்தமை குறித்து தெரிவிக்க அவர்கள் விமான நிறுவனத்துடன் கதைக்குமாறு தெரிவித்துள்ளனர்.ஏர் கனடா பிரதிநிதி இவர்கள் சுற்று-பயண ரிக்கெட்டுக்களை வாங்கியிருப்பதால் இவர்கள் குறித்த தகவல்கள் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தின் கணனிகளில் இருக்கும் என கூறியுள்ளார்.

மற்றொரு வழியால் இவர்களது அடையாளத்தை பியர்சன் சரிபார்க்க முடிந்தால் பயணம் செய்யமுடியும் என கனடிய தூதரகம் தெரிவித்துள்ளது.

இவர்கள் திரும்ப வேண்டிய திகதி ஏப்ரல் 24.குடும்பம் விமான நிலையத்திற்கு 5-மணித்தியாலங்களிற்கு முன்னர் வந்தனர்.யு.எஸ் சுங்க அதிகாரிகள் மற்றும் TSA அதிகாரிகள் இவர்களிடம் வழக்த்திற்கு மேலாக கேள்விகள் கேட்ட பின்னர் போர்டிங் லவுன்சிற்கு செல்ல அனுமதித்தனர்.

ஆனால் மற்றுமொரு விமானநிலைய பணியாளரால் அனுமதி மறுக்கப்பட தர்மசீலன் ஒட்டாவாவிலுள்ள அவசர பாஸ்போட் அவசர தொலை தொடர்பு சேவையுடன் தொடர்பு கொண்டார். அவர்களும் கடவுசீட்டின்றி கனடாவிற்கு செல்வது குற்றம் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் செல்ல வேண்டிய விமானம் சென்றுவிட்டது.

லாஸ் ஏஞ்சல்சிலுள்ள கனடிய தூதரகம் செல்லுமாறு ஏர் கனடா தெரிவித்தது.

அதிஷ்ட வசமாக ஒரு West-Jet ஏஜன்ட் சாரதி அனுமதி பத்திர அடையாளத்துடன் இவர்களிற்கு விமானத்தில் அனுமதியளித்தனர்.
தர்மசீலன் குடும்பத்தினர் எல்லையை கடந்து கனடா வந்தடைந்தனர்.ஆனால் விமானங்கள் மாறியதால் இவர்களது பொதிகள் தாமதிக்கப்பட்டன.

ஏயர் கனடா நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டது.

எதிர் வரும் ஆகஸ்ட் மாதம் விடுமுறையில் யு.எஸ். செல்ல இருப்பதாக தெரிவித்த தர்மசீலன் நிச்சயமாக எயர் கனடா மூலமாக இல்லை என தெரிவித்தார்.

- See more at: http://www.canadamirror.com/canada/63794.html#sthash.y7TsmKIM.dpuf

எங்க போனாலும், மோபைல் போன் போல பாஸ்போட்டை கைல கொண்டு திரிய வேண்டும். கோட்டலில் லாக்கர் இல்லாவிட்டால், பாக்கில் விட்டு வெளியே போவது அபாயகரமானது.

பிரித்தானியா, முதலாவதாக மொபைல் போன் பாஸ்போட் அப்ஸ் ரை பண்ணப் போகுது.

வந்தால், உந்த பேப்பர் பாஸ்போட் கதை முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

கடவுச்சீட்டு பயணக்காப்புறுதி (விமான)டிக்கட்டுகள் மற்றும் கொட்டேல் பதிவுகள் என்பவற்றை கொப்பிசெய்து பிள்ளைகள் அல்லது நெருங்கிய உறவினரிடம் கொடுத்துவிட்டுச்செல்லலாம்.  அல்லது எங்கு சென்றாலும் தரவிறக்கம் செய்து எடுக்கக்கூடியதாக கிளவுட்டில்(cloud data storage) சேமித்துவைத்தால் (அல்லது மின்னஞ்சலில் தனக்கு தாமே அனுப்பிக்கொள்ளலாம்) அவசரத்துக்கு உதவும். காரணத்தை விளக்கி தகுந்த ஆதாரம் சமர்ப்பித்தால் வசிக்கும் நாட்டின் உயர் இஸ்தானிகர் அல்லது தூதரகம் தற்காலிக கடவுச்சீட்டு 1 மணி நேரத்தில் தருவார்கள். அதைக்கொண்டு மீண்டும் நாட்டுக்கு திரும்பிச்செல்ல முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.