Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலியாவில் விடுதலைப் புலிகளை தடை செய்ய அழுத்தம் கொடுக்கும் பாலித கோகன்ன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவில் விடுதலைப் புலிகளை தடை செய்ய அழுத்தம் கொடுக்கும் பாலித கோகன்ன

[செவ்வாய்க்கிழமை, 9 சனவரி 2007, 21:10 ஈழம்] [காவலூர் சங்கீதன்]

அவுஸ்திரேலியாவுக்கு உத்தியோகபூர்வமாக சென்றிருக்கும் சிறிலங்கா சமாதான செயலகப் பணிப்பாளர் பாலித கோகன்ன, சிறிலங்கா அரசு மிகுந்த அர்ப்பணிப்புடன் சமாதானப் பேச்சுக்களை முன்னெடுத்து வருகின்ற போதிலும் விடுதலைப் புலிகள் அதற்கு ஒத்துழைப்பதில்லை என்று கவலை வெளியிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளை மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வருவதற்கான ஒரே வழியாக, அவர்களைத் தடை செய்வதுதான் சரியானது என்று தான் கருதுவதாகவும், அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சிறப்பு ஆலோசகராகவும் பணியாற்றும் பாலித கோகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

வெளிநாட்டிலிருந்து நிதி வராவிட்டால், விடுதலைப் புலிகள் மீண்டும் பேச்சு மேசைக்குத் திரும்புவார்கள் என்று தெரிவித்த அவர், இலங்கைப் பிரச்சனையில் அரசின் முயற்சிகளை நியாயப்படுத்தி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய செனட்டர் ஸ்ரீவ் ஹச்சின்சை தான் சிறப்பாக பாராட்டுவதாகவும் குறிப்பிட்டார்.

பல்வேறு உயர்மட்ட அதிகாரிகளுடனும் செனட்டர்களுடனும் தொடர்ந்து பேச்சுக்களை நடத்தி வரும் பாலித கோகன்ன, அவுஸ்திரேலியாவிலிருந்து விடுதலைப் புலிகளுக்கு எதுவித நிதியும் அனுப்பப்படாமல் இருப்பதை, அவுஸ்திரேலிய அரசு உறுதிசெய்ய வேண்டும் என்பதே தனது கோரிக்கை என்றும் கூறினார்.

2006 ஆம் ஆண்டு யூன் 16 ஆம் நாள், அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய ஸ்ரீவ் ஹச்சின்ஸ், சமாதானப் பேச்சுக்களில் கலந்துகொண்டு சரியான தீர்வைக் கண்டடைய விடுதலைப் புலிகளுக்கு மிக அதிகமான வாய்ப்புக்களை சிறிலங்கா அரசு வழங்கிய போதிலும், அவர்கள் வன்முறைகளையே கையிலெடுத்துக்கொண்டு, சமாதான வாய்ப்புக்கள் அத்தனையையும் உதறித் தள்ளினார்கள் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

அத்துடன், சமாதானத்தில் விடுதலைப் புலிகளுக்கு உண்மையான நாட்டம் இருந்தால், தற்கொலைத் தாக்குதல்கள், சிறார்களைப் படையில் சேர்ப்பது, அரசாங்க பிரதிநிதிகளைக் கொல்வது போன்றவற்றை அவர்கள் செய்ய மாட்டார்கள் என்றும் கூறினார்.

எனினும், சிறிலங்கா அரசின் திட்டமிட்ட இன அழிப்பு, குண்டுவீச்சு, மக்கள் படுகொலைகள், மனித அவலங்கள் குறித்து அவர் எதுவும் தெரியாதது போன்று, மௌனம் சாதித்திருந்தார்.

தமிழ் மக்கள் பலர் தமது நாட்டில், விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்களாக இருந்தாலும், தனது நாடான அவுஸ்திரேலியா, சிறிலங்கா அரசின் அர்ப்பணிப்புடன்கூடிய சமாதான முயற்சிகளையே ஆதரிக்கிறது என்றும், விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாத குழு குறித்து தனது நாடு அவதானித்து வருவதாகவும், ஹச்சின்ஸ் மேலும் தெரிவித்திருந்தார்.

இதனைச் சுட்டிக்காட்டியும் மேற்கோள் காட்டியும், செனட்டர் ஸ்ரீவ் ஹச்சின்ஸ் உதவியுடன், அவரது கருத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும் நோக்குடன் பல்வேறு சந்திப்புக்களையும் நடத்தி வரும் பாலித கோகன்ன, எப்படியும் அவுஸ்திரேலிய அரசை சிறிலங்காவின் அரச பயங்கரவாத செயற்பாடுகளைக் கண்டுகொள்ளாத ஒரு நாடாக உருமாற்றி விடும் தனது முயற்சிகளை மும்முரமாக முன்னெடுத்து வருகிறார்.

புதினம்

நல்ல விசயம். அவுஸ்ரேலியாவும் அளவுக்கு அதிகமாக யோசிக்காமல் தடை செய்தால் புண்ணியமாகப் போகும்.

31 நாடுகள் புலிகளை தடை செய்திருக்கிறார்கள் என்று பிரச்சாரம் செய்யலாம்.

யப்பானும் புலிகளைத் தடை செய்தா நல்லம். உலகின் 1ஆவது பொருளாதாரம் (அமெரிக்கா) 3ஆவது பொருளாதாரம் (யப்பான்) தடை செய்து விட்டது. என்றும் பிரச்சாரம் செய்யலாம். 4வது பொருளாதாரம் இந்தியா 15 வருடங்களிற்கு முன்னரே தடை செய்துவிட்டது என்று பிரச்சாரம் செய்யலாம்.

அதுக்கு அடுத்ததாக சீனா, மத்திய கிழக்கு நாடுகளில் சில, பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், சோமாலியா எத்தியோப்பியா நோர்வே என்று தடை செய்ய கணக்கு சரியா வரும்.

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரெலியா நாடாளுமன்ற உறுப்பினர் ச்றிவ் கச்சின்ஸின் விடுதலைப்புலிகளுக்கு எதிராகத் தெரிவித்த கருத்துக்களுக்கு புலம் பெயர்ந்த நாட்டில் வாழும் தமிழர்களும் அவுஸ்திரெலியாத் தமிழர்களும் கண்டன மின்னஞ்சலினை ச்றிவ் கச்சின்ஸிக்கு தெரிவித்தார்கள். யாழ் இணையத்தளத்திலும் அக்கண்டன அறிக்கை பற்றி அறிவுப்புக்கள் வர, யாழ் இணையத்தள உறுப்பினர்கள் சிலரும் ச்றிவ் கச்சின்ன்ய்க்கு கண்டன அறிக்கையினை, ஈழத்தமிழர்களின் உண்மை நிலையினை பல்வேறு வெளினாட்டு நிறுவனங்கள் இலங்கை அரசிற்கு எதிராகச் சொன்ன அறிக்கைகளின் ஆதாரத்துடன் அனுப்பினார்கள்.

சென்ற மாதமும் சிங்கள ஊடகங்களிலும் தமிழ்த்தேச விரோத எட்டப்பர்களின் இணையத்தளங்களிலும் அவுஸ்திரெலியா அரசு விடுதலைப்புலிகளினைத் தடை செய்ய உள்ளதாக செய்திகள் வெளியிட்டன. ஆனால் அச்செய்திகள் பொய்யான செய்திகள் என அவுஸ்திரெலியா அரசாங்கத்துக்கு நெருக்கமானவர்கள் மூலம் அறியப்பட்டது.( http://www.yarl.com/forum3/index.php?showtopic=16891 ) அதனால் தான் பாலித கோகன்ன அவுஸ்திரெலியாவுக்கு வந்து விடுதலைப்புலிகளினை தடை செய்ய அவுஸ்திரெலியா அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்

Edited by கந்தப்பு

ம்ம்ம் இந்தாள் இப்ப எதுக்கு இங்க வந்தது...திருப்பி எங்களை எல்லாம் கன்பேரா போக வைக்கவோ??

முதல்ல அவுஸ்திரேலியாவில தூயாவின்ர சமையல் கட்டை தடை செய்யவேணும் ;-)

சனிகிழமை அனுப்பவா என்று கேட்டதற்கா இந்த கொலை வெறி????

வார்த்தைப் பிரயோகத்தைப் பாத்தால் தமிழ்மணம் அடிக்கடி பார்க்கிறது போலக் கிடக்கு.

சரி, சரி, விரைவாகப் பொங்கல் செய்யும் முறை ஒன்று போடுங்கோ பார்ப்பம், திங்கள் வேலை நாள் அதுவும் கெதியாப் பொங்கி முடிக்கோணும். :icon_idea:

தமிழ்மணத்தை விட என்னுடைய வலைப்பூவில் இருப்பது அதிகம்..போட்ட செய்முறைக்கே இப்படி கொலைவெறி..இதற்குள் புதிதாக வேறு வேண்டுமா??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.