Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒலிம்பிக் தடகள வீராங்கனை சுசந்திக்கா வைத்தியசாலையில் அனுமதி ; கணவர் கைது

Featured Replies

ஒலிம்பிக் தடகள வீராங்கனை சுசந்திக்கா வைத்தியசாலையில் அனுமதி ; கணவர் கைது

 

ஒலிம்பிக் தடகள வீராங்கனை சுசந்திக்கா ஜெயசிங்க கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Susanthika-Jayasinghe.jpg

தடகள வீராங்கனை சுசந்திக்கா ஜெயசிங்க, தனது வீட்டில் வைத்து தாக்குதலுக்குள்ளானதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் அவரது கணவர்  தம்மிக நந்தகுமார பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 

சுசந்திகா ஜெயசிங்க, ஒலிம்பிக் தடகள போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/7708

  • தொடங்கியவர்

கணவரிடமிருந்து விடுதலை வேண்டும் : சுசந்திகா 

Published by MD.Lucias on 2016-06-18 19:05:47

 

இன்றைய சம்பவம் எனக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை காலமும் மனதில் மறைத்து வைத்திருந்த விடயம் இன்று முழு நாட்டிற்கும் தெரியவந்துள்ளது. எனவே எனது கணவரிடம் இருந்து எனக்கு விடுதலை வேண்டும் என ஒலிம்பிக் தடகள வீராங்கனை சுசந்திக்கா ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.susanthika.jpg

அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணவனின் தாக்குதலுக்கு இலக்காகி கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் சுசந்திக்கா மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இவ்வாறான ஒரு சம்பவம் நடைபெற்றது தொடர்பில் கவலையடைகின்றேன். இதுவரை காலமும்  பல விடயங்களை மனதில் மறைத்து வைத்திருந்தேன். ஆனால் இன்று முழு நாட்டுக்கும் இவ்விடயம் தெரியவந்துள்ளது. இது எனக்கு மிகவும் அவமானமாக உள்ளது.

நானும் சில தவறுகளை செய்திருக்கின்றேன். அவ்வாறு தவறுகள் செய்திருந்தால் தண்டனை அனுபவிக்கவும் தயாராக உள்ளேன். இந்த சம்பவம் இலங்கையிலுள்ள ழுமு பெண்களுக்கும் ஒரு பாடமாகும். 

நல்ல கணவர் மனைவியை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால் இதுபோன்ற அசம்பாவிதங்கள் இடம்பெற வாய்ப்பு உள்ளது. 

எனினும் எனது கணவரிடம் இருந்து விடுதலை வேண்டும். என்னை பத்து வருடம் சிறையில் அடைத்தாலும் நான் அடைந்த துன்பங்களுக்கு நிச்சயம் விடிவு கிடைக்கும். இதற்கான சகல நடவடிக்கைகளையும் எதிர்காலத்தில் முன்னெடுப்பேன் என்றார்.

http://www.virakesari.lk/article/7731

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.