Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசுடன் பேச 8 பேர் கொண்ட குழு- நியமித்தது கூட்டமைப்பு

Featured Replies

அரசுடன் பேச 8 பேர் கொண்ட குழு- நியமித்தது கூட்டமைப்பு
 
 
அரசுடன் பேச 8 பேர் கொண்ட குழு- நியமித்தது கூட்டமைப்பு
 
தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதற்காக, இலங்கை அரசாங்கத்துடன் விரைவில் பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அதற்கான குழுவொன்றையும் நியமித்துள்ளது.
 
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் நேற்றுக்காலை 10 மணி தொடக்கம், பிற்பகல் 1 மணிவரை நடந்த கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
 
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் மாவை சேனாதிராசா, ரெலோ சார்பில், கோவிந்தம் கருணாகரன், ஹென்றி மகேந்திரன், என்.சிறிகாந்தா, புளொட் சார்பில், தர்மலிங்கம் சித்தார்த்தன், ராகவன், சிவநேசன், ஈபிஆர்எல்எவ் சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
இந்தக் கூட்டத்தில் தேர்தல் முறைமை மாற்றம்,  அரசின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை, மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நாவுக்குப் பொறுப்புக்கூறுவதில் அரசாங்கத்தின் மெதுவான செயற்பாடுகள், வடக்கு மாகாண சபையில் முதலமைச்சர் – அமைச்சர்கள் – உறுப்பினர்களுக்கிடையில் காணப்படும் முரண்பாடுகள், ஊழல், மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள், வடக்கு மாகாண அமைச்சரவை மாற்றம், வவுனியா மாவட்டத்தில் வடக்குக்கான சிறப்பு பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதில் காணப்படும் சர்ச்சைகள் தொடர்பாக ஆராயப்பட்டன.
 
அத்துடன், அரசியல் தீர்வு, காணிகள் விடுவிப்பு, மீள்குடியேற்றம், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை உள்ளிட்ட தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில், அரசாங்கத்துடன்  விரைவில் அதிகாரபூர்வ பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டது.
 
இந்தக் குழுவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளின் சார்பில் தலா இருவர் வீதம் 8 பேர் இடம்பெற்றுள்ளனர்.
 
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன், என். சிறிகாந்தா, ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், புளொட் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், ராகவன் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெறுகின்றனர்.
 
இந்தக் குழு  விரைவில் கூடி  அரசுடன் நேரில் பேசுவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

http://onlineuthayan.com/news/14203

தமிழர்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதற்காக அரசாங்கத்துடன் விரைவில் பேச்சுவார்த்தை நடாத்துவதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 8பேர் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளது.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று(சனிக்கிழமை) முற்பகல் 10.00 மணியிலிருந்து 1.00 மணிவரை நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் சார்பில் மாவை சேனாதிராசா, ரெலோ சார்பில் கோவிந்தம் கருணாகரன், ஹென்றி மகேந்திரன், என்.சிறிகாந்தா, புளொட் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், ராகவன், சிவநேசன், ஈபிஆர்எல்எவ் சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், சிறீலங்கா அரசாங்கத்தின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை, மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றம் தொடர்பாக பொறுப்புக்கூறுவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம், வடக்கு மாகாணசபையில் முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்களுக்கிடையே காணப்படும் முரண்பாடுகள், ஊழல், மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கள், வடக்கு மாகாண அமைச்சரவை மாற்றம், வடக்கிற்கான சிறப்புப் பொருளாதார நிலையம் அமைப்பதில் காணப்படும் இடர்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டன.

அத்துடன் அரசியல் கைதிகள் விடுதலை, காணிகள் விடுவிப்பு, மீள் குடியேற்றம் உள்ளிட்ட தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் முகமாக சிறீலங்கா அரசாங்கத்துடன் விரைவில் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளினதும் சார்பில் தலா இரண்டுபேர் படி 8பேர் அங்கம் வகித்துள்ளனர்.

தமிழரசுக் கட்சி சார்பில் இரா சம்பந்தன், மாவை சேனாதிராசா, ஈபிஆர்எல்எவ் சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன், என்.சிறீகாந்தா, புளொட் சார்பில் சித்தார்த்தன், ராகவன் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இக்குழு விரைவில் கூடி சிறீலங்கா அரசாங்கத்துடன் பேசுவதற்கான நடவடிக்கைகளில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

http://thuliyam.com/?p=31766

காலம் கடந்து பெற்ற சுடலை ஞானம்.

எனினும் நல்ல முயற்சிகளை பாராட்டவே வேண்டும்.

இதில் உள்ள சிலர் அயல் நாட்டு நாசகாரக் கும்பல் எழுதிக் கொடுப்பதை படிக்கும் வழக்கத்தை நிறுத்தி சொந்த புத்தியுடன் செயலாற்றினால் மட்டுமே விமோசனம் தெரியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.