Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒசாமா பின்லேடனிலிருந்து பிரபாகரன் வரை....!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 

உலக அரசாங்கங்கள் ஒரு பொதுவுடமையின் கீழ்த்தான் இயங்குகின்றன. இங்கே பொதுவுடமையின் கீழ் இயங்குதல் என்பதன் பொருள், அரசாங்கம் ஒன்று இன்னொரு அரசாங்கத்திற்கு ஒத்துழைத்தல், உதவுதல் என்று பொருள்கொள்ளப்படும்.

உலக நாடுகள் அத்தனையும் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் என்று இன்னபிற செயற்பாடுகளில் ஒத்துழைப்புக்களோடு செயற்பட்டாலும், இன்னொரு முக்கியமான விடையங்களில் அரசாங்கங்கள் ஒத்துழைப்போடு தான் இயங்குகின்றன.

அது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்னும் மையப்பொருளோடு ஒன்றிக்கிறது.

பொதுவாக, உலகில் தோன்றிய அத்தனை போராட்ட இயக்கங்களின் வளர்ச்சியின் பின்னணியில் அரசாங்கங்களின் பங்களிப்பு அளப்பரியது.

அது உலகத்தை ஆட்டிப்படைத்த ஒசாமா பின்லேடனாக இருக்கட்டும், இலங்கைக்கும், இந்திய நாட்டிற்கும் சவால் விடுத்த தமிழீழ விடுதலைப்புலிகளும், அதன் தலைவர் பிரபாகரனாகட்டும், இவர்களின் போராட்ட வரலாற்றில் ஜனநாயக வழியில் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கங்களின் பங்களிப்பு அதிகமாக உண்டு.

போராட்ட இயக்கங்கள் தோன்றுவதற்கான பின்னணிகள் வேறாக இருந்தாலும், அந்த இயக்கங்களின் வளர்ச்சியில் ஜனநாயக தேர்தலில் வெற்றி பெற்ற அரசாங்கங்களின் ஆதரவின் விளைவும் போராட்டக்குழுக்களின் வளர்ச்சிக்கு முக்கிய மூலகாரணிகளாக இருந்துள்ளன.

ஆனாலும், தமது தேவைக்களுக்காவும், சுயநலத்திற்காகவும் போராட்டக்குழுக்களை வளர்த்துவிட்ட அதே நாடுகள் தான் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தினை முன்னெடுத்தன.

குறிப்பாக, அல்கொய்தா இயக்கத்தினையும், ஒசாமா பின்லேடனையும் வளர்த்த அதே அமெரிக்கா தான் அவரை அழிக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு எழுந்தது.

கடந்த 2001ம் ஆண்டு செப்டெம்பர் 11ம் திகதி அமெரிக்காவின் இரட்டைக்கோபுரத் தாக்குதலின் பின்னர், அமெரிக்க அரசாங்கம் ஒரு கொள்கையை உடனடியாக நடைமுறைப்படுத்தியது.

உலகப் பயங்கரவாத போராட்ட இயக்கங்களுக்கு எதிரான போர். இது உண்மையில் தீவிரவாத இயக்கங்களை அழித்தல் என்று பொருள் கொள்ளத்தக்கது அல்ல. மாறாக மக்களின் விடுதலைக்காக உணர்வு பூர்வாக துடித்தெழுந்த இளைஞர்களின் விடுதலைப் போராட்ட இயக்கங்களையும் அழிப்பதற்கே வழிவகுத்தது.

அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஸ்ஸின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர்ப்பிரகடனத்தை இலங்கை அரசாங்கமும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டது.

அமெரிக்க அரசாங்கம் அறிவித்த அறிவிப்பு ஒட்டுமொத்த போராட்டக்குழுக்களையும் ஒரு ஆட்டம் காணவைத்தது.

இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட இலங்கை அரசாங்கமும், மகிந்த ராஜபக்சவும் தமது காலத்தில் அனைத்து அரசாங்களையும், பயங்கரவாதத்திற்கு

எதிரான போராட்டத்திற்கு ஒத்துழைப்புத் தருமாறு அழைப்பு விடுத்திருந்தார். அவரின் அழைப்பை சர்வதேசம் ஏற்றது. உதவியும் புரிந்தது.

இவ்விடத்தில் அமெரிக்காவை இலங்கை அரசாங்கம் பின் தள்ளியது என்பது தான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு.

அதாவது, பயங்கவரவாதத்திற்கு எதிரான போர் என முதலில் அமெரிக்கா அறிவித்தாலும், அந்தப் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் முதலில் வெற்றி பெற்றது இலங்கை அரசாங்கம் தான்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை வேரோடு இலங்கையில் இருந்து சிதைத்தது மட்டுமல்லாமல் அதன் தலைவரின் குடும்பத்தையும் சிதைத்தது இலங்கை அரசாங்கம்.

ஆனால், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்கா, தன்னுடைய இலக்கை கடந்த 2011ம் ஆண்டில் தான் எட்டியது. ஒசாமா பின்லேடன் 2011-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் வைத்துத் தான் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அதாவது இலங்கை போரில் வெற்றி கொண்டு மூன்று ஆண்டுகளின் பின்னர் தான் அமெரிக்காவினால் இலக்கை எட்ட முடிந்தது. ஆனால் இலங்கையில் அது தலைகீழாக இருந்தது.

இதுவொருபுறமிருக்க, இலங்கையின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த மகிந்த ராஜபக்சவும், அவரின் இளைய சகோதரரும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமாகிய கோத்தபாய ராஜபக்சவும், இந்த போராட்டத்தை பிரபாகரனோடு முடிக்கவே நினைத்திருந்திருந்தனர்.

பிரபாகரனுக்குப் பின்னர் அவரின் சந்ததியினரோ அன்றி, உறவினரோ தொடர விடக்கூடாது என்பது தான் அவர்களின் முடிவு. அந்த முடிவின் ஒரு வடிவம் தான், போரில் தன்னம் தனியாக, அப்பாவியாக இராணுவத்தினரிடம் சிக்கிய விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் படுகொலை.

உண்மையில் இலங்கை அரசாங்கம் நினைத்திருந்திருந்தால், பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை மீட்டு, புனர்வாழ்வளித்து சமூக நீரோட்டத்தில் இணைத்திருக்கலாம். ஆனால் அவர்கள் அதனை விரும்பவில்லை. காரணம், பிரபாகரனோடு இந்த தமிழர் விடுதலைப் போராட்டம் முடிந்து போகட்டும்,

பிரபாகரனின் வாரிசுகள் அதனை தொடர விடக்கூடாது. அல்லது பிரபாகரனின் வாரிசுகள் இருப்பார்களாயின் பழிவாங்கல் நிகழ்வுகள் ஆரம்பிக்கலாம் என்பது அவர்களின் முடிவு.

அந்த முடிவு சரியானதாக கூட இருக்கலாம். காரணம், ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் நேற்றைய தினம் அமெரிக்க அரசாங்கத்தை எச்சரிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என் தந்தையை கொன்ற அமெரிக்க அரசாங்கத்தை பழிவாங்குவேன் என அந்த இளைஞர் தனது காணொளியில் தெரிவித்திருக்கிறார்.

இதனை அன்றைய தினம் மகிந்த, கோத்தா தரப்பினர் உணர்ந்திருக்க வேண்டும். நேற்றைய தினம் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்திருக்கும் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடனின் வயது 20 தான்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் இன்று உயிரோடு இருந்திருப்பாராயின் அவரின் வயதும் இப்பொழுது இருபதை தொட்டு இருக்கும்.

இந்நிலையில் புலிக்குப் பிறந்தது பூனையாக இருக்க முடியுமா? அதை உணர்ந்த மகிந்த தரப்பினர் புலி அழிப்போடு, புலிக்குட்டியையும் அழித்தார்கள் இந்த கயவர்கள்.

தந்தையின் வழியில் தனயன் பயணம் மேற்கொள்ளக்கூடாதெனில், தனயனின் வாழ்க்கைப் பயணத்தை அன்றே முடிக்க சிந்தம் கொண்டார்கள் அவர்கள். அதன் வழியில் அந்த சிறுவன் இரத்தம் சிந்தி துடிதுடித்து பலியானான்.

இன்று அவன் உயிரோடு இருந்திருந்தால் அமெரிக்காவிற்கு விடப்பட்ட எச்சரிக்கை போன்று இலங்கை அரசாங்கத்திற்கும் எச்சரிக்கை விடப்பட்டிருக்கும். இது கோத்தபாயவின் தூரநோக்கான சிந்தனை என்றால் மிகையன்று.

தவிர, யுத்த போராட்டத்தில் ஒசாமா பின்லேடனுக்கும் சரி, தலைவர் பிரபாகரனுக்கும் சரி ஒரு விதமான கொள்கையை இரு அரசாங்கங்களும் பின்பற்றியிருக்கின்றன.

அதாவது, எப்படி பிரபாகரன் கொல்லப்பட்டார் என இலங்கை அரசாங்கம் அறிவித்து, அவரின் சடலத்தை எரித்து, சாம்பலை கடலில் வீசியதாக அறிவித்ததோ அதே போன்று தான், அமெரிக்க அரசாங்கமும், பின்லேடனின் உடலை கடலில் வீசியதாக அறிவித்தது.

ஆக, போராட்டத்தில் சந்ததிகளை தொடர விடாமல் அழித்தது போன்றே, போராட்ட வீரர்களின் தடயங்களும் இருப்பது நாட்டின் அமைத்திக்கு நல்லதல்ல. அல்லது, மீண்டும் அவை போராட்ட முனைப்புக்களுக்கு அடித்தளம் இடலாம் என்னும் அச்ச உணர்வினை இவர்களுக்கு ஊட்டியிருக்கின்றது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

http://www.tamilwin.com/articles/01/110724

  • கருத்துக்கள உறவுகள்

நுனிப்புல்மேயும் ஆய்வாளர்களால்தான் எமது போராட்டம் பெரும் பின்னடைவைச் சந்தித்ததோடு, கற்பனைக் குதிரையை ஓடவிட்டு வீழ்ந்தபின் இன்றுவரை எழமுடியாததொரு, மனப்பிறழ்வைத் தமிழரிடையே ஏற்படுத்தியுள்ளது. ஆய்வாளர்கள் பெயர்களைப்போட்டு எழுதலாமே. குவேரா முதல் இன்றுவரை அமெரிக்கா தொடர்கிறது. 

விடுதலைப்போராட்டமென்பது ஒரு தலைமையின் மௌனத்திலோ அல்லது மறைவிலோ நிறைவடைவதில்லை. விடுதலைக்கான கரணியங்கள் இருக்கும்வரை போராட்டமும் தொடரவே செய்யும். இது உலகம் தோன்றி மனித ஆக்கிரமிப்புத் தோன்றியபோதே விடுதலைக்கான போராட்டங்களும் தோன்றிவிட்டன.

அதனையே போராட்டவடிவங்கள் மாறலாம் போராட்டம் தொடரந்துகொண்டேயிருக்கும் என்று தேசியத்தலைவரது சிந்தனைகளிலொன்று சுட்டுகிறது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.