Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜேர்மனி புகையிரதத்தில் தாக்குதல் நடத்தியவர் எச்சரிக்கை விடுக்கும் வீடியோவை ஐ.எஸ். வெளியிட்டது

Featured Replies

ஜேர்மனி புகையிரதத்தில் தாக்குதல் நடத்தியவர் எச்சரிக்கை விடுக்கும் வீடியோவை ஐ.எஸ். வெளியிட்டது

3669FE1200000578-3696410-image-m-34_1468

ஜேர்மனியில் பயணிகள் புகையிரதத்தில் கோடரியால் தாக்குதல் நடத்திய ஆப்கானிஸ்தான் அகதி எச்சரிக்கை விடுக்கும் வீடியோ காட்சியை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.

ஜேர்மனியின் வெர்ஸ்பர்க் நகரில் பயணிகள் புகையிரதத்தில் பயணம் செய்த 17 வயது நிரம்பிய இளைஞன், சக பயணிகள் மீது சரமாரியாக கோடரியாலும், கத்தியாலும் தாக்குதல் நடத்திவிட்டு அவர் புகையிரதத்தில் இருந்து தப்ப முயன்ற வேளையில் பொலிஸார் சுட்டுக்கொன்றனர். 

இது தொடர்பாக நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் அவர் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 17 வயது அகதி என தெரிய வந்தது.  

இந்த தாக்குதல் தொடர்பாக பவேரியா மாகாணத்தின் உள்துறை அமைச்சர் ஜோவாகிம் ஹெர்மான் அளித்த பேட்டியின் போது, ‘‘பயணிகள் புகையிரதத்தில் தாக்குதல் நடத்திய இளைஞன் ஓச்சன்பியூர்ட் நகரில் வசித்து வந்திருக்கிறார். அவரது அறையில் நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு உரிய பொருட்களோடு கையால் வரையப்பட்ட ஐ.எஸ். இயக்கக் கொடியும் இருப்பது தெரியவந்துள்ளது’’ என கூறினார்.

இந்த தாக்குதலில் 17 பேர் காயமடைந்தனர். 3 பேரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.இதற்கிடையே பயணிகள் மீது தாக்குதல் நடத்தியவர், தங்களது இயக்கத்தைச் சேர்ந்த வீரர் என்று ஐ.எஸ். இயக்கம் அறிவித்துள்ளது.

வீடியோ வெளியீடு

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அமாக் செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள வீடியோவில், “ஆப்கான் அகதி முகமது ரியாத் கையில் கத்தியை வைத்துக் கொண்டு ஜேர்மனியில் தாக்குதலை நான் முன்னெடுக்கின்றேன் என்று பேசும் காட்சிகள்,” இடம்பெற்றுள்ளது.  

http://www.virakesari.lk/article/9188

  • கருத்துக்கள உறவுகள்

வேலியால போன ஓணாண, பிடிச்சு மடியில போட்ட கதையா போட்டுது, மேக்கிரல் அம்மாவுக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ரை டவுட்டு சரியாகிட்டுது போலை கிடக்கு.
இவர் பாக்கிஸ்தானை சேர்ந்தவராயிருக்கலாம் எண்டு அரசல் புரசலாய் கதையள் வருது..... ஆப்கானிஸ்தான் கள்ள பாஸ்போட்டிலை வந்தவர் போலை கிடக்கு....கேரளாக்காரங்கள் பங்களாதேஷ்காரங்கள் சிங்களவங்கள் தாங்களும் ஈழத்தமிழர் எண்டு அசூல் அடிக்கேல்லையே அதுமாதிரித்தான்..

 

  • கருத்துக்கள உறவுகள்

சிரியாக்காரரை எதிர்பார்த்துப் போனா, பாகிஸ்தான், பங்காளாதேசிகள் கூட நிக்கினமே... என்று அப்பவே அகதிகள் அள்ளுப்படேக்க பிபிசி காரர் சொன்னவர்.

இவையட வேலையலால, கடசீல மொட்டாக்கு, தொப்பி, தாடி இல்லாம இஸ்லாமியர்கள் திரியப் போகினம்.

இங்கிலாந்தில ஒருத்தர், மொட்டாக்கு, முகத்திரையை இழுத்துப் போட்டார். அவ பொலீசைக் கூப்பிட, இவர் கோட்டில...

ஆளின்ற முழியப் பார்த்தன், ஆம்பிளை மாதிரி தெரிஞ்சுது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி இழுத்து செக் பண்ணிணனான் என்று சொல்லித் தப்பக் கூடும்.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
ஜெர்மனி ரயிலில் கோடாரியால் தாக்கிய இளைஞன் பாகிஸ்தானியன்
 
 
 
Tamil_News_large_1568033_318_219.jpg
 

உர்ஸ்பெர்க்: ஜெர்மனியில் ஓடும் ரயிலில் கோடாரியால் பயணிகளை தாக்கிய 17 வயது இளைஞர் ஐ.எஸ்., அமைப்பை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என தகவல் வெளிவந்துள்ளது.

 

நேற்று முன்தினம், ஜெர்மனியில் உர்ஸ்பெர்க் பகுதியில் பவேரியன் ரயிலில் 17 வயது இளைஞர் ஒருவர் கோடாரியால் பயணிகளை தாக்கினான். இந்த தாக்குதலில் 5 பயணிகள் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களில் 2 பேரின் நிலை கவலைகிடமாக உள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட இளைஞனை போலீசார் சம்பவ இடத்தில் சுட்டுக் கொன்றனர்.

இதுகுறித்து ஜெர்மனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ்., அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதுகுறித்து, அந்த அமைப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ரயிலில் கோடாரியால் தாக்கிய இளைஞன் பேசி உள்ளான்.

 

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது:

ஐ.எஸ்., வெளியிட்டுள்ள வீடியோவில் பேசும் இளைஞன் பாஸ்டோ எனும் பேச்சுவழக்கில் பேசியுள்ளான். இது பாகிஸ்தானில் புழக்கத்தில் உள்ள பேச்சுவழக்கு ஆகும். அவன் பாகிஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தான் வந்துள்ளான். பின் அங்கிருந்து ஜெர்மன் நாட்டிற்கு அகதியாக கடந்த ஆண்டு வந்துள்ளான்.

 

அவன் தங்கியிருந்த அறையில் சோதனை நடத்தப்பட்டது. அவனுடைய அறையிலிருந்து பாகிஸ்தான் ஆவணங்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளன. ஐ.எஸ்., கொடி பொறித்த ஓவியம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

 

இதன் அடிப்படையில் அந்த இளைஞன் பாகிஸ்தானை சேர்ந்தவன் என்பது உறுதியாகி உள்ளது. அவன் ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்துள்ளோன் என சந்தேகிக்கிறோம்.

 
 
 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1568033

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.