Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜேர்மனியில் மீண்டும் தற்கொலை தாக்குதல் ; தற்கொலைதாரி பலி, 12 பேர் காயம்

Featured Replies

ஜெர்மனியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தின் பின்னணியில் சிரிய பிரஜை

ஜெர்மனியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தின் பின்னணியில் சிரிய பிரஜை:-


ஜெர்மனியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தின் பின்னணியில் சிரிய நாட்டுப் பிரஜையொருவர் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


புகலிடம் மறுக்கப்பட்ட சிரிய பிரஜை ஒருவரே இவ்வாறு தாக்குதல் நடத்தி தமது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.


இந்த தாக்குதல் சம்பவத்தில் மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர்.


ஜெர்மனிய நகர் Ansbach இல் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


ஜெர்மனிய தென் பகுதி நகரில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதனைத் தொடர்ந்து குறித்த சிரிய பிரஜை, பயில் வைத்திருந்த குண்டு ஒன்றை வெடிக்கச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த பகுதியில் குழுமியிருந்த 25000 பேர் அகற்றப்பட்டுள்ளனர்.


காயமடைந்தவர்களில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக காணப்படுகின்றது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


குறித்த பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134343/language/ta-IN/article.aspx

 

 

 

ஜேர்மனியில் மீண்டும் தற்கொலை தாக்குதல் ; தற்கொலைதாரி பலி, 12 பேர் காயம்

 

 

 

ஜேர்மனியின் தென்பகுதியில் அமைந்துள்ள அன்ஸ்பேர்க் நகரில் தற்கொலைதாரியொருவர் குண்டைவெடிக்கச் செய்ததில் தற்கொலைதாரி பலியானதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

_90503257_034212425.jpg

சிரியாவில் இருந்து வந்த 27 வயதுடைய புகலிடக்கோரிக்கையாளரே இவ்வாறு குண்டை வெடிக்கவைத்துள்ளார்.

 

திறந்தவெளியில் இடம்பெற்ற இசை நிகழ்வொன்றின் போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

குண்டு வெடிப்பு இடம்பெற்ற அரங்கிலிருந்து 2500 ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அவசரஅவசரமாக வெளியேற்றப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

_90503015_germanyansbach464.png

கடந்த வாரம் ஜேர்மனியில் 3 தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தற்கொலைதாரி கடந்த 2 வருடங்களுக்கு முன் சிரியாவில் இருந்து இங்கு வந்து புகலிடக்கோரிக்கை விடுத்ததாகவும் அது நிராகரிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

_90503013_034211459.jpg

இந்நிலையில் காயமடைந்தவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

_90503155_034212070.jpg

இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை ஜேர்மனியின் மூனிச் நகரில் இடம்பெற்ற தாக்குதலில் 9 பேர் பலியாகியிருந்ததுடன் ரயிலில் 17 வயதுடைய துப்பாக்கிதாரி மேற்கொண்ட மற்றுமொரு தாக்குதலில் 4 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/9370

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

இசை நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட பிறகு ஜெர்மனியில் தாக்குதல் நடத்தியுள்ள சிரியா நாட்டவர்

160725023944_jex_3738157_de39_512x288_re

அன்ஸ்பர்க் இசை நிகழ்வில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்ட பிறகு, முதுகுப்பையில் சுமந்து வந்த வெடி பொருட்களால் இந்த தாக்குதலை நடத்தினார்

ஜெர்மனியின் தெற்கு பகுதியில் நிகழ்ந்த ஒரு இசை பண்டிகையின்போது, குண்டு வெடிப்பு ஒன்றை நிகழ்த்திய சிரியா நாட்டினர் ஒருவர், தன்னுயிரை மாய்த்து கொண்டதோடு 12 பேரை காயப்படுத்தியுள்ளார்.

ஒரு வாரத்தில் பவாரியாவில் நடைபெற்றுள்ள இந்த மூன்றாவது வன்முறை தாக்குதலில், இருபத்தி ஏழு வயதான இந்த தாக்குதல்தாரி, அன்ஸ்பக் நகரில் நிகழ்ந்த அந்த இசை நிகழ்வில் அனுமதி மறுக்கப்பட்ட பிறகு, அவருடைய முதுகுப்பையில் சுமந்து கொண்டு வந்திருந்த வெடி பொருட்களை வெடிக்க செய்துள்ளார்.

இந்த சிரியா நாட்டவருக்கு ஓராண்டுக்கு முன்னால் தஞ்சக் கோரிக்கை மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்காலிகமாக தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டிருந்தார் என்று பவாரியன் உள்துறை அமைச்சர் யோகாகீம் ஹெர்மாண் தெரிவித்திருக்கிறார்.

இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியதற்கான நோக்கம் இன்னும் தெளிவாக தெரியவில்லை என்று அவர் கூறினார்.

இந்த நபர் இதற்கு முன்னர் இரண்டு முறை தற்கொலை செய்துகொள்ள முயன்றிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

http://www.bbc.com/tamil/global/2016/07/160725_germany_attack_ansback

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் முஸ்லீம்களின் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே 4 தாக்குதல்கள். ரயிலினுள் அல்லாவே பெரியவன் என்று கூக்குரலிட்டுக்கொண்டு பயணிகளைக் கோடரியால் வெட்டியும், கத்தியால் குத்தியும் படுகாயப்படுத்திவிட்டுத் தப்பியோட முனைந்த ஆப்கானிஸ்த்தான் அகதி முஸ்லீம் பயங்கரவாதி பொலிசாரினால் சுட்டுக் கொல்லப்பட்டான். இரு நாட்களின் பின், பல்பொருள் அங்காடியொன்றிற்குளள் உணவருந்திக் கொண்டிருந்தவர்களை அல்லாவே பெரியவன் என்று கூவிக்கொண்டு 9 பேரைச் சகட்டுமேனிக்குச் சுட்டுக் கொன்றுவிட்டு தனது தலையிலும் சுட்டுச் செத்துப்போனான் ஈரானிய முஸ்லீம் பயங்கரவாதி.

நேற்று போலந்து நாட்டுப் பெண்ணொருத்தியைக் கத்தியால் குத்திக்கொன்றுவிட்டு அல்லாவே பெரியவன் என்று கூக்குரலிட்ட சிரிய முஸ்லீம் பயங்கரவாதியை பொலிஸார் பிடித்துள்ளனர்.

இன்று, பலரைக் கொல்லும் நோக்குடன் தனது தோல்ப்பைக்குள் இரும்புச் சன்னங்கள் குவிக்கப்பட்ட வெடிகுண்டை கட்டிக்கொண்டு 2500 பேர் கண்டுகளித்துக்கொண்டிருந்த இசை நிகழ்ச்சிக்குள் போக எத்தனித்திருக்கிறான் சிரியாவைச் சேர்ந்த முஸ்லீம் பயங்கரவாதி. ஆனால் காவலர்கள் அவனில் சந்தேகம் கொண்டு மறுத்துவிடவே, அந்த இடத்திலேயே குண்டை வெடிக்கவைக்க அது அந்த முஸ்லீம் பயங்கரவாதியையும் கொன்று இன்னும் 12 பேரைக் காயப்படுத்தியும் இருக்கிறது.

காட்டுமிரண்டி மதத்தைப் பின்பற்றும் ஒரு மக்கள் கூட்டத்துக்காக இரங்கி தனது எல்லைகளைத் திறந்துவிட முன்வந்த ஜேர்மனியின் அதிபர் அஞ்சலா மேர்க்கலுக்கு இந்த முஸ்லீம் மதப் பயங்கரவாதிகள் நல்லதொரு பாடத்தைக் கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதுவரையில் ஜேர்மனியில் அகதி அந்தஸ்த்துக் கேட்டு விண்ணப்பித்த முஸ்லீம் பயங்கரவாதிகள் 163,000 பேரில், இதுவரை 23 பேருக்குத்தான் அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டிருக்கிறதாம். அந்த 23 பேரில் ஒருவந்தான் இன்று கொல்லப்பட்டவன்.

இன்னும், 162, 999 சாத்தியமுள்ள முஸ்லீம் பயங்கரவாதிகள் ஜேர்மனிக்குள் அங்காங்கே தமது தருணம் வரும்வரைக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஜேர்மனி இப்போதாவது சுதாரித்துக்கொண்டு, இந்த முஸ்லீம் அகதிகள் என்கிற போர்வையில் நாட்டிற்குள் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகள் அனைவரையும் நாடு கடத்தாவிட்டால், ஆயிரக்கணக்கான ஜேர்மனி அப்பாவிகள் இந்த மதவெறி பிடித்த காட்டுவாசிக் கும்பலால் கொல்லப்படுவது திண்ணம் !

 

காட்டுவாசிகளின் மதத்தைப் பின்பற்றி சக மனிதனைக் கொன்றுவிட்டு இறைவனுக்கே மகிமை என்று கூவும் ஒரு மக்கள் கூட்டத்திற்காக ஏன் இரங்கவேண்டும் என்கிற கேள்வி எழுகிறது. அவர்களை அவர்கள் பாட்டில் விட்டு விட்டால், சியா என்றும் சுன்னி என்று தமக்குள் நாய்களைப்போலக் கடிபட்டுச் செத்துப் போவார்கள்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரபுவசந்தம் ஜேர்மனியில் வீசுகின்றது.

  • தொடங்கியவர்

அன்ஸ்பர்க் தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்பு

 

ஜெர்மனியின் தெற்கு நகரான அன்ஸ்பர்க்கில் இசை திருவிழா ஒன்றில் 15 பேரை காயமடையச் செய்த தாக்குதலுக்கு, தீவிரவாத அமைப்பான இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

தாக்குதல்தாரி தயாரித்த கைபேசி வீடியோவில், ஐ .எஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பகாடியிடம் தாக்குதல் தாரி தனது விசுவாசத்தை காண்பிப்பதாக தெரிகிறது என பவேரியன் போலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜெர்மன் நாட்டின் தெற்கு பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் தஞ்சம் மறுக்கப்பட்ட சிரியா நாட்டு நபர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலைத் தொடர்ந்து, பொது இடங்களில் போலிஸ் பாதுகாப்பை அதிகரிக்க ஜெர்மன் உள்துறை அமைச்சர் தாமஸ் டி மைசிரி உத்தரவிட்டுள்ளார்.

தாக்குதல்தாரி இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜெர்மன் வந்ததாகவும், அங்கு தஞ்சம் மறுக்கப்பட்டதால் பல்கேரியாவிற்கு செல்ல இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

http://www.bbc.com/tamil/global/2016/07/160725_ansbach_attack

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.