Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்ப்பாணத்தில் இருந்து முழுநீள திரைப்படம்

Featured Replies

படத்தின் கதாநாயகன் ஜெராட் மற்றும் கதாநாயகி மிதுனா
தம்­பி­ஐயா தேவதாஸ்
பாடசாலை மாணவர்களாக தோன்றும் நடிகர்கள்
showImageInStory?imageid=287133:tn
 

தமிழ்ச் சினி­மாவை ரசிக்கும் ரசி கர்கள் இப்­பொ­ழுது உலகம் எங்கும் பரந்­தி­ருக்­கி­றார்கள். அத்­தனை பேருக்கும் தீனி­போட்ட தமிழ் சினிமா உலகம் சென்­னையில் இருக்­கி­றது என்­பதை நாம­றிவோம். பெரும்­பா லான தமிழ்த் திரைப்­ப­டங்கள் இப் பொழுதும் சென்­னையில் இருந்து தான் வெளிவரு­கின்­றன. ஆனாலும் இப்­பொ­ழுது தமிழ்ப்படங்கள் பிற நக ரங்­க­ளி­லி­ருந்தும் வெளி­வரத் தொடங் கு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது. தமிழ்ப்­ப­டங்கள் லண்டன், டொரண்டோ, பாரிஸ், கொழும்பு போன்ற நக­ரங்­க ளி­லி­ருந்து தயாரிக்கப்பட்டு வெளி­வ­ரு வதை சாதா­ரண­மாக அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக இருக்­கி­றது.

இவற்றை விட யாழ்ப்­பா­ணத்­தி­லி ருந்தும் தமிழ்ப்­ப­டங்கள் வெளி­வரத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன. பல குறும் ப­டங்கள் தயா­ரிக்­கப்­பட்ட யாழ்ப்­பா ணத்தில் இப்­பொ­ழுது முழு நீளத் தமிழ்த் திரைப்­ப­ட­மொன்று தயா ரிக்­கப்­பட்டு இலங்கை தணிக்கை சபையின் அனு­ம­தி­யையும் பெற்­றி­ருக் கி­றது. அந்தப் படத்தின் பெயர்தான் "மன­சுக்குள் ஒரு மழைச் சாரல்" என்­ப தாகும்.

திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி படத் தொகுப்புச் செய் ­தி­ருக்­கிறார். ‘விநோதன்’ என்ற இளைஞர். மூலக் கதை, பாடல்கள் எழுதி தயாரித்திருக்­கிறார். கு.உதயரூபன் என்ற இளைஞர்.

இது­வரை இலங் கையில் தயா­ரான பல தமிழ்ப்­ப­டங்கள் தோல்வியைத் தழு­வி­ய தற்கு முக்­கிய காரணம் வலு­வான கதை இல் லா­மையே என்று கரு தப்­ப­டு­கி­றது. ஆனால் இப்­ப­டத்தில் வலு­வான கதை இருக்­கி­றது. திரைப் படத் தயா­ரிப்­பா­ளர்கள் பலர் யாழ்ப்­பாணம் என்றால் அது போரும் அழி­வு­களும் கொண்ட பிர­தேசம் என்றே காட்ட முயன்­றி­ருக்­கி­றார்கள். ஆனால் இப்­ப­டி­யான அழ­கான காதல் கதை­களும் யாழ்ப்­பா ணத்தில் இருக்­கின்­றன என் பதை இப்­படக் குழு­வினர் நிரூ­பித்துக் காட்­டி­யுள்­ளனர்.

இதற்கு முன் தயா­ரிக்­கப்­பட்ட பல படங்­களில் உரை­யா­டல்கள் பல்­வேறு வகையில் அமைந்­தி­ருந்­தன. இந் தியப் படங்­களில் கூட யாழ்ப்­பாண உரை­யாடல் என்று ஏதோ புது­வி த­மான உரை­யா­டலை சேர்த்துக் கொள்­வார்கள்.

ஆனால் இப்­ப­டத்தில் நாக­ரி­க­மான யாழ்ப்­பாண பேச்­சு­வ­ழக்கில் உரை யா­டல்கள் இடம்­பெ­று­கின் றன. படத்­திற்கு ஆங்­கில மொழியில் 'சப் டைடில்' காட்­டப்­ப­டு­வது நல்ல முயற்­சி­யாகும்.

பெரும்­பாலும் பாட சா­லைக்­குள்­ளேயே கதை நிகழ்­கி­றது. ஒரு மாணவன் கதா­நா யகன். ஒரு மாணவி கதா­நா­யகி. இன் னொரு மாணவன் நகைச்­சுவைப் பாத் தி­ரத்தில் தோன்­று கிறான்.

இள­மையும் துடிப்பும் நிறைந்த கதா­நா ய­க­னாக ஜெராட் தோன்­று­கிறார். அழகும் நடிப்புத் திற­மையும் மிக்க கதா­நா­ய­கி­யாக மிதுனா தோன் று­கின்றார். அவர் 'கீறல்கள்' என்ற படத்­தை­விட இதில் சிறப்பாக நடித்­தி­ருக்­கிறார் எனலாம். கதா நா­ய­கனின் நண்­ப­னாக தோன்றும் லக் ஷ்மன் நகைச் சுவைக் காட்­சி களில் சோபிக் கிறார். கதா­நா­ய­கனின் தங்­கை யாகத்தோன்றும் மாலி­னியும் அரு­மை யாக நடிக்­கிறார். கதா­நா­ய­கனின் பெற்றோ­ராகத் தோன்றும் முல்லை யேசுதா­சனும் தங்­கேஸ்­வ­ரியும் தமது பாத்­தி­ரங்­களை உணர்ந்து நடித்­துள் ளனர். கதா­நா­ய­கியின் பெற்­றோ­ராக நடிக்கும் சந்­தி­ரனும் லங்­கா­ரா­ணியும் நன்­றாக நடித்­துள்­ளனர்.

ஆசி­ரி­யர்கள் பிரம்பு கொண்டு அடிப்­ப­வர்­க­ளாக காட்­டப்­ப­டு­கி­றார்கள். ராஜ் ஒளிப்­ப­திவு செய்­தி­ருக்­கிறார். யாழ்ப்­பா­ணத்தின் அழகுக் காட்­சிகள் பல­வற்றை வர்­ணத்தில் காண­மு­டி­கி றது. கடற்­கரைக் காட்­சிகள் எல்லாம் அருமை. நட­னக்­காட்­சிகள் பர­வா யில்லை.

இயக்­குனர் விநோதன் நுணுக்­க மாக படத்தை இயக்­கி­யி­ருக்­கிறார். அவ­ருக்கு உத­வி­யாக வின்­சனும் கோபி­காவும் கட­மை­யாற்­றி­யி­ருக்­கி றார்கள். இப்­ப­டத்தில் பங்­கு­பற்­றியோர் பலர் குறும்­ப­டங்­க­ளுடன் தொடர்பு டை­ய­வர்கள். குறும்­பட அனு­ப­வங் களும் இப்­ப­டத்தின் வெற்­றிக்கு ஒரு காரணம் எனலாம். சுதர்சன் இசை­ய மைத்­தி­ருக்­கிறார். பாடல்கள் எல் லாமே இனி­மை­யாக இருக்­கின்­றன. யுகேஸ், தர்சன், சுதர்சன் ஆகியோர் பின்­னணி பாடி­யி­ருக்­கிறார்.

டிஜிட்டல் தொழில்­நுட்பம் வந்த பின்பு எந்த இடத்­திலும் படம் தயாரிக் கலாம். என்ற நிலை இப்பொழுது தோன்றியிருக்கிறது. ஆனால் சிறந்த கலைஞர்களாலேயே சிறந்த படத்தை உருவாக்க முடியும் என்ற உண்மையை யாராலும் மறுக்க முடியாது. அந்த வகையில் தயாரிப்பாளர் கே.உதயரூபனையும் இயக்குநர் விநோதனையும் பாராட்ட வேண்டும் மனசுக்குள் ஒரு மழைச் சாரல் என்ற இப்படம் சிறந்த படமாக வெளிவந்திருக்கிறது. இனிமேல் இது போன்ற சிறந்த படங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து நிச்சயம் வெளிவரும் என்று நாம் நம்பலாம்.

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=28/07/2016

 

showImageInStory?imageid=287139:mr

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

"மனசுக்குள் ஒரு மழைச்சாரல்" மண்மணம் வீசி வெற்றீநடை போட வாழ்த்துக்கள்...! tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.