Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப்பனிடம் லஞ்சம் வாங்கிய ஊழியர்...! - ஒரு கலகல கடத்தல் அத்தியாயம்

Featured Replies

வீரப்பனிடம் லஞ்சம் வாங்கிய ஊழியர்...! - ஒரு கலகல கடத்தல் அத்தியாயம்

Veerapan%20Cover.jpg

ரு முறை வீரப்பன் அதிகாரிகளை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டு, மூன்று கோடி ரூபாய் அரசாங்கத்திடம் கேட்கிறார். பல நாள் காத்திருந்த அரசாங்கமும், அவனுக்கு பணம்  கொடுக்க ஒரு கட்டத்தில் சம்மதித்துவிடுகிறது. பணம் கொடுக்க வருபவரின் அடையாளம் வெள்ளை சட்டையும், ஒரு இருச்சக்கர மோட்டார் வாகனமும்தான்.  

அந்த காட்டிற்கு மத்தியில் இருக்கும் கிராமத்திற்கு செல்லும் பாதையில், வீரப்பனும் அவனது கூட்டாளிகளும், பணத்தை பெறுவதற்காக பல மணி நேரம் காத்திருக்கிறார்கள். அப்போது, அந்த சாலையில் ஒருவர் மிதிவண்டியில் தண்ணீர் பானைகளைக் கட்டிக் கொண்டு செல்கிறார். அவரை ஊன்றி கவனித்த வீரப்பனுக்கு சந்தேகம் வருகிறது. அந்த நபர், வீரப்பன் குழு இருக்கும் இடத்தை நெருங்கும் போது, வீரப்பன் பாய்ந்து சென்று துப்பாக்கியை நீட்டுகிறான். அந்த நபர் மிதிவண்டியை சாலையிலேயே போட்டுவிட்டு, தன் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் ஓடுகிறார். ஆம், வீரப்பன் சந்தேகப்பட்டது போல் அந்த நபர், காவல் துறையைச் சேர்ந்தவர்தான்.

மீண்டும் பணத்திற்காக காத்திருக்கும் படலம் துவங்குகிறது. ஏறத்தாழ இரண்டு மணி நேர காத்திருப்புக்கு பின், பணத்துடன் ஒரு நபர் வருகிறார். சில விசாரிப்புகளுக்கு பின் பணத்தை பெற்றுக் கொண்டு, அதை எண்ணி பார்த்த போது, அதில் மூன்று கோடி எல்லாம் இல்லை. இருந்தது வெறும் மூன்று லட்சம் ரூபாய் தான். வீரப்பன் கோபமாக, “என்ன இது... எங்கே மீதி தொகை...?” என்கிறார். பணம் எடுத்து வந்த ஊழியரோ பயத்துடன், “ இவ்வளவு தொகைதான் என்னிடம் கொடுத்தார்கள்... எனக்கு ஒன்றும் தெரியாது...” என்கிறார். கையறு நிலையில் வீரப்பன், வந்த தொகையையும் விட மனம் இல்லாமல், பணத்தை எடுத்துக் கொண்டு, “சரி... நீ திரும்பப் போ...” என்கிறார். ஆனால், பணம் எடுத்து வந்த நபரோ அங்கேயே நின்றுகொண்டு இருக்கிறார். இத்தனை காலம் தன்னை பார்த்தவர்கள், தன்னை கண்டவுடன் அஞ்சி ஓடுவதுதான் வழக்கம். ஆனால், இந்த நபரோ திரும்பச் செல்லாமல் அந்த இடத்திலேயே நின்று கொண்டு இருந்தது, வீரப்பனுக்கு வியப்பாக இருக்கிறது. வீரப்பன் சத்தமாக, அந்த நபரை பார்த்து, “என்ன...” என்கிறார். அந்த நபர் கம்மிய குரலில், “எனக்கு ஏதும் இல்லையா..." என்கிறார். பின் வீரப்பன் அந்த நபருக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்து அனுப்பி இருக்கிறார்.

இந்த சம்பவத்தை, பின்னர் தன்னால் தவறுதலாக கடத்தப்பட்ட  கிருபாகர் மற்றும் செனானியிடம் விவரித்து இருக்கிறார்.

கிருபாகர் மற்றும் செனானி, கானுயிர் ஆராய்ச்சியாளர்கள். அவர்கள் பந்திப்பூர் வனத்தில் மூன்று ஆண்டுகளாக தங்கி இருந்து ஆய்வில் ஈடுப்பட்டிருந்தபோதுதான் அந்த சம்பவம் நிகழ்கிறது. ஆம், மத்திய அரசின் உயர் அதிகாரிகள் என்று தவறுதலாகக் கருதி, இந்த இருவரையும் கடத்திவிடுகிறார். வீரப்பனுடன் பழகத் துவங்கிய சில நாட்களில், இவர்களுக்குள் ஒரு நெருக்கம் வந்துவிடுகிறது. வீரப்பன் தன் வாழ்வில் நடந்த பல சுவாரஸ்ய தகவல்களை இவர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.  

இவர்கள் வீரப்பனுடன் கழித்த அந்த 14 நாட்களையும், "Birds, Beasts and Bandits. 14 days with Veerappan" என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி இருக்கிறார்கள். அதில்தான், நான் மேலே குறிப்பிட்ட சம்பவத்தையும் பதிவு செய்து இருக்கிறார்கள்.

ஜப்பானியர்கள் எங்கள் காட்டை சிதைத்தார்கள்:

14%20days%20with%20Senani.jpgவீரப்பன் இவர்களிடம் பகிர்ந்துக் கொண்ட கதைகளில் ஒன்று, அவனது  சொந்த ஊருக்கு வருகை புரிந்த ஜப்பானியர்களின் கதை. நூற்று எழுபத்து ஐந்து பக்கங்களைக் கொண்ட அந்தப் புத்தக்கத்தில், மூன்று பத்திகளே வரும் அந்த நிகழ்வு மிக முக்கியமானது. ஒரு வேளை வீரப்பன் சந்தனக் கடத்தல் வீரப்பனாக மாறியதற்கும் அந்த ஜப்பானியர்களின் வருகை ஒரு காரணமாகவும் இருக்கலாம்.

வீரப்பன், “மாதேஸ்வரன் மலை அடிவாரத்தில் இருக்கும் கோபிநத்தம்தான் எங்கள் சொந்த ஊர்.  யானைகள் உள்ளிட்ட பல வன விலங்குகள் எங்கள் ஊருக்கு வரும். எங்கள் பயிர்களை அழிக்கும். ஆனால், நாங்கள் என்றுமே பசியாக இருந்ததில்லை. எங்களுக்கு தேவையான உணவு காட்டில் கிடைத்தது. நாங்கள் வேட்டைக்கு சென்றோம். எங்கள் உணவுக்காக வேட்டையாடினோம். எல்லாம் நலமாக சென்று கொண்டு இருந்தது. அப்போதுதான் அந்த குள்ளமான ஜப்பானியர்கள் எங்கள் காட்டிற்கு வந்தார்கள். எங்கள் பகுதியில் கிரானைட் பிசினஸை துவங்கினார்கள். எங்கள் மலைகள் குண்டுகள் வைத்து சிதைக்கப்பட்டன. எங்கள் கிராமங்களையும், எங்கள் காடுகளையும் தூசுப் படலம் சூழ்ந்தது. பின் எல்லாம் முடிந்தது. எங்கள் தங்க நிலம், சுடுகாடாக மாறியது.

இது மட்டுமல்ல, அப்போதெல்லாம் எங்கள் காடுகளில் ஒரு ஆட்டையும் பார்க்க முடியாது. காடுகளில் ஆடு மேய்ப்பவர்களுக்கு கடுமையான தண்டனை இருந்தது. இப்போது எங்கு பார்த்தாலும் ஆடுகள். செடி கொடிகள் என எதுவும் வளர்வதில்லை. சபிக்கப்பட்ட ஆடுகள் காடுகளை பாழாக்கிவிட்டன. பின் எப்படி மழை வரும்...?” என்று தன் பால்ய நினைவுகளை அவர்களுடன் பகிர்ந்து இருக்கிறான்.

எப்போதும் விதியை நம்பிய வீரப்பன்:

வீரப்பன் தீவிரமான  கடவுள் பக்தனாக இருந்து இருக்கிறார். ஒரு நாள் வீரப்பன் பூஜை செய்து கொண்டிருந்தபோது, கிருபாகர் மற்றும் செனானியிடம், "ஏன் நீங்கள் பூஜை செய்ய மாட்டீர்களா... " என்று கேட்டு இருக்கிறார். அதற்கு செனானி, “எங்களுக்கு எந்தக் கடவுளையும் தெரியாது. ஆனால், நீங்கள் பூஜை செய்யும் முறை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. உங்களிடம் உருவ வழிப்பாடு இல்லை... கோயில் இல்லை...”என்று சொல்லி உள்ளார். அதற்கு வீரப்பன், “ஏன் கோயில் வேண்டும், சிலைகள் வேண்டும்... கடவுள் எங்கும் நிறைந்து இருக்கிறார் அல்லவா...? நல்ல உள்ளம் மட்டும் இருந்தால் போதாதா... நீங்கள் தான் கோயிலுக்காகவெல்லாம் சண்டை போட்டுக் கொள்கிறீர்கள்” என்றுள்ளார் சர்வசாதாரணமாக.

Veerapan%20300.jpgவீரப்பனுக்கு எப்போதும் ‘விதி’யின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருந்து இருக்கிறது. தனது வாழ்வில் நடந்த அனைத்து சம்பவங்களுக்கும் காரணம் விதி என்றே நம்பி இருக்கிறார். இது குறித்து அவர்கள் கேட்டபோது, ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார். “நான் ஒரு முறை காட்டில் உலாவிக் கொண்டிருந்தபோது, பாதையில் ஒரு புலி உறங்கிக் கொண்டிருந்தது. நான் என்னுடைய தைரியத்தை சோதித்துப் பார்க்க விரும்பினேன். நான் புலியின் பக்கத்தில் நெருங்கினேன். புலி என்னை பார்ப்பது போல் இருந்தது. ஆனால், புலி உறங்கிக் கொண்டிருக்கும்போது, நம்மை பார்ப்பது போல்தான் இருக்கும். அதனால், இன்னும் அதன் அருகே சென்றேன். திடீரென்று புலி விழித்து என்னைப் பார்த்தது. உண்மையாக நான் திடுக்கிட்டுவிட்டேன். எனது துப்பாக்கியால் அதனை சுட்டு வீழ்த்தினேன். பிறகுதான் தெரிந்தது, அந்தப் புலி முன்பே முள்ளம் பன்றியால் தாக்கப்பட்ட, இதயத்தில் ஏற்பட்ட கடுமையான காயத்துடன்  நகர முடியாமல் படுத்து இருந்து இருக்கிறது என்று. ஆனால், அதன் விதி என் கையால்தான்  சாக வேண்டும் என்று இருந்து இருக்கிறது... இப்போதாவது புரிகிறதா விதியின் வலிமை என்னவென்று...?” என்று விவரித்துள்ளான்.

பின்பு பேச்சு வேறு எங்கு எல்லாமோ சென்று இருக்கிறது. அப்போது கிருபாகர், “நாங்கள் ஒன்பது ஆண்டுகள் முதுமலையில் தங்கி,  பறவைகள் குறித்து ஆராய்ச்சி செய்து, பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருந்தோம். அப்போது எங்களுக்கொரு விநோத ஆசை வந்தது, உங்களை பேட்டி கண்டு பத்திரிகைகளில் எழுத வேண்டும் என்று. பல காடுகள் சுற்றினோம். ஆனால், உங்களை கண்டுபிடிக்க முடியவில்லை” என்று கூறியுள்ளார்.

அதற்கு வீரப்பன் சிரித்துக்கொண்டே, “இதைதான் விதி என்கிறேன். பார்த்தீர்களா... நீங்கள் காடு, மலை என்று அலைந்தபோது என்னை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், நானே 150 மைல் பயணம் செய்து, உங்கள் வீட்டிற்கு வந்து, உங்களை அழைத்து வந்து இருக்கிறேன்... இதுதான் விதி...” என்று கூறி உள்ளான்.

சரணடைய விரும்பிய வீரப்பன்:

வீரப்பனை சரணடையச் சொல்லி இவர்கள் அறிவுரை வழங்கி இருக்கிறார்கள். வீரப்பனும் அப்போது அந்த முடிவில்தான் இருந்து Krupakar%20and%20Senani%20img.jpgஇருக்கிறார். ஆனால், வீரப்பனுக்கு தன் உயிர் குறித்த அச்சம் இருந்து இருக்கிறது. நாம் கைதானால், நிச்சயம் காவல் துறை நம்மை கொன்று விடும். “நான் சரணடைய தயார். ஆனால், எனக்கு சில நிபந்தனைகள் இருக்கின்றன. அதனை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்.” என்று கூறி உள்ளார். அதற்கு இந்த இருவரும், “சரி... உன் நிபந்தனைகளை ஒரு ஆடியோ கேசட்டில் பதிவு செய்து தா...நாங்கள் அதனை கர்நாடாகா முதல்வரிடம் கொண்டு சேர்க்கிறோம்” என்று கூறி உள்ளார்கள்.

வீரப்பன் தன் நிபந்தனைகளை ஆடியோ கேசட்டில்  வழக்கமான தன் மிரட்டலான தொனியில் பேசி பதிவு செய்யத் துவங்கி இருக்கிறார்.  அப்போது குறுக்கிட்ட  செனானி, “இதை கேட்கப் போவது மாநில முதல்வர் மற்றும் உயர் அதிகாரிகள். நாம் கோரிக்கை வைக்கிறோம். அதை இவ்வளவு மிரட்டலாக எல்லாம் வைக்கக் கூடாது. அமைதியாக பேசுங்கள்” என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள். கடுமையாக பயிற்சி செய்து வீரப்பனும் அமைதியாக பேசி இருக்கிறார். ஆனால், அந்த அமைதியான பேச்சுதான், சரணடையும் திட்டத்தையே பாழாக்கி இருக்கிறது.

ஆம், இவர்கள் வீரப்பனிடமிருந்து விடுவிக்கப்பட்டு ஊர் திரும்பிய உடன், அப்போது முதல்வராக இருந்த பட்டேலை சந்தித்து இந்த கேசட்டை அளித்து இருக்கிறார்கள். ஆடியோவில் வீரப்பன் உரையைக் கேட்ட அங்கிருந்த காவலர்களுக்கு அதிர்ச்சி. அவர்கள் குறுக்கிட்டு, “ வேண்டாம்... அவனது நிபந்தனைகளுக்கு ஒத்துக் கொள்ளாதீர்கள். பார்த்தீர்களா... வீரப்பன் குரல் கம்மியிருக்கிறது. இது அவனால், முன்பு போல் செயல்பட முடிவதில்லை என்பதையே காட்டுகிறது. அதனால்தான் அவன் சரணடைய விரும்புகிறான்” என்று கூறி உள்ளார்கள்.  இப்படியாக அவனது சரணடையும் முயற்சி பாழாகி இருக்கிறது.

இந்த சம்பவங்கள் மட்டுமல்ல, புத்தகம் முழுவதும் பல சுவாரஸ்ய சம்பவங்கள் இடம்பெற்று இருக்கின்றன. அதுவும், எளிமையான ஆங்கிலத்தில் கிருபாகரும், செனானியும் பதிவு செய்து இருக்கிறார்கள். வீரப்பன் குறித்த பல பதிவுகள் இருந்தாலும், வீரப்பனை இன்னொரு கோணத்தில் அணுகுகிறது இந்த புத்தகம்.

http://www.vikatan.com/news/coverstory/66805-govt-employee-who-demanded-bribe-from-veerappan---humorous-kidnap-chapter.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.