Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாண முதல்வரின் செயற்பாடுகளால் அதிருப்தியில் அரசு

Featured Replies

வடமாகாண முதல்வரின் செயற்பாடுகளால் அதிருப்தியில் அரசு
 
 
வடமாகாண முதல்வரின் செயற்பாடுகளால் அதிருப்தியில் அரசு
இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்கும் நோக்கில் தேசிய அரசாங்கம் சிந்தித்து, அவதானத்துடன் முன்னேறிச் செல்லும் நிலையில், வடமாகாண முதல்வரின் செயற்பாடுகளும், அவர் முன்வைக்கும் கருத்துக்களும், மிகவும் பாரதூரமானது என அமைச்சர் ராஜித சேனாரத்ன விகனம் தெரிவித்துள்ளார்..
 
வடக்கு-கிழக்கு இணைப்பு மற்றும் சரவதேச விசாரணை அவசியம் என வடமாகாண முதலமைச்சர் கருத்துக்களை முன்வைத்துள்ள நிலையில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துகையிலேயே அமைச்சரவை ஊடகப்பேச்சாளர் ராஜித சேனாரத்ன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், அடுத்த ஆண்டு இலங்கை தொடர்பில், ஐ.நா கூட்டத்தொடரில் வெளியிடப்படும் அறிக்கையில் இலங்கை மனித உரிமைகள் விடயத்தில் சாதகமான நிலைமைகளை கொண்டுள்ளது என்ற ரீதியிலான அறிக்கையே முன்வைக்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவா விவகாரங்கள் ஆரம்பமாகும் முன்னர் நாம் சகல பிரச்சினைகளையும் முடிவுக்கு கொண்டுவந்துவிடுவோம் என்றும் கூறினார்.

http://onlineuthayan.com/news/16065

  • தொடங்கியவர்
வடக்கு முதல்வரின் கூற்று பார­தூ­ர­மா­னது
அரசின் நிலையை முத­ல­மைச்சர் புரிந்­து­கொள்­ள­வேண்டும் என்­கிறார் ராஜித

(ஆர்.யசி)

இலங்­கைக்கு எதி­ராக எழுந்­துள்ள அனைத்து சர்­வ­தேச அழுத்­தங்­களும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்­துடன் முடி­வுக்கு வந்­து­விடும். ஐ.நா. மனித உரி­மைகள் கூட்­டத்­துடன் சர்­வ­தேச கடி­வா­ளத்தில் இருந்து இலங்கை விடு­பட்­டு­விடும். ஏனெனில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவா விவ­கா­ரங்கள் ஆரம்­ப­மாகும் முன்னர் நாம் சகல பிரச்­சி­னை­க­ளையும் முடி­வுக்குக் கொண்­டு­வந்­து­வி­டுவோம் என்று அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

தேசிய அர­சாங்கம் தீர்வு தொடர்பில் சிந்­தித்து அதற்­க­மைய நகர்ந்­து­கொண்­டுள்ள நிலையில் வட­மா­காண முதல்­வரின் செயற்­பா­டு­களும் அவர் முன்­வைக்கும் கருத்­துக்­களும் மிகவும் பார­தூ­ர­மா­ன­வை­யாக அமைந்­துள்­ளன. எவ்­வாறு இருப்­பினும் தேசிய பிரச்­சி­னைக்குத் தீர்வு காணும்­போதும் புதிய நகர்­வு­களை கையாளும் போதும் தேசிய பாது­காப்­பிற்கு அமை­யவே தீர்­வுகள் சாத்­தி­ய­மாகும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

வடக்கு–கிழக்கு இணைப்பு மற்றும் சர­வ­தேச விசா­ரணை அவ­சியம் என வட­மா­காண முத­ல­மைச்சர் கருத்­துக்­களை முன்­வைத்­துள்ள நிலையில் அர­சாங்­கத்தின் நிலைப்­பாட்டை வின­வி­ய­போதே அமைச்­ச­ரவை ஊட­கப்­பேச்­சாளர் ராஜித சேனா­ரத்ன மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

போர்க்­குற்றம், சர்­வ­தேச விசா­ர­ணைகள் மற்றும் இலங்கை தமிழர் விவ­காரம் தொடர்பில் சர்­வ­தேச நாடுகள் கேள்வி எழுப்­பி­வரும் நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் இலங்கை தொடர்­பி­லான அறிக்­கை­யுடன் இந்த கேள்­விகள் அனைத்தும் முடி­வுக்கும் கொண்­டு­வ­ரப்­படும்.

அடுத்த ஆண்டு இலங்கை தொடர்பில் வெளி­யி­டப்­படும் அறிக்­கையில் இலங்கை மனித உரி­மைகள் விட­யத்தில் சாத­க­மான நிலை­மை­களை கொண்­டுள்­ளது என்ற ரீதி­யி­லான அறிக்­கையே முன்­வைக்­கப்­படும். ஏனெனில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவா விவ­கா­ரங்கள் ஆரம்­ப­மாகும் முன்னர் நாம் சகல பிரச்­சி­னை­க­ளையும் முடி­வுக்கு கொண்­டு­வந்­து­வி­டுவோம்.

இலங்­கையில் ஆட்சி மாற்றம் இன்று சிறு­பான்மை மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு எட்­டக்­கூ­டிய வகை­யி­லேயே நகர்­வுகள் இடம்­பெ­று­கின்­றன. ஆட்சி மாற்­றத்தில் சிறு­பான்மை மக்கள் அமை­தி­யா­கவும் ஜன­நா­ய­கத்தைப் பலப்­ப­டுத்தும் வகை­யிலும் வாழ்ந்து வரு­கின்­றனர். இன்று நல்­லி­ணக்­கத்தை பலப்­ப­டுத்தும் வகையில் நாம் சிறு­பான்மை மக்­க­ளுடன் இணைந்து செயற்­பட்டு வரு­கின்றோம். வடக்கில் யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்ட மக்கள் கடந்த காலங்­களில் தமது வாழ்­வா­தா­ரத்தை இழந்தும், அடிப்­படை பிரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுத்தும் வந்­தனர். தமது காணி­களில் இரா­ணுவம் முகாம்­களை அமைத்­தி­ருந்­த­மையும் மக்கள் முகாம்­களில் வாழ்ந்­த­மையும் சர்­வ­தேச அளவில் பாரிய சிக்­கல்­களை ஏற்­ப­டுத்­தி­யது. எனினும் ஆட்சி மாற்றம் இன்று ஜன­நா­யக ரீதியில் நல்ல நகர்­வு­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இன்று தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண்­பதில் அர­சாங்கம் விரை­வாக செயற்­பட்டு வரு­கின்­றது.

எனினும் வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களை விளங்­கிக்­கொள்ள வேண்டும். நாம் கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற அனை­வ­ரதும் ஒத்­து­ழைப்பு அவ­சியம். இதில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு,வட­மா­காண சபை மற்றும் முஸ்லிம் தரப்பும் பூரண ஒத்­து­ழைப்­பு­களை வழங்க வேண்டும். தேசிய அர­சாங்கம் தீர்வு தொடர்பில் சிந்­தித்து அதற்­க­மைய நகர்ந்­து­கொண்­டுள்ள நிலையில் வட­மா­காண சபையும் வடக்கு முதல்­வரும் நல்­லி­ணக்­கத்தை குழப்பும் வகையில் இன­வாத கருத்­து­க­ளையும் பிரி­வி­னையை பலப்­ப­டுத்தும் கருத்­துக்­க­ளையும் முன்­வைப்­பது ஒரு­போதும் ஏற்­று­கொள்ள முடி­யாத விட­ய­மாகும். வடக்கு– கிழக்கு இணைப்பு மற்றும் சர்­வ­தேச விசா­ரணை என்ற கருத்­துக்­களை அவர் முன்­வைப்­பது மிகவும் பார­தூ­ர­மான விட­ய­மாகும். யுத்தக் குற்ற விசா­ர­ணை­களில் சர்­வ­தேச ஆலோ­ச­னைகள், உத­விகள் அமையும். ஆனால் விசா­ரணைப் பொறி­முறை உள்­ளக ரீதி­யி­லேயே அமையும். இதுவே ஜனா­தி­பதி பிர­தமர் ஆகிய இரு­வ­ரதும் நிலைப்­பா­டாகும்.வடக்கு – கிழக்கு இணைப்பு என்­பது இரண்டு சமூகம் சார்ந்த விட­ய­மாகும். தமிழ் முஸ்லிம் மக்­களின் ஏகோ­பித்த விருப்­பத்­துக்கு அமைய தீர்வு காணப்­பட வேண்­டிய விட­ய­மாகும். இதில் வெறும் அர­சியல் நகர்­வுகள் அமை­வதை ஏற்­று­க்கொள்ள முடி­ யாது. எவ்­வாறு இருப்­பினும் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு காணும்­போதும் புதிய நகர்­வு­களை கையாளும் போதும் தேசிய பாது­காப்பை நாம் கருத்­தில்­கொள்ள வேண்டும். தேசிய பாது­காப்­பிற்கு அமை­யவே தீர்­வுகள் சாத்­தி­ய­மாகும்.

ஆரம்­பத்தில் வடக்கில் அதி­க­ள­வான இரா­ணுவக் குவிப்பு மேற்­கொள்­ளப்­பட்ட நிலையில் வடக்கில் இருந்த இரா­ணு­வத்தை பெரு­ம­ளவில் குறைத்­துள்ளோம். பொது­மக்­களின் காணி­களில் இருந்து இரா­ணு­வத்தை முழு­மை­யாக வெளி­யேற்றி தேவைக்­கேற்ற வகையில் பாது­காப்பை பலப்­ப­டுத்­தி­யுள்ளோம். அவ்­வா­றான நிலை

யில் ஆரம்­பத்தில் எமக்கு எதி­ராக இருந்த சர்­வ­தேச அழுத்­தங்கள் இன்று மாற்­ற மடைந்து சர்­வ­தேச நாடு­களின் பூரண ஒத்­து­ழைப்பு எமக்கு கிடைத்து வருகின்றது. அதேபோல் தேசிய பிரச்சினைகள் அனைத் திற்கும் ஆரோக்கியமான வகையில் தீர்வை பெற்றுகொடுக்க முயற்சித்து வருகின்றோம். தமிழ் மக்களின் பிரச்சினைகளை நாம்

நன்கு உணர்ந்து முக்கியமான பிரச்சினை களை தீர்க்க அக்கறை காட்டுகின்றோம். அதே சந்தர்ப்பத்தில் பெரும்பான்மை சிறு

பான்மை மக்கள் ஏற்றுகொள்ளும் வகையி லும் அனைவரும் ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவமாக வாழும் ரீதியிலும் ஒரு தீர்வை

வழங்குவதே சரியானதாக அமையும் என்றார்.

 

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=09/08/2016

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சருக்கு கட்டாயம் நாம் ஆதரவு தர வேண்டும். அது வேணும், இது வேணும் என்று அவர் கேட்டா அதிருப்தியாம்.

ஒண்டுமே குடுக்கக் கூடாது என்று மகிந்த தலைமை இனவாதிகள் சொன்னால் திருப்தியாமோ?

சம், சும் கோஸ்டி பேசும் போது, விக்கியர் பின்னால இருந்து இவ்வாறு பேசுவது நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.