Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் எண்ணெய்ப் படிவுப் படுக்கை அகழ்வு;இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வழங்கப்பட்டன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் எண்ணெய்ப் படிவுப் படுக்கை அகழ்வு;

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வழங்கப்பட்டன

105 லட்சம் டொலர்களுக்கு நோர்வேயின் தரவுகள் கொள்முதல்

மன்னார் கடல் பிராந்தியத்தில் உள்ள எண்ணெய்ப் படிவுப் படுக்கைகளில் ஒன்றை இலங்கை அரசாங்கம் அகழ்வுப் பணிக்காக இந்தியாவுக்கு வழங்கியுள்ளது.

காவேரி நதிப்படுக்கைக்கு அண்மித்த தாக உள்ள படுக்கைகளில் ஒன்றே இந்தியா வின் எண்ணெய் மற்றும் இயற்கைவாயு கூட்டுத்தாபனத்துக்கு (ONஎகு) வழங்கப்பட் டுள்ளது.

இதேபோன்ற இரண்டாவது படுக்கை (அதுவும் காவேரி நதிப்படுக்கையை அண் மித்தது) சீனாவுக்கு வழங்கப்பட் டுள்ளது.

எஞ்சிய ஆறு எண்ணெய்ப் படிவுப் படுக்கைகளும்எதிர்வரும் மூன்று மாதங் களில் ஏனைய விண்ணப்பதாரிகளுக்கு வழங்கப்படும் என்று இலங்கையின் போக்கு வரத்து பெற்றோலிய வள அமைச்சர் ஏ. எச்.எம். பௌசி தெரி வித்தார்.

புதுடில்லியில் நடைபெறும் "பெற் றோரெக்' மாநாட்டை முன்னிட்டு தகவல் வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் கடற் பிராந்தியத்தில் உள்ள எண்ணெய்ப் படிவுப் படுக்கைகள் குறித்த ஆய்வு மற்றும் கணிப்பீட்டுப் பணிகளை நோர்வேயைச் சேர்ந்த நோப்பெக் (Nணிணீஞுடு) நிறுவனம் மேற்கொண்டிருந்தது.

நோர்வே நிறுவனத்திடம்

விலை கொடுத்து வாங்கப்பட்டது

நோர்வே நிறுவனத்திடமிருந்து 105 லட்சம் டொலர்கள் செலுத்தி, ஆய்வு மற்றும் கணிப்பீட்டுத் தரவுகளை இலங்கை அரசாங்கம் வாங்கிவிட்டது.

அந்த விவரங்களில் அடங்கியுள்ள செயற்பாட்டு விவரங்களுக்கு அர்த்தம் கண்டு வேலைத் திட்டங்களை வகுத்துத்

தரும் பணி இப்போது ஆஸ்திரேலியாவின் ""ஸ்பெக்ராம்'' நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவல்களையும் அமைச் சர் பௌசி இங்கு வெளியிட்டார்.

இலங்கையில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை விஸ்தரிக்கவும், நாளாந்தம் 100,000 பரல் எண்ணையைச் சுத்திகரிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும

அதை விற்கவோ கொடுக்கவோ இலங்கை அரசுக்கு என்ன உரிமை.தமிழீழ அரசுக்கே அவ்வுரிமை வீணாக சீனாவையும் இந்தியாவையும் மாட்டும் நடக்கும் செய்ற்பாடு இது

நல்லதொரு ஆப்பு இழுபடுது :rolleyes:

ம்ம்ம்ம்.......... எல்லாம் ஒவ்வொரு பக்கத்தாலை போகுது போல கிடக்குது!!!!

நாங்களோ "இளவு காத்த கிளி" .....

சீச்சீ .... "ஐயர் வரும் மட்டும் அமாவாசை காத்திருக்கும்"!!!!!!!!!!!!!!!!!!

உமக்கு தெரியதோ அமாவாசை வாறதே பொளர்னமிக்கு தானாம்.

மன்னாரில் எண்ணை அகழ்வு: இந்தியா- சீனாவுக்கு அழைப்பு.

சிறிலங்கா அரசாங்கம் தன்வசம் உள்ள 8 எண்ணைப் படிவுகளை அகழும் பணிகளை இந்தியாவிற்கும் சீனாவிற்கும் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக தலா ஒவ்வொரு படிவுகள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் மிகுதி 6 படிவுகளும் 3 மாதங்களில் வழங்கப்படும் எனவும் சிறிலங்காவின் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

ஆரம்பத்தில் எண்ணெய்ப் படிவுகளை அகழும் பணிகளை நோர்வேயை தளமாக கொண்ட நிறுவனம் ஒன்றே மேற்கொண்டு வந்தது. எனினும் பின்னர் சிலங்கா அரசு எண்ணெய்ப்படிவுத் தகவல்களை ஆய்வு செய்யும் பொறுப்பை அவுஸ்திரேலியாவில் உள்ள நிறுவனம் ஒன்றிற்கு வழங்கியிருந்தது.

மேலும் தன்னிடம் இருந்த எண்ணைப்படிவுகள் தொடர்பான தரவுகளில் இரு தொகுதிகளை ஏற்கனவே பிரிட்டிஸ் காஸ், இந்தியன் இயற்கை வாயு மற்றம் எண்ணை நிறுவனங்களுக்கு சிறீலங்கா விற்றுவிட்டது.

கடந்த வியாழக்கிழமை இந்தியாவின் டெல்லியில் நடைபெற்ற பெற்றோலியத் தொழில்நுட்பம் தொடர்பான மாநாட்டில் உரையாற்றிய சிறிலங்காவின் தொடரூந்து, போக்குவரத்து மற்றும் எரிபொருள் வளத்துறை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி இந்த தகவல்களை தெரிவித்தார்.

நோர்வே நாட்டின் ரி.ஜி.எஸ் நோபெக் என்னும் நிறுவனம் ஆராய்வுகளை மேற்கொண்டு மன்னார் பகுதியில் எண்ணெய்ப் படிவுகள் இருப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக கண்டறிந்தது.

எனவே முதலில் அகழ்வுப் பணிகளை செய்வதற்கு நோர்வே நாட்டு ரி.ஜி.எஸ் நோபெக் நிறுவனத்தையே கேட்டிருந்தோம். எனினும் பின்னா 10.5 மில்லியன் டொலர்களுக்கு அவர்களிடம் உள்ள தகவல்களை வாங்கி அவுஸ்திரேலியாவில் உள்ள நிறுவனம் ஒன்றிற்கு வழங்கியுள்ளோம்.

நாம் தற்போது ஆரம்ப கட்டத்திலேயே உள்ளோம். அதிக மனித வலுவையும் தரவுகளையும் ஈடுபடுத்த வேண்டும். இரு தகவல் தொகுதிகள் பிரித்தானியா எரிவாயு, இந்தியன் இயற்கை வாயு மற்றம் எண்ணெய் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டுள்ளது.

தற்போது உள்ள ஒரு நாளைக்கு 50,000 பரல்கள் என்ற எண்ணெய் சுத்திகரிப்பு பணிகளை 100,000 பரல்களாகவும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆனால் சிறிலங்காவில் அகழப்படும் எண்ணெயின் தரம் எத்தகையது என தற்போது கூறமுடியாது எனவும் எனினும் இது சிறிலங்காவை பொருளாதார வழிகளில் உயர்த்த உதவும் எனவும் கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளை நோக்கினால் அவற்றிடம் வேறு வளங்களோ அல்லது மக்களை கவரும் பிரதேசங்களோ இல்லை. ஆனால் அவர்கள் செழிப்பாக இருப்பதற்கு அந்த நாடுகள் கொண்டுள்ள எண்ணெய் வளங்கள் தான் காரணம் என அது மேலும் தெரிவித்துள்ளது.

-Puthinam-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.