Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போலி கிரெடிட் கார்டுகள் ரூ.30 லட்சம் மோசடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போலி கிரெடிட் கார்டுகள்

ரூ.30 லட்சம் மோசடி

இலங்கை வாலிபர் கைது

சென்னை, ஜன. 20:

போலி கிரெடிட் கார்டுகள் மூலம் 30 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த இலங்கையைச் சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிட மிருந்து 28 போலி கிரெ டிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன் படுத்தி வாங்கப்பட்ட 2 சொகுசு கார் களை யும் கைப் பற்றி னார்கள்.

20ms73bm.jpg

கைதான இளங்கோ.

இலங்கையைச் சேர்ந்தவர் இளங்கோ (வயது 30). லண்டனில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். சுற்றுலா விசா பெற்று அவர் சென்னைக்கு வந்துள்ளார். ஆழ்வார் திருநகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருக்கிறார்.

போரூர் எஸ்ஆர்எம்சி மருத்துவக் கல்லூரி அருகே உள்ள ஒரு ஏடிஎம் தானியங்கி பணம் வழங்கும் நிலையத்திற்கு சென்று கிரெடிட் கார்டுகளை போட்டு பணம் எடுத்திருக்கிறார்.

அவர் ஏராளமான கிரெடிட் கார்டுகளை கையில் வைத்துக் கொண்டு மாற்றி மாற்றி பணம் எடுப்பதை பார்த்த ஒருவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். உதவி கமிஷனர் பாலசுப்பிரமணியம், இன்ஸ்பெக்டர் அருள் சந்தோஷ முத்து ஆகி யோர் அந்த ஏடிஎம் சென்ட ருக்கு சென்று இளங் கோவை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடமிருந்த 28 கிரெடிட் கார்டு களை போலீசார் கைப்பற்றினார்கள்.

இவை போலி கிரெடிட் கார்டுகளாகும். லண்டனில் உள்ளவர்களின் பெயரில் வாங்கப்பட்டு இருக்கிறது. கடந்த சில தினங்களில் போலி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி 30 லட்ச ரூபாய் அளவுக்கு அவர் மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

இந்த பணத்தில் ஸ்கார்பியோ உட்பட 2 சொகுசு கார்களை வாங்கியிருக்கிறார். அத்துடன் ஹவாலா மூலம் லண்டனில் உள்ள தனது கூட்டாளிக்கு பணம் அனுப்பியிருக்கிறார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இரண்டு சொகுசு கார்களையும் கைப்பற்றினார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஞ்சை வாற இளங்கோவையும் இரண்டு மூண்டு நாளாய் காணேல்லை.இவர்தான் அவரோ இல்லாட்டி அவர்தான் இவரோ? :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி சார் தான் அந்த ஆசாமியாக்கும் எண்டு நினைச்சன்

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி சார் தான் அந்த ஆசாமியாக்கும் எண்டு நினைச்சன்

கிரடிட் காட் வழங்கும் நிறுவனங்களை விட இவர்கள் ஆசாமிகளா...! பகற்கொள்ளை அடிக்கிற கூட்டம் இந்தக் கிரடிட் காட் வழங்கிற கூட்டம். வட்டிக்கு வட்டி..முதலுக்கு வட்டி...என்று குட்டி போட்டிட்டே இருக்குது வருமானம்...முதலுக்கு மோசமில்லாமல்..! இப்படியும் கொஞ்சம் போகத்தான் வேணும்..! நீங்கள் செய்யுங்கோ அண்ணோய்..! :D :P

தமிழரின் மானத்தை உலகம் முழுக்க வாங்காமல் ஓய மாட்டார்கள் போலிருக்குது??

தமிழரின் மானத்தை காக்க என்று ஒரு கூட்டம் உயிரைக் கொடுத்து போராடுது, இங்கே ஒரு சிலர் மானத்தை கூண்டோடு கப்பல் ஏத்தாமல் விட மாட்டோம் என்று அடம் பிடிகிறார்கள்! என்ன செய்வது? விதி யாரைத்தான் விட்டு வைத்தது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழரின் மானத்தை உலகம் முழுக்க வாங்காமல் ஓய மாட்டார்கள் போலிருக்குது??

தமிழரின் மானத்தை காக்க என்று ஒரு கூட்டம் உயிரைக் கொடுத்து போராடுது, இங்கே ஒரு சிலர் மானத்தை கூண்டோடு கப்பல் ஏத்தாமல் விட மாட்டோம் என்று அடம் பிடிகிறார்கள்! என்ன செய்வது? விதி யாரைத்தான் விட்டு வைத்தது?

இப்படியான மோசடிகாறரை பிடித்து சதாமின'; தண்டனை கொ|டுக்க வேண்டும்...

அப்போதாவது இவர்களை போன்ரோர் திருந்துவார்களொ என பார்க்கலாம்...

இவருக்கு எமது சட்டமா திணைக்களம் தகுந்த நடவடிக்கை எடுத்தது..வரவேற்க தக்கது...

அதை கவனிப்பதே நமது வேலை..

இவர் யார் தெரியுமோ? சவுத்தோலிலுள்ள த**னி பல்பொருள் அங்காடி நிறுவன 3 பங்காளர்களில் ஒருவர். இவையளுக்கு இதுகளெல்லாம் சாதாரணம். ஆன இப்பத்தான் வசமாக மாட்டுப்பட்டிருக்கிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிரடிட் காட் வழங்கும் நிறுவனங்களை விட இவர்கள் ஆசாமிகளா...! பகற்கொள்ளை அடிக்கிற கூட்டம் இந்தக் கிரடிட் காட் வழங்கிற கூட்டம். வட்டிக்கு வட்டி..முதலுக்கு வட்டி...என்று குட்டி போட்டிட்டே இருக்குது வருமானம்...முதலுக்கு மோசமில்லாமல்..! இப்படியும் கொஞ்சம் போகத்தான் வேணும்..! நீங்கள் செய்யுங்கோ அண்ணோய்..! :D :P

நான் என்னத்துக்கு உந்த கிரடிட்காட்டோடை மினைக்கடோனும்?நான் வந்து 5 சீட்டு புடிக்கிறன்.12 இடத்திலை சீட்டு கட்டுறன்.அதோட கொஞ்ச இடத்திலை பினாமி வைச்சு 6,7 சீட்டும் கட்டுறன்.இது மட்டுமே கொஞ்சப்பேருக்கு வட்டிக்கு காசும் குடுக்கிறன்.அப்பிடியே சோசல்லையும் ........................... :icon_idea: சரி சரி எனக்கு கதைக்க நேரமில்லை.நான் லண்டன்லை வாங்கி விட்டிருக்கிற வீடுகள்ளையிருந்து கொஞ்சப்பேர் இன்னும் வாடகைக்காசு தரேல்லை.உடனை அறவாக்கவேணும். :angry: :angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் கேவலமான செயல்.. எல்லோருமே கஸ்ரப்பட்டுதான் பணம் சம்பாதிக்கின்றோம்.. அதை கொள்ளை அடிப்பது எவ்வளவு கொடுரமான விடயம்..!

பணத்தாசை யாராஇ விட்டது எனக்கு தெரிந்த ஒருவர் சிங்கப்பூரில் பிடிபட்டார் உயர்தரத்ஹ்தில் 3A எடுத்து லண்டனில் படித்து முடித்து பாக்ளைச் வங்கியில் முகாமையாளராக கடமையாற்றி கொண்டு இருந்த உவருக்கு காசுப் பேய் புகுந்திட்டுது இப்ப 10 வருசம் கம்பி எண்ணுறார் இனி தண்டனை முடிந்து வெளிய வரா ஏப்படியும் 35-40 வயதாகிவிடும்

வாழ்கையை தொலைத்த இவரை போன்றவார்களுக்காக கவலைப்படுவதா அல்லது ஆத்திரப்படுவதா

பணத்தாசை யாராஇ விட்டது எனக்கு தெரிந்த ஒருவர் சிங்கப்பூரில் பிடிபட்டார் உயர்தரத்ஹ்தில் 3A எடுத்து லண்டனில் படித்து முடித்து பாக்ளைச் வங்கியில் முகாமையாளராக கடமையாற்றி கொண்டு இருந்த உவருக்கு காசுப்பேய் புகுந்திட்டுது இப்ப 10 வருசம் கம்பி எண்ணுறார் இனி தண்டனை முடிந்து வெளிய வரா ஏபடியும் 35-40 வயதாகிவிடும்

வாழ்கையை தொலைத்த இவரை போன்றவார்களுக்காககவலைப்படு

Edited by AJeevan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.