Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேபி. க்கு எதிராக ஏன் குற்றஞ் சுமத்தப்படவில்லை?

Featured Replies

கேபி. க்கு எதி­ராக ஏன் குற்றஞ் சுமத்­தப்­ப­ட­வில்லை?

 

அரசியல் கைதிகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித்தலைவர்

சம்பந்தன் ஆற்றிய உரை

 

ஆயுதப் போராட்டம் முடி­வுக்கு வந்து இப்­போது ஏழு வரு­டங்கள் ஆகி­விட்­டன. பெரு­ம­ளவு காலம் கடந்­து­விட்­ட­போ­திலும் தடுப்புக் காவ­லி­லுள்ள இந்தத் தமிழ் கைதி­களின் பிரச்­சி­னைக்கு இன்னும் ஒரு முடிவு ஏற்­ப­ட­வில்லை என்­ப­தோடு, பலர் நீண்ட காலம் தடுப்­புக்­கா­வலில் உள்­ளனர். இக் கைதிகள் தமது விடு­த­லை­யைக்­கோரி காலத்­திற்குக் காலம் பல்­வேறு எதிர்ப்­பு­க­ளையும் ஆர்ப்­பாட்­டங்­க­ளையும் நடத்­தி­யுள்­ளனர்.

அதை­விடத் தீவிர குற்­றங்­க­ளுக்­காக குற்­றச்­சாட்­டு­களை எதிர்­நோக்­கி­யி­ருக்க வேண்­டிய வேறு பலர் சட்­டத்தின் முன் கொண்­டு­வ­ரப்­ப­டாத அதே­வேளை, இன்னும் பலர் விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளனர். இது அண்மைக் காலத்­திலும் நடந்­துள்­ளது. 1971 ஆம் ஆண்டு மற்றும் 1988,- 89ஆம் ஆண்டு புரட்­சி­களின் பின்­னரும் நடந்­துள்­ளது. தடுப்புக் காவ­லி­லுள்ள கைதிகள் தாம் நடத்­தப்­படும் விதம் பக்­கச்­சார்­பா­ன­தென்றும் சம­மற்­ற­தென்றும் உண்­மை­யா­கவே முறை­யி­டு­கின்­றனர். இவ்­வா­றாக, சட்­டத்­தின்கீழ் சம­மாக நடத்­துதல் அவர்கள் விட­யத்தில் மறுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த விட­யத்தில் அர­சாங்கம் தனது நிலைப்­பாட்டைக் கூறு­வதும் சொல்­லப்­பட்ட கைதி­களை விடு­விப்­ப­தற்கு நட­வ­டிக்கை மேற்­கொள்­வதும் கட்­டா­ய­மாகும். அவர்கள் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் இருப்­பது அவர்­க­ளது குடும்­பங்­க­ளுக்கு அளப்­ப­ரிய துன்­பங்­க­ளையும் தொல்­லை­க­ளையும் ஏற்­ப­டுத்­து­வ­தோடு, நல்­லி­ணக்க நடை­மு­றைக்கும் தடை­யாக அமை­கி­றது. இக்­கை­தி­களின் உண்­மை­யான பிரச்­சி­னைகள் குறித்து அர­சாங்கம் எவ்­வித உணர்­வு­மற்­றி­ருப்­ப­தா­கவே பார்க்­கப்­ப­டு­கி­றது.

இது நீண்ட கால­மாக நிலு­வை­யி­லுள்ள ஒரு விடயம் என்­பது இந்தச் சபை அறிந்த ஓர் உண்­மை­யாகும். இது ஜனா­தி­பதியுடன் நாங்கள் கலந்­து­ரை­யா­டிய ஒரு விட­ய­மென்­ப­தோடு, இவ்­வி­டயந் தொடர்­பான அவ­ரது கருத்­துக்கள் எப்­போதும் நேரிய­தா­கவே உள்­ளன. இந்த விடயந் தொடர்­பாக நாங்கள் பிர­தமரு­டனும் கலந்­து­ரை­யா­டி­யி­ருக்­கிறோம். இவ்­வி­டயந் தொடர்­பான அவ­ரது கருத்­துக்­களும் எப்­போதும் நேரிய­தா­கவே உள்­ளன. முன்னர் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தில் சில சிர­மங்கள் நில­வி­ய­தாகத் தோன்­றி­யது. தற்­போது சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தில் மாற்­ற­மொன்று நில­வு­கி­றது. இந்த விட­யத்தைக் கட்­டுப்­பாட்­டிற்குள் கொண்­டு­வ­ரக்­கூ­டிய அதி­கா­ர­பீ­டத்தின் மூன்­றா­வது நபர் நீதி அமைச்­ச­ராவார். அவ­ருடன் நாங்கள் அடிக்­கடி பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருக்­கிறோம். அவர் எதிர்­ம­றை­யா­ன­வராக இருக்­க­வில்லை. எனினும், அவர் மேற்­கொண்ட நட­வ­டிக்கை இந்த பிரச்­சி­னைக்கு விரும்­பத்­தக்க விளை­வு­களை கொண்டு வரு­வ­தற்குப் போது­மா­ன­தாக இருந்­ததா என்று எனக்குத் தெரிய­வில்லை.

இந்த விடயந் தொடர்­பாக ஏற்றுக் கொள்­ளத்­தக்க தீர்­மா­ன­மொன்றை அடை­வதில் உள்ள தடைதான் என்ன என்­பதை நாங்கள் அறிந்­து­கொள்ள விரும்­பு­கிறோம். ஜனா­தி­பதி தன்னைத் தாக்க வந்­த­வரை மன்­னித்து விட்டார். அந்த மனி­த­ருக்கு விடு­தலை வழங்­கப்­பட்­டு­விட்­டது. அது உண்­மை­யி­லேயே அவ­ரது நல்ல சிந்­தனைப் போக்கை எடுத்­துக்­காட்­டு­கி­றது.

ஏனை­ய­வர்கள் ஏன் வேறு­வி­த­மாக நடத்­தப்­­ப­ட­வேண்டும் என்ற கேள்­வியை நான் எழுப்ப விரும்­பு­கிறேன். (ஆயுத) முரண்­பாடு முடி­வ­டைந்து ஏழு வரு­டங்கள் ஆகி­விட்­டன. நீண்ட கால­மாக மக்கள் தடுப்புக் காவலில் உள்­ளனர். சிலர் ஏறத்­தாழ 10 -– 15 வரு­டங்கள் உள்­ளனர். அவர்­களின் விடு­த­லைக்­கான ஒரு நியாயம் இருப்­ப­தாகத் தோன்­று­கி­றது. பயங்­க­ர­வாதத் தடுப்புச் சட்டம் ஒரு தீய சட்­ட­மென்­பதும் எனவே அது நீக்­கப்­பட வேண்­டு­மென்­பதும் பர­வ­லாக ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டு­கி­றது.

ஜெனீ­வாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரி­மைகள் பேரவைக் கூட்டத் தொட­ருக்கு முன்னர் தீர்­மா­னிக்­கப்­பட்ட ஒரு சில விட­யங்­களை நான் இங்கு குறிப்­பிட விரும்­பு­கிறேன். 2015 ஒக்­டோபர் 1 ஆம் திகதி நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தின் 12ஆவது பந்தி கூறு­வ­தா­வது,

பொது மக்கள் பாது­காப்புக் கட்­டளைச் சட்­டத்தை மீளாய்வு செய்­வ­தற்கும் பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தை மீளாய்வு செய்து அதனை அகற்­று­வ­தோடு, தற்­கால சர்­வ­தேச மிகச் சிறந்த வழக்­கங்­க­ளுக்கு அமை­வாக பயங்­க­ர­வா­தத்­திற்­கெ­தி­ரான சட்­ட­மொன்றைக் கொண்டு அதனை பதி­லீடு செய்­வ­தற்­கு­மான இலங்கை அர­சாங்­கத்தின் பற்­று­று­தியை வர­வேற்­கி­றது

எனவே, பயங்­க­ர­வாதத் தடைச் சட்டம் நீக்­கப்­படும் என்று இலங்கை அர­சாங்கம் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வைக்கு ஒரு வாக்­கு­றுதி வழங்­கி­யுள்­ளது. ஏன்? ஏனெனில், அச் சட்டம் தீமை­யா­னது. அதன்கீழ் நியா­ய­மா­ன­தொரு விசா­ரணை நடை­பெற முடி­யாத ஏற்­பா­டு­களை இச்­சட்டம் உள்­ள­டக்­கி­யுள்­ளது. இச்­சட்­டத்தின் கீழ் இயற்கை நீதியின் விதி­களை உறு­திப்­ப­டுத்த முடி­யாது. அத­னால்தான் இலங்கை அர­சாங்கம் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வைக்கு இந்த வாக்­கு­று­தியை வழங்­கி­யுள்­ளது.

2016 ஜூன் மாதம் மனித உரி­மை­க­ளுக்­கான ஐ.நா. உயர் ஸ்தானிகர் அறிக்­கை­யொன்றை விடுத்தார். அதில் அவர் என்ன கூறினார்? அவர் கூறினார்: பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள எஞ்­சிய பாது­காப்பு தொடர்­பான கைதி­களின் தலை­விதி தமிழ் சமூ­கத்­தி­ன­ருக்கு ஒரு பெருங் கவ­லை­யா­கவே உள்­ளது.

டிசெம்பர் 2015 இல், குற்றச் சாட்­டுகள் எது­வு­மின்றி தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த 39 பேரை அர­சாங்கம் பிணையில் விடு­வித்­தது. எனினும், ஏறத்­தாழ 250 கைதிகள் இன்­னமும் தடுப்புக் காவலில் இருப்­ப­தாக நம்­பப்­ப­டு­கி­றது. இவர்­களுள் 117 பேருக்­கெ­தி­ராக அர­சாங்கம் குற்றப்பத்­திரம் தாக்கல் செய்­துள்­ள­தோடு, விசா­ர­ணை­களைத் துரி­தப்­ப­­டுத்­து­மு­க­மாக ஜன­வ­ரியில் ஒரு விசேட மேல்­நீ­தி­மன்ற பெஞ்சை உரு­வாக்­கி­யது. மார்ச் மாத இறு­திக்குள் சட்­டமா அதிபர் திணைக்­களம் தீர்ப்­பு­களை வழங்கும் என்று அர­சாங்கம் வாக்­கு­று­தி­ய­ளித்­தி­ருந்­தது. எனினும் இந்த வருடம் மேலும் எந்தக் குற்­றச்­சாட்­டுக்­களோ அல்­லது விடு­விப்­பு­களோ இடம்­பெ­ற­வில்லை. இந்த நிலைமை சம்­பந்­தப்­பட்ட நபர்­க­ளுக்கும் அவர்தம் குடும்­பத்­தி­ன­ருக்கும் வேத­னை­மிக்­கது மட்­டு­மல்ல, (அவர்­களுள் சிலர் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டனர்), தமிழ் கட்­சிகள் மத்­தி­யிலும் பர­வ­லாக தமிழ் சமூ­கத்­திலும் வளரும் அதி­ருப்­தியின் ஓர் உறை­வி­ட­மா­கவும் அமை­கி­றது.

2016 பெப்­ர­வரி மாதம் தான் மேற்­கொண்ட விஜ­யத்தின் இறு­தியில் உயர் ஸ்தானிகர் பாது­காப்பு தொடர்­பு­பட்ட எஞ்­சி­யி­ருக்கும் கைதி­க­ளுக்­கெ­தி­ராக குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைப்­ப­தற்­கான அல்­லது அவர்­களை விடு­தலை செய்­வ­தற்­கான வழி­மு­றை­யொன்றைத் துரி­த­மாகக் காணு­மாறு அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­தினார். குழுக்­களின் பிரதித் தவி­சாளரே, மனித உரி­மைகள் பேர­வையும் உயர் ஸ்தானி­கரும் கூட இக்­கை­தி­களின் நிலைமை தொடர்­பாக பெரும் கவ­லையை மிகத் தெளிவாக வெளியிட்­டி­ருப்­பதை நீங்கள் காண்­கி­றீர்கள். இது வெறு­மனே கைதி­க­ளுக்கும் அவர்தம் குடும்­பத்­தி­ன­ருக்கும் மட்­டு­மின்றி, தமிழ் மக்­க­ளுக்கும் தமிழ் அர­சியல் கட்­சி­க­ளுக்கும் கவ­லை­ய­ளிக்கும் ஒரு விட­ய­மாகும் என்று அவர்கள் கூறு­கின்­றனர். மனித உரி­மை­க­ளுக்­கான ஐ.நா. உயர் ஸ்தானிகர் இவ்­ அர­சியல் கட்­சிகள் இவ்­வி­ட­யத்தை ஐ.நா. மனித உரி­மைகள் பேரவை மற்றும் மனித உரி­மை­க­ளுக்­கான ஐ.நா. தூதுவர் ஆகி­யோ­ரி­டத்தில் எடுத்­தி­யம்­பி­யி­ருப்­பது மாத்­தி­ர­மின்றி, இந்த மேலான சபை­யிலும் பல தட­வைகள் எழுப்­பி­யுள்­ளன என்­பதை ஸ்தானிகர் அறிவார்.

ஜூன் 2016 இல் இலங்கை வெளிநாட்­ட­லு­வல்கள் அமைச்சர் மங்­கள சம­ர­வீரவினால் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் விடுக்­கப்­பட்ட அறிக்­கை­யொன்றும் உள்­ளது. அதில் அவர் கூறினார், மனித உரி­மைகள் மற்றும் பயங்­க­ர­வா­தத்தை எதிர்­கொள்ளல் ஆகி­ய­வற்­றுக்­கான இலங்­கையின் கடப்­பா­டு­க­ளுக்கும் பற்­று­று­திக்கும் அமை­வாக, மிகவும் விமர்­ச­னத்­திற்­குள்­ளா­னதும் துஷ்பிர­யோகம் செய்­யப்­பட்­ட­து­மான பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தை நீக்கிப் பிர­தி­யீடு செய்யும் பயங்­க­ர­வா­தத்­திற்­கெ­தி­ரான புதி­ய­தொரு சட்­டத்­திற்­கான முத­லா­வது நக­லிற்கு ஒரு குழு தற்­போது இறுதி வடிவம் கொடுத்து வரு­கி­றது. இலங்கை வெளிநாட்­ட­லு­வல்கள் அமைச்சும் கூட பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தை மிகவும் விமர்­சிக்­கப்­பட்­டதும் துஷ்பிர­யோகம் செய்­யப்­பட்­ட­து­மான சட்டம் என்று வர்­ணித்­துள்­ளது. இதனை அவர் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் முன், தான் விடுத்த அறிக்­கையில் கூறினார்.

அத்­த­கைய சட்­ட­மொன்றின் கீழ் எவ்­வாறு எவ­ரையும் சட்­ட­பூர்­வ­மான தடுப்புக் காவலில் வைத்­தி­ருக்­க­மு­டியும்? நான் அந்தக் கேள்­வியை எழுப்ப விரும்­பு­கிறேன். அது நீங்கள் தீமை­யா­னது என்று கூறு­கின்ற ஒரு சட்­ட­மாகும். அது வெறு­மனே இந்த நாட்டு மக்­க­ளினால் மட்­டு­மின்றி, சர்­வ­தேச சமூகம் மற்றும் அனை­வ­ரி­னாலும் குறை­கூ­றப்­பட்­டுள்­ளது. அது துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்ட ஒரு சட்­ட­மாகும். இந்தச் சட்­டத்­தின்கீழ் எவ்­வாறு யாரும் சட்­ட­பூர்­வ­மாக தடுப்புக் காவலில் வைக்­கப்­பட முடியும்? இந்தச் சட்­டத்­தின்கீழ் எவ்­வாறு யாரும் சட்­ட­பூர்­வ­மாக குற்றஞ் சாட்­டப்­பட முடியும்? இந்தச் சட்­டத்­தின்கீழ் எவ்­வாறு யாரும் குற்­ற­வா­ளி­யாகத் தீர்ப்­ப­ளிக்­கப்­பட முடியும்? இந்தச் சட்டம் அநீ­தி­யா­னது, தீமை­யா­னது, இந்த நாட்டின் சட்டப் புத்­த­கத்தில் இருக்க வேண்­டிய ஒரு சட்­ட­மல்ல என்­பதை உங்கள் அர­சாங்கம் ஏற்­றுக்­கொள்­கின்­ற­மை­யினால், பயங்­க­ர­வாதத் தடுப்புச் சட்­டத்­தின்கீழ் கைது செய்­யப்­பட்ட அனை­வரும் விடு­விக்­கப்­பட வேண்டும் என்­பது எமது கருத்­தாகும். இது நீக்­கப்­பட வேண்­டி­ய­தொரு சட்­ட­மாகும். எனவே, இந்தச் சட்­டத்தின் கீழ் கைது­செய்­யப்­பட்­ட­வர்கள் அனை­வரும் - அவர்­க­ளு­டைய தற்­போ­தைய நிலைமை எவ்­வா­றி­ருப்­பினும், எந்தக் குற்­றங்­க­ளுக்­காக அவர்கள் குற்­றஞ்­சாட்­டப்­பட்டு அல்­லது குற்றஞ் சாட்­டப்­ப­டாமல் இருப்­பினும், அத்­துடன் அவர்கள் குற்­ற­வா­ளி­க­ளாகத் தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டி­ருப்­பினும் கூட, தீய சட்­ட­மொன்­றின்கீழ் கைது செய்­யப்­பட்ட அனை­வரும் விடு­விக்­கப்­ப­ட­வேண்டும் என்­பதும் அதற்­கான காலம் இப்­போது வந்­து­விட்­டது என்­பதும் எனது பல­மான கருத்துச் சமர்ப்­ப­ண­மாகும்.

இந்த ஆட்­களுள் சிலர் பார­தூர­மான குற்­றங்கள் புரிந்­துள்­ளனர் என்று சில சம­யங்­களில் கூறப்­ப­டு­கி­றது. அவர்­களுள் பெரும்­பா­லா­ன­வர்கள் இன்று வரை அத்­த­கைய பார­தூ­ர­மான குற்றம் புரிந்­த­மைக்­காக குற்­ற­வா­ளி­க­ளாகத் தீர்ப்­ப­ளிக்­கப்­ப­டா­துள்­ளனர். எனினும், அவர்கள் எந்தச் சட்­டத்­தின்கீழ் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்­ளார்­களோ, அந்தச் சட்­டமும் அதன்கீழ் ஒரு நபரைக் கைது செய்தல், ஒரு நபரை விசா­ரணை செய்தல், ஒரு நப­ருக்­கெ­தி­ராக வழக்குத் தொடர்தல் மற்றும் அந்த நபர் தொடர்­பான தீர்ப்­பொன்­றிற்கு வருதல் தொடர்­பான நடை­மு­றையும் குறை­பா­டு­டை­ய­வை­யாயின், அந்த நபர்கள் நிச்­ச­ய­மாக விடு­விக்­கப்­பட வேண்­டும். அந்தச் சட்டம் இயற்கை நீதிக்கு இயை­பா­ன­தாக அமை­யுமா? குற்றம் பார­தூ­ர­மா­ன­தாக இருந்­தா­லென்ன, இல்­லா­விட்­டா­லென்ன? அது ஒரு பார­தூ­ர­மான குற்­ற­மாக இருக்­கலாம், அவ்­வ­ளவு பார­தூ­ர­மற்­ற­தாக இருக்­கலாம். ஆனால், இங்கே உண்மை என்­ன­வெனில், எந்தச் சட்ட ஏற்­பா­டு­களின் கீழ் அந்த நப­ருக்­கெ­தி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கி­றதோ, அந்தச் சட்ட ஏற்­பா­டுகள் ஏற்­றுக்­கொள்ளத் தக்­க­வை­யல்ல என்­ப­தே­யாகும். சட்டம் ஏற்­றுக்­கொள்­ளத்­தக்­க­தல்­ல­வென்றால், அந்த ஆட்கள் விடு­விக்­கப்­ப­ட­வேண்டும் என்­பதும் இந்த விட­யத்தை நடு­நி­லை­நின்று புற­வ­ய­மாக பார்க்­க­வேண்­டிய கட்­டாய தேவை­யொன்று உண்டு என்­பதும் எனது மிகப் பல­மான கருத்துச் சமர்ப்­ப­ண­மாகும். வெவ்­வேறு ஆட்கள் வெவ்­வேறு வித­மாக நடத்­தப்­பட்­டி­ருப்­ப­துதான் இங்கு மிகவும் மோச­மான ஒன்­றாகும். வழ­மை­யாக நான் ஆட்­களின் பெயர்­களைக் குறிப்­பி­டு­வ­தில்லை. அவ்­வாறு செய்­வதை நான் விரும்­ப­வில்லை. ஆனால், கைதிகள் இந்தக் கேள்­வியை எழுப்­பு­கி­றார்கள்: கேபி. க்கு எதி­ராக ஏன் குற்றஞ் சுமத்­தப்­ப­ட­வில்லை? அவர் முன்­னைய அர­சாங்­கத்­திற்கு வேண்­டப்­பட்ட ஒருவர். அவர் தற்­போ­தைய அர­சாங்­கத்­திற்கும் வேண்­டப்­பட்ட ஒரு­வரா? அர­சாங்கம் அவ­ருக்­கெ­தி­ராக நட­வ­டிக்கை மேற்­கொள்­ளா­ததேன்? அவர் சர்­வ­தேச இண்­டர்போல் பொலிஸாரின் தேடப்­ப­டுவோர் பட்­டி­ய­லி­லுள்ள ஒரு­வ­ராக இருப்­ப­தாக நம்­பப்­ப­டு­கி­றது.

அவர் இந்த நாட்­டிற்குள் ஆயு­தங்­களைக் கடத்தி வந்த ஒருவர் மாத்­தி­ர­மல்ல, அவர் தான் பிர­தான ஆயுதக் கொள்­வ­ன­வா­ள­ராக இருந்தார். ஏனை­ய­வர்­க­ளுக்கு அதா­வது, முன்­

னைய அர­சாங்­கத்தில் அமைச்சர் பதவி வகித்­த­வ­ருக்கு, கிழக்கு மாகா­ணத்தில் முத­ல­மைச்சர் பதவி வகித்­த­வ­ருக்கு என்ன நடந்­தது? அவர்கள் பார­தூ­ர­மான குற்­றங்கள் புரி­ய­வில்­லையா? அவர்­க­ளுக்­கெ­தி­ராக நீங்கள் ஏன் குற்றஞ் சுமத்­து­வ­தில்லை? சமூ­கத்தின் நலி­வுற்று பிரி­வி­ன­ரி­லி­ருந்து சில இளை­ஞர்­க­ளையும் மக்­க­ளையும் நீங்கள் பிடித்து பயங்­க­ர­வாதத் தடுப்­புச் சட்­டத்­தின்கீழ் அவர்­களைத் தடுத்து வைக்­கி­றீர்ர்கள். இது இனியும் தொடர வேண்­டு­மென நான் நினைக்­க­வில்லை. ஏனை­ய­வர்கள் புரிந்த குற்­றங்­க­ளை­விட நாங்கள் புரிந்த குற்றம் எவ்­வாறு கூடிய பார­தூ­ர­மா­ன­தாக இருக்க முடியும்? என்­பதை அறிந்­து­கொள்ள இந்தக் கைதிகள் விரும்­பு­கின்­றனர். 1971 இல் ஆயுதப் புரட்­சி­யொன்று இடம்­பெற்­றது. 1988–1989 களிலும் புரட்­சி­யொன்று இடம்­பெற்­றது. பெரும் எண்­ணிக்­கை­யி­லானோர் அப்­போது கைது செய்­யப்­பட்­டனர். காலப்­போக்கில் அவர்கள் விடு­விக்­கப்­பட்­டனர். வீட்­டிற்கு அனுப்பி வைக்­கப்­பட்­டனர். அவர்­க­ளுக்கு மன்­னிப்­ப­ளிக்­கப்­பட்­டது. அவர்கள் அர­சுக்கு எதி­ராக ஆயுதம் ஏந்­தினர். அர­சுக்கு எதி­ராக ஆயுதப் புரட்­சி­யொன்றை நடத்­தினர். எனினும் நீங்கள் அவர்­களை மன்­னித்து வீட்­டிற்கு அனுப்பி வைத்­தீர்கள். எந்தச் சட்­டத்தின் கீழ் நீங்கள் இந்த ஆட்­களை தடுத்து வைத்­தி­ருக்­கி­றீர்­களோ, அந்தச் சட்டம் உள்­நாட்டு நிய­மங்­க­ளுக்­க­மை­யவோ அல்­லது சர்­வ­தேச நிய­மங்­க­ளுக்­க­மை­யவோ இயற்கை நீதியின் கோட்­பா­டு­க­ளுக்கு அமை­வா­ன­தொரு சட்­ட­மல்ல என்­பதை நீங்கள் ஏற்­றுக்­கொள்­ளும்­போது, அவர்­களை இனியும் தடுப்புக் காவலில் வைத்­தி­ருப்­பதை நீங்கள் எவ்­வாறு நியா­யப்­ப­டுத்­து­வீர்கள்? எனவே, இந்த ஆட்கள் விடு­விக்­கப்­ப­ட­வேண்டும் என்று நான் மிக உறு­தி­யாக வலி­யு­றுத்­து­கிறேன். இக் கைதி­களின் சார்­பாக இந்த விட­யத்தை இந்தச் சபையில் எழுப்­பு­வது எமது கட­மை­யாகும்.

இந்த விடயந் தொடர்­பாக உறு­தி­யாகச் செயற்­ப­டு­வ­தற்­கான அர­சாங்­கத்தின் விருப்

­ப­மின்­மையை தமிழ் மக்கள் நல்­லி­ணக் கச் செயன்­மு­றைக்­கான ஒரு பெருந் தடை யாகவே பார்க்கின்றனர். மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம்கூட தடுப்புக் காவலிலிருந்த 11,000 பேரை விடுவித்தது. அந்த அரசாங்கம் அவர்களுக்குப் புனர்வாழ்வளித்து விடு வித்தது. எனினும் இந்த அரசாங்கம் அதன்

கடந்த 18 மாத அல்லது அதற்குக் கூடிய காலப்பகுதியில் நாங்கள் எதிர்பார்த் தளவு துரிதமாக இந்த விடயத்தில் செயல் படவில்லை.

நானும் எனது சக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் பிரதம மந்திரியுடன் ஒரு சந்திப்பை மேற்கொண்டோம் என்பதையும் நான் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். அந்தச் சந்திப்பில் நீதி அமைச்சர் மற்றும் பிரதி நீதி அமைச்சர் ஆகியோரும் கலந்து கொண்டனர். பிரதமருடன் நாங்கள் இந்த விடயம் தொடர்பாக மிக விரிவாக கலந்துரையாடினோம். மேலும் தாமதமின்றி இந்த விடயத்தை எவ்வாறு தீர்த்து வைப்பது என்ற விடயத்தை ஆராய்வதற்காக சட்டமா அதிபர் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆகியோருடன் வரும் வெள்ளிக்

கிழமை கூட்டமொன்று நடைபெறவிருக் கிறது. இந்த நாட்டின் சட்டப் புத்தகங்க

ளில் இருப்பதற்குப் பொருத்தமற்றதென்று நீங்களே ஏற்றுக்கொள்கின்ற ஒரு சட்டத்தின் கீழ் இந்த நபர்கள் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கெதிராக குற்றஞ்

சுமத்தப்பட்டிருப்பினும், குற்றம் சுமத்தப் படாதிருப்பினும் அல்லது அவர்கள் குற்ற

வாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பினும் கூட, அவர்கள் அனைவரும் விடுவிக்கப்படு வதற்கு உரித்துடையவர்கள் என்பதை மிக உறுதியாக வலியுறுத்த விரும்புகிறோம். நீங்கள் அடிப்படையில் ஏற்றுக் கொள்வீர்க ளாயின், உங்களுடைய சட்டம் அவர்களை விடுதலைக்கு உரித்துடையவர்களாக்கும் ஒரு நீதியான சட்டமல்ல என்பதே எனது கருத்துச் சமர்ப்பணமாகும்.

 

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=29/08/2016

 

  • கருத்துக்கள உறவுகள்

கே.பி பற்றி பேசவல்ல அவரின் பேச்சாளர் இதற்கான பதிலை தருவார்.

  • கருத்துக்கள உறவுகள்

 

26 minutes ago, nunavilan said:

கே.பி பற்றி பேசவல்ல அவரின் பேச்சாளர் இதற்கான பதிலை தருவார்.

அதாரப்பா....?

நிர்மலனா???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.