Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பரவிப்பாஞ்சானில் 3.5 ஏக்கர் காணி விடுவிப்பு

Featured Replies


பரவிப்பாஞ்சானில் 3.5 ஏக்கர் காணி விடுவிப்பு
 
 

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகளில் 3 ½ ஏக்கர் காணி, இன்று புதன்கிழமை (31) விடுவிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.

பரவிப்பாஞ்சானில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்கும் நடவடிக்கையில் 4 ஆவது கட்டமாக இது அமைந்துள்ளது.

காணிகளை விடுவிக்குமாறு அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் மேற்கொண்ட தொடர் போராட்டம் மற்றும் கோரிக்கைகள் காரணமாக முதற்கட்டமாக ஒரு தொகுதி காணியும், இரண்டாம் கட்டமாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் 4.5 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது, மூன்றாம் கட்டமாக 3.5 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாவட்டச் செயலார் மேலும் கூறினார்.

- See more at: http://www.tamilmirror.lk/180831/பரவ-ப-ப-ஞ-ச-ன-ல-ஏக-கர-க-ண-வ-ட-வ-ப-ப-#sthash.XVY5kcVf.dpuf
  • தொடங்கியவர்
உறுதிமொழிகள் காற்றில் பறந்தன மீண்டும் போராட்டத்தில் பரவிப்பாஞ்சான் மக்கள்
உறுதிமொழிகள் காற்றில் பறந்தன மீண்டும் போராட்டத்தில் பரவிப்பாஞ்சான் மக்கள்

கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி பிரதேச மக்கள் இன்று மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தின் தேவைக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த மூன்றரை ஏக்கர் வரையான பொதுமக்களின் காணியை இன்று விடுவிப்பதற்கான நடவ டிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவி த்தி ருந்தார். எனினும் அந்த காணியும் இதுவரை பொதுமக்களிடம் கையளிக்கப்படாத நிலை யில் எஞ்சிய பொதுமக்களின் காணியையும் விடுவிக்குமாறு கோரி பிரதேச மக்கள் இன்று மாலை முதல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

பரவிப்பாஞ்சான் பகுதியில் பாதுகாப்புத் தரப்பினரால் சுவீகரிக்கப்பட்டிருந்த தமது காணிகளை மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் கடந்த வாரம் தொடர் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இதனையடுத்து, கடந்த 17 ஆம் திகதி அந்த பகுதிக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், பாதுகாப்பு செயலாளருடன் தொலைபேசியூடாக நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் இரண்டு வாரங்களுக்குள் மக்களின் காணிகளை மீளப்பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதியளித்திருந்தார்.

இரா.சம்பந்தன் வழங்கிய வாக்குறுதியை அடுத்து, பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்கு முன்னால் கடந்த 13 ஆம் திகதி சனிக்கிழமை காலை முதல் 17 ஆம் திகதி வரை முன்னெ டுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. எவ்வாறாயினும் எதிர்க்கட்சித் தல வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வாக்கு றுதியளி த்தவாறு 14 நாட்க ள் கால அவகாசம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், காணி விடுவிக்கப்ப டாமைக்கு எதிராக பொது மக்கள் மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பி டத்தக்கது

http://onlineuthayan.com/news/16985

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.