Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பௌத்த விஹாரைகள், சிலைகள் உடைக்கப்படுவதனை தடுக்குமாறு கோரி நீதிமன்றில் வழக்கு

Featured Replies

பௌத்த விஹாரைகள், சிலைகள் உடைக்கப்படுவதனை தடுக்குமாறு கோரி நீதிமன்றில் வழக்கு

 

பௌத்த விஹாரைகள், சிலைகள் உடைக்கப்படுவதனை தடுக்குமாறு கோரி நீதிமன்றில் வழக்கு



பௌத்த விஹாரைகள் மற்றும் சிலைகள் உடைக்கப்படுவதனை தடுக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் என்.தர்சன வரதூவகே என்ற சட்டத்தரணி அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.


பௌத்த சாசனத்தையும், பௌத்த மதத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மாங்குளம் பிரதேசத்தில் பௌத்த சிலை உடைக்கப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்களின் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பௌத்த மத விஹாரைகளுக்கு எதிராக கருத்து வெளியிட்டு வரும் நிலையில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது


பௌத்த விஹாரைகள் சிலைகள் உடைக்கப்படுவதற்கு கண்டி அஸ்கிரி பீடாதிபதியும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார் என தெரிவித்துள்ள அவர் நாட்டின் அரசியல் சானத்தில் பௌத்த மதத்தை பாதுகாக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.


இவ்வாறான ஓர் பின்னணியில் பௌத்த மத சிலைகள் அண்மைக் காலமாக வடக்கில் உடைக்கப்பட்டு வருவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல எனவும் இது குறித்து அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.


ஜனாதிபதி, பௌத்தசாசன அமைச்சர், சட்டம் ஒழுங்கு விவாகர அமைச்சர், வடமாகாண ஆளுனர், வடமாகாண முதலமைச்சர், சட்டமா அதிபர் உள்ளிட்ட பல்வெறு தரப்பினர் இந்த மனுபில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/135646/language/ta-IN/article.aspx

தமிழர்களின் நிலங்கள் அடாத்தாக, சட்டவிரோதமாக  சிங்கள-பௌத்த ராணுவ பயங்கரவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, அங்கு சிங்கள-பௌத்த பயங்கரவாதத்தின் சின்னமாக புத்தரின் சிலைகளை சட்டவிரோதமாக நிறுவி, தற்போது அவற்றை பாதுகாக்கும்படி ஒரு சிங்கள-பௌத்த மதவெறியர் அடிப்படை உரிமை மீறல் மனுவை சிங்கள-பௌத்த மதவெறியர்கள் நிறைந்த நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.

சர்வதேச அழுத்தங்கள் இல்லையென்றால் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரத்தின் ஓர் அங்கமான சிங்கள-பௌத்த நீதித்துறை என்ன தீர்ப்பை வழங்கும் என்பதை தமிழர்கள் அறிவார்கள்.

Edited by போல்
To remove the article auto-merged illogically

அரசியல் சாசனத்தை மீறிய வடக்கு முதல்வர்! உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்

வட மாகாணத்தில் அமைந்துள்ள பௌத்த விகாரைகளை பாதுகாக்கும் படி அரசாங்கத்துக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி தர்ஷன வேரதுவகே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். மனுவில் பிரதிவாதிகளாக வடமாகான முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் சாகல ரத்னாயக்க உள்ளிட்ட அதிகாரிகளும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக வடபகுதியில் நிலைநாட்டப்பட்டுள்ள பெளத்த உரிமைகள் அழிக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டிய சட்டத்தரணி, இதன்படி சில புத்த சிலைகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

அரசாங்கம் மற்றும் மாகாண சபைகள் புத்த மதத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இலங்கை அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், வடமாகான முதலமைச்சர் விக்னேஸ்வரன் வட பகுதியில் அமைந்துள்ள பெளத்த உரிமைகளை கண்டிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் முலம் அரசியல் சாசனத்தை காப்பதாக வழங்கியுள்ள சத்தியபிரமாணத்தை முதலமைச்சர் மீறியுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

எனவே, வடமாகான முதலமைச்சரின் நடவடிக்கைகளின் மூலம் அரசியல் சாசனத்தை மீறியுள்ளதாக தீர்ப்பு வழங்கும்படி மனுவில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்துள்ள வடமாகாணத்தில் அமைந்துள்ள பௌத்த விகாரைகளுக்கு பாதுகாப்பு பெற்றுக்கொடுக்கும் படி மத்திய அரசாங்கத்திற்கு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தில் மேலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/politics/01/116610

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.