Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலதா வளாகத்தில் இந்துக் கோயில் எழுப்ப முடியுமா? பாராளுமன்றத்தில் கேள்வி

Featured Replies

சிங்கள கலை வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும்.கண்டிய நடனம் உட்பட பல சிங்கள கலை கலாச்சாரங்களுக்கு மூலம் தமிழ் கலாச்சாரங்களே காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் கலைகலாச்சாரம் தொடர்பில் விவாதிக்கப்பட்டது இதன் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் அங்கு உரையாற்றுகையில், தமிழர்களின் கலாச்சாரம் தொடர்பில் பல வகையான கருத்துகளையும் முன்வைத்தார்.

இலங்கையில் சிங்கள கலைகள் வளர்ச்சியடைய பல வகையிலும் முன்னுதாரணமாகவும், உதவியாகவும் அமைந்தது தமிழர்களின் கலாச்சார பண்பாட்டு பாரம்பரியங்களே.

மேலும் இலங்கை பாட புத்தகங்களில் தமிழ் மன்னர்களுடைய வரலாறுகள் வலுக்கட்டாயமாக மறைக்கப்படுகின்றன, அதற்கு பதில் சிங்கள மன்னர்களின் வரலாறுகள் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை வடக்கில் இந்து கோயில்கள் அழிக்கப்பட்டு பௌத்த விகாரைகள் கட்டப்பட்டு வருகின்றமை தடுக்கப்படவேண்டும்.

இராணுவ ஆக்கரமிப்புகளைத் தொடர்ந்து பல இந்து கோயில்கள் அழிக்கப்படுகின்றன அதே போல் இந்துக் கோயில்களுக்கு அருகில் பௌத்த விகாரைகள் எழுப்பப் படுகின்றன இவை நிறுத்தப்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு பௌத்த விகாரைகள் அமைந்துள்ள இடங்களில் இந்துக் கோயில்கள் எழுப்ப முடியுமா? தலதா மாளிகை வளாகத்துக்குள் சென்று தமிழர்கள் இந்துக் கோயில் ஒன்றை எழுப்ப முடியுமா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் விடுதலைப் புலிகள் போர் செய்த காலங்களில் பௌத்த விகாரைகள் அழிக்கப்பட வில்லை, அனைத்து கலாச்சாரங்களும் பாதுகாக்கப்பட்டன அவற்றிக்கு மதிப்பளிக்கப்பட்டன, ஆனால் தற்போது இந்து கலாச்சாரங்கள் அழிக்கப்படுகின்றன.

இலங்கையில் மகாவம்சத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் நடாத்தப்பட்டு வருகின்றது இது தொடருமானால் ஒற்றுமை என்பது கானல் நீராகவே எப்போதும் காணப்படும்.

இராணுவ ஆக்கிரமிப்புகளின் மூலம் தமிழர்களின் கலாச்சாரங்களும் பாரம்பரியங்களும் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே நாட்டில் நல்லிணக்கமும் ஒற்றுமையும் ஏற்படும் எனவும் சி.சிறிதரன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

http://www.tamilwin.com/parliment/01/116928

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, போல் said:

இலங்கை பாட புத்தகங்களில் தமிழ் மன்னர்களுடைய வரலாறுகள் வலுக்கட்டாயமாக மறைக்கப்படுகின்றன, அதற்கு பதில் சிங்கள மன்னர்களின் வரலாறுகள் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை வடக்கில் இந்து கோயில்கள் அழிக்கப்பட்டு பௌத்த விகாரைகள் கட்டப்பட்டு வருகின்றமை தடுக்கப்படவேண்டும்.

இராணுவ ஆக்கரமிப்புகளைத் தொடர்ந்து பல இந்து கோயில்கள் அழிக்கப்படுகின்றன அதே போல் இந்துக் கோயில்களுக்கு அருகில் பௌத்த விகாரைகள் எழுப்பப் படுகின்றன இவை நிறுத்தப்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பிரச்சனை பெரிசாய் நடந்து கொண்டிருக்கு......
ஒருத்தர் பேப்பர் படிக்கவும்....
இன்னொருத்தர் ஊசி போடேல்லை எண்டு சொல்லவும் தான் கொழும்பிலை இருக்கினம்.

24 minutes ago, குமாரசாமி said:

பிரச்சனை பெரிசாய் நடந்து கொண்டிருக்கு......
ஒருத்தர் பேப்பர் படிக்கவும்....
இன்னொருத்தர் ஊசி போடேல்லை எண்டு சொல்லவும் தான் கொழும்பிலை இருக்கினம்.

அவர்களை குறை சொல்ல வேண்டாம் , அவர்களுக்கு வாக்கு போட்ட மகா ஜனங்கள் தான் இதற்கு பொறுப்பு.

எத்தனை தடவை சொன்னார்கள் இந்த திருட்டு கும்பலுக்கு போடா வேண்டாம் என்று கேட்டார்களா ...?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 minutes ago, Dash said:

அவர்களை குறை சொல்ல வேண்டாம் , அவர்களுக்கு வாக்கு போட்ட மகா ஜனங்கள் தான் இதற்கு பொறுப்பு.

எத்தனை தடவை சொன்னார்கள் இந்த திருட்டு கும்பலுக்கு போடா வேண்டாம் என்று கேட்டார்களா ...?

மக்களுக்கு சிறந்த முறையில் விளக்கம் கொடுத்து பிரச்சாரம் செய்ய வேண்டும்.
உள்ளதை சொல்லி....நடைமுறைகளை சொல்லி பிரச்சாரம் செய்ய வேண்டும்.

ஒரு கேள்வி?

ஒரு நாட்டின் சர்வாதிகாரி ஆட்சிக்கும் சம்பந்தனின் அரசியல் கதிரைக்கும் என்ன வித்தியாசம்? 
 

8 minutes ago, குமாரசாமி said:

மக்களுக்கு சிறந்த முறையில் விளக்கம் கொடுத்து பிரச்சாரம் செய்ய வேண்டும்.
உள்ளதை சொல்லி....நடைமுறைகளை சொல்லி பிரச்சாரம் செய்ய வேண்டும்.

ஒரு கேள்வி?

ஒரு நாட்டின் சர்வாதிகாரி ஆட்சிக்கும் சம்பந்தனின் அரசியல் கதிரைக்கும் என்ன வித்தியாசம்? 
 

சர்வாதிகாரியை புரட்சி மூலம்  வெளியேற்றலாம், ஆனால் சம்பந்தர் ஐயா அசைய மாட்டார் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, Dash said:

சர்வாதிகாரியை புரட்சி மூலம்  வெளியேற்றலாம், ஆனால் சம்பந்தர் ஐயா அசைய மாட்டார் 

அணுகுண்டு இல்லாமல்..
இரத்தக்களரி இல்லாமல்...
துப்பாக்கி வேட்டு இல்லாமல்...
மக்கள் இடம் பெயராமல்......
இராணுவத்தின் எடுபிடி இல்லாமல்....
கிபீர் சத்தம் இல்லாமல்....
செல் அடிகள் இல்லாமல்....
பங்கருக்குள் ஒளிக்காமல்....
புகலிடம் தேடாமல்....
ஈழத்தமிழினம் ஒட்டு மொத்தமாக அழியப்போகின்றது.

Edited by குமாரசாமி

14 minutes ago, குமாரசாமி said:

அணுகுண்டு இல்லாமல்..
இரத்தக்களரி இல்லாமல்...
துப்பாக்கி வேட்டு இல்லாமல்...
இடம் பெயராமல்......
இராணுவத்தின் எடுபிடி இல்லாமல்....
கிபீர் சத்தம் இல்லாமல்....
செல் அடிகள் இல்லாமல்....
பங்கருக்குள் ஒளிக்காமல்....
புகலிடம் தேடாமல்....
ஈழத்தமிழினம் ஒட்டு மொத்தமாக அழியப்போகின்றது.

என்னை பொறுத்தவரையில் கருணா எவ்வளவோ மேல், சம்பந்தனையும் சுமந்திரனையும் விட கேவலமான 2 ஜென்மங்கள் கிடைக்க தமிழன் என்ன பாவம் செய்தானோ??

எல்லாவற்றையும் இழந்து நிக்கும் மக்கள் தம்மை நம்பி வாக்களிக்க அதை துஷ்பிரயோகம் செய்யும் இவர்கள் காட்டுமிராண்டிகள்!!!

ஆனால் தவறு இவர்களுக்கு வாக்களித்த மக்களையே சாரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, Dash said:

என்னை பொறுத்தவரையில் கருணா எவ்வளவோ மேல், சம்பந்தனையும் சுமந்திரனையும் விட கேவலமான 2 ஜென்மங்கள் கிடைக்க தமிழன் என்ன பாவம் செய்தானோ??

எல்லாவற்றையும் இழந்து நிக்கும் மக்கள் தம்மை நம்பி வாக்களிக்க அதை துஷ்பிரயோகம் செய்யும் இவர்கள் காட்டுமிராண்டிகள்!!!

ஆனால் தவறு இவர்களுக்கு வாக்களித்த மக்களையே சாரும்.

ஏன் டக்களசை விட்டுட்டியள்? நன்றி வணக்கம். Bild in Originalgröße anzeigen

Edited by குமாரசாமி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.