Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக சிதம்பரம்பிள்ளை துரைராஜா நியமனம்

Featured Replies

புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக சிதம்பரம்பிள்ளை துரைராஜா நியமனம்

 

 

புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக சிதம்பரம்பிள்ளை துரைராஜா நியமனம்

முன்னாள் மேலதிக சொலிஸ்டர் நாயகம், ஜனாதிபதி சட்டத்தரணி சிதம்பரம்பிள்ளை துரைராஜா மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது.

புஸல்லாவ சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைப் பயின்ற துரைராஜா, கண்டி புனித அந்தோனியார் கல்லூரியில் இடைநிலைக் கல்வியைப் பயின்றுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டமாணி பட்டத்தைப் பெற்று சட்டத்தரணியான அவர், லண்டன் பல்கலைக்கழகத்தில் சட்ட முதுமாணி பட்டத்தைப் பெற்றார்.

1989 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை அரச சட்டத்தரணியாகவும், 2000 ஆம் ஆண்டு தொடக்கம் 2007 ஆம் ஆண்டு வரை சிரேஷ்ட அரச சட்டத்தரணியாகவும் செயற்பட்டுள்ளார்.

2007 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை பிரதி சொலிஸ்டர் நாயகமாகவும், 2014 ஆம் ஆண்டு முதல் இதுவரை மேலதிக சொலிஸ்டர் நாயகமாகவும் செயற்பட்டு வந்துள்ளார்.

 

Share This

http://newsfirst.lk/tamil/2016/09/மேலதிக-சொலிஸ்டர்-நாயகம்/

  • கருத்துக்கள உறவுகள்

விக்கியர் சொன்ன படியால் விசயம் நடக்குது.

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ஐயாவிற்கு தமிழரசுக்கட்சியில் சீட் வெயிட்டிங்

  • தொடங்கியவர்

இலங்கை மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக மலையக வம்சாவளி தமிழர் நியமனம்

 

இலங்கை மேல் முறையிட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக முதல் முறையாக மலையக வம்சாவளியைச் சேர்ந்த தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி முன் பதவிப்பிரமாணம் ஏற்ற நீதிபதி சிதம்பரம் பிள்ளை துரைராஜா

 ஜனாதிபதி முன் பதவிப்பிரமாணம் ஏற்ற நீதிபதி சிதம்பரம் பிள்ளை துரைராஜா

சட்ட மா அதிபர் திணைக்களத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பதவியை வகித்த சிதம்பரம் பிள்ளை துரைராஜா, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் மேல் முறையிட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

அரச வழக்கறிஞராக சட்ட மா அதிபர் திணைக்களத்தில் சேர்ந்த நீதிபதி துரைராஜா அந்த திணைக்களத்தில் 29 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

 

நீதிபதியாக நியமிக்கப்படும் போது அவர் அந்த திணைக்களத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகப் பணியாற்றி வந்தார்.

 

அவர் நேற்று மாலை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

 

நீதிபதி துரைராஜா இரண்டு ஆண்டுகள் ஃபிஜி நாட்டின் மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.com/tamil/sri-lanka-37383442

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.