Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அதிகாரங்கள் மாகாண ரீதியில் பயன்படுத்தப்பட்டால் மக்களுக்கான சேவைகள் துரிதப்படும் – இரா.சம்பந்தன்

Featured Replies

அதிகாரங்கள் மாகாண ரீதியில் பயன்படுத்தப்பட்டால் மக்களுக்கான சேவைகள் துரிதப்படும் – இரா.சம்பந்தன்

 

அதிகாரங்கள் மாகாண ரீதியில் பயன்படுத்தப்பட்டால் மக்களுக்கான சேவைகள் துரிதப்படும் – இரா.சம்பந்தன்

அதிகாரங்கள் மாகாண ரீதியில் பயன்படுத்தப்பட்டால், மக்களுக்காற்றப்படும் சேவை துரிதமாகவும் சிறப்பானதாகவும் அமையும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நாடு சுதந்திரம் அடைந்த காலம் தொடக்கம் நிலவி வருகின்ற தேசிய பிரச்சினைக்கு ஆட்சி அதிகாரங்களை மாற்றியமைப்பதன் மூலமாகவும் அதிகாரப் பகிர்வின் மூலமாகவும் அரசியல் தீர்வொன்றைக் காண முடியும் என இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டார்.

இன்று சம்பூரில் இடம்பெற்ற கிழக்கு மாகாண விவசாய கண்காட்சி மற்றும் பொருட்கள் விற்பனை நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இக்கருத்தினைக் கூறினார்.

 

Share This

http://newsfirst.lk/tamil/2016/09/அதிகாரங்கள்-மாகாண-ரீதிய/

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா..உங்களூக்கு பஞ்சாயத்து இராட்சியமே தருவார்களோ தெரியாது....

  • கருத்துக்கள உறவுகள்

என்ன...  சொல்லுறியள்,  எனக்கு.. காது,  கேக்கிறது  குறைவு.
கொஞ்சம்...  சத்தமாய்,  சொல்லுங்கோ..  பையா.......

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நவீனன் said:

அதிகாரங்கள் மாகாண ரீதியில் பயன்படுத்தப்பட்டால் மக்களுக்கான சேவைகள் துரிதப்படும் – இரா.சம்பந்தன்

 

அதிகாரங்கள் மாகாண ரீதியில் பயன்படுத்தப்பட்டால் மக்களுக்கான சேவைகள் துரிதப்படும் – இரா.சம்பந்தன்

 

தகவலுக்கு நன்றி !

  • தொடங்கியவர்
யாரும் எவரையும் ஏமாற்றமுடியாது
அரசியல் அமைப்பு மாற்றம் குறித்து சம்பந்தன் எடுத்துரைப்பு
showImageInStory?imageid=297408:tn
 

(திருகோணமலை நகர்,சேனையூர் நிருபர்கள்)

எவரும் எவரையும் ஏமாற்ற முடியாது. யாரும் யாரி டமும் ஏமாறப் போவதுமில்லை.யாரையும் யாரும் ஏமாற்றி ஒரு முறையான அரசியல் சாசனத்தை உருவாக்கமுடியாது என்று எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

மாகாண சபைகளுக்கு பாரியளவு அதி காரங்கள் பகிர்ந் தளிக்கப்பட வேண்டும். இவ்வாறு பகிர்வதன் மூலமே மாகாண அமைச்

சுக்கள் தங்கள் அதி காரங்களுக்கு உட்பட்ட மக்களுக்

கான சேவைகளை பூரணமாக செய்ய முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டி னார்.

கிழக்குமாகாண விவசாய கால்நடை கள் கூட்டுறவு மீன்பிடித்துறை அமைச்சின் ஏற்பாட்டில் கிழக்

கின் எழுச்சி என்ற கருப்பொருளில் விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தலைமை

யில் நடத்தப்பட்ட விவசாய கண்காட் சியை நேற்றைய தினம் சம்பூர் மகா

வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைத்து

உரை யாற்றும்போதே எதிர்க்கட்சித் தலை

வர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற

உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம், வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், காணி அமைச்சர் ஆரியவதி கலபதி, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அபயகுணவர்த்தன, அரசாங்க அதிபர் என்.ஏ.புஸ்பகுமார, மாகாண சபை உறுப்பினர்களான கு.நாகேஸ்வரன், எஸ்.ஜனார்த்தனன்,

யாரும்....

லாகீர் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

சம்பந்தன் எம்.பி. தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஏற்பட இருக்கின்ற அரசியல் தீர்வு இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் எல்லா இன மதத்தவர்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும். பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் ஏனைய இனத்தவர்களும் நியாயம்தரும் வகையில் அரசியல் அமைப்பு கொண்டுவரப்பட வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பாகும்.

எவரையும் எவரும் ஏமாற்றி ஒரு முறையான அரசியல் சாசனத்தை நாம் பெற முடியாது. சில அரசியல் தலைவர்கள் சில இனங்களின் தலைவர்கள் தமது இனத்தை ஏமாற்றுவதற்காக சில பொய்களைக் கூறிவருகின்றார்கள். அதற்கு நாம் பலவிதமான காரணங்களைக் கூறலாம். சுருக்கமாக கூறுவதென்றால் எவரும் எவரையும் ஏமாற்றவில்லை. எவரும் எவரையும் ஏமாற்றுவதன் மூலமாக ஒரு திருப்திகரமான நியாயமான நிரந்தரமான நிதானமான அரசியல் தீர்வை நாம் அடையமுடியாது.

உருவாக்கப்படவுள்ள அரசியல் தீர்வு மக்கள் முன் சர்வசன வாக்கெடுப்பிற்கு சமர்ப்பிக்கப்படும். அந்த அரசியல் சாசனம் மக்களின் ஆணையைப்பெற்றபின்புதான் அமுலுக்கு வரும் நிறைவேற்றப்படும். ஆகையால் எவரும் எவரையும் ஏமாற்றவேண்டும் என்று யாரும் தற்போது எண்ணவேண்டிய அவசியமில்லை. இத்தகைய சூழ்நிலையில் நாம் எல்லோரும் பக்குவமாகவும் நிதானமாகவும் நடக்கவேண்டிய காலத்தின் தேவை காணப்படுகின்றது.

சில அரசியல் தலைவர்கள் தங்கள் தனிப்பட்ட நலனுக்காக அரசியல் லாபம் தேடுவதற்காக தற்போதைய அரசியல் தீர்வு விவகாரங்களை பயன்படுத்துவது போல் எனக்குத்தெரிகிறது. அவ்விதமான கருத்துக்களை அவர்கள் உடனடியாக நிறுத்தவேண்டும். நாட்டின் நன்மைக்காகவும் மக்களின் நன்மைக்காகவும் நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும் என அவர்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.

மாகாண சபைகளுக்கு ஓரளவு அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளது. ஆனால் மாகாணத்திற்கு தேவையான போதியளவு அதிகாரங்கள் பகிரப்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்கின்றேன். பாரியளவு அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு பகிரப்பட்டவேண்டும். பகிரப்படுவதன் மூலமே மாகாண அமைச்சுக்கள் தங்கள் அதிகாரங்களுக்கு உட்பட்ட மக்களுக்கான சேவைகளை பூரணமாக செய்யமுடியும்.

அரசியல் சாசனம் ஒற்றை உருவாக்குவதற்காக பாராளுமன்றம் அரசியல் சாசன சபையாக மாற்றப்பட்டிருக்கின்றது. அதற்கு வேண்டிய குழுக்களும் உபகுழுக்களும் நியமிக்கப்பட்டிருக்கின்றன. நிபுணர்கள் அக்குழுக்களுக்கு ஆலோசனை வழங்கி வருக்கின்றார்கள். தற்போது அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்காக எல்லோரும் செயற்பட்டு வருகின்றோம். உருவாக்கப்படும் அரசியல் சாசனத்தில் மூன்று முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

1.நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை மாற்றுவதா இல்லையா

2.தேர்த்தல் முறையில் மாற்றத்தை உருவாக்குதல்.

3.நீண்ட கால இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் ரீதியான தீர்வுகாணப்பட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே அரசியல் சாசனம் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாகாண சபையின் ஒவ்வொரு துறையும் அதிகார வலுக்கொண்டதாக மாற்றப்பட வேண்டும். கிழக்கு மாகாணம் விவசாயத்திற்கு பேர்போன ஒரு மாகாணம் ஆகும். இங்கு உற்பத்தியாக்கப்படும் அனைத்துப்பொருட்களும் சிறந்த சந்தை வாய்ப்பைப் பெறுவதன் மூலம் மக்களின் வருமானத்தை உயர்த்தி சிறந்த வாழ்வாதாரத்தை பெறமுடியும். இதற்கு கூட்டுறவுத்துறை ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

ஒவ்வொரு துறைக்கும் கூட்டுறவுமுறையை உருவாக்கி அந்த கூட்டுறவுமுறையின் மூலம் கிழக்கில் உற்பத்தி செய்யப்படும் விவசாயப்பொருட்களுக்கு சிறந்த உள்ளூர் சந்தை வாய்ப்புக்களை உருவாக்கவும் அதேபோன்று வெளிநாட்டில் சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்தவும் சிறந்த நடவடிக்கைகளை மேற்கொள்வோமாக இருந்தால் விரைவில் நாம் அபிவிருத்தி அடைய முடியும். ஒவ்வொரு துறையும் விஞ்ஞான மாற்றங்களுக்கு ஏற்பவும் தொழிநுட்ப துறை வளர்ச்சிக்கு ஏற்பவும் நுட்பங்களை பயன்படுத்தி அபிவிருத்தி அடைய வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பாகும். அந்த எதிர்பார்ப்பின் அடிப்படையிலேயே இந்த விவசாயக் கண்காட்சி நடாத்தப்படுகின்றது. சம்பூர் பிரதேசம் விவசாயத்திற்கு பேர்போன ஓர் பிரதேசமாக அக்காலத்தில் இருந்துள்ளது. இந்த மண்ணைச் சேர்ந்த பல விவசாயிகள் தேசிய விருதுகளைக் கூட வென்றிருக்கின்றார்கள்.

இந்த மேடையை ஓர் அரசியல் மேடையாகப் பயன்படுத்தி இதன் தரத்தை நான் குறைக்கமுயலவில்லை. சில முக்கியமான கருத்துக்களை மாத்திரம் இவ்விடத்தில் கூற விரும்புகின்றேன் ஏற்படுத்தபோகின்ற அரசியல் சாசன ஒழுங்கு ஒருமித்த நாட்டிற்குள் நாடு எந்த வகையிலும் பிளவு படாமல் நாடு எந்த வகையிலும் பிரிக்கப்படாமலும் எந்த வகையிலும் பிரிக்கப்படக்கூடிய நிலைமைகள் ஏற்படாமல் ஒற்றுமையான ஒருமித்த நாட்டிற்குள் ஏற்படவேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பாகும். இது விடயத்தில் எவரும் எந்த வகையிலும் சந்தேகம் கொள்ளத்தேவை இல்லை என்றார்.

showImageInStory?imageid=297414:mr

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=17/09/2016

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.