Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு, கிழக்கை மையப்படுத்தியே தீர்வு தமிழ்பேசும் மக்களாக ஒருமித்து பயணிப்போம் அஷ்ரப் நினைவு நிகழ்வில் சம்பந்தன் அழைப்பு

Featured Replies

வடக்கு, கிழக்கை மையப்படுத்தியே தீர்வு
தமிழ்பேசும் மக்களாக ஒருமித்து பயணிப்போம் அஷ்ரப் நினைவு நிகழ்வில் சம்பந்தன் அழைப்பு
showImageInStory?imageid=297445:tn
 

(ஆர்.ராம்)

அனை­வரும் சம­மாக வாழக்­கூ­டிய புதிய அர­சியல் சாச­னத்­தினை உரு­வாக்கக் கூடிய சந்­தர்ப்பம் ஏற்­பட்­டுள்­ளது. இறு­தி­யாக ஏற்­படும் அர­சியல் தீர்­வா­னது வடக்­கு, கி­ழக்கை மைய­மாகக் கொண்­ட­தாக அமை­வ­தோடு இற்­றை­வ­ரையில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட ஒழுங்­கு­க­ளுக்கு அமைய இருத்தல் வேண்­டுமென எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் குறிப்­பிட்­டுள்ளார்.

அனு­ப­வித்த இழப்­புக்கள், அழி­வு­க­ளுக்கு ஈடு­கொ­டுக்­கக்­கூ­டி­ய­தாக அத்­தீர்வு அமைய வேண்டும் எனக் குறிப்­பிட்ட எதிர்­க்கட்­சித்­த­லைவர் அவ்­வி­த­மான தீர்வை அடை­வ­தற்­காக ஒரு­மித்துச் செயற்­ப­ட­வேண்­டி­யது காலத்தின் கட்­டா­ய­மெ­னவும் குறிப்­பிட்­டுள்ளார். தாமரைத்­த­டாக கலை­ய­ரங்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காரங்­கி­ரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்­ரப்பின் 16ஆவது ஞாப­கார்த்த நிகழ்வும் மற்றும் பரி­ச­ளிப்பு விழாவும் நேற்று இடம்­பெற்­றது.

திரு­கோ­ண­ம­லையில் நடை­பெ­ற­வுள்ள வைப­வ­மொன்றில் பங்­கு­பற்­று­வ­தற்கு ஏற்­க­னவே சம்­மதம் தெரி­வித்­தி­ருந்ததன் கார­ணத்தால் எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் இந்­நி­கழ்வில் பங்­கு­பற்ற முடி­ய­வில்லை. இந்­நி­லை­யி­லேயே அவர் அனுப்பி வைத்த செய்­திக்­கு­றிப்பில் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது நாட்டின் அர­சியல் வர­லாற்றில் அதி­முக்­கி­யத்­துவம் வாய்ந்த இத்­த­ரு­ணத்தில் இவ்­வை­பவம் நடை­பெ­று­வது ஒரு முக்­கி­ய­மான அம்சம் என்று நான் கரு­து­கின்றேன். மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்­ரப்பை பற்றி சில வார்த்­தைகள் கூற விரும்­பு­கின்றேன்.

அவ­ரு­டைய ஆரம்ப அர­சியல் படிகள் மறைந்த தலைவர் தந்தை எஸ்.ஜே.வி. செல்­வ­நா­யகத்தையே பின்­பற்றி இருந்­தது. தந்தை செல்­வா­வி­னு­டைய அர­சியல் கொள்­கை­களை அவர் முழு­மை­யாக ஏற்­றுக்­கொண்டார். தந்தை செல்­வாவின் மறைவின் பிறகு அவரைப் பற்றி ஒரு கவி­தையை இயற்றி எமது நாட்டின் தேசிய பிரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்கு தந்தை செல்­வாவை மீண்டும் வருகை தரு­மாறு அழைத்து பல வைப­வங்­களில் அக்­க­வி­தையை தானே பாடி வந்தார். தந்தை செல்வா தன்­னு­டைய காலத்தில் வடக்­கு, கி­ழக்கில் வாழ்­கின்ற தமிழ்­பேசும் மக்கள் அனை­வ­ரதும் உரி­மை­களைப் பற்­றியே பேசினார். செயற்­பட்டார்.

அந்த நிலைப்­பாட்டை மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் முழு­மை­யாக ஏற்­றுக்­கொண்­டி­ருந்தார். தமிழ் மக்­க­ளுக்கும் தமிழ் அர­சியல் தலை­வர்­க­ளுக்கும் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்­ரப்­புக்­கு­மி­டையில் ஒரு நெருக்­க­மான தொடர்பும் புரிந்­து­ணர்வும் எப்­பொ­ழுதும் இருந்து வந்­தது. தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் தமிழ் மக்­க­ளு­டைய நியா­ய­பூர்­வ­மான அபி­லா­சை­க­ளையும் அர­சியற் கோரிக்­கை­க­ளையும் நன்கு புரிந்­தி­ருந்தார் அவற்றை அவர் முழு­மை­யாக ஏற்­றுக்­கொண்­டி­ருந்தார்.

தமிழ் மக்­க­ளுக்கு ஓர் அர­சியல் தீர்வு கிடைக்கும் சந்­தர்ப்­பத்தில் அந்தத் தீர்வில் முஸ்லிம் மக்­களும் சம­பங்­கா­ளி­க­ளாக இருக்க வேண்டும் என்ற இலக்­குடன் தமிழ்­பேசும் முஸ்லிம் மக்­க­ளையும் ஒற்­று­மைப்­ப­டுத்தி அவர் செயற்­பட்டார். அவர் வாழ்ந்த காலத்தில் முஸ்லிம் மக்­க­ளு­டைய ஒரே குர­லாக அவர் திகழ்ந்தார். அதே­வே­ளையில் தமிழ்­மக்­களும் முஸ்லிம் மக்­களும் தமிழ்­பேசும் மக்கள் என்ற ரீதியில் வடக்­கு, கி­ழக்கில் ஒரு­மித்துச் செயற்­பட வேண்டும் என்ற நிலைப்­பாட்­டிலும் அவர் உறு­தி­யாக இருந்தார்.

தற்­போ­தைய நிலைமை

நாட்­டி­னு­டைய அர­சியல் வர­லாற்றில் ஒரு மிகவும் இக்­கட்­டா­னதும் அதி­முக்­கி­ய­மா­னதும் அதே நேரத்தில் அதிக சந்­தர்ப்­ப­முள்­ள­து­மான தரு­ணத்தில் நாங்கள் தற்­பொ­ழுது இருக்­கின்றோம். இந்த நாட்டின் சிங்­கள மக்கள், தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் அனை­வ­ரையும் ஒற்­று­மைப்­ப­டுத்தி எல்­லோரும் இந்­நாட்டில் சம­மாக வாழக்­கூ­டிய வகையில் நாட்­டுக்கு ஒரு புதிய எதிர்­கா­லத்தை உரு­வாக்­கக்­கூ­டிய ஓர் அர­சியல் சாச­னத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு தற்­பொ­ழுது ஒரு சந்­தர்ப்பம் உரு­வா­கி­யி­ருக்­கின்­றது.

மறு­த­லிக்க முடி­யாது

தமிழ்­பேசும் மக்­க­ளான தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் வடக்­கு, ­கி­ழக்கு மாகா­ணங்­களில் என்ன நடை­பெ­றப்­போ­கின்­றது என்­ப­தை­யொட்டி மிகவும் அக்­க­றை­யோடு இருக்­கின்­றார்கள். வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களைப் பொறுத்­த­வ­ரையில் அதற்­கென ஓர் அர­சியல் வர­லாறு இருக்­கின்­றது என்­பதை எவ­ராலும் மறு­த­லிக்க இய­லாது.

அடிப்­படை உண்­மைகள்

தமிழ்த் தலைவர் தந்தை எஸ்.ஜே.வி. செல்­வ­நா­ய­கத்­துடன் இலங்­கையின் முன்னாள் பிர­த­மர்­க­ளான எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்க மற்றும் டட்லி சேன­நா­யக்க ஆகியோர் முறையே 1957 இலும் 1965 இலும் மேற்­கொண்ட ஒப்­பந்­தங்­க­ளி­னாலும் 1983 ஆம் ஆண்டு நடை­பெற்ற உச்­சக்­கட்ட இன­வன்­மு­றைக்குப் பிறகு அயல்­நா­டான இந்­தி­யாவின் நல்­லெண்ண முயற்­சி­களின் ஊடாக 1987 ஆம் ஆண்டு இலங்­கையின் ஜே.ஆர்.ஜய­வர்த்­த­ன­வுக்கும் பாரதப் பிர­தமர் ராஜீவ் காந்­திக்கும் இடையில் ஏற்­பட்ட ஒப்­பந்­தத்தின் அடிப்­ப­டை­யிலும் வடக்­குக்­கி­ழக்கு மாகா­ணங்­களைப் பொறுத்­த­வ­ரையில் சில அடிப்­படை உண்­மைகள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன.

இவற்­றி­னூ­டாக வடக்­கு, கி­ழக்கில் வாழ்­கின்ற அனைத்து மக்­களின் உரி­மை­களும் பேணிப்­பா­து­காக்­கப்­படும் அதே வேளையில் வடக்­கு, கி­ழக்கின் மொழி ரீதி­யான அடை­யா­ளமும் நிரூ­பிக்­கப்­பட்டு ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது. இந்த அடை­யாளம் நிரந்­த­ர­மாகத் தொட­ரப்­பட வேண்­டி­யது அத்­தி­யா­வ­சி­ய­மாகும்.

இந்த உண்­மையை தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் நன்கு புரிந்­து­கொண்­டி­ருந்தார். அதே­நேரம் இந்த உண்­மையை பெரும்­பான்மை இனத் தலை­வர்­க­ளா­கிய முன்னாள் பிர­த­மர்­க­ளான எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்­டா­ர­நா­யக்க மற்றும் டட்லி சேன­நா­யக்க ஆகி­யோரும் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜய­வர்த்­தனவும் முழு­மை­யாக ஏற்­றுக்­கொண்­டி­ருந்­தனர். இதன் கார­ண­மா­கத்தான் ஜே.ஆர்.ஜய­வர்த்­தன, பாரதப் பிர­தமர் ராஜீவ் காந்தி ஆகி­யோ­ருக்­கி­டையில் ஏற்­பட்ட ஒப்­பந்­தத்தின் பின்னர் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தமிழ் அர­சியல் தலை­வர்­க­ளுடன் பேசி வடக்­கு, கி­ழக்கு சம்­பந்­த­மாக சில ஒழுங்­குகள் செய்­யப்­பட்­டன. இவை பல­ராலும் விசே­ட­மாக தமிழ் முஸ்லிம் தலை­மைத்­து­வங்­களால் நன்கு உண­ரப்­பட்ட விட­யங்­க­ளாகும்.

இதன் கார­ண­மாக முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க அம்­மை­யார், காலத்தில் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்­ரப்பால் 2000 ஆம் ஆண்டில் முன்­வைக்­கப்­பட்ட அர­சியல் சாசனப் பிரே­ர­ணை­களில் இந்த நிலைப்­பாடு அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது.

அதைத் தொடர்ந்து 2002 ஆம் ஆண்டில் வௌியி­டப்­பட்ட ஒஸ்லோ கூட்­ட­றிக்­கையின் பிர­காரம் ஒரு­மித்த நாட்­டுக்குள் தமிழ்­பேசும் மக்கள் சரித்­திர ரீதி­யாக வாழ்ந்து வந்த பிர­தே­சத்தில் (வடக்­கு, கி­ழக்கில்) அர­சியல் தீர்வு சம்­பந்­த­மான முடி­வுகள் எடுக்­கப்­பட்­டி­ருந்­தன. இதன் மூலம் தொடர்ச்­சி­யாக இந்த நிலைப்­பாடு பேணப்­பட்டு வந்­துள்­ளது.

அழிக்க முடி­யாது

இந்த அடிப்­படை உண்­மை­களைக் கப­ட­மான செயற்­பா­டு­க­ளி­னூ­டாக இல்­லாமல் செய்ய முடி­யாது. தமது உரி­மை­களைப் பெறு­வ­தற்­காக தமிழ்­மக்கள் பாரிய தியா­கங்­களைச் செய்­தி­ருக்­கின்­றார்கள். அந்த அர­சியல் போராட்­டங்­களைத் தமிழ் மக்கள் முன்­நின்று பல தசாப்­தங்­க­ளாக பல வடி­வங்­களில் நடத்­தி­யி­ருக்­கி­றார்கள். தமிழ்­மக்கள் பாரிய அழி­வு­க­ளையும் இழப்­புக்­க­ளையும் சந்­தித்­தி­ருக்­கி­றார்கள் அத்­தோடு மேலும் பல சவால்­க­ளையும் எதிர்­கொண்­டுள்­ளார்கள். இந்த உண்­மைகள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட வேண்டும், மதிக்­கப்­பட வேண்டும்.

ஆயு­தப்­போ­ராட்டம்

ஆயுதப் போராட்­டத்தின் கார­ண­மாக முஸ்லிம் மக்­க­ளுக்கும் பாரிய அழி­வு­களும் இழப்­புக்­களும் ஏற்­பட்­டி­ருக்­கின்­றன. இத­னையும் எல்­லோரும் ஏற்­றுக்­கொள்ள வேண்டும். ஆயுதப் போராட்­டத்தின் கார­ண­மாக நாட்­டி­லுள்ள சகல மக்­களும் பல்­வேறு அழி­வு­க­ளையும் இழப்­புக்­க­ளையும் சந்­தித்­துள்­ளார்கள். இதுவும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட வேண்டும்.

ஈடு­கொ­டுக்க கூடிய தீர்வு

இறு­தி­யாக ஏற்­ப­டு­கின்ற தீர்வு மக்­க­ளு­டைய அடிப்­படை உரி­மைகள், போராட்­டங்கள், மக்­க­ளு­டைய இழப்­புக்கள் மற்றும் அழி­வு­களை ஈடு செய்யும் வகையில் அமைய வேண்டும். விசே­ட­மாக உரி­மை­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக தமிழ்­மக்கள் செய்த தியா­கங்கள், அனு­ப­வித்த இழப்­புக்கள், அழி­வு­க­ளுக்கு ஈடு­கொ­டுக்­கக்­கூ­டி­ய­தாக அத்­தீர்வு அமைய வேண்டும்.

ஏற்­ப­டு­கின்ற அர­சியல் தீர்­வா­னது விசே­ட­மாக வடக்­கு, ­கி­ழக்கை மைய­மாகக் கொண்டு இற்றைவரையில் பேசி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒழுங்குகளுக்கு அமைவாக இருத்தல் வேண்டும். எல்லா மக்களுக்கும் நீதியானதும் நியாயமானதுமான தீர்வாக அத்தீர்வு அமைய வேண்டும்.

அவ்விதமான ஒரு தீர்வை அடைவதற்கு நாங்கள் எல்லோரும் ஒருமித்துச் செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதன் மூலமாகவே எமது மக்கள் அனைவரும் ஏற்படப்போகின்ற தீர்வில் திருப்தியடைய முடியும். இதன் மூலமே நாட்டைப் பொறுத்த வரையில் எதிர்காலம் சுபிட்சமானதாக அமைய முடியும்.

அத்தியாவசியம்

இந்த நேரத்தில் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் இல்லாதிருப்பது எங்கள் எல்லோருக்கும் ஒரு பேரிழப்பு என நான் கருதுகின்றேன். எமது மக்கள் வரலாற்று ரீதியாக தாம் வாழ்ந்த பிரதேசத்தில் ஒருமித்த நாட்டுக்குள் தொடர்ந்து சுபீட்சமாக வாழ்வதற்கு ஏற்ற வகையில் நாங்கள் எல்லோரும் நிதானமாகச் செயற்படுவது அத்தியாவசியமென்று நான் மிகவும் விநயமாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்றுள்ளது.

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=17/09/2016

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.