Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் 28 ஆண்டுக்கு முன் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டார் வைகோ

Featured Replies

பிரபாகரன் 28 ஆண்டுக்கு முன் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டார் வைகோ

 

 
 
vaiko1_3013907f.jpg
 

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், திமுக தலைவரும் தமிழகத்தின் அப்போதைய முதல்வருமான கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தை 28 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியிட்டிருக்கிறார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

1989-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில் இலங்கையில் அமைதியை நிலைநாட்ட இந்திய ராணுவம் அனுப்பிய ஐபிகேஎப் குழு அங்கு அநீதியை கட்டவிழ்த்துவிட்டதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருக்கிறார் பிரபாகரன்.

கடிதத்தை தற்போது வெளியிட்டது குறித்து வைகோ 'தி இந்து' ஆங்கில நாளிதழிடம் கூறும்போது, "இலங்கை வனப்பகுதியில் பிரபாகரனை நான் சந்தித்தபோது அவர் இந்த கடிதத்தை எனக்குக் கொடுத்தார். அதிலிருந்து ஒரு சில மாதங்களுக்குப் பின்னர் நான் அக்கடிதத்தை கருணாநிதியிடம் கொடுத்தேன். ஆனால், அக்கடிதத்தை அழித்துவிட்டதாக கருணாநிதி பின்னாளில் என்னிடம் கூறினார். நான் அதன் பிரதி ஒன்றை இன்றளவும் பாதுகாத்து வைத்துள்ளேன். அந்தக் கடிதத்தின் உள்ளடக்கத்தை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதாலேயே அதனை இப்போது வெளியிடுகிறேன்" எனத் தெரிவித்தார்.

கருணாநிதியை 'எனது பெருமதிப்புக்கும் அன்புக்கும் உரிய அண்ணா" என்று அக்கடிதத்தில் பிரபாகரன் விளித்திருக்கிறார். இலங்கை நாடாளுமன்றத்தில் உள்ள தமிழ் தலைவர்கள் எல்லோரும் தங்களை கைவிட்டுவிட்ட நிலையில் வைகோ தனது உயிரை பனையம் வைத்து என்னையும் எனது சகாக்களையும் வந்து சந்தித்துள்ளார் என குறிப்பிட்டிருக்கிறார் பிரபாகரன்.

இனி அக்கடிதத்தின் உள்ளடக்கம் சுருக்கமாக..

"வைகோ தனது உயிரையும் பொருட்படுத்தாது எவ்வளவோ சிரமங்களுக்கு மத்தியில் அடர்ந்த கானகத்தின் நடுவே என்னையும் எனது சக தோழர்களையும் சந்தித்திப் பேச வைத்துள்ள துணிச்சலையும் தமிழ்ப்பற்றையும் பார்க்கும்போது நான் எனது மொழிக்காகவும் தமிழ் நாட்டுக்காகவும் இன்னும் ஆயிரம் தடவை இறக்கலாம் என்னும் மனத்தென்பே ஏற்படுகிறது.

அண்ணா (கருணாநிதி) உங்களது ஆட்சி தமிழகத்தில் மீண்டும் வந்துள்ளதையடுத்து நான் பெருமைப்படுகிறேன். இனித் தமிழகத்தின் தமிழ் இன உணர்வு மீண்டும் தழைத்தோங்கும். எம்மைப் பொறுத்தவரை நாம் எந்த லட்சியத்திற்காக ஆயுதமேந்திப் போராட்டினோமோ அந்த லட்சத்தியத்தில் வென்று வாழ்வோம் அல்லது அந்த லட்சியத்திற்காக சந்தோசத்துடன் மடிவோம். இன்று இந்திய ஆக்கிரமிப்பு ராணுவத்தின் நடவடிக்கையால் எமது நாடு சுடுகாடாகிக் கொண்டிருக்கிறது.

இதனை தமிழகத்தின் கவனத்துக்கும், இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சிகளின் கவனத்துக்கும் நீங்கள் கொண்டுவரவேண்டிய காலம் வந்துவிட்டது. அதனை நீங்களும் உங்கள் அமைப்பும் தான் செய்ய வேண்டும். அண்ணா நிச்சயம் எமது மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இந்திய ஆக்கிரமிப்பாளர்களின் துரோகத்தை நீங்கள் தமிழகத்தின் கவனத்துக்கு கொண்டுவர உதவுவீர்கள் என நான் நம்புகிறேன். இங்கு மீண்டும் மிகப் பெரிய தாக்குதலுக்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்த அபாய சூழலை கருதித்தான் கோபால்சாமி அண்ணணை இந்த முற்றுகை வளையத்திலிருந்து மிகுந்த கவலையுடன் தமிழ் நாட்டுக்கு திரும்ப அனுப்பிவைத்துவிட்டேன்."

இவ்வாறு பிரபாகரன் கடிதத்தில் எழுதியுள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/பிரபாகரன்-28-ஆண்டுக்கு-முன்-கருணாநிதிக்கு-எழுதிய-கடிதத்தை-வெளியிட்டார்-வைகோ/article9118765.ece?homepage=true

  • தொடங்கியவர்

’பிரபாகரனின் கடிதத்தை இப்போது வெளியிட்டது ஏன்?- விளக்குகிறார் வைகோ

VAIKO%20WITH%20KALAIGNAR%201.jpg

‘விடுதலைப் புலிகள்’ இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தை, 28 ஆண்டுகளுக்குப்பிறகு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டார். செப்டம்பர் 15-ம் தேதி, திருச்சியில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழாவில்,  வைகோ அந்தக் கடிதத்தை வெளியிட்டது ஏன்? என்ற கேள்வி அரசியல் பார்வையாளர்கள் தொடங்கி வெகுஜன மக்கள் வரை புரியாத புதிராக நீடிக்கிறது.  கர்நாடகாவும் தமிழகமும் காவிரியை மையப்படுத்தி, பற்றி எரிந்து கொண்டிருந்த நேரத்தில், வைகோவின் நடவடிக்கையை சில அரசியல் கணக்குகளுக்குள் திணித்தும் பார்க்கின்றனர் பலர். இப்படி பல சர்ச்சைகளை எழுப்பியுள்ள கடித விவகாரம் குறித்து வைகோவிடம் பேசினோம். அவர் அளித்த விளக்கம்...

“உலகத்தில் யாருக்கும் இப்படிப்பட்ட சான்றிதழை தலைவர் பிரபாகரன்  கொடுத்ததில்லை. தலைவர் பிரபாகரன் அந்தக் கடிதத்தில், 'வைகோ உயிருக்குத் துணிந்து, மரணத்திற்கு அஞ்சாமல், இங்கு வந்ததை நினைக்கும்போது, நான் எனது மொழிக்காகவும், ஈழத் தமிழ் நாட்டிற்காகவும் ஆயிரம் முறை இறக்கலாம் என்ற தெம்பு ஏற்பட்டது' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வாசகங்களைச் சொல்லும் தைரியம் உலகத்தில் யாருக்கும் கிடையாது; உலகத்தில் அவருக்கு நிகரான தலைவர் (பிரபாகரன்) யாரும் கிடையாது. அவர் என்னைக் குறிப்பிட்டு, இப்படிச் சொன்னது,  எனக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய பாக்கியம்; மிகப்பெரிய விருது அது. அதுபோல, அவர் கழுத்தில் கட்டியிருந்த சயனைடு குப்பியை, என்னைத் தவிர வேறு யாருக்கும் கழுத்தில் கட்டிவிட்டது கிடையாது. அதுவும் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்.

letter.jpg

தலைவர் பிரபாகரன், என்னை அதிகமாகப் புகழ்ந்து எழுதிய கடிதத்தை கலைஞர் ரசிக்கவில்லை. இதை நான் குறையாகச் சொல்லவில்லை. அந்தக் கடிதத்தில், அவரைப் பற்றி தலைவர் பிரபாகரன் அதிகமாக எழுதியிருப்பார் என்று கலைஞர் நினைத்திருப்பார். ஆனால், அந்தக் கடிதம், என்னைப் பற்றி அதிகமாக புகழ்ந்து எழுதப்பட்டு இருந்தது. அதனால், கலைஞர்  அதை ரசிக்கவில்லை. அந்தக் கடிதத்தை வாசிக்கும்போது, கலைஞர் வெளிப்படுத்திய முகபாவனைகளில் இருந்து அதை நான் புரிந்து கொண்டேன்.  கடிதத்தைப் படித்து முடித்த கலைஞர், ’பற்று இருக்கலாம்; வெறி இருக்கக்கூடாது’ என்று எனக்கு அறிவுரை கூறினார். சில மாதங்கள் கழித்து, ’அந்தக் கடிதம் எதற்கு? எதிர்காலத்தில் தேவையற்ற பிரச்னைகள் வரும். அதனால், அதை கிழித்துவிட்டேன்’ என்று கலைஞர் என்னிடம் கூறினார்.

VAIKO%20WITH%20PRABHAKARAN.jpg

இந்தச் சம்பவங்கள் நடந்தபோது, கடல் புலிகள் தலைவர் சூசை, சிகிச்சைக்காக இங்கு வந்து தங்கியிருந்தார். நான் ஈழம் சென்று திரும்பியதை அறிந்த சூசை, இரவு 10 மணிக்கு என்னைப் பார்க்க வந்தார். “அண்ணா, நீங்கள் பத்திரமாக திரும்பிவீட்டீர்களா? என்று தலைவர் கவலையோடு விசாரித்துக் கொண்டிருக்கிறார்” என்று கேட்டவரிடம், ’தலைவர் பிரபாகரன் அவர்கள், கலைஞருக்கு ஒரு கடிதம் கொடுத்துள்ளார். நான் அதை காலையில் போய் அவரிடம் கொடுக்கப்போகிறேன்’ என்றேன். அப்போதுகூட எனக்கு அதை பிரதி எடுக்கும் எண்ணம் தோன்றவில்லை. ஆனால், சூசைதான், ’அண்ணா, இதை ஒரு பிரதி எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினார். அதோடு, அவரே கிளம்பிப்போய், எங்கேயோ பிரதி எடுத்துவந்து, இரவு 11.30 மணிக்கு என்னிடம் கொடுத்தார். இது யாருக்கும் தெரியாது. நான் இதை யாரிடமும் சொல்லவில்லை. இதை நீண்ட காலமாக பூட்டியே வைத்திருந்தேன். தலைவர் பிரபாகரன் என் மீது எவ்வளவு நம்பிக்கையும், மதிப்பும் வைத்திருந்தார் என்பதற்கு அவருடைய இந்தக் கடிதமே சாட்சி.  இதை எப்போதாவது ஒரு கட்டத்தில் வெளியிட்டுத்தானே தீர வேண்டும். கடந்த நான்கைந்து வருடங்களாக இதைப்பற்றி யோசித்துக் கொண்டே இருந்தேன். ‘தமிழ் ஈழம்’ என்ற உணர்வு மீண்டும் இப்போது கிளர்ந்து எழ வேண்டிய ஒரு காலம். மீண்டும் ஒரு பெரும் அழிவு நடப்பதற்குள் அந்தக் கிளர்ச்சி எழ வேண்டும்.  ஏனென்றால், மொத்தமாகவே, பெரும் அழிவும் இன அழிப்பும் நடந்து கொண்டிருக்கிற நேரம் இது. இந்தக் கட்டத்தில் இந்தக் கடிதம், ஈழ உணர்வாளர்கள் மனதில் ஒரு எழுச்சியை உருவாக்கும் என்று என் மனதில் பட்டது. இதை இனியும் தாமதப்படுத்த வேண்டாம். ஏற்கனவே, 28 வருடங்கள் ஓடிவிட்டது. வாழ்க்கையில் சில நல்லவற்றை வெளி உலகுக்கு காட்டாமல் போவது நல்லதல்ல. எனவே, இனியும் தாமதிக்கக்கூடாது என்று யோசித்துத்தான் தலைவர் பிரபாகரன் எழுதிய கடிதத்தை வெளியிட்டேன்.”

http://www.vikatan.com/news/tamilnadu/68511-after-28-years-why-i-released-prabhakaran’s-letter----mdmk-chief-vaiko.art

 

 

‘விடுதலைப் புலிகள்’ இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தை, 28 ஆண்டுகளுக்குப்பிறகு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டார். செப்டம்பர் 15-ம் தேதி, திருச்சியில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழாவில்,  வைகோ அந்தக் கடிதத்தை வெளியிட்டது ஏன்? என்ற கேள்வி அரசியல் பார்வையாளர்கள் தொடங்கி வெகுஜன மக்கள் வரை புரியாத புதிராக நீடிக்கிறது.  கர்நாடகாவும் தமிழகமும் காவிரியை மையப்படுத்தி, பற்றி எரிந்து கொண்டிருந்த நேரத்தில், வைகோவின் நடவடிக்கையை சில அரசியல் கணக்குகளுக்குள் திணித்தும் பார்க்கின்றனர் பலர். இப்படி பல சர்ச்சைகளை எழுப்பியுள்ள கடித விவகாரம் குறித்து வைகோவிடம் பேசினோம். அவர் அளித்த விளக்கம்...

“உலகத்தில் யாருக்கும் இப்படிப்பட்ட சான்றிதழை தலைவர் பிரபாகரன்  கொடுத்ததில்லை. தலைவர் பிரபாகரன் அந்தக் கடிதத்தில், 'வைகோ உயிருக்குத் துணிந்து, மரணத்திற்கு அஞ்சாமல், இங்கு வந்ததை நினைக்கும்போது, நான் எனது மொழிக்காகவும், ஈழத் தமிழ் நாட்டிற்காகவும் ஆயிரம் முறை இறக்கலாம் என்ற தெம்பு ஏற்பட்டது' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வாசகங்களைச் சொல்லும் தைரியம் உலகத்தில் யாருக்கும் கிடையாது; உலகத்தில் அவருக்கு நிகரான தலைவர் (பிரபாகரன்) யாரும் கிடையாது. அவர் என்னைக் குறிப்பிட்டு, இப்படிச் சொன்னது,  எனக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய பாக்கியம்; மிகப்பெரிய விருது அது. அதுபோல, அவர் கழுத்தில் கட்டியிருந்த சயனைடு குப்பியை, என்னைத் தவிர வேறு யாருக்கும் கழுத்தில் கட்டிவிட்டது கிடையாது. அதுவும் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்.

letter.jpg

(முழுமையான கடிதம் கீழே இணைக்கப்பட்டுள்ளது) 

 

தலைவர் பிரபாகரன், என்னை அதிகமாகப் புகழ்ந்து எழுதிய கடிதத்தை கலைஞர் ரசிக்கவில்லை. இதை நான் குறையாகச் சொல்லவில்லை. அந்தக் கடிதத்தில், அவரைப் பற்றி தலைவர் பிரபாகரன் அதிகமாக எழுதியிருப்பார் என்று கலைஞர் நினைத்திருப்பார். ஆனால், அந்தக் கடிதம், என்னைப் பற்றி அதிகமாக புகழ்ந்து எழுதப்பட்டு இருந்தது. அதனால், கலைஞர்  அதை ரசிக்கவில்லை. அந்தக் கடிதத்தை வாசிக்கும்போது, கலைஞர் வெளிப்படுத்திய முகபாவனைகளில் இருந்து அதை நான் புரிந்து கொண்டேன்.  கடிதத்தைப் படித்து முடித்த கலைஞர், ’பற்று இருக்கலாம்; வெறி இருக்கக்கூடாது’ என்று எனக்கு அறிவுரை கூறினார். சில மாதங்கள் கழித்து, ’அந்தக் கடிதம் எதற்கு? எதிர்காலத்தில் தேவையற்ற பிரச்னைகள் வரும். அதனால், அதை கிழித்துவிட்டேன்’ என்று கலைஞர் என்னிடம் கூறினார்.

VAIKO%20WITH%20PRABHAKARAN.jpg

இந்தச் சம்பவங்கள் நடந்தபோது, கடல் புலிகள் தலைவர் சூசை, சிகிச்சைக்காக இங்கு வந்து தங்கியிருந்தார். நான் ஈழம் சென்று திரும்பியதை அறிந்த சூசை, இரவு 10 மணிக்கு என்னைப் பார்க்க வந்தார். “அண்ணா, நீங்கள் பத்திரமாக திரும்பிவீட்டீர்களா? என்று தலைவர் கவலையோடு விசாரித்துக் கொண்டிருக்கிறார்” என்று கேட்டவரிடம், ’தலைவர் பிரபாகரன் அவர்கள், கலைஞருக்கு ஒரு கடிதம் கொடுத்துள்ளார். நான் அதை காலையில் போய் அவரிடம் கொடுக்கப்போகிறேன்’ என்றேன். அப்போதுகூட எனக்கு அதை பிரதி எடுக்கும் எண்ணம் தோன்றவில்லை. ஆனால், சூசைதான், ’அண்ணா, இதை ஒரு பிரதி எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினார். அதோடு, அவரே கிளம்பிப்போய், எங்கேயோ பிரதி எடுத்துவந்து, இரவு 11.30 மணிக்கு என்னிடம் கொடுத்தார். இது யாருக்கும் தெரியாது. நான் இதை யாரிடமும் சொல்லவில்லை. இதை நீண்ட காலமாக பூட்டியே வைத்திருந்தேன். தலைவர் பிரபாகரன் என் மீது எவ்வளவு நம்பிக்கையும், மதிப்பும் வைத்திருந்தார் என்பதற்கு அவருடைய இந்தக் கடிதமே சாட்சி.  இதை எப்போதாவது ஒரு கட்டத்தில் வெளியிட்டுத்தானே தீர வேண்டும். கடந்த நான்கைந்து வருடங்களாக இதைப்பற்றி யோசித்துக் கொண்டே இருந்தேன். ‘தமிழ் ஈழம்’ என்ற உணர்வு மீண்டும் இப்போது கிளர்ந்து எழ வேண்டிய ஒரு காலம். மீண்டும் ஒரு பெரும் அழிவு நடப்பதற்குள் அந்தக் கிளர்ச்சி எழ வேண்டும்.  ஏனென்றால், மொத்தமாகவே, பெரும் அழிவும் இன அழிப்பும் நடந்து கொண்டிருக்கிற நேரம் இது. இந்தக் கட்டத்தில் இந்தக் கடிதம், ஈழ உணர்வாளர்கள் மனதில் ஒரு எழுச்சியை உருவாக்கும் என்று என் மனதில் பட்டது. இதை இனியும் தாமதப்படுத்த வேண்டாம். ஏற்கனவே, 28 வருடங்கள் ஓடிவிட்டது. வாழ்க்கையில் சில நல்லவற்றை வெளி உலகுக்கு காட்டாமல் போவது நல்லதல்ல. எனவே, இனியும் தாமதிக்கக்கூடாது என்று யோசித்துத்தான் தலைவர் பிரபாகரன் எழுதிய கடிதத்தை வெளியிட்டேன்.”

VAIKO%20WITH%20KALAIGNAR%201.jpg

http://www.vikatan.com/news/tamilnadu/68511-after-28-years-why-i-released-prabhakaran’s-letter----mdmk-chief-vaiko.art

முழுமையான கடிதம் :

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

Edited by போல்

  • கருத்துக்கள உறவுகள்

இதன்பிறகுதான் கட்டுமரம் வைகோ அவர்களை கட்சியில் இருந்தே வெளியேற்றிவிட்டது.. :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.