Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'இரந்துண்ணும் ஏதிலிகளாக மாற்றப்பட்டுள்ளனர்'

Featured Replies

'இரந்துண்ணும் ஏதிலிகளாக மாற்றப்பட்டுள்ளனர்'
 
 

article_1474293727-cv.jpg 'முன்னைய அரசியல் தலைமைகள், தமது அரசியல் சுயலாபங்களுக்கும் தமது நாடாளுமன்ற இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்கும், அப்பாவிச் சிங்கள மக்களை பிழையான வழிகளில் நெறிப்படுத்தி, அவர்களிடையே பொய்ப்பிரசாரங்களையும்; இனவாதத்தைத் தூண்டக்கூடிய பிரசாரங்களையும் முடுக்கிவிட்டமையால் தான், இலங்கையின் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் ஏற்பட்டு, பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகின' என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நேற்றுத் திங்கட்கிழமை (19) கூறினார்.

'இந்த நாட்டில் ஏற்பட்ட நீண்டகால யுத்தம், இங்கிருக்கும் எமது அனைத்து இருப்புக்கள், கல்வி நடவடிக்கைகள், பொருளாதாரம், பண்பாடு, அடிப்படை உரிமைகள் அனைத்தையும் பாதித்து விட்டது. தற்போது எமது அனைத்தையும் இழந்த நிலையில், ஏதிலிகளாக இரந்துண்ணும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கின்றோம்' என்றும் அவர் கூறினார்.

இளைஞர் கொள்கைகள் செயற்றிட்டம் தொடர்பில், பங்குதாரர்களுடனான ஆலோசனைக் கூட்டம், கிறீன்கிறாஸ் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் கூறியதாவது,

'வடபகுதி இளைஞர் - யுவதிகள், ஒரு காலத்தில் கல்வியில் மேம்பட்டவர்களாகவும் ஒழுக்கச் சீலர்களாகவும் உலகெங்கும் போற்றப்படுகின்ற அல்லது அடையாளப்படுத்தப்பட்ட ஒரு பண்பட்ட இனம் அல்லது சமூகம் என்ற பெருமையைக் கொண்டிருந்தது. இன்றைய இளைஞர் - யுவதிகள், வெளிநாடு செல்ல வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருக்கின்றார்கள்.

வெளிநாட்டுப் பணங்களை, அதன் அருமை தெரியாமல், ஊதாரித்தனமாக செலவு செய்து கொண்டிருக்கின்றார்கள். கல்வி மீதும் ஒழுக்கம் மீதும், பண்பட்ட பாரம்பரியம் மீதும் அவர்கள் சிந்தனைகள் செல்வதாகத் தெரியவில்லை.

எமது பிள்ளைகளும் மற்றவர்களின் கையை எதிர்பார்த்திருக்க தலைப்படுகின்றனர். கல்வி பற்றிய சிந்தனை, தமது எதிர்கால நிலைப்பாடுகள் பற்றிய சிந்தனைகள் அற்றவர்களாக, ஊர்சுற்ற விளைகின்றனர். இவையனைத்தும், எமது இளைய சமுதாயத்தை அண்மைக்காலமாகப் பாதித்து வருகின்றன.

இளைஞர் யுவதிகளின் கொள்கையியல் திட்டமொன்று தயாரிக்கப்பட்டு, அதன்பால் இளைஞர் யுவதிகளை நெறிப்படுத்தவும் வழிகாட்டவும், முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லவும் முயலுதல், இத்தருணத்தில் இன்றியமையாததாகியுள்ளது' என அவர் மேலும் கூறினார்.

- See more at: http://www.tamilmirror.lk/182217/-இரந-த-ண-ண-ம-ஏத-ல-கள-க-ம-ற-றப-பட-ட-ள-ளனர-#sthash.EATw1P0p.dpuf

11731.jpg

சிறுபான்மை இனத்தை இல்லாதொழிக்க மேற்கொண்ட முயற்சிகளின் பிரதிபலிப்பே இன்று பல்லாயிரக்கணக்கான தமிழ், சிங்கள மக்களின் உயிர்களைக் காவுகொண்டுள்ளது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.    

அன்று எதேச்சதிகாரமாக செயற்பட்ட அரசியற் தலைமைகள் தமது ஆட்சியதிகாரங்களைப் பயன்படுத்தி அன்றைய பதற்ற நிலைகளைத் தணித்து இனங்க ளுக்கிடையே ஒற்றுமையை உண்டாக்குவதற்கும் ஏற்ற முயற்சிகளில் ஈடுபட்டிருந்தால் இன்று அனைத்து இனங்களும் இலங்கைத் தீவில் சுதந்திரமாக வாழ்வதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டிருக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

வடமாகாண இளைஞர் கொள்கைகள் செயற்றிட்டம் தொடர்பில் பங்குதாரர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் நேற்றைய தினம் யாழ். கிறீன்கிறாஸ் ஹோட்டலில் நடைபெற்றது. 
அதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,

வடபகுதி இளைஞர், யுவதிகள் ஒரு காலத்தில் கல்வியில் மேம்பட்டவர்களாக, ஒழுக்கசீலர்களாக உலகெங்கும் போற்றப்படுகின்ற அல்லது அடையாளப்படுத்தப்பட்ட ஒரு பண்பட்ட இனம் அல்லது சமூகம் என்ற பெருமையைக் கொண்டிருந்தனர். 
எனினும் இந்த நாட்டில் ஏற்பட்ட நீண்டகால கொடிய யுத்தம்  இங்கிருக்கும் எமது அனைத்து இருப்புக்கள், கல்வி நடவடிக்கைகள், பொருளாதாரம், பண்பாடு, அடிப்படை உரிமைகள் அனைத்தையும் பாதித்து விட்டது. 

இன்றைய இளைஞர்,யுவதிகள் வெளிநாடு செல்ல வேண்டும் என்று கனவுகண்டு கொண்டிருக்கின்றார்கள். வெளிநாட்டுப் பணங்களைப் பணத்தின் அருமை தெரியாமல் ஊதாரிச் செலவு செய்து கொண்டிருக்கின்றார்கள். கல்வி மீதும் ஒழுக்கம் மீதும் பண்பட்ட பாரம்பரியம் மீதும் அவர்கள் சிந்தனைகள் செல்வதாகத் தெரியவில்லை. 

அந்நியர் ஆட்சிக் காலத்தில் பல நூறு வருடங்கள் சகோதர இனங்களாக வாழ்ந்து வந்த சிங்கள, தமிழ் சமூகங்கள் இலங்கைக்கான சுதந்திரம் கிடைப்பதற்கும் ஆங்கிலேயர் ஆட்சியை இல்லாது ஒழிப்பதற்கும் சேர்ந்து போர்க்கொடியேந்தினர். 

ஆனால் இலங்கை சுதந்திரம் பெற்று ஒரு சொற்ப காலத்தினுள்ளேயே இனங்களுக்கிடையே கருத்து வேறுபாடுகளும் மோதல்களும் ஏற்படத் தொடங்கின. 
தாம் எண்ணிக்கையில் கூடியிருந்ததால் எண்ணிக்கையில் குறைந்தவர்களைக் குட்டி வைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு பல மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் பங்குபற்றத் தலைப்பட்டனர் குறிப் பிட்ட பெரும்பான்மையினர்.

பல்வேறு கால இடைவெளிகளில் தமிழர்களின் சொத்தை சூறையாடுவதும் அவர்களின் இருப்பிடங்களை ஆக்கிரமித் தல், அழித்தொழித்தல் போன்ற தொடர் நெருக்கடிகளின் விளைவே தமிழ் இளைஞர்களை, இள இரத்தங்களை வன்முறைச் செயற்பாடுகளில் ஈடுபடத் தூண்டின. 

அன்றைய அரசியற் தலைமைகள் இவ்வாறான தருணங்களில் தமது ஆட்சியதிகாரங்களைப் பயன் படுத்தி அன் றைய பதற்ற நிலைகளைத் தணித்து இனங்களுக்கி டையே ஒற்று மையை உண் டாக்குவதற்கும் புரிந்துணர்வுடன் வாழ்வதற்கும் ஏற்ற முயற் சிகளில் ஈடுபட்டிருந்தால் இந்த இலங்கைத் தீவினுள் அனைத்து இனங்களும் ஐக்கியத்துடனும் புரிந்துணர்வுட னும் சுதந்திரமாக வாழ்வதற்கான சந்தர்ப்பங்கள் நிறைய இருந்திருக்கும். 

அன்றைய அரசியற் தலைமைகள் தமது அரசியல் சுய லாபங்களுக்கும் தமது பாராளுமன்ற இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் அப்பாவிச் சிங்கள மக்களை பிழையான வழிகளில் நெறிப் படுத்தி அவர்களிடையே பொய்ப் பிரசாரங்களையும் மற்றும் இனவாதத்தைத் தூண்டக் கூடிய பிரசாரங்களையும் முடுக்கிவிட்டார்கள்.அன்று எதேச்சதிகாரமாக செயற்பட்ட அரசியற் தலைமைகள் சிறு பான்மை இனத்தை இல்லாதொழிக்கவும் அவர்களின் இருப்பிடங்களை தமதாக்கிக் கொள்ளவும் மேற்கொண்ட முயற்சி களின் பிரதிபலிப்பே இன்று பல்லாயிரக்கணக்கான தமிழ், சிங்கள மக்களின் உயிர்களைக் காவுகொண்டுள்ளது. அது மட்டுமல்ல. இன்னும் பல்லாயிரக்கணக்கானவர்கள் உட லுறுப்புக்களை இழந்தவர்களாகவும் நடைப்பிணங்களாகவும் வாழுகின்ற ஒரு துன்ப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
வாழ்வாதாரங்களைத் தொலைத்துவிட்டு மற்றையோரின் தயவை எதிர்பார்க்கும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். 

பாரிய யுத்த நிகழ்வுகளின் விளைவாக இங்குள்ள இளைஞர், யுவதிகள் பதற்ற நிலைக்கு உள்ளானார்கள். அவர்கள் கல்வியின் பால் கவனம் செலுத்த முடியாமல் தத்தளித்தார்கள். 
அரச படைகளின் அட்டூழியங்களால் தமது வாழ்விடங்களில் வாழப்பயந்து பலர் உயிரைக் கையில்பிடித்தபடி வெளிநாடுகளுக்கும் இலங்கையின் வேறு பாகங்களுக்கும் ஓடித் தப்பினர். இதனால் கல்வி பாதி க்க ப்பட்டது, உடல் நிலைபாதிக்கப்பட்டது, உள்ளம் பாதிக்கப்பட்டது, பொருளாதாரம் பாதிக்கப் பட்டது என அவர் மேலும் தெரிவித்தார். 

http://www.valampurii.lk/valampurii/content.php?id=11731&ctype=news

  • கருத்துக்கள உறவுகள்

"சிறுபான்மை இனத்தை இல்லாதொழிக்க மேற்கொண்ட முயற்சிகளின் பிரதிபலிப்பே"

இன்று ம் இதுதான் தொடர்கிறது. ஆனால் சிங்களத்தலைமைகளின் மனநிலையில் மாற்றம் ஏற்படாதவரை எந்த மாற்றமும் இலங்கைத்தீவிலே நிகழப்போவதில்லை. ஆனால் தொடர்ந்து இதுபோன்ற சுட்டிக்காட்டல்கள் அவசியமானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 20.9.2016 at 8:44 AM, Athavan CH said:

அன்றைய அரசியற் தலைமைகள் தமது அரசியல் சுய லாபங்களுக்கும் தமது பாராளுமன்ற இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் அப்பாவிச் சிங்கள மக்களை பிழையான வழிகளில் நெறிப் படுத்தி அவர்களிடையே பொய்ப் பிரசாரங்களையும் மற்றும் இனவாதத்தைத் தூண்டக் கூடிய பிரசாரங்களையும் முடுக்கிவிட்டார்கள்.அன்று எதேச்சதிகாரமாக செயற்பட்ட அரசியற் தலைமைகள் சிறு பான்மை இனத்தை இல்லாதொழிக்கவும் அவர்களின் இருப்பிடங்களை தமதாக்கிக் கொள்ளவும் மேற்கொண்ட முயற்சி களின் பிரதிபலிப்பே இன்று பல்லாயிரக்கணக்கான தமிழ், சிங்கள மக்களின் உயிர்களைக் காவுகொண்டுள்ளது. அது மட்டுமல்ல. இன்னும் பல்லாயிரக்கணக்கானவர்கள் உட லுறுப்புக்களை இழந்தவர்களாகவும் நடைப்பிணங்களாகவும் வாழுகின்ற ஒரு துன்ப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
வாழ்வாதாரங்களைத் தொலைத்துவிட்டு மற்றையோரின் தயவை எதிர்பார்க்கும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். 

அதற்கு துணை போவதும் எமது தமிழ் அரசியல் தலைவர்கள் தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.