Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேரிழப்பை ஈடுசெய்ய இளைஞர்களை பெருந்தொகையில் கடத்தும் புலிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பேரிழப்பை ஈடுசெய்ய இளைஞர்களை பெருந்தொகையில் கடத்தும் புலிகள்

[24 - January - 2007] [Font Size - A - A - A]

கிழக்கு மாகாணத்தில் தோல்வியடைந்து பின்வாங்கிச் சென்றுகொண்டிருக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பினர் தமக்கு ஏற்பட்டிருக்கும் உயிரிழப்புகளைச் சமாளிக்கும் நோக்கத்தில் இளைஞர்களைக் கடத்திச்செல்லும் தமது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 47 இளைஞர்களை புலிகள் இயக்கத்தினர் கடத்திச் சென்றுள்ளனர். இவ்வாறு அம்பாறை, மட்டக்களப்பு பிரதேசங்களிலிருந்தே மேற்படி இளைஞர்கள் புலிகளால் பலாத்காரமாகக் கூட்டிச் செல்லப்பட்டுள்ளனர்.

மேலும், இவ்வாறு புலிகள் அமைப்பினர் கடத்திச் சென்றுள்ள இளைஞர்களில் கூடுதலானோர் பாடசாலை மாணவர்களே எனவும் இவ்வாறு இளைஞர்களைப் பெருந்தொகையில் கடத்திச் செல்வதற்கு பாடசாலைகளே புலிகளுக்கு ஏற்ற இடங்களாக இருப்பதாகவும் இவ்வாறு அதிரடியாக குறித்த பாடசாலைகளுக்குள் புகுந்தே மேற்படி மாணவர்களை அவர்கள் பலாத்காரமாகக் கூட்டிச் சென்றுள்ளதாகவும் புலனாய்வுப்பிரிவினர் தகவல் தெரிவித்துள்ளதாக பொலிஸ் விசேட நடவடிக்கை அணியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த கொக்கட்டிச்சோலை, கரடியனாறு ஆகிய கிராமங்களிலுள்ள பாடசாலைகளிலிருந்தே இவ்வாறு கடந்த 19 ஆம் திகதி, 20 ஆம் திகதி இரண்டு தினங்களிலும் மாணவர்களை பெருந்தொகையில் கடத்தியுள்ளனர் புலிகள் இயக்கத்தினர். வாகரைப் பிரதேசத்தில் படையினர் தொடுத்துவரும் தீவிர தாக்குதல் நடவடிக்கைகளில் பெருந்தொகையான புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் உயிரிழந்துவிட்டனர்.

பெருந்தொகையான புலிகள் படுகாயங்களுக்குள்ளாகி புலிகளின் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு உதவமுடியாதவர்களாகிவிட்டனர்.

இவ்வாறு பெருந்தொகையில் ஏற்பட்டுவிட்ட உயிரிழப்புகளை ஈடுசெய்வதற்காக புலிகள் இயக்கப்பயங்கரவாதிகள் இளைஞர்களைக் கடத்தும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தி இளைஞர்களையும் மாணவர்களையும் வகை தொகையின்றிக் கடத்த ஆரம்பித்துவிட்டதாக, மேலும் பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. தற்போது புலிகள் இயக்கத்தினரின் கிழக்கு மாகாணத்திலுள்ள பிரதான யுத்தப் பயிற்சி முகாமில் வைத்தது பெருந்தொகையிலான இளைஞர்கள் மாணவர்களுக்கு யுத்தப் பயிற்சிகளை அளித்துவருவதாக படையினருக்கு தகவல் தெரிக்கப்பட்டுள்ளது.

மேலும், புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் இவ்வாறு இளைஞர்களையும் மாணவர்களையும் கடத்திச் செல்லும்போது அதுபற்றி பாதுகாப்பு பிரிவினருக்குத் தகவல் தெரிவிக்கக்கூடாது என பெற்றோர், உறவினர்களுக்கு கடும் எச்சரிக்கையை விட்டுச் செல்வதால் தமது பிள்ளைகள் கடத்திச் செல்லப்பட்டதைப்பற்றி பாதுகாப்புப் படையினருக்கு பெற்றோர் முறைப்பாடு கொடுப்பதில்லை என பொலிஸ் பிரிவினரும் பாதுகாப்புப் படையினரும் தெரிவித்துள்ளனர்.

இதனால் அவர்கள் தமது பிள்ளைகள் கடத்தப்பட்டது பற்றி தேவாலயங்களைச் சேர்ந்த குருமார்களுக்கு தெரிவித்து, தமது பிள்ளைகளை மீட்டுத்தரும்படி அவர்களிடம் வேண்டிவருவதாக பாதுகாப்புப் பிரிவினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

- லங்காதீப 22/01/2007-

ஒரு காலத்தில மக்களுக்காக போராடி பெரும் உதவி செய்த போராளிகள் இன்று ஒரு பெரும் இடரினுல் தள்ளப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மக்கள் வெறும் பார்வையாளர்களாக இருக்க அனுமதிக்கக்கூடாது. தமிழ்ச்சனம் இப்படித்தான் எங்கேயும் மற்றவன் செய்து முடிக்க வந்து மூக்கை நீட்டுவீனம். ஆடுற மாட்டை ஆடித்தான் கறக்கணும் பாடுற மாட்டை பாடித்தான் கரக்கனும் என்று சொல்வார்கள். ஆகவே காலத்தின் கட்டாயம் சுயநலமில்லாது போராட்டிதில் இணய வேன்டும் அல்லது இப்படி நடந் திருந்தாலும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். தென் கொரியாவில் பொருளாதாரம் தலைகீழ் ஆனபோது ஒவ்வொரு குடிமகனும் தனக்கு இருந்தை கொடுத்து உதவி தமது நாட்டுப் பற்றை காட்டினார்கள். அது போல வெளிநாடுகளில் உள்ளவர்களும் தம் தம் கடைமைகளை தவறாது செய்ய முன்வரவேண்டும். இது காலத்தின் கட்டாயம். குறை கூறமுடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.