Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல்வரை சந்திக்க அப்போலோ சென்றார் தமிழக ஆளுநர்

Featured Replies

முதல்வரை சந்திக்க அப்போலோ சென்றார் தமிழக ஆளுநர்

Governor.png

 

மிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து  விசாரிக்க அப்போலோ மருத்துவமனை சென்றார். மேலும், ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறிக்கை கேட்டு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் 4-ம் தேதி வரை ஆளுநர் தமிழகத்தில் தங்கி இருப்பார் எனவும் கூறப்படுகிறது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 10 நாட்கள் ஆகின்றன. ஜெயலலிதா உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவிவரும்வேளையில், ‘அவரது உடல்நிலை குறித்து ஆளுநர் அறிக்கை வெளியிடப்படும்’ என்று கூறிவந்தனர். தி.மு.க தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அப்பாவித் தொண்டர்களுக்காகவாவது ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கிற புகைப்படம் ஒன்றை எடுத்து வெளியிட்டு குழப்பத்தைப் போக்கிட யாரும் முன்வரவில்லை. ஒரு வாரத்துக்கு மேல் சிகிச்சை பெற்றுவரும் முதலமைச்சரை தமிழக ஆளுநர் இதுவரை நேரில் சென்று பார்க்கவில்லை. ஏன், அ.தி.மு.க-வின் தோழமைக் கட்சித் தலைவர்கள்கூட அவரைக் கண்டு பேசியதாகச் செய்தி வரவில்லை. இவ்வாறு ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய செய்தி யாருக்கும் தெரிந்துவிடக் கூடாதென்று மூடு மந்திரமாக வைத்திருப்பதால், ஒரு சிலர் வேண்டுமென்றே விரும்பத்தகாத செய்திகளை எல்லாம் வதந்திகள் மூலமாகப் பரப்பி வருகிறார்கள். அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிற வகையிலாவது சிகிச்சை பெற்றுவரும் முதலமைச்சரின் புகைப்படத்தை வெளியிட்டிருக்க வேண்டும். மேலும் முதலமைச்சர் இத்தனை நாட்கள் மருத்துவமனையிலே சிகிச்சை பெறுவது பற்றி மரபுகளை அனுசரித்து முறைப்படி மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பிலே உள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரோ, தலைமைச் செயலாளரோ இதுவரை எந்தவிதமான அறிவிப்பும் செய்யவில்லை’’ என்று கூறியிருந்தார்.

govss1.jpg

 

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ரீகன் எஸ்.பெல் என்பவர், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் கொடுத்து உள்ள மனுவில், “எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் அல்லது முதலமைச்சர் உடல்நிலையை பரிசோதிக்க சிறப்பு மருத்துவர் ஒருவரை நியமித்து அவர்மூலம் அறிக்கை பெற வேண்டும். முதல்வர் ஜெயலலிதா பணியாற்றும் செயல்திறனோடு உள்ளாரா என்பதை தமிழக ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவர் அறிந்துகொள்ள வேண்டும். இந்த நடைமுறைகளில், ஜெயலலிதா செயல்படும் நிலையில் இல்லை என்று தெரியவந்தால், சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி தமிழக அரசைக் கலைத்துவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

governecar.jpg

 

இந்த நிலையில் தமிழக கவர்னராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ் இன்று தமிழகம் வந்தார். அவர், வரும் 4-ம் தேதி வரை தமிழகத்தில் இருப்பார் என்று கூறப்படுகிறது. அடுத்த 4 நாட்களுக்கு தமிழக நிலவரங்களைக் கண்காணித்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிப்பார் எனக் கூறப்படுகிறது.

ஆளுநர் தமிழகம் வந்தவுடன் அவரிடம் முதல்வரின் உடல்நிலை குறித்து உண்மையை வெளியிடக்கோரி தி.மு.க-வினர் மனு அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் ஆளுநர் தமிழகம் வருவது மிகுந்த முக்கியத்துவம் பெறுவதாக உள்ளது.

பத்து நிமிடங்களில், அப்போலோவில் இருந்து ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார் தமிழக ஆளுநர்

http://www.vikatan.com/news/tamilnadu/69061-tamil-nadu-governor-visits-apollo.art

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு செல்பி எடுத்து போட்டிருக்கலாம்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

செல்வியுடன் செல்பி எடுக்க நண்பி கண்ணசைக்க வேண்டுமே ....! tw_blush:

  • தொடங்கியவர்

"முதல்வர் நலம் அடைகிறார்.மருத்துவர்கள் தகவல்" - ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை

govenenenrsss400.jpg

 

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து  விசாரிக்க அப்போலோ மருத்துவமனை சென்றார்.ஆளுநர் வருகையையொட்டி தலைமை செயலர்,அமைச்சர்கள் என முக்கிய பிரமுகர்கள் பலர் அப்போலோ விரைந்தனர்.கிரீம்ஸ் ரோடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 

ஆளுநரின் அறிக்கை தற்போது வெளியாகி இருக்கிறது.அதில் 'முதலமைச்சரின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன். அவர் நலமுடன் உள்ளார். முதல்வரின் உடல்நிலை தேறி வருவதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். அவர் சிகிச்சை பெறும் வார்டுக்கே சென்றேன்' என்றார்

ஆளுநர் அறிக்கை

govenenenrsss1.jpg

http://www.vikatan.com/news/tamilnadu/69067-cm-health-is-improving-says-governor.art

  • தொடங்கியவர்

முதல்வரை சந்தித்தாரா அல்லது தூர நின்று பார்த்தாரா.. ஆளுநர் அறிக்கை கிளப்பும் சந்தேகங்கள்!

 

 

சென்னை: முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெறுவது குறித்து தொடர்ந்து சர்ச்சைகள் நீடித்து வருகின்றன. இதுகுறித்து யாருமே பேச மறுக்கிறார்கள். ஏன் பெரும்பாலான ஊடகங்களும் கூட இதுகுறித்து பேச மறுக்கின்றன. மக்களின் மனம் கவர்ந்த, மக்கள் அன்பைப் பெற்று 2வது முறையாக முதல்வரான ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்துக் கூட தகவல் தெரிவிக்காமல் இப்படி இருட்டடிப்பு செய்வது ஏன் என்று பலரும் கேட்கிறார்கள்.

 

அரசுத் தரப்பில் இது நாள் வரை யாருமே பேசவில்லை. முறைப்படி பார்த்தால் தலைமைச் செயலாளர் பேசியிருக்க வேண்டும் அல்லது முதல்வருக்கு அடுத்த நிலையில் உள்ள அமைச்சரான ஓ.பன்னீர் செல்வம் பேசியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் இருவருமே வாயே திறக்கவில்லை.

 

ஆளுநருக்கு இதில் மிக முக்கியப் பொறுப்பு உள்ளது. அவர் முதல்வருக்கு உடல் நலம் சரியில்லை என்றால் என்ன ஏது என்று விசாரித்து, அரசு நிர்வாகம் சரியாக நடக்கிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு உள்ளது. ஆனால் ஆளுநர் பொறுப்பை வகித்து வரும் மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ் இத்தனை நாட்களாக சென்னைக்கு வரவில்லை. நேற்றுதான் வந்தார்.

02-1475388166-vidyasagar-.jpg

 

அப்பல்லோவில் ஆளுநர்

நேற்று இரவு அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார் வித்யாசாகர் ராவ். மருத்துவமனைக்குள் சென்ற அவர் சில நிமிடங்களில் திரும்பி விட்டார். நேராக ராஜ்பவன் சென்றார். சில நிமிடங்களில் ஆளுநர் மாளிகையிலிருந்து முதன்மைச் செயலாளர் பெயரில் ஒரு அறிக்கை வருகிறது.

02-1475388129-26-1474857597-jayalalitha-hospitalized46567.jpg

வார்டுக்கு சென்று பார்த்தேன்

அந்த அறிக்கையில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் மிக மிக கவனமாக எடுத்தாளப்பட்டிருப்பதை முதல் முறை படிக்கும் போதே எளிதாக புரிந்து கொள்ளலாம். அதில் முதல்வர் ஜெயலலிதாவை அருகில் சென்று ஆளுநர் பார்த்ததாக கூறப்படவில்லை. மாறாக முதல்வர் அனுமதிக்கப்பட்ட வார்டுக்குச் சென்று பார்த்தேன் என்றுதான் கூறப்பட்டுள்ளது.

02-1475388119-26-1474857588-jayalalitha-hospitalized234344.jpg

வெளியிலிருந்து பார்த்தாரா உள்ளே போய் பார்த்தாரா

இதை இப்படியும் அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம். அதாவது முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டுக்கு வெளியிலிருந்தும் கூட முதல்வரை ஆளுநர் பார்த்திருக்கலாம் என்று அர்த்தம் எடுத்துக் கொள்ள முடியும்.

02-1475388146-jaya-vidyasagar.jpg

 

பேசினாரா?

முதல்வரைச் சந்தித்து பேசியதாக எந்த இடத்திலும் ஆளுநர் குறிப்பிடவில்லை. இதன் மூலம் அவர் முதல்வரை அருகே சென்று சந்திக்கவில்லை என்று ஊகிக்க முடியும். மேலும் முதல்வருடன் அவர் பேசிய நலம் விசாரித்ததாகவும் தெரியவில்லை. அப்படி எதுவும் குறிப்பிடவில்லை. இதனால் முதல்வர் பேசும் நிலையில் இல்லையா என்ற கேள்வியை மக்கள் எழுப்புகிறார்கள்.

 

புகைப்படம் ஏன் வரவில்லை?

அதை விட முக்கியமாக முதல்வரை ஆளுநரைப் போய்ப் பார்த்தது தொடர்பாக எந்த புகைப்படத்தையும் ஆளுநர் மாளிகையும் வெளியிடவில்லை. அப்பல்லோ மருத்துவனை நிர்வாகமும் வெளியிடவில்லை. குறைந்தது முதல்வரை லாங் ஷாட்டில் வைத்து விட்டு அந்த இடத்தில் ஆளுநர் இருப்பது போன்ற படத்தைக் கூட வெளியிட்டிருக்கலாம். அப்படிக் கூட வெளியிடாதது ஏன் என்று தெரியவில்லை.

02-1475388137-26-1474857681-jayalalitha89234-600.jpg

பிசி ரெட்டி கூட பேசிய படமாச்சம் வெளியிட்டிருக்கலாமே

அட அதைக் கூட விட்டு விடலாம். அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி ரெட்டியுடன், ராவ் பேசிய படத்தையாவது வெளியிட்டிருக்கலாம். அமைச்சர்கள் உடன் வந்ததாக ஆளுநர் அறிக்கை சொல்கிறது. அவர்களுடன் ஆளுநர் இருக்கும் படத்தையாவது வெளியிட்டிருக்கலாம்.

 

ஏன் இந்தக் குழப்பம்

ஆனால் இப்படி எதுவுமே வெளியிடவில்லை. ஆளுநர் வந்தார், பார்த்தார், முதல்வர் நலமாக இருப்பதாக கூறியுள்ளார், மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் என்று முன்னணி ஊடகங்கள் தாங்களே செய்தியை உருவாக்கி வெளியிட்டு வருவதையும் மக்கள் ரசிப்பதாக தெரியவில்லை. காரணம், ஆளுநர் அறிக்கையை படித்துப் பார்க்கும் எவருக்குமே அது மிக மிக கவனமாக வார்த்தைகளால் கோர்க்கப்பட்ட அறிக்கை என்பது தெளிவாகத் தெரியும். அப்படி இருக்கையில் ஏன் இன்னும் இந்த பூடக நிலை தொடருகிறது என்பதுதான் மக்கள் மத்தியில் நிலவும் தொடர் கேள்வியாக உள்ளது.

 

மக்கள் தலைவர் ஜெயலலிதா

 

தனிப்பட்ட முறையில் யாருடைய உடல் ஆரோக்கியம் குறித்த தகவலையும் வெளியிட வேண்டிய கட்டாயம் இல்லைதான். ஆனால் முதல்வர் ஜெயலலிதா மக்களின் தலைவர்,மக்களால் விரும்பப்படும் தலைவர். அவருடைய உடல் நிலை என்ன, இப்போது எப்படி இருக்கிறார் என்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. அதை விட அவரது முகத்தை மட்டும் காட்டினால் கூட போதும். மக்கள் நிம்மதி அடைவார்கள் இல்லாவிட்டால், முகத்தைக் கூட காட்ட முடியாத அளவுக்கு முதல்வர் நிலை உள்ளதா என்ற சந்தேகம்தான் தேவையில்லாமல் வலுப்பெறும்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/governor-s-statement-its-message-the-people-264180.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.