Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல்வருக்காக லண்டனிலிருந்து வந்த புது மருத்துவர்! - அப்போலோ அப்டேட்ஸ்

Featured Replies

முதல்வருக்காக லண்டனிலிருந்து வந்த புது மருத்துவர்!  - அப்போலோ அப்டேட்ஸ்

apollo.jpg

மிழக முதல்வர் ஜெயலலிதா 13 நாட்களைக் கடந்து அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 'லண்டன் மருத்துவர் ரிச்சர்ட்டைத் தொடர்ந்து, நேற்று மற்றொரு லண்டன் மருத்துவர் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்' என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில். 

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து நேற்று அறிக்கை வெளியிட்ட அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், ‘முதல்வரின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இதுவரை அளிக்கப்பட்டு வந்த சிகிச்சைகள், முதல்வருக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வரின் உடல் நலத்தை டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் சில நாட்கள் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்திருந்தது. முதல்வர் உடல்நிலை பற்றி அப்போலோ மருத்துவமனை வெளியிடும் தகவல்கள் மட்டுமே தொண்டர்கள் மத்தியில் ஆறுதலை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும், முதல்வர் உடல்நிலை குறித்த வதந்திகள் வேகமெடுத்து வருகின்றன. 

bayle.jpg"மூச்சுத் திணறல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டார் முதல்வர். தற்போது செயற்கை சுவாசத்தின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நுரையீரல் தொற்றை சரிப்படுத்துவதற்கான சிகிச்சைகள் நடந்து கொண்டிருக்கின்றன. லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பெயலின் சிகிச்சைகள் நோய்த் தொற்றின் பாதிப்பைக் குறைத்து வருகிறது. தொடர் மருந்துகளின் விளைவாக, நேற்று முதல்வரின் கை, கால்களில் இயக்கத்தில் பெரும் அசௌகரியம் ஏற்பட்டது. அதைக் கட்டுப்படுத்தத் தேவையான சிகிச்சைகளும் வழங்கப்பட்டன" என விளக்கிய கார்டன் ஊழியர் ஒருவர், "அப்போலோ மருத்துவமனையிலேயே தேவையான சிகிச்சை வசதிகள் இருக்கிறது. 'இந்த வசதிகளே போதும். வெளியில் செல்ல வேண்டிய அவசியமில்லை' என ரிச்சர்ட் தெரிவித்தார். நுரையீரல் தொற்றுக்கான சிறப்பு சிகிச்சை முறைகளை வழங்கி வந்தார். அவருடைய மேற்பார்வையிலேயே அப்போலோ மருத்துவர்கள் செயல்பட்டு வருகின்றனர்!’’ என்றார். 

இந்நிலையில், லண்டனில் நடைபெறும் முக்கியமான மருத்துவ மாநாட்டுக்கு வருமாறு ரிச்சர்ட் பெயலுக்கு அழைப்பு வந்தது. மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்ததால், மூன்று நாள் பயணமாக லண்டன் சென்றுவிட்டார். அவருடைய இடத்தில், முதல்வரை கவனித்துக் கொள்ள சிறப்பு மருத்துவர் ஒருவர் லண்டனில் இருந்து வந்திருக்கிறார். ரிச்சர்ட் போலவே, நுரையீரல் தொடர்பான சிகிச்சையில் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவர். அப்போலோ மருத்துவர் குழுவுக்குத் தேவைப்படும் அறிவுரைகளை லண்டனில் இருந்தபடியே வழங்கிக் கொண்டிருக்கிறார் ரிச்சர்ட். இவர்களின் கண்காணிப்பு மற்றும் சிகிச்சை காரணமாக முதல்வரின் உடல்நிலையில் விரைவில் முன்னேற்றம் இருக்கும் என்று நம்புகிறோம்!’’ என்றார் நம்பிக்கையோடு. 

 

 

முதல்வர் விரைவில் நலம் பெறட்டும்...! 

http://www.vikatan.com/news/tamilnadu/69186-one-more-doctor-from-london-to-treat-jayalalithaa.art

  • தொடங்கியவர்

' இனியும் அம்மாவைப் பார்த்தீங்களான்னு கேட்காதீங்க...!'  -நிலவரம்  விவரிக்கும் அற்புதம்மாள்

appollo600.jpg

மிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க இன்று அப்போலோ மருத்துவமனைக்கு வந்திருந்தார் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள். ' மருத்துவமனை நிலவரத்தை தம்பிதுரை விவரித்தார். முதல்வர் விரைவில் குணமடைய வேண்டும்' எனக் கலங்குகிறார் அவர். 

அப்போலோ மருத்துவமனையில் இன்று மாலை முதல்வரின் உடல்நிலையைப் பற்றி விசாரிக்கச் சென்றார் அற்புதம்மாள். அவரை மருத்துவமனைக்குள் செல்ல பாதுகாவலர்கள் அனுமதிக்கவில்லை. ' நான் வந்திருக்கேன்னு அமைச்சர்கள் யாரிடமாவது சொல்லுங்கள். திருப்பி அனுப்ப மாட்டார்கள்' என வலியுறுத்தினார். இந்தத் தகவல் இரண்டாவது தளத்தில் இருந்த தம்பிதுரையின் கவனத்துக்குப்  போக, நேரடியாக அற்புதம் அம்மாவை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார். இதன்பின்னர் நடந்ததை நம்மிடம் விவரித்தார். " தம்பிதுரையும் விஜயபாஸ்கரும் என்னை வரவேற்று இரண்டாவது மாடிக்கு அழைத்துச் சென்றார்கள்.

arputham.jpgமுதல்வரை சந்திக்க அனுமதி மறுக்கப்படுவதற்கான காரணத்தை விவரித்தார் தம்பிதுரை. அவர் என்னிடம், ' முதல்வருக்கு திரவ உணவுகள் வழங்கப்படுகிறது. கடுமையான நோய்த் தொற்றின் காரணமாகத்தான் யாருக்கும் அனுமதி கிடைக்கவில்லை. இன்னும் சில நாட்கள் முதல்வர் மருத்துவமனையில் தங்கி இருப்பார். விரைவில் குணமடைந்து வருவார்' என்றார். நானும், ' அதுதான்பா எங்களுக்கு வேணும். என்னை மாதிரியே கோடிக்கணக்கான தாய்மார்கள் அம்மா சீக்கிரம் குணமடைந்து வரனும்னு எதிர்பார்த்துட்டு இருக்காங்க'ன்னு சொன்னேன். அவரும் ஆறுதலாகப் பேசினார். 

' என் மகனுக்கு பரோல் விடுப்பு வேண்டும்' என்று கார்டனில் மனு கொடுத்துவிட்டு வந்த சில நாளில் முதல்வருக்கு உடல்நலமில்லாமல் போய்விட்டது. மிகுந்த வேதனையாக இருக்கிறது. ' முதல்வருக்காக பிரார்த்திப்பீர்களா?' என்று ஒருவர் கேட்டார். ' பிரார்த்தனை செய்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்பது முதல்வருக்குத் தெரியும். தமிழ்நாட்டு மக்கள் அவருக்காக பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறார்கள். முதல்வர் நலம்பெற்றுத் திரும்ப வேண்டும் என மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். அந்த நம்பிக்கை வீண்போகாது.

இனிமேலும் முதல்வரை நேரில் பார்த்தீர்களா என்று யாரும் கேட்க வேண்டாம். நோய்த் தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்தால், யாரையும் சந்திக்க மருத்துவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். அதுதான் அப்போலோவில் நடக்கிறது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலேயே, எனக்கும் உடல்நலமில்லாமல் போய்விட்டது. முதல்வர் விரைவில் நலம் பெற்றுத் திரும்பி வர வேண்டும்" என்றார் வேதனை கலந்த குரலில். 

http://www.vikatan.com/news/tamilnadu/69228-arputhammal-explains-cm-health-condition.art

  • தொடங்கியவர்

முதல்வர் நலமாக இருக்கிறார்:சீமான்

 

19564_thumb.jpg

 

முதல்வர் ஜெயலலிதா நலமாக இருப்பதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். முதல்வரின் உடல் நிலை குறித்து விசாரிப்பதற்காக அப்போலோ மருத்துவமனைக்கு இயக்குநர் அமீர், சீமான் இன்று காலை சென்றனர். அப்போது, அங்கிருந்த மருத்துவர்களிடம் முதல்வரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், முதல்வர் ஜெயலலிதா நலமாக இருக்கிறார். சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து பேசினேன். வதந்திகளை நம்ப வேண்டாம். மருத்துவர்கள் கண்காணிப்பில் முதல்வர் ஓய்வில் இருக்கிறார் என்றார்.

http://www.vikatan.com/news/flashnews/19564-cm-is-fine--seeman.art

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

'மேலும் பல நாட்களுக்கு சிகிச்சை!' ஜெயலலிதா உடல்நிலை குறித்து அப்போலோ அறிக்கை

fbjaya.jpg

தமிழக முதல்வர் ஜெயலலிதா, தொடர்ந்து 15-வது நாளாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அப்போலோ மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதல்வரின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் வழங்கி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் உடன் எய்ம்ஸ் மருத்துவர்களும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

முதல்வரது உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் காணப்படுகிறது. முதல்வர் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவர்களுடன், எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆலோசனை நடத்தினர். நாளையும் எய்ம்ஸ் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள். அவர் மேலும் பல நாட்களுக்கு மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும். பல்வேறு துறைகளின் நிபுணர்கள் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

முக்கியமாக அவருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவக் குழுவில் உள்ள மருத்துவர்களின் பெயர்களையும் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அப்போலோ தெரிவித்துள்ளது.

 

app1007_vc1.jpg

 

app1007_vc2.jpg

http://www.vikatan.com/news/tamilnadu/69233-jayalalithaa-requires-a-longer-stay-in-hospital.art

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 6.10.2016 at 3:25 PM, இசைக்கலைஞன் said:

 

மேலைத்தேயத்தவர்கள் இதுபற்றி  பேட்டியளிப்பார்களாயின் நேரடியாகவே ஒரிரு வசனங்களோடு பேட்டியை முடித்திருப்பர்கள்.

எதுவுமே நேரடியாக பார்க்காமல்.....யாரோ சொன்னதைகேட்டு நீட்டி...இழுத்து விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இவர்களுக்கு ஏன் திடீரென வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் சொன்னால் சரியாத்தான் இருக்குமண்ணே

  • தொடங்கியவர்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் அப்போலோ வருகை ஏன்? - அப்போலோ அப்டேட்ஸ்

apollo%20entrance.jpg

முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, எய்ம்ஸ் மருத்துவக் குழு நேற்று இரவு சென்னை வந்துள்ளது. 'நேற்று முழுவதும் முதல்வர் உடல்நிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டதால், எய்ம்ஸ் மருத்துவக் குழு சிசிச்சை அளிக்க வந்துள்ளது' என்கின்றனர் மருத்துவமனை வட்டாரத்தில். 

தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த 15 நாட்களாக அப்போலோ மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நுரையீரல் தொற்றின் காரணமாக மூச்சுத் திணறல் உள்பட பல்வேறு சிரமங்களுக்கு ஆளானார். தற்போது செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 30-ம் தேதி லண்டனில் இருந்து வந்த சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட் பெயல், நுரையீரல் தொற்றை சரிசெய்வதற்கான சிகிச்சையில் இறங்கினார். லண்டனில் நடைபெறும் மருத்துவ மாநாட்டுக்கு அவர் சென்றுவிட்டதால், அவர் சார்பாக, இன்னொரு வெளிநாட்டு மருத்துவர் மருத்துமனையில் சிகிச்சைகைளை அளித்து வருகிறார். இந்நிலையில், நேற்று டெல்லி, எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து மூன்று பேர் கொண்ட மருத்துவக் குழு, அப்போலோ வந்துள்ளது. 

jayaa.jpg"முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் தொடர் சிகிச்சையின் விளைவாக, சில பின்விளைவுகள் ஏற்பட்டுள்ளன. நேற்று காலையில் இருந்தே, மருத்துவர்கள் பதற்றமாக இருந்தனர். இதையடுத்தே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களின் உதவியை நாடியது அப்போலோ" என விவரித்த கார்டன் ஊழியர் ஒருவர், "செயற்கை சுவாசக் கருவி மூலம் ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. அதில் திடீரென சின்ன சிக்கல். அதற்கு மாற்று ஏற்பாடு ஒன்றை செயல்படுத்தியுள்ளனர். அதோடு கை, கால்களின் இயல்பான இயக்கத்தில் சிரமங்கள் நீடிப்பதால், அவற்றை உடனடியாக குணப்படுத்த வேண்டிய நிர்பந்தமும் இருக்கிறது. கை, கால்களுக்குப் பயிற்சியளிக்க, புது இயந்திரம் ஒன்றை நேற்று வரவழைத்துள்ளனர். 

அவற்றின் உதவியோடு கை, கால்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக முதல்வரின் உடல்நிலையில் ஏற்ற, இறக்கமாகவே இருந்து வருகிறது. ரிச்சர்ட் பெயலின் மருத்துவ ஆலோசனைகள் மிக முக்கியமானதாக இருந்தாலும், உடல் உறுப்பு செயல்பாடுகளுக்கு சிறப்பு நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் தேவைப்பட்டார்கள். இதையடுத்தே, டெல்லி எய்ம்ஸில் இருந்து மருத்துவர்களை வரவழைத்தது அப்போலோ. இந்தக் குழுவில், நுரையீரல் சிகிச்சை மருத்துவர் கில்னானி, டாக்டர் அஞ்சன் திரிக்கா, இதயநோய் சிகிச்சை வல்லுநரும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மருத்துவருமான நிதிஷ் நாயக் உள்ளிட்ட மூன்று பேர் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். முதல்வருக்கு இதுவரையில் அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளை நேற்று இரவு கேட்டு அறிந்தனர். அடுத்து செய்ய வேண்டிய மருத்துவ வழிமுறைகள் குறித்து மருத்துவர் கில்னானி ஆலோசனை நடத்தி வருகிறார். முதல்வரின் உடல் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கான, ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகள் பற்றிய ஆலோசனையும் தீவிரமாக நடந்து வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் ரிச்சர்ட் பெயலும் வர இருக்கிறார்" என விவரித்து முடித்தார். 

முதல்வரின் உடல்நிலையில் ஏற்பட்டுள்ள சில சிரமங்களைப் போக்குவதற்கு, மருத்துவக் குழு தீவிர சிகிச்சையில் ஈடுபட்டு வருகிறது. அப்போலோ வாசலில் கூட்டுப் பிரார்த்தனையிலும் தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

 முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெறட்டும்...! 

 

 

 

http://www.vikatan.com/news/tamilnadu/69209-reason-behind-delhi-aims-doctors-team-treating-jayalalithaa.art

  • தொடங்கியவர்

'முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலமடைவார்..!' அப்போலோ வாசலில் ராகுல்காந்தி

apollo%20hospital.jpg

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை டாக்டர்களிடம் கேட்டறிந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் நன்றாக இருப்பதாகவும், விரைவில் அவர் பூரண நலம் பெறுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22-ம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் உடல்நலம் பெற அதிமுகவினர் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். அப்போலோ மருத்துவமனை வளாகத்திலேயே அதிமுகவினர் பிரார்த்தனைகளும் செய்து வருகின்றனர். ஏராளமான அதிமுகவினர் தினந்தோறும் குவிந்து வருவதால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதல்வரின் உடல்நிலை குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உள்ளிட்ட  பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அப்போலோ சென்று முதல்வரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் நலம் விசாரித்தனர்.

ragul-%20apollo%20hospital.jpg

இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி இன்று காலை 11.40 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தார். அங்கிருந்து காரில் அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார். அங்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ராகுல் வருகைக்காக காத்திருந்தார். பின்னர், ராகுலுடன் அவர் மருத்துவமனைக்குள் சென்றார். அங்கு முதல்வரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் ராகுல் கேட்டறிந்தார்.

சுமார் 35 நிமிடத்திற்கு பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் நல்வாழ்த்துகளை தெரிவிக்க முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க அப்போலோ மருத்துவமனைக்கு வந்தேன். முதல்வரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் உடல்நலம் பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். முதல்வர் விரைவில் பூரண நலம் பெறுவார் " என்று கூறினார்.

ராகுல் காந்தி வருகையையொட்டி அப்போலோ மருத்துவமனை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

http://www.vikatan.com/news/tamilnadu/69250-jayalalithaa-will-recover-soon-says-rahul-gandhi.art

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

மேலைத்தேயத்தவர்கள் இதுபற்றி  பேட்டியளிப்பார்களாயின் நேரடியாகவே ஒரிரு வசனங்களோடு பேட்டியை முடித்திருப்பர்கள்.

எதுவுமே நேரடியாக பார்க்காமல்.....யாரோ சொன்னதைகேட்டு நீட்டி...இழுத்து விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இவர்களுக்கு ஏன் திடீரென வந்தது.

தா.பாண்டியன் அதிமுக சார்புள்ளவர் என்பதால் அவரது நீண்ட விளக்கத்தைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. tw_blush:

சீமானும் போகாமல் தவிர்த்திருக்கலாம் என்றுதான் முதலில் நினைத்தேன். என்ன இருந்தாலும் முதல்வர் ஒருவர் மருத்துவமனையில் இத்தனை நாட்கள் தங்கி இருக்கும்போது ஏனைய கட்சித் தலைவர்கள் சென்று பார்க்காமல் இருப்பது மாண்பு இல்லை என்கிற வாதமும் வைக்கப்படுகிறது. அப்படி போக நேர்ந்தால், அதிகாரபூர்வமாக இவர்களுக்கு என்ன சொல்லப்பட்டதோ (மருத்துவக்குழு மற்றும் அமைச்சர்கள்) அதையே திரும்பவும் சொல்ல வேண்டியதாகிவிடும். :unsure:

  • தொடங்கியவர்

ஜெ.,வை சந்திக்க முடியவில்லை - ஸ்டாலின்

 

19802_thumb.jpg

 

முதல்வர் ஜெ., உடல்நலம் விசாரித்து திரும்பிய ஸ்டாலின், 'முதல்வர் ஜெ., உடல்நலம் தேற கருணாநிதி அவர்கள் வாழ்த்து தெரிவித்தார். விரைவில் ஜெ., குணமடைந்து பணிக்கு திரும்ப வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். அமைச்சர்கள் ஓ.பி.எஸ், விஜயபாஸ்கர் ஆகியோரை நேரில் சந்தித்தேன். ஜெ., உடல்நலம் குறித்து மருத்துவர்கள் விளக்கினர். ஆனால், முதல்வரை சந்திக்க முடியவில்லை' என கூறியுள்ளார்.

http://www.vikatan.com/news/flashnews/19802-unable-to-meet-cm-jayalalitha-says-mk-stalin.art

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 6.10.2016 at 0:32 AM, நவீனன் said:

முதல்வருக்காக லண்டனிலிருந்து வந்த புது மருத்துவர்! 

வந்த டாக்குத்தரும் முதல்வரை பார்த்தாரா இல்லையா????? :cool:

அண்ணை கூப்புடுறார். 

 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

வந்த டாக்குத்தரும் முதல்வரை பார்த்தாரா இல்லையா????? :cool:

அண்ணை கூப்புடுறார். 

 

தமிழகத் தேர்தல் 2016.. ஒருவர் என்னிடம் சொன்னார்.. ஒன்பது மாதங்கள் முடிவில் எம்ஜிஆர் கேட்பாராம்..

"உனக்கேன் அம்மு இந்த தேவையில்லாத வேலை?" tw_astonished:

கிட்டடியில் கேட்பார் போலத்தான் இருக்கு.. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்

எய்ம்ஸ் மருத்துவரின் தொடர் கண்காணிப்பில் முதல்வர் : அப்போலோ அறிக்கை

appoloastatment_vc2.jpg


முதல்வர் கடந்த மாதம் 22-ம் தேதி முதல் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்று 9-வது முறையாக அப்போலோ மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில், பல்வேறு நிபுணர்களின் கண்காணிப்பில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார் தமிழக முதல்வர். தேவையான செயற்கை சுவாச உதவி, நோய் எதிர்ப்பு மருந்துகள், ஊட்டச்சத்து சிகிச்சை தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் உதவியில்  பிஸியோதரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.


எய்ம்ஸின் பல்மினரி மருத்துவ துறையின் கில்னானி நேற்றும் இன்றும் அப்போலோ மருத்துவமனைக்கு வந்து முதல்வரின் உடல்நிலையை பற்றி நிபுணர்களுடன் ஆலோசித்தார். கில்னானி அப்போலோ மருத்துவ நிபுணர்களுடன் இணைந்து , ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

அறிக்கை...

 

appoloastatment_vcvc1400.jpg

 

 

http://www.vikatan.com/news/tamilnadu/69327-apollo-issues-update-regarding-jayalalithaas-health.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.