Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விமானப்படையின் ஹெலிகொப்டரில் கட்டணம் செலுத்தாமல் பயணித்த சந்திரிக்கா!

Featured Replies

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கட்டணம் செலுத்தாமல், விமான படைக்கு சொந்தமான விமானங்களில் பயணித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சந்திரிக்கா குமாரதுங்க உட்பட மேலும் 9 அமைச்சர்கள் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரையிலான காலப்பகுதியினுள் கடமை பயணங்களுக்காக விமான படையின் ஹெலிகொப்டரில் பயணம் செய்துள்ளனர்.

இதற்கான பணம் இதுவரையிலும் செலுத்தவில்லை என இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் உதய கம்மன்பில வாய்வழி பதில் எதிர்பார்த்து கேட்ட கேள்விக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவண் விஜேவர்தன நாடாளுமன்றத்தில் வழங்கிய பதிலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் பைஸர் முஸ்தப்பா, காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க, ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக, நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகிய அமைச்சர்கள் இவ்வாறு ஹெலிகொப்ட்டர் பயணங்களை பெற்றுக் கொண்டுள்ளதாக அவரது பதிலில் தெரியவந்துள்ளது.

அமைச்சர்களுக்கு மேலதிகமாக வட மத்திய மாகாண ஆளுநர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் இவ்வாறு ஹெலிகொப்டர் மற்றும் விமான பயணங்களை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக செயற்பட்ட காலப்பகுதியில் இவ்வாறு விமான பயண வசதிகள் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/politics/01/120149?ref=editorpick

  • தொடங்கியவர்

அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினர் விமானப்படைக்குச் சொந்தமான விமானங்களில் பயணம் செய்தமைக்காக கடந்த 16 மாதங்களில் சுமார் 20 கோடி ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் 169 பேர் விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்தியமைக்காக சுமார் இருபது கோடி ரூபா பணம் செலுத்தியுள்ளனர்.

கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தி 352 பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் பயணங்களுக்காக குறித்த தொகை பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதிக்குள் வெளிநாட்டு அரச தலைவர்கள், வெளிநாட்டு அமைச்சர்கள், இராஜதந்திரிகள், மதத் தலைவர்கள் உள்ளிட்ட 40 பேருக்கு ஹெலிகொப்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பயணங்களுக்காக கட்டணங்கள் அறவீடு செய்யப்படவில்லை.

கட்டணங்கள் செலுத்தாது பயணம் மேற்கொண்டவர்களில் பத்து அரசியல்வாதிகளும் உள்ளடங்குகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் ஹெலிகொப்டர் பயணங்களுக்காக பாரியளவில் அரச நிதி துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்ததுடன் அது தொடர்பில் தற்போது விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/politics/01/120174?ref=morenews

இலங்கை விமானப்படை விமானங்களை இலவசமாக பயன்படுத்தியவர்களின் பெயர்பட்டியல்

இலங்கை விமானப்படை விமானங்களை இலவசமாக பயன்படுத்தியவர்களின் பெயர்பட்டியல்

 

வௌிநாட்டு மற்றும் உள்நாட்டு இராஜதந்திரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட சிலரின் போக்குவரத்து தேவைக்காக இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமானங்களை இலவசமாக வழங்கியுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 10 திகதி முதல் 2016ம் ஆண்டு ஏப்ரல் 30ம் திகதி வரையில் இவ்வாறு விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நேற்று பாராளுமன்றத்தில் வௌியிடப்பட்ட பட்டியலை மேலே காணலாம்.

http://tamil.adaderana.lk/news.php?nid=84259

நாம் கட்டணம் செலுத்தாமல் விமானத்தை பயன்படுத்தவில்லை!

 

விமானப் படையின் ஹெலிக்கொப்டர்களை கட்டணம் செலுத்தாமல் பயன்படுத்தவில்லை என, இன்று சில அமைச்சர்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர்கள் சிலர் விமானப் படை விமானங்களை கட்டணம் செலுத்தாது பயன்படுத்தியதாக செய்திகள் வௌியாகியுள்ளதாக குறிப்பிட்ட அவர்கள், இந்த செய்திகள் மூலம் அரசு மற்றும் அமைச்சர்கள் தொடர்பில் தவறான வின்பம் நிறுவப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதனை சரிபடுத்த வேண்டும் எனவும் அவர்கள் இன்று பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தனவை மேற்கோள்காட்டியே இந்த செய்திகள் வௌிவந்துள்ளன.

தாம் ஒருபோதும் தனிப்பட்ட பயணங்களுக்காக விமானங்களை பயன்படுத்தவில்லை எனவும், அரச பணிகளுக்காகவும் கூட விமானங்களுக்காக விண்ணப்பிக்கவில்லை எனவும் அமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஜனாதிபதி அல்லது பிரதமர் கலந்து கொண்ட அரசாங்க நிகழ்வுகளுக்காக அவர்களுடன் சென்ற அமைச்சர்களின் பெயர்கள் இவ்வாறு பட்டியலில் தவறாக இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை ஊடகங்களுக்கு சில பொறுப்புக்கள், கொள்கைகள் இருக்க வேண்டும் எனவும், பாராளுமன்ற செய்திகளை வௌியிட சில சம்பிரதாயங்கள், முறைகள் இருக்க வேண்டும் என, இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இது குறித்து பேசிய அமைச்சர் ருவன் விஜேவர்த்தன, எந்தவொரு அமைச்சரும் கட்டணம் செலுத்தாமல் விமானங்களை பெற்றுக் கொள்ளவில்லை என கூறியுள்ளார்.

ஊடகங்களில் தவறான செய்திகள் வௌியாகியுள்ளதாகவும், அந்த செய்திகள் குறித்தும் நேற்று தான் பாராளுமன்றத்தில் வழங்கிய அறிக்கை குறித்து விளக்கமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விடயம் தொடர்பில் ஆராயத் தேவையான நடவடிக்கை மேற்கொள்வதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=84279

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.