Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“நம்ம நடுவில இப்போது இல்லாமல் மேல் இருந்து எமக்கு ஆசி கொடுக்கும் அவங்கள் எல்லோரையும் வணங்குகின்றேன்"

Featured Replies

“நம்ம நடுவில இப்போது இல்லாமல் மேல் இருந்து எமக்கு ஆசி கொடுக்கும் அவங்கள் எல்லோரையும் வணங்குகின்றேன்"

 

“புண்பட்ட இதயங்களுக்கு இசை மருந்து கொடுக்கவே யாழ்ப்பாணம் வந்தோம்” – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்:-

“நம்ம நடுவில இப்போது இல்லாமல் மேல் இருந்து எமக்கு ஆசி கொடுக்கும் அவங்கள் எல்லோரையும் வணங்குகின்றேன்"



புண்பட்ட இதயங்களுக்கு இசை மருந்து கொடுக்கவே யாழ்ப்பாணம் வந்தோம் என பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

யாழில் , ஞாயிற்றுக்கிழமை மாலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் , கங்கை அமரன் உட்பட இந்திய கலைஞர்களின் இசை நிகழ்வு நடைபெற்றது.

அந்நிகழ்வின் ஆரம்பத்தில் கருத்து தெரிவிக்கும் போதே எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

நம்ம நடுவில இப்போது இல்லாமல் மேல் இருந்து எமக்கு ஆசி கொடுக்கும் அவங்கள் எல்லோரையும் வணங்குகின்றேன். ஐம்பது வருடமாக நான் பாடி வருகின்றேன்.

இப்போது தான் நான் முதல் தடவையாக யாழ்ப்பாணம் வருகிறேன். அதனை நினைக்கும் போது சந்தோசமாக இருக்கிறது.

நாங்கள் புண்பட்ட உங்கள் இதயங்களுக்கு , இசை மருந்தை கொடுக்க தான் வந்து இருக்கின்றோம். என தெரிவித்தார்.
 

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136835/language/ta-IN/article.aspx

"எம்.ஜி.ஆரின் ஆணைப்படி ஈழ தமிழர்களுக்கு நிதி திரட்ட வெளி நாடுகளில் இசை நிகழ்ச்சி நடாத்தினேன்"

 
 

இந்திய சி.பி.ஐ யின் விசாரணைகளையும் எதிர் கொண்டோம். - கங்கை அமரன். - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்:-

"எம்.ஜி.ஆரின் ஆணைப்படி ஈழ தமிழர்களுக்கு நிதி திரட்ட வெளி நாடுகளில் இசை நிகழ்ச்சி நடாத்தினேன்"



ஈழ தமிழ் உறவுகளுக்கு நிதி திரட்ட 1980களில் வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடாத்தி இருந்தோம். அதற்காக இந்திய சி.பி.ஐ யின் விசாரணைகளையும் எதிர்கொண்டோம். என இசையமைப்பாளர் கங்கை அமரன் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

தமிழக முதலமைச்சராக எம்.ஜி.ஆர் இருந்த வேளை ஈழ தமிழ் மக்களுக்காக நிதி திரட்டுவதற்காக வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடாத்த ஆணையிட்டார்.

அவரின் ஆணைக்கு, இணங்க நாமும் வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடாத்தி இருந்தோம். அதற்காக இந்திய சி.பி.ஐ யின் விசாரணைகளையும் எதிர்கொண்டோம்.

இங்கே வாழும் மக்கள் துன்ப பட்ட துயரப்பட்ட விடயங்கள் , மறக்க முயலுங்கள். பழசை நினைச்சு வாழ வேண்டும் என்று இருந்தாலும், இன்றைக்கு நாம மாற வேண்டிய அடுத்த சமூதயத்திற்காக நாம போட்ட விதைகள் விதைச்சு மேலே வந்து பயன் தரும், நிழல் தரும். என்பதனை மனதில் கொண்டு, நலத்திற்காகவும், நடந்து போனவைகளை மறப்பதற்காகவும், நன்றி செலுத்தும் வண்ணமாக அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்துங்கள். என கூறினார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136837/language/ta-IN/article.aspx

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உதவுவதற்கு இல­வ­ச இசை நிகழ்ச்­சி­களை நடத்­துவோம்

 

 

sb.jpg

யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உத­வி­களை பெற்றுக் கொடுக்கும் வகை­யி­லான பிர­மாண்­ட­மான இசை நிகழ்ச்­சி­களை இல­வ­ச­மாக நடத்தி தரு­வ­தற்கு நாங்கள் தயா­ராக உள்ளோம் என தென்­னிந்­திய பிரபல பின்னணிப் பாட­கர் எஸ்.பி.பால­சுப்­பி­ர­ம­ணியம் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் ஆகியோர் கூட்­டாக தெரி­வித்­துள்­ளனர்.

இவ்­வா­றான செயற்­பாட்­டிற்கு அனைத்து தரப்­பி­னர்­களும் ஒன்­றி­ணைந்து செயற்­பட முன்­வர வேண்டும் என்றும் அவர்கள் அழைப்பு விடுத்­துள்­ளனர்.

யாழ்ப்­பா­ணத்தில் நேற்று நடை­பெற்ற `நண்­பேண்டா` இசை நிகழ்ச்­சியில் ஒன்றில் பங்கு கொள்­வ­தற்­காக வரு­கை­தந்த இவர்கள் யாழ்ப்­பா­ணத்தில் உள்ள ஜெட்வின் ஹோட்­டலில் நேற்று நண்­பகல் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்­ட­போதே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டனர். 

இதில் கலந்து கொண்ட ஊட­க­வி­ய­லா­ளர்கள் இலங்­கையில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்டு பெற்­றோர்­களை இழந்த சிறார்­க­ளுக்­காக ஒரு இசை நிகழ்ச்­சியை இல­வ­ச­மாக நடாத்­தினால் நல்­ல­தாக அமையும். அதற்­கான முயற்­சி­களை எடுப்­பீர்­களா? என கேள்வி எழுப்­பி­யி­ருந்­தனர்.

இதற்கு பதி­ல­ளிக்கும் போதே இரு­வரும் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்­ளனர்.  

அவர்கள் மேலும் தெரி­விக்­கையில்:

யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­டுள்ள பகு­தியில் நின்று கொண்டே சொல்­கின்றேன். இங்கு உள்­ள­வர்­க­ளாக இருந்­தாலும் அல்­லது வேறு யாராக இருந்­தாலும், இப்­ப­டிப்­பட்ட நிகழ்­வு­களை இல­வ­ச­மாக நடாத்திக் கொடுப்­ப­தற்கு நாங்கள் தயா­ராக இருக்­கின்றோம். 

ஆனால் அந் நிகழ்ச்­சி­யா­னது எதற்­காக பயன்­பட வேண்­டுமோ அதற்­காக முழு­மை­யாக பயன்­பட வேண்டும். இவ்­வா­றான முயற்­சிக்கு நாங்கள் நிச்­சை­ய­மாக பங்­க­ளிப்பு வழங்­குவோம்.

இவ்­வா­றான நிகழ்­வு­களை ஒழுங்கு செய்­வ­தற்கு பல குழுக்கள், நிறு­வ­னங்கள் உள்­ளன. அவர்கள் ஒவ்­வொ­ரு­வ­ரையும் குறை சொல்லிக் கொண்டு இருக்­காமல் அனை­வரும் ஒன்­றி­ணைந்து  நிகழ்­வு­களை ஒழுங்கு செய்ய வேண்டும். குறிப்­பாக சமூக வலைத்­த­ளங்­களில் குறை­கூ­று­வதை நிறுத்த வேண்டும்.

 நிகழ்­வு­களை ஒழுங்கு செய்யும் போது, அனைத்து கழ­கங்­களும் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்டும்.

யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான உத­வி­களை வழங்­கு­வ­தற்­கான நிகழ்­களை இங்கு நடாத்­து­வ­தற்கு நாங்கள் தயா­ரா­கவே உள்ளோம்.

இவ்­வா­றான நிகழ்­வு­களை எதிர்ப்­ப­வர்­களும், ஆத­ரிப்­ப­வர்­களும் ஒன்­றி­ணைந்து வாருங்கள் ஒன்று சேர்ந்து நடாத்­துவோம்.

இலங்கை இசைக்­க­லை­ஞர்­களும் இசைக் கல்­வியை கற்­றுக்­கொள்ள கூடிய ஒர் கல்லூரியை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுப்போம் இதற்கான ஆரம்ப வேலைத்திட்டத்தை யாழ்.இந்திய துணைத்தூவர் ஊடாக மிக விரைவில் கலைஞர்களுக்கும் மக்களும் அறிவிப்போம். அத்துடன் இக் கல்லூரியில் நாமும் வந்து இசைக் கல்வியை போதனை செய்வோம் என தெரிவித்திருந்தனர்.

http://www.virakesari.lk/article/12251

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர்களை! உங்கள் பேச்சு ஆறுதல் தருகின்றது, மகிழ்ச்சி தருகின்றது. ஆனால் இந்தியா எங்களுக்கு என்ன செய்தது என்று நீங்கள் அறியாவிட்டால் அது தூர்பலம். உங்களை வரவேற்கிறோம்! வரவு நல்வரவாகுக!! இந்திய தூதுவர் ஊடாக என்பதுதான் உறுத்துகிறது!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.