Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்மையான தீர்வை நோக்கி தமிழ் மக்களை அழைத்துச் செல்லுங்கள்

Featured Replies

உண்­மை­யான தீர்வை நோக்கி தமிழ் மக்­களை அழைத்துச் செல்­லுங்கள்

Untitled-1-86e019051c06d0bfc009b263640309c7a3237642.jpg

 

எதிர்க்­கட்சித் தலைவர் ஆர். சம்பந்­த­னுக்கு தமிழர்  விடு­தலைக் கூட்­டணி செய­லாளர் நாயகம்  வீ.ஆனந்­த­சங்­கரி எழு­திய கடிதம்

நான் ஏற்­கனவே கூறி­யது போல் கடிதத் தொடரின் நான்­கா­வது கடிதம் உங்­களால் ஏற்­றுக்­கொள்ள முடி­யா­த­தாக இருக்கும். வழ­மை­போ­லவே இது புறக்­க­ணிக்­கக்­கூ­டி­ய­தல்ல. தற்­போ­தைய மோச­மான நிலை­மையை பற்றி நீங்கள் உணர்­வ­தா­கவும் தெரிய­வில்லை.

கனடா நாட்டின் ரொறொன்டோ ஒன்­டா­ரியோவில் விசா­ரிக்­கப்­பட்டு, ஒட்­டாவா ரொறொன்டோ சமஷ்டி நீதி­மன்­றத்தில் இடம்­பெற்ற மேன்­மு­றை­யீட்டு விசா­ரணை ஒன்றின் தீர்ப்பு 25.8-.2016 இல் வழங்­கப்­பட்­டது. முன்­னைய எனது கடி­தத்­திலும் இந்த வழக்கு பற்­றித்தான் குறிப்­பிட்­டி­ருந்தேன். இந்த வழக்கு இலங்­கையர் ஒரு­வரால் அகதி அந்­தஸ்து கோரி குடி­வ­ரவு அக­திகள் சபையின் குடி­வ­ரவுப் பகு­திக்கு விண்­ணப்­பித்து கிடைத்த தீர்ப்­புக்கு மீள் பரி­சீ­ல­னைக்­காக விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.

இவ் வழக்கை விசா­ரணை செய்த ஜஸ்டிஸ் புரவுன் நீதி­பதி மேல் மீள்­ப­ரி­சீ­லனை விண்­ணப்­பத்தை தள்­ளு­படி செய்ய கட­மைப்­பட்­டவன் என்று கூறி அதற்­கான கார­ணங்­களை நீண்ட பட்­டி­யலில் வெளியிட்­டி­ருந்தார். அவற்றில் நீங்கள் அக்­கறை கொள்­ளக்­கூ­டி­ய­தாக நான் கருதும் சம்­பந்­தப்­பட்ட பகுதி 41ஐ இங்கே குறிப்­பி­டு­கின்றேன்.

விண்­ணப்­ப­தாரி விடு­தலைப் புலிகள் இயக்­கத்­திற்கு ஆத­ர­வாக செயற்­ப­ட­வில்லை என்று மீண்டும் மீண்டும் வலி­யு­றுத்தி கூறு­கின்றார். இருப்­பினும் தீர்­மா­னிக்­கப்­பட வேண்­டிய விடயம் அது­வல்ல. இங்கு பிரச்­சினை யாதெனில் பயங்­க­ர­வாதத்தில் ஈடு­பட்ட ஒரு அமைப்பின் அங்­கத்­துவம் பற்­றி­யதே. விடு­தலைப் புலிகள் அவ்­வா­றான இயக்­கம்தான் என்­பதில் எவ்­வித சந்­தே­கமும் இல்லை என்­பது இங்கே ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. அதை நான் ஏற்­றுக்­கொள்­கிறேன்.

விண்­ணப்­ப­தாரி விடு­தலைப் புலி­களை ஆத­ரிக்கும் இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் அங்­கத்­துவம் மூல­மா­கவும் இலங்கை தமி­ழ­ரசு கட்­சியை வழி­ந­டத்தி தீவி­ர­மாக விடு­தலைப் புலி­களை ஆத­ரிக்­கின்ற தமிழ் தேசிய கூட்­ட­மைப்பை வெற்­றி­க­ர­மாக வழி­ந­டத்தி விடு­தலைப் புலி­களை ஆத­ரிக்­கின்ற இரா.சம்­பந்தன் அவர்­களை தலை­வ­ராக ஏற்­றுக்­கொண்­டுள்­ள­மை­யாலும் பயங்­க­ர­வா­தத்­தோடு சம்­பந்­தப்­பட்ட ஒரு அமைப்பில் அங்­கத்­துவம் வகிக்­கின்றார் என்­ப­தற்­கான போதி­ய­ளவு கார­ணங்கள் இருக்­கின்­றது என குடி­வ­ர­வுப்­ப­குதி கூறு­வது நியா­ய­மாக தெரிகின்­றது.

இதனை நீங்கள் புறக்­க­ணிக்­கக்­கூ­டிய சாதா­ரண விட­ய­மல்ல. இது கன­டாவில் மட்­டுல்ல. பல்­வேறு நாடு­களில் அகதி அந்­தஸ்து கோரு­கின்­ற­வர்­க­ளையும், அதற்­காக விசா­ர­ணை­களில் ஈடு­பட்­டுள்­ள­வர்­க­ளுக்கும் பெரு­ம­ளவில் பாதிப்பை ஏற்­ப­டுத்தும். இது விசா­ர­ணையை எதிர்­நோக்கும் கன­டாவில் மட்­டு­மல்ல. உலகம் முழு­வ­திலும் பல்­வேறு நாடு­களில் உள்ள பல்­லா­யி­ரக்­க­ணக்­கான இளை­ஞர்­களை பாதிப்­புக்­குள்­ளாக்­கக்­கூ­டிய விட­ய­மாகும். தீர்ப்பு வழங்­கப்­பட்டு ஆறு வாரங்கள் கடந்து விட்­டன. இவ்­வ­ழக்கு விசா­ர­ணை­யின்­போது உங்கள் பெயர் மட்டும் முக்­கி­ய­மாக பல இடங்­களில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருந்த போதும் இன்­று­வரை இது சம்­பந்­த­மாக நீங்கள் கருத்து எத­னையும் தெரிவித்­த­தாக எங்கும் காண­மு­டி­ய­வில்லை. உண்மை நிலை­மையின் பாதிப்பை உண­ராத ஒரு சட்­டத்­த­ரணி தனது அர­சியல் கட்சி இது சம்­பந்­த­மாக ஆராய்ந்து வரு­வ­தா­கவும், எவ்­வாறு இப்­பி­ரச்­சி­னையை கன­டிய அர­சோடு பேச வேண்­டு­மென்று ஆராய்ந்து வரு­வ­தா­கவும் கூறி­யுள்ளார். இது நீதி­ப­ரி­பா­ல­னத்­துடன் சம்­பந்­தப்­பட்ட விட­ய­மா­கையால் கன­டிய அர­சோடு பேசித் தீர்த்­துக்­கொள்­ளலாம் என்று நினைப்­பது புத்­தி­சா­லி­த்த­ன­மாக எனக்குத் தெரிய­வில்லை. நமது நாட்டில் அர­சியல் கைதி­களை விடு­விக்க முடி­யா­தி­ருக்கும் போது வேறொரு நாட்டின் நீதித்­துறையின் தீர்ப்பில் நாம் எவ்­வாறு தலை­யிட முடியும்?

ஒரு உள்ளூர் வாரப்­ப­த்தி­ரிகை ஒன்­றுக்கு பேட்­டி­ய­ளித்த இந்த சட்­டத்­த­ரணி எமது நாடு கன­டிய அர­சுடன் நல்­லெண்ண உறவு கொண்­டுள்­ளது. இத்­த­கைய ஊகம் தவ­றா­ன­தாகும் என்ற கூற்று நிலை­மையை மேலும் மோச­ம­டைய செய்­யக்­கூடும். கன­டா­வுடன் நாம் நல்­லு­றவு கொண்­டுள்ளோம் என்­பதை யாரும் மறுக்­க­வில்லை. ஆனால் கன­டிய நீதி­மன்­றத்தின் கூற்றில் குற்றம் காண்­பது என்­பது என்­னு­டைய அபிப்­பி­ரா­யப்­படி கன­டிய நீதி­மன்­றத்தை அவ­ம­திக்கும் செய­லுக்­கு ஒப்­பா­ன­தாகும். இச்­சட்­டத்­த­ரணி மேலும் தெரிவிக்­கையில், தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு தலை­மை­யுடன் கலந்­து­ரை­யாடி கன­டா­வுக்கு பிர­தி­நி­தி­களை அனுப்ப வேண்டும் என்று கூறி­யி­ருந்தார். அதில் வெற்றிகண்டால் நல்­ல­துதான். ஆனால் விவா­தத்­துக்­கு­ரிய விட­யமே தமிழ் தேசிய கூட்­ட­மைப்­புத்தான் என்­ப­தையும் இது ஒரு நாட்டின் நீதி­ப­ரி­பா­லனம் சம்­பந்­தப்­பட்ட விடயம் என்­பது பற்றி தயவு செய்து அவ­ருக்கு உணர்த்­துங்கள்.

சம்­பந்தன் அவர்­களே, அனு­ப­வ­மற்­ற­வர்­க­ளு­டைய கையில் இப் பொறுப்பை கொடுத்து தமது பிள்­ளை­களை நம்பி வாழும் அப்­பா­வி­க­ளுக்கு உண்­மைக்குப் புறம்­பான நம்­பிக்­கையை ஊட்டி அவர்­களை ஏமாற வைக்க வேண்டாம். பல சந்­தர்ப்­பங்­களில் என்­னு­டைய ஆலோ­ச­னை­களை நீங்கள் பெறு­வ­தில்லை. ஆனால் அவ்­வே­ளை­களில் நான் சரி­யா­கவே செயற்­பட்டு வந்­தி­ருக்­கின்றேன். நான் எப்­போதும் நிரந்­தரத் தீர்வு பற்­றியே யோசிப்பேன். நீங்கள் அதற்கு மாறாக தற்­கா­லி­க­மாக சந்­தர்ப்­பத்­திற்கு ஏற்­ற­வாறு அரை­கு­றை­யான தீர்வை பற்­றியே சிந்­திப்­பீர்கள். தயவு செய்து விழித்­தெ­ழுந்து இப்­பி­ரச்­சி­னையை கையி­லெ­டுத்து ஆக­வேண்­டி­ய­வற்றை செய்­யுங்கள்.

பல்­வேறு நாடு­க­ளிலும் அகதி அந்­தஸ்த்து கோரி நிற்கும் இளை­ஞர்­களை இத்­தீர்ப்பு பாதிக்­கா­தென நினைக்­கின்­றீர்­களா? உங்­க­ளு­டைய அர­சியல் எதிர்­காலம் கூட பாதிக்­கப்­ப­ட­லா­மென எண்ணத் தோன்­று­கி­றது. கன­டிய நீதி­ய­ரசர் மிகத்தெளி­வாக நீங்­களும், தமி­ழ­ரசு கட்­சியும், தமிழ் தேசிய கூட்­ட­மைப்பும் பிர­பல்­ய­மான விடு­தலைப் புலி­க­ளுடன் தொடர்­பு­களை கொண்­டுள்­ளீர்கள் எனக்­கூ­று­கின்றார். நீங்­களும் உங்கள் சகாக்­களும் அபூர்­வ­மான கருத்­துக்­களை முன்­வைத்து விடு­தலைப் புலி­களின் ஆத­ரவைப் பெற்று பாரா­ளு­மன்­றத்­துக்கு சென்­றீர்கள். பின்பு அவர்­களை காப்­பாற்­று­வ­தற்­கான எந்­த­வித நட­வ­டிக்­கை­யையும் மேற்­கொள்­ள­வில்­லை­யென்­பது மட்­டு­மல்ல, அவர்­களை போர்க்­குற்­றங்­களுக்காக விசா­ர­ணை­செய்ய வேண்­டு­மென வலிந்து கேட்­டதும் நீங்­கள்தான். இதுவே தமிழர் போராட்­டத்தின் வர­லாற்றில் செய்­யப்­பட்ட பச்சைத் துரோ­க­மாகும்.

அந்த இயக்­கத்தை சேர்ந்­த­வர்­களில் ஒரு சாரார் சிறு­வர்­க­ளாக சேர்ந்­த­வர்கள். வேறு­சிலர் பலாத்­கா­ர­மாக சேர்த்­துக்­கொள்­ளப்­பட்­ட­வர்கள். ஏனையோர் உணர்ச்­சி­பூர்­வ­மான கருத்­துக்­களால் தூண்­டப்­பட்டு சேர்ந்­த­வர்கள். இந்த மூன்று சாரா­ரையும் எவ­ரெவர், எந்­தெந்த பிரிவைப் சார்ந்­த­வர்­க­ளென அடை­யாளம் காண­மு­டி­யுமா? உங்­களின் இந்த கூற்­றுத்தான் அர­சியல் கைதிகள் விடு­தலை செய்­யப்­ப­டா­மைக்கு ஒரே கார­ண­மாகும். இதுவும் ஒரு படு­பா­தக செய­லாகும்.

யுத்­த­கா­லத்தில் நான் உங்­க­ளுக்கும் விடு­தலைப் புலி­க­ளுக்கும் அர­சுக்கும் பல கடி­தங்கள் எழு­தி­யுள்ளேன். 11-.1.-2009 அன்று வன்­னியில் அகப்­பட்­டுள்ள அப்­பாவி மக்­களை விடு­விக்­கு­மாறும் அன்றேல் பாரா­ளு­மன்ற பத­வி­களை துறக்­கு­மாறும் கேட்­டி­ருந்தேன். 16-.3.-2009 தம்பி பிர­பா­க­ர­னுக்கு எழு­தி­யி­ருந்த கடி­தத்தில் 81,000 குடும்­பங்­களைச் சேர்ந்த மூன்று இலட்­சத்து முப்­ப­தா­யிரம் மக்­களின் சாபத்­துக்­குள்­ளாக வேண்­டா­மென்று கோரி­யி­ருந்தேன்.

2-.5.-2009 இல் இலங்கை ஜனா­தி­ப­திக்கு எழு­திய கடி­தத்தில் அர­சுக்கு ஏற்­பு­டைய ஒரு சர்­வ­தேச அரசு சார்­பற்ற நிறு­வ­னத்தை வன்­னிக்கு அனுப்பி விடு­தலைப் புலி­களை கண்டு அப்­பாவி மக்­களை விடு­விக்­கு­மாறு கேட்­டி­ருந்தேன். துர­திஷ்­ட­வ­ச­மாக இதற்கு ஒரு­வரும் செவி­சாய்க்­க­வில்லை. 10-.4.-2009 அன்று இந்­திய வெளியு­ற­வுத்­துறை அமைச்சின் செய­லாளர் ஸ்ரீ சிவ்­சங்கர் மேனன் உங்­களை அதா­வது தமிழ் தேசிய கூட்­ட­மைப்பை உட­ன­டி­யாக டெல்­லிக்கு வரு­மாறு விடுத்த அழைப்பை முதலில் யுத்­தத்தை நிறுத்­துங்கள் என்­று­கூறி நிரா­க­ரித்­தீர்கள். இந்த ஆலோ­ச­னை­களில் ஏதா­வது ஒன்­றுக்கு சாத­க­மான நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருந்தால் முற்றுமுழு­தாக, விடு­த­லைப்­பு­லிகள், தம்பி பிர­பா­கரன் அவர் குடும்­பத்தார் உள்­ள­டங்­க­லாக அனை­வரும் காப்­பாற்­றப்­பட்­டி­ருப்­பார்கள். அக்­கா­லத்தில் இடம்­பெற்ற பல்­வேறு துய­ரச்­சம்­ப­வங்கள் நடந்­தி­ருக்­காது. உங்­க­ளையும், உங்­க­ளு­டைய தமி­ழ­ரசு கட்­சி­யையும், தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பையும் எவரும் பயங்­க­ர­வாத அமைப்­போடு தொடர்­புள்­ள­வர்கள் என முத்­திரை குத்­தப்­பட்­டி­ருக்­க­மாட்­டீர்கள்.

சம்­பந்தன் அவர்­களே! தற்­போது நடந்துகொண்­டி­ருக்­கின்ற அத்­த­னைக்கும் நீங்­களே முழுப் பொறுப்­பேற்க வேண்டும். 2004ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி சார்பில் தேர்­தலில் போட்­டி­யி­ட­வேண்­டிய அவ­சி­யமும் இருக்­க­வில்லை. அந்த நேரத்தில் விடு­தலைப் புலி­கள்தான் தமிழ் மக்­களின் ஏக­பி­ர­தி­நி­திகள், அவர்­கள்தான் தமிழ் மக்­களின் தேசிய தலைமை என்று தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு அங்­கீ­க­ரித்­தமை அவ­சி­ய­மற்ற செய­லாகும். அதற்கு முன்பே இனப்­பி­ரச்­சினை சம்­பந்­த­மாக அர­சுடன் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கும் அது­போன்ற செயற்­பா­டு­க­ளுக்கும் விடு­தலைப் புலி­க­ளுக்கு ஏக­பி­ர­தி­நி­தித்­துவ அந்­தஸ்து வழங்­கு­வ­தா­கவும் வேறு விட­யங்­க­ளுக்­கல்ல என்­ப­தையும் நாம் எல்­லோரும் தீர்­மா­னித்­தி­ருந்தோம். தலைமை பத­வியை மட்­டுமே தனது ஒரே­ நோக்­க­மா­கவும் சிந்­த­னை­யா­கவும் கொண்ட ஒரு­வ­ரு­டைய முட்­டாள்­த­ன­மான கோரிக்­கைகள் அத்­த­னைக்கும் இணைந்து நீங்கள் செயற்பட்டமையாலேயே தமிழ் மக்கள் இந்நிலைமைக்கு ஆளாகியுள்ளனர். பதவி பேராசை எல்லாவற்றையும் அழித்துவிட்டு இப்போது இலங்கைவாழ் தமிழ் சமூகம் பயங்கரவாதிகளாக பிரகடனப்படுத்தப் படும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

உங்களால் முடிந்தால் தயவு செய்து எங்களை காப்பாற்றுங்கள். உங்களால் முடியாவிட்டால் உங்களுடைய பணியில் தோல்வியடைந்துள்ளதாக வெளிப்படுத்தி உங்களுடைய தலைமைத்துவத்தை முழுஅதிகாரம் பெற்ற தந்தை செல்வாவால், ஜீ.ஜீ.பொன்னம்பலம், எஸ்.தொண்டமான் ஆகியோரின் அனுசரணை யுடன் தமிழ் மக்களின் பெரும் சொத்தாக விட்டுச்செல்லப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியிடம் கையளியுங்கள். எனக்கு தற்போது 83 வயதாகியும் தேவைப்படுவது மிக விரைவாகவும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமான நல்லதொரு தீர்வேயொழிய எதுவித பதவியும் அல்ல. தமிழ் மக்களுக்கு ஏற்புடைய தீர்வொன்று வழங்கப்படும் பட்சத்தில் நான் ஒதுங்கியிருக்கத் தயாராகவுள்ளேன். உங்களால் தனியாக நின்று எமது பிரச்சினைக்கு ஒரு தீர்வை என்றும் காணமுடியாது.

இப்போதாவது முக்கிய விடயங்கள் பற்றி பேசுவதற்கு ஒரு சர்வகட்சி மாநாட்டை கூட்டுங்கள். அன்றேல் அப்பணியை என்னிடம் கையளியுங்கள்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-10-11#page-4

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல என்று பல நாடுகள் உணரமுற்படும்போது அதற்கு எப்படி நாமும் உதவலாம் எனச் சிந்திப்பதை விடுத்துத் தமிழினத்தில் வளர்ந்து கிழட்டுதட்டிய நிலையில் களையொன்று, தன்னைக் கோடாரிக்குப் பிடியாக் கொடுக்கத் தவியாகத் தவிக்கிறது. :(  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.