Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியலிலும்?

Featured Replies

விடுதலைப் புலிகளை முறியடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் வாகரைப் படை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பின் அது வரவேற்கத்தக்கது. ஆனால் அந்த நடவடிக்கை மூலம் சனாதிபதி அரசியல் இலாபம் தேட முயன்றால் அது மிகவும் கண்டனத்திற்குரியதென்ற ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் கூற்றுக்கள் அரசியலில் அவர் இன்னமும் கற்றுக்குட்டி என்பதையே காட்டுகின்றது.

1971, 1988, 1989 காலப்பகுதியில் ஆயுதக்கிளர்ச்சிகளை நடத்தித் தமது கற்றுக்குட்டித்தனத்தால் தோல்வி கண்ட ஜே.வி.பி.யினர் அரசியலில் இன்னமும் அதே நிலையிலேயே உள்ளனர் என்பதையே ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் இக்கூற்றுக்கள் வெளிப்படுத்துபவையாகவுள்ளன.

அவ்வாறு இல்லாதுவிடில் இராணுவ நடவடிக்கைகளை மகிந்த ராஜபக்ச அரசியல் அனுகூலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என ஜே.வி.பி.யின் தலைவர் கோரிக்கையொன்றை முன்வைத்திருக்க மாட்டார். ஏனெனில் சிறிலங்கா அரசின் இராணுவ நடவடிக்கைகள் அதாவது யுத்தம் என்பது அரசியலை அடிப்படையாகக் கொண்டதே. யுத்தத்தையும் அரசியலையும் பிரித்துப் பார்க்கமுடியாது.

இனப்பிரச்சினைக்குத் தீர்வென்பது இராணுவ ரீதியில் சாத்தியப்பாடானதல்ல என்பது உலக ரீதியில் புரிந்துகொள்ளப்பட்டதொன்று. இலங்கையிலும் அனுபவ ரீதியாக இது புரியவைக்கப்பட்டதொன்றாகவே உள்ளது. ஆனால், சிறிலங்கா ஆட்சியாளர்கள் அதாவது மகிந்த மட்டுமல்ல, அதற்கு முன்னையவர்களும் தமது அரசியல் இலாபத்திற்காகவே யுத்தத்தை நடத்தினர்.

இதேசமயம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தத்தை நடத்தவேண்டும் என ஜே.வி.பி அரசாங்கத்தின் மீது அழுத்தத்தைப் பிரயோகித்து வந்தமை கூட அரசியல் நோக்கிலானதே ஆகும். அவ்வாறு இல்லாதுவிடில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கே ஜே.வி.பி உட்பட அனைத்துக் கட்சிகளும், ஆட்சியாளர்களும் முற்பட்டிருத்தல் வேண்டும். ஆனால், அவ்வாறு எவரும் நடந்துகொள்ளவில்லை.

சிறிலங்கா அரசியல் கட்சிகளும் சரி அதன் தலைவர்களும் சரி ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கும் ஆட்சி அதிகாரத்தை தக்கவைப்பதற்கும் யுத்தத்தையே நம்பினர். தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறையானது தமது வாக்கு வங்கியைப் பலப்படுத்துவதாகவும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களைத் தடுத்து நிறுத்துவதாகவும் இருக்கும் என்றே நம்பினர்.

இத்தகையதொரு அணுகுமுறையையே பயன்படுத்திக் கொள்ள ஜே.வி.பி.யும் முற்பட்டது. இனப்பிரச்சினைக்குத் தீர்வு முயற்சிகளை பேச்சிற்காயினும் மேற்கொண்ட ரணில் தலைமையிலான ஐ.தே.கட்சிக்கு எதிராக ஜே.வி.பி. பெரும் பிரசாரத்தில் ஈடுபட்டது. அதேபோன்று மகிந்த ராஜபக்ச ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததும் யுத்தம் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியது. இவை யாவும் யுத்தத்தின் மூலம் அரசியல் இலாபம் ஈட்டிக்கொள்ளவே. அதாவது வாக்கு வங்கியைப் பலப்படுத்தி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவே.

ஆனால், அரசியல் இலாபம் ஈட்டும் நோக்கில் யுத்தத்தை ஆதரித்து யுத்தத்தை நடாத்த வேண்டும் என நிர்பந்தித்த ஜே.வி.பி. தற்பொழுது யுத்தத்தின் அனுகூலத்தை ஆளும்கட்சி குறிப்பாக மகிந்த ராஜபக்ச அனுபவித்துவிடுவாரோ? என அஞ்சத் தொடங்கியுள்ளமையே அமரசிங்கவின் கூச்சலுக்குக் காரணமாகும்.

அதிலும், ஜே.வி.பியை ஓரம் தள்ளிவைக்கும் வகையில் அரசியல் நடத்த மகிந்த ராஜபக்ச முற்பட்டு நிற்கும் நிலையில் யுத்தத்தின் அனுகூலமும் மகிந்தவைப் பலப்படுத்துவதுடன் தம்மைப் பல வீனப்படுத்திவிடவும் கூடும் எனவும் ஜே.வி.பி அச்சம் கொண்டுள்ளது.

அதுமட்டுமன்றி மாற்று நடவடிக்கை ஒன்றைக் கோரமுடியாதவாறு ஜே.வி.பி. தான் வைத்த பொறியில் தானே சிக்கிக் கொண்டதொரு அவலநிலையில் உள்ளது. அதாவது மகிந்த யுத்தத்தின் அனுகூலத்தை அனுபவிக்கின்றார் என்பதற்காக யுத்தத்தை நிறுத்துமாறு கோரமுடியாத நிலையிலும், யுத்தத்தை ஆதரித்ததினால், யுத்தத்தினால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கெதிராக முழு அளவில் போராட முடியாத நிலையிலும் அது உள்ளது.

இந்த வகையில் பார்த்தால் ஜே.வி.பி ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் உள்ளதென்றே கூறலாம். ஆயுதக் கிளர்ச்சியைத்தான் வெற்றிகரமாக நடத்த முடியாது போனாலும் அரசியலில் கூட அவர்களால் வெற்றிகரமாகச் செயற்பட முடியவில்லை என்பதையே இது காட்டுகின்றது. இது ஜே.வி.பி. தலைமையின் அசட்டுத்தனத்தின் விளைவாகும். அதாவது அவர்கள் கையில் எடுத்த யுத்தம் என்றும் ஆயுதம் அவர்களுக்கே ஆபத்தானதாகி விட்டது. ஆனால், இது ஜே.வி.பி.க்கு மட்டுமல்ல, இதனைக் கையில் எடுத்துள்ள ஆட்சியாளருக்கும் பொருந்தும்.

நன்றி: ஈழநாதம்

http://www.tamilnaatham.com/editorial/2007...tham/jan/24.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.