Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் படங்களை வைத்திருந்த பெண்ணை நாடு கடத்த கொழும்பு நீதிமன்றம் ஆணை

Featured Replies

பிரபாகரன் படங்களை வைத்திருந்த பெண்ணை நாடு கடத்த கொழும்பு நீதிமன்றம் ஆணை

வேலுப்பிள்ளை பிரபாகரன்

 பிரபாகரன்

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படங்கள் அடங்கிய போஸ்டர்களை வைத்திருந்தமை சம்பந்தமாக கைது செய்யப்பட தமிழ் பெண் ஒருவரை நாடு கடத்துமாறு கொழும்பு மாஜிஸ்திரேட் நிதிமன்றம் போலிசாருக்கு உத்தரவிட்டது.

ஜெர்மன் நாட்டின் குடியுரிமை கொண்ட மலர்விழி ஈஸ்வரராஜா எனும் பெண்ணை அண்மையில் யாழ் சுன்னாக்கம் பிரதேசத்தில் வைத்து போலீசார் கைது செய்ததாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

விசாரணைகளின் போது சந்தேக நபரிடம் இருந்து விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் உருவப் படம் அடங்கிய 34 போஸ்டர்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டதாக தெரிவித்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சந்தேக நபரை நாடு கடத்தும் படி உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தனர்.

அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீதிபதி சந்தேக நபரை உடனடியாக நாடு கடத்துமாறு குடிவரவு திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

http://www.bbc.com/tamil/sri-lanka-37646933

  • தொடங்கியவர்
புலிகளின் தலைவரின் படத்தை ஒட்டிய பெண்ணை நாடு கடத்த உத்தரவு
புலிகளின் தலைவரின் படத்தை ஒட்டிய பெண்ணை நாடு கடத்த உத்தரவு

யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பி ள்ளை பிரபாகரனின் உருவப படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டியை ஒட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட மலர்விழி ஈஸ்வரன் என்ற பெண்ணை நாடு கடத்துமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ஜேர்மன் நாட்டு பிரஜாவுரிமையைக் கொண்ட மலர்விழி ஈஸ்வரன் என்ற பெண் இன்று பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிசாரினால் கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆடிகல முன் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம்  மருதனார்மடம் பகுதியிலுள்ள பஸ் நிலையத்தில் தமிழீழ விடுதலைப் புலி களின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டியொ ன்று ஒட்டப்பட்டிருந்தது. கடந்த 10 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு ஒட்டப்பட்ட இந்த சுவ ரொட்டி தொடர்பான தகவலை அறிந்ததும் சுன்னாகம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சுவரொட்டியை அகற்றியிருந்தனர்.

எனினும் ஊடகங்களில் இந்தத் தகவல் வெளிவந்திருந்த நிலையில், தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிசார் அங்குள்ள சீ.சீ.ரி.வி காணொளியொன்றைின் துணையுடன் குறித்த சுவரொட்டியை ஒட்டியது பெண் என்று அடையாளம் கண்டதுடன், குறித்த பெண் சுன்னாகம் பகுதியில் தங்கியிருந்த நிலையில் கைதுசெய்திருந்தனர்.

இதனையடுத்து பயங்கரவாதத் தடுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாற்றிய பொலிசார் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனர். இதற்கமைய இலங்கையில் பிறந்து ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்து அங்கு பிரஜாவுரிமையும் பெற்றுள்ள மலர்விழி ஈஸ்வரனை மேலதிக விசாரணைக்கு உட்படுத்திய நிலையில் இன்று கொழும்புக்கு அழைத்து வந்து மேலதிக நீதவான் முன்னிலையில் நிறுத்தினர்.

இதன்போது மலர்விழி ஈஸ்வரன் என்ற பெண்ணை கைதுசெய்யும் போது அவரிடமிருந்து 40 சுவரொட்டிகள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிசார் நீதவானிடம் தெரிவித்துள்ளனர். பொலி சாரின் இந்த தகவல்களை கேட்ட நீதவான் அருணி ஆட்டிகல, குறித்த பெண்ணை ஜேர்ம னுக்கு உடனடியாக நாடு கடத்தமாறு உத்தரவிட்டுள்ளார். எனினும் எதற்காக அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருப்படம் பொறிக்க ப்பட்ட சுவரொட்டியை ஒட்டினார் என்ற விபரம்  தெரிவிக்கப்படவில்லை

http://onlineuthayan.com/news/18894

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:
புலிகளின் தலைவரின் படத்தை ஒட்டிய பெண்ணை நாடு கடத்த உத்தரவு
புலிகளின் தலைவரின் படத்தை ஒட்டிய பெண்ணை நாடு கடத்த உத்தரவு

யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பி ள்ளை பிரபாகரனின் உருவப படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டியை ஒட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட மலர்விழி ஈஸ்வரன் என்ற பெண்ணை நாடு கடத்துமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ஜேர்மன் நாட்டு பிரஜாவுரிமையைக் கொண்ட மலர்விழி ஈஸ்வரன் என்ற பெண் இன்று பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிசாரினால் கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆடிகல முன் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம்  மருதனார்மடம் பகுதியிலுள்ள பஸ் நிலையத்தில் தமிழீழ விடுதலைப் புலி களின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டியொ ன்று ஒட்டப்பட்டிருந்தது. கடந்த 10 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு ஒட்டப்பட்ட இந்த சுவ ரொட்டி தொடர்பான தகவலை அறிந்ததும் சுன்னாகம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சுவரொட்டியை அகற்றியிருந்தனர்.

எனினும் ஊடகங்களில் இந்தத் தகவல் வெளிவந்திருந்த நிலையில், தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிசார் அங்குள்ள சீ.சீ.ரி.வி காணொளியொன்றைின் துணையுடன் குறித்த சுவரொட்டியை ஒட்டியது பெண் என்று அடையாளம் கண்டதுடன், குறித்த பெண் சுன்னாகம் பகுதியில் தங்கியிருந்த நிலையில் கைதுசெய்திருந்தனர்.

இதனையடுத்து பயங்கரவாதத் தடுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாற்றிய பொலிசார் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனர். இதற்கமைய இலங்கையில் பிறந்து ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்து அங்கு பிரஜாவுரிமையும் பெற்றுள்ள மலர்விழி ஈஸ்வரனை மேலதிக விசாரணைக்கு உட்படுத்திய நிலையில் இன்று கொழும்புக்கு அழைத்து வந்து மேலதிக நீதவான் முன்னிலையில் நிறுத்தினர்.

இதன்போது மலர்விழி ஈஸ்வரன் என்ற பெண்ணை கைதுசெய்யும் போது அவரிடமிருந்து 40 சுவரொட்டிகள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிசார் நீதவானிடம் தெரிவித்துள்ளனர். பொலி சாரின் இந்த தகவல்களை கேட்ட நீதவான் அருணி ஆட்டிகல, குறித்த பெண்ணை ஜேர்ம னுக்கு உடனடியாக நாடு கடத்தமாறு உத்தரவிட்டுள்ளார். எனினும் எதற்காக அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருப்படம் பொறிக்க ப்பட்ட சுவரொட்டியை ஒட்டினார் என்ற விபரம்  தெரிவிக்கப்படவில்லை

http://onlineuthayan.com/news/18894

இதில் அடுத்த கட்டம் கூட இருக்கலாம் 

இவர் இலங்கை உளவு துறையின் ஆளாக கூட இருக்கலாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.